Wednesday, 2 October 2013

சின்னத் திரையில் எனது அறிமுகம்--" தெய்வ மகள் " நெடுந்தொடரில் நான் !!




அன்புள்ள சின்னத்திரை இரசிகப் 


பெருமக்களுக்கு ஒரு இனிய 


அறிவிப்பு !!



இதுவரை பெரியதிரையினில் 


மட்டுமே தோன்றிய உங்கள் அன்புத் 


தோழன் மதுரை T.R. பாலு நேற்று 


இயக்குனர் மதிப்பிற்குரிய குமரன் 


அவர்களின் சீரிய இயக்கத்தினில் 


சூரிய தொலைக்காட்சியில் (SUN.TV)


இரவு எட்டு மணி முதல் எட்டு 


முப்பது வரை ஒளிபரப்பாகி வரும் 
                 


                " தெய்வ மகள் "


நெடுந்தொடரில் நேர்மையான, 


இலஞ்சம் வாங்காத,பொதுப்பணித்


துறை அலுவலகம் ஒன்றில் உதவி 


பணியாளராக வருவதுபோல்காட்சி 


சுமார் 1௦ தினங்களுக்கு முன்பாக 


படப்பிடிப்பு சென்னை 


வளசரவாக்கம் 


A.R.S.கார்டனில் வைத்து 


எடுக்கப்பட்டது.


அந்தக் காட்சி நேற்று ௦1-1௦-2௦13 சன்


டிவியில் ஒளிபரப்பப்பட்டது 


என்பதை மிக்க மன மகிழ்வுடன் 


நேயர்கள் அனைவருக்கும் 


தெரிவித்துக் கொள்கிறேன்.மீண்டும் 


ஒரு காட்சி அதில் இன்றோ அல்லது 


நாளையோ வெளிவரும். எனக்கு 


வாய்ப்பு அளித்த இயக்குனர் திரு 


குமரன் அவர்களுக்கு என் இதயம் 


கனிந்த நன்றிகளை நான் இந்தத் 


தருணத்தில் தெரிவித்துக்கொள்ளக் 


கடமைப் பட்டுள்ளேன்.  


     " மேலும் ஒரு நல்ல செய்தி " !!


இயக்குனர் திரு குமரன் அவர்களின் 


கைவண்ணத்தில் சூரிய தொலைக் 


காட்சியில் ஒளிபரப்பாகும் மற்றும் 


ஒரு நெடும்தொடரான 


                " தெ ன் ற ல் "                       


இதிலும் மதிப்பிற்குரிய இயக்குனர் 


திரு குமரன் அவர்களின் 


ஆசிகளுடன் ஆணையாளர் 


அவர்களின் அலுவலகம் ஒன்றில் 


அதில் நான் கொடுத்துள்ள மனு 


என்ன ஆயிற்று என்று அவரது 


நேர்முக உதவியாளரிடம் 


வினவுவது போன்ற 


ஒரு கதாபாத்திரத்தினில் நான் 


நடித்து உள்ளேன் என்ற நல்ல 


செய்தியையும் நான் என் அன்புமிகு 


வாசகர்களுக்குத் 


தெரிவித்திடக் கடமைப் 


பட்டுள்ளேன்.


இது அனுதினமும் இரவு 9.௦௦ மணி 


முதல் 9.3௦ மணி வரை சன் டிவியில் 


ஒளிபரப்பாகிறது என் அன்புத் தமிழ் 


நெஞ்சங்களே !! அதனையும் நீங்கள் 


கண்டு களித்து எனது வளர்ச்சிக்கு 


உறுதுணையாக இருந்திடவேண்டும்.


இவை எல்லாவற்றிற்கும் நான் 


எனது அன்பிற்குரிய இயக்குனர் திரு 


குமரன் அவர்களுக்குத்தான் நன்றி 


நவில வேண்டும். வாழ்க !! 


அவர் தொண்டு !!



நன்றி !! வணக்கம் !!


அன்புடன் 


மதுரை T.R. பாலு. 

No comments:

Post a Comment