இரண்டாம் தாரத்தின்
எக்காளத்தனமான/
தற்பெருமையான பேச்சுக்கு !!
முதல் தாரம் அளித்த அமைதியான/
இடைச்சொருகல் நிறைந்த பதில் !!
இது ஒரு கற்பனைக்கதை !!
(இதில்வரும்பெயர்கள்,சம்பவங்கள்,
அனைத்தும் கற்பனையே தவிர,
வேறு எந்தத் தனிமனிதரையும்
குறிப்பிடுவன அல்ல !!)
" ஜம்புலி புத்தூர்". மதுரை
மாவட்டத்தில் முன்பு இருந்த ஒரு
சிறப்பான கிராமம்.(தற்போது இது
தேனி மாவட்டத்தில் உள்ளது)சுமார்
4௦ ஆண்டுகளுக்கு முன்புவரை இந்த
கிராமம் அகில இந்தியப் புகழ் பெற்ற
ஒரு கிராமமாகவே இருந்துவந்தது.
அப்படி என்ன சிறப்பு அந்த
கிராமத்திற்கு ? கேள்வியில்நியாயம்
உண்டு.விடைவேறுஎதுவும்இல்லை.
அந்தக் காலங்களில் பெண்களுக்கு
பொட்டுக்கட்டுதல் என்று ஒரு
பழக்கம் ஒரு பிரிவு மக்களிடம்
உண்டு. அப்படி என்றால் இந்தக்
காலத்தலைமுறையினருக்கு
புருவத்தை உயர்த்துவதைத்தவிர
வேறு எதுவும் தெரிந்திரிக்கநியாயம்
இல்லை.அதாவதுபொட்டுக்கட்டுதல்
என்றால் பெண் பருவ வயதினை
அடைந்ததும் அவளை சீவி முடித்து
சிங்காரித்து, பட்டுப்புடவைகட்டி,
தலை நிறைய பூச்சூடி அலங்கரித்து
அந்த ஊர் ஆண்டவன்
சன்னிதானத்திற்கு அழைத்துச்
சென்று அவளை ஆண்டவனுக்கு
மணம் செய்து வைத்து விடுவார்கள்.
எங்கும் நிறைந்தவந்தானே
ஆண்டவன். அது போல இந்த
பொட்டுக்கட்டப்பட்ட பெண்ஆனவள்
இந்த ஊரில் எங்கும் நிறைந்துள்ள
ஆண்கள் அனைவருக்கும் அவள்
மனைவியாகஆகிவிடுவாள்(யோவ்.
ஏன்யா சுத்தி வளைச்சு மூக்கைத்
தொடுதீறும். சுருக்கமா "தே"னா...... ...
விலாசம் அப்படீன்னு சொல்ட்டு போ
வேண்டியதுதானே)அதுதான்
உண்மை. ஆனால் நான் ஸ்ரீமான்
பொதுஜனம் சொல்வதுபோல
சொல்லிட முடியாதே. ஏன் என்றால்
நான் ஓர் கண்ணியம் நிறைந்த,
நல்ல விஷயங்களை மட்டுமே
எழுதி வரும் ஒரு பகுத்தறிவு
எழுத்தாளன் ஆயிற்றே!! என்னால்
அப்படி எழுதிட முடியாதே!! நான்
என் செய்வேன் ?( அடடா...உன்..
ரம்பம் தாங்க முடியலடா சாமி.
படக்குனு மேட்டருக்கு வா நயினா)
ஆக இப்படி அந்த ஊரில் உள்ள ஒரு
(ஜம்புலிபுத்தூர் ) குடும்பம் மட்டும்
அல்ல. அந்த ஊரே
அதுபோலத்தான்.அந்தகிராமத்தை
சுற்றில் எட்டுப்பட்டி கிராம மிட்டா,
மிராசுகள், செல்வச் சீமான்கள்,
ஜாலிப் பேர்வழிகள்,மைனர்கள்
இவர்கள் அனைவரும் மாட்டுவண்டி
வைத்து தினசரி அந்த ஊருக்கு வந்த
வண்ணம் இருப்பார்கள். கடலால்
சூழப்பட்ட இந்த உலகத்தில் வேலை
நிறுத்தம் என்ற ஒரு இதுவரை
காணாத தொழில் என்று ஒன்று
உள்ளது என சொன்னால் அது
பெண்களை வைத்து விபச்சாரம்
செய்து பிழைக்கும் தொழில் மட்டும்
தானே. அது மட்டும் அல்ல
அன்பர்களே. இந்த தொழிலுக்கு
மற்றும் ஒரு சிறப்பும் உண்டு.
அதுதான் வருகின்ற வசதியான
வாடிக்கையாளர்கள் எந்த நேரம்
எந்தக்காலம் வந்தாலும்அவர்களின்
மனம் குளிர வைத்து அவர்களின்
காமப் பசிக்கு உணவளித்து
அவர்களை திருப்தி செய்து வழி
அனுப்புவதுதான் இந்தத் தொழிலில்
ஈடுபட்டுள்ள பெண்களின் தொழில்
தர்மம்.(அட..கண்றாவியே..தர்மம்
அப்டீங்கற வார்த்தைக்கு இப்டி ஒரு
கருமாந்திரமான பொருள் இருக்கா
என்ன..யோவ். சொல்ல வந்தத்தை
சீக்ரம் சொல்லித்தொலையுமேன்)
அன்பர்களே !! நான் (மதுரை TRபாலு
தற்போது திரைப்படத்துறையில்
என்னை முழுமையாக ஈடுபடுத்தி
இருந்தாலும் நான் ஆரம்பக்காலம்
ஒரு மோட்டார் உதிரிபாகங்கள்
விற்பனை செய்திடும் கடைஒன்றின்
உரிமையாளர். அந்த பதவி
காலஞ்சென்ற என் அருமைத்தந்தை
எனக்கு வழங்கிய சிறப்பு. அப்போது
எல்லாம் நான் எனது நண்பர்களிடம்
பேசும்போது வேடிக்கைக்காகஒன்று
சொல்வது உண்டு. என்னவென்றால்
வணிகரும், விலைமாதரும் ஒன்று
கீழ்க்கண்ட விஷயங்களைப்
பொறுத்தவரை. என்ன என்றால் :-
1) இந்த இரண்டு இடங்களிலும்
வரும் வாடிக்கையாளர்களிடம்
நன்கு சிரித்து, ""அவர்கள் மனம்
குளிரும்படி பேசி நடந்தால் மட்டுமே
மீண்டும்"" வணிகரிடம் சாமான்
வாங்க வருவார்கள். அதே
போலத்தான் விலைமாதர்களும்
தன்னைத் தேடி வரும்
வாடிக்கையாளர்களிடம் மேலே
உள்ள பகுதியில் உள்ள "" "" இந்த
குறியீட்டிற்கு உட்பட்ட வாசகத்தை
அப்படியே இந்த இடத்தில் பதிவு
செய்துகொண்டு, அதற்கு அடுத்து
இவளிடம், இவளின் ""தேகம் தரும்
சுகத்தை"" வாங்க வருவார்கள்.
2) வணிகரிடம் உண்மையான
கணக்கு என்பது இருக்கவே
இருக்காது. எவ்வளவு பொருட்கள்
வந்தது, அதில் எவ்வளவு விற்றுத்
தீர்ந்தது,மீதம் எவ்வளவு கை
இருப்பில் உள்ளது என்று ......................
அது போலத்தான் விலைமாதரிடம்
அவள் எத்தனை பேர்களிடம் தேக
சுகம் கொடுக்க அவர்களைத் தேடித்
போனாள்? எத்தனை நபர்கள் அதே
தேக சுகம் பெற இவளைத்தேடி
வந்தார்கள்? மொத்தம் எத்தனை
நபர்களை இவள் தனது
வாழ்க்கையில்சந்தித்துஇருக்கிறாள்
என்னும் கணக்கு நிச்சயமாக
இருக்கவே இருக்காது.
3) ஒரு அரசாங்கத்துறை ரீதியான
சோதனை என்று வைத்துக்
கொள்வோம். வணிகருக்கு அது
வணிகவரித்துறை, அதே சோதனை
விலைமாதருக்கு காவல்துறை,
இதுபோல வரும் வேளையில்
செய்வது அறியாமல் இருவருக்கும்
மனத்தில் நடுக்கம் உண்டாகும்.
உள்ளம் பதபதக்கும். வார்த்தை
வெளிவர நடுநடுங்கும். (அடடா...
யோவ் T.R. பாலு..இந்த ஒரு கட்டுரை
ஒன்னுக்கே உனக்கு டாக்டர் பட்டம்
கொடுக்கலாம்யா !! எல்லாருக்கும்
தலையில மட்டுந்தான் மூளை
அப்டீன்னா யோவ்..உமக்கு உடம்பு
பூராவுமுல்ல மூளை இருக்கும்
போல இருக்கு..அட..என்ன நான்
சொல்றது)
4) அந்த துறைரீதியான
சோதனையில் இருவரிடமும்
தப்புக்கள்,தவறுகள்,குற்றங்கள்
கண்டுபிடிக்கப்படுமேயானால் ( அட
..அது என்ன கண்டுபிடிக்கப்படுமே
ஆனால், ( யோவ்..TR. பாலு..என்ன
பேசுறீங்க...எதாச்சும் குற்றம் குறை
இருக்கத்தானே செய்யும்..அட..என்ன
நான் சொல்றது) அதற்குத்
தண்டனையாக அபராதத் தொகை
பணமாக செலுத்தும்படி வந்தால்,
இவர்கள் பாவம் !! என்ன
செய்வார்கள் !! அந்தத்
தொழிலில்தானேமீண்டும்தங்களை
ஈடுபடுத்தி அதற்கும் சேர்த்து பணம்
ஈட்டவேண்டியதுதானே இவர்கள்
இருவரின் தலை எழுத்து.
சரி !! நேயர்களே !! நான் எதையோ
கட்டுரையாக எழுத நினைத்து
பாதை மாறிப் பயணித்துக்கொண்டு
இருக்கிறோமோ என்ற உணர்வு
இப்போது என்னை நினைவு
படுத்திக்கொண்டு உள்ளது.(அய்யா...
T.R.பாலு அவர்களே !! என்னாய்யா
நியாயம் இது. குத்தாலம் கூட்டிப்
போறேன்ட்டு கும்பகோணத்துக்கு
கூட்டி வந்துட்டீயளே!! இது
உங்களுக்கே நியாமா இருந்தா சரி !!)
தயவு செய்து அனைவரும் என்னை
மன்னிக்கணும்.
இப்போது கட்டுரையின்ஆரம்பத்தில்
சொன்ன ஜம்புலிபுத்தூருக்கே நான்
வருகிறேன். அந்த "அப்படியாப்பட்ட"
ஊரிலும் ஒரு பெரியவர் பெயர்
மாதவன் நாயர் (வயது 69) அவரின்
ஒரே மனைவி பெயர் திருமதி காந்தி
ஜானகி (வயது 44) ஒருவர்மீது
ஒருவர் உண்மை அன்பு செலுத்தி
வாழ்ந்து வந்தனர். ஆனால் என்ன
சோதனையோ இவர்கள் வம்சம்
விளங்க வாரிசு என்பதனை மட்டும்
இறைவன் அளிக்கவில்லை. எல்லா
செல்வங்களும் இருந்தும் அந்த
பிள்ளைச் செல்வம் மட்டும்கிடைக்க
வில்லை. ஆனால் செல்வங்களுள்
தலையான செல்வம் என்பது
மழலைச் செலவம்தானே.
உதாரணத்திற்கு ஒன்று நான்இங்கே
சொல்கிறேன். ஒருவரை நாம்
புதியதாக சந்திக்கிறோம் என்று
வைத்துக்கொள்ளுங்கள். அய்யா!!
உங்களுக்கு எவ்வளவு சொத்து
இருக்கிறது? வீடு சொந்தமா? கார்
இருக்கா? பைக் இருக்கா ? பாங்க்ல
எவ்வளவு இருப்பு எத்தனை
இலட்சங்கள் இருக்கு? அப்படீன்னா
கேக்றோம். இல்லையே!! அய்யா !!
உங்களுக்கு எத்தனை பிள்ளைகள் ?
ஆண்,பெண் பிள்ளைகள் என்ன
செய்றாங்க ? என்ன படிக்கிறாங்க?
அவங்களுக்கு திருமணம்
ஆயிருச்சா ? அப்டீன்னு தானே நாம
கேக்றோம். அப்ப இதுதானே
தலையான செல்வம். அட..என்ன..
நான் சொல்றது...சரிதானே.. சரி இப்ப
நாம கட்டுரைக்குள் செல்வோமா.
இந்தப் பெரியவருக்குதுணிமணிகள்
ஜவுளிகள் வியாபாரம். அவரிடம் பல
ஆண்டுகளாக ஒரு வாலிபர் ஜவுளி
வாங்கிச்சென்று தலைச்சுமையாக
வணிகம் செய்து வந்தார். இவரிடம்
கடனுக்கு வாங்கி, ரொக்கத்திற்கு
விற்று தனக்கு உள்ள இலாபத்
தொகையை எடுத்துக்கொண்டு
அவருக்குதரவேண்டியதொகையை
முழுமதியான் எந்தவித பாக்கி
வைக்காமலும் உடனுக்குடன் தந்து
வணிகத்தில் நேர்மை உள்ளவராக
நீதி நிறைந்த வணிகராக
வாழ்ந்தவர்தான் அவர் இயற்பெயர்
முழுமதியான் (வயது 21) நல்ல கட்டு
மஸ்தான தேகம் உடையவர். ஆள்
பார்க்க நல்ல வாட்ட சாட்டமாக
இருப்பார். ஆண்களுக்கே
ஆசைவரும் அவர் அழகினை
பார்க்கும் போது. அப்படி இருக்கும்
போது தன்னைவிட 25 வயது மூத்த
வயதுள்ள கணவனைக் கைப்பிடித்த
காந்திஜானகி அம்மையாருக்கும்
உள்மனதுக்குள் முழுமதியான் மேல்
ஒரு கண் இருந்ததில் வியப்பு
ஒன்றும் இல்லையே ..அட..என்ன....
நான் சொல்றது ? இப்படி இருக்கும்
போது ஒருநாள் திடீரென்று
பெரியவர் மாதவன் நாயர்
மாரடைப்பில் மரணம் அடைகிறார்.
திரண்டசொத்துக்கள்,கார்,பங்களா,
இவை எல்லாவற்றிற்கும் ஒரே
வாரிசான திருமதி காந்திஜானகி
அம்மையார் என்ன செய்தார்
தெரியுமா நேயர்களே ?............................
(தொடரும்)
தொடர்ச்சி....பாகம் எண்:- 2.
திருமதி காந்தி ஜானகி அம்மையார்
தன் கணவன் மறைந்து 3௦ நாள்
கழிந்து, மீண்டும் தனது கணவர்
செய்துவந்த வணிகத்தைத் தானே
முன் நின்று துவக்கி துணிமணிகள்
வியாபாரத்தைத் தொடர்ந்துவரும்
வேளையில், அன்று முழுமதியான்
அந்த அம்மையாரின் கடைக்கு
சரக்குகள் கொள்முதல் செய்திட
வந்தார். அம்மையாரிடம் அவரது
கணவர் மாதவன் நாயர் மறைவுற்ற
துக்க செய்தியை விசாரித்து தனது
அனுதாபங்களை அம்மையாரிடம்
முழுமதியான் தெரிவித்து காந்தி
ஜானகி அம்மையாரிடம், என்ன
செய்வது எல்லாம் மேலே இருக்கும்
இறைவனின் செயல்தான் அம்மா,
நம் கையில் என்ன இருக்கிறது. நம்
முதலாளி இப்படி திடீரென்றுநம்மை
எல்லாம் விட்டுவிட்டுச் செல்வார்
என்று நம்மில் யார்தான்
எதிர்பார்த்திருப்பார். நம் வாழ்க்கை
என்பது கிறிஸ்த்துவர்களின்
கல்லறைத் தோட்டத்து வாசகத்தின்
படியேதான் நடந்துவருகிறது என்று
சொல்ல,
காந்தி ஜானகி அம்மையார்:-நீங்க
என்ன சொல்கிறீர்கள்? எனக்குப்
புரியவில்லையே !!
முழுமதி:-அம்மா.அந்தக் கல்லறைத்
தோட்டத்தின் வாசகம் இதுதான்.
இறந்தாரை என்றும் மறந்தார்
இல்லை. இன்று உனக்கு. நாளை
எனக்கு.இதுதான் அம்மா
காந்திஜா:- உங்களது ஆறுதல்
வாசகம் என் உள்ளத்தைத் தொட்டு
விட்டது. இருந்தாலும்
(அக்கம் பக்கம் இருபுறமும் பார்த்து )
கொஞ்சம் தயவு செய்து உள்ளே
வருகிறீர்களா!! உங்களிடம் நான்
சற்று என் மனம்விட்டு பேச
விரும்புகிறேன், என்று சொன்னார்.
உடனே
முழுமதி:- என்ன ? சொல்லுங்கள்
அம்மா. உங்களது துக்கத்தில்நானும்
பங்கேற்கிறேன் (என்று
சொல்லியபடியே காந்திஜானகி
அம்மையாரின் அறைநோக்கி
சென்றார்) உள்ளே சென்றதும்
அம்மா முழுமதியானின் இரண்டு
கரங்களையும் இறுகப்பற்றியபடி
கண்களில் கண்ணீரோடு எனக்கு
உற்றார்,உறவினர் என்று யாரும்
இல்லை. எனக்குத் தெரிந்துமறைந்த
என் கணவருக்கு அடுத்தபடியாக
நான் அதிக நேரம் கண்ணுற்று
பார்த்தது தாங்கள் ஒருவரைத்தான்.
இப்போது நான் உங்கள் முன் ஒரு
கோரிக்கை ஒன்று வைக்க
விரும்புகிறேன். ஒருவேளை அது
உங்களுக்கு சற்று அதிர்ச்சியாகக்
கூட இருக்கலாம் என்றவுடன்
முழுமதி:- அதெல்லாம் ஒன்றும்
இல்லை.நீங்கள் உங்கள் மனத்தில்
உள்ளது எதையும் மறைக்காமல்
என்னிடம் தைரியமாக கூறுங்கள்.
காந்திஜா:- நன்றி. ஆகவே நான்
இப்போது உங்களிடம் கேட்பது
என்ன என்றால், ஒரு பெண் இந்த
உலகினில் தனியாக வாழ்வது
என்பது எவ்வளவு ஆபத்து
நிறைந்தது என்பது ஒன்றும் நான்
சொல்லித்தான் நீங்கள் தெரியும்
அவசியம் இருக்காது. அதிலும்
என்னைப்போல வசதயுள்ள பெண்
என்றால் கேட்க வேண்டியதே
இல்லை. எப்போது
வேண்டுமானாலும் எனது
உயிருக்கு,எனது
உடமைகளுக்கு,எனதுபெண்மைக்கு
யார் மூலமாக வேண்டுமானாலும்
ஆபத்து,தாக்குதல்கள் வர
நேரிடலாம். அதனால்......அதனால்.....
முழுமதி:- அதனால்...என்ன
சொல்லுங்கள்..தயங்காமல்.................
காந்திஜா:- அதனால் நீங்கள்
கொஞ்சம் பெரியமனதுடன்
என்னைத் தங்கள் துணைவியாராக
ஏற்றுக்கொண்டால் அது எனக்கு
பலவிதங்களிலும் பேருதவியாக
இருக்கும்.தயவு செய்து வேண்டாம்
என்றோ..மாட்டேன் என்றோ
கூறிவிடாதீர்கள்...என்று கண்ணீர்
மல்க சொல்லியபடியே
முழுமதியானின் இருகரங்களை
அதுவரை பற்றிக்கொண்டிருந்த
அம்மையாரின் இருகரங்களும்
அப்படியே முழுமதியானை
நெஞ்சோடு இறுகத் தழுவிக்
கொண்டன. முழுமதியானாலும்
வேறு எந்தக் கருத்தையும் காந்திஜா
அம்மையாரிடம் அந்த "இறுகலான"
சூழலில் தெரிவித்திட இயலாத
காரணத்தால் அவரும்
அம்மையாரைத் தனது நெஞ்சாரத்
தழுவிக்கொண்டார். இருமனமும்
ஒருமனம் ஆனது. ஒரு நல்ல நாள்
பார்த்து இருவரும் இறைவனின்
சன்னிதானத்தின் முன்பாக மாலை
மாற்றிக்கொண்டு மோதிரத்தை
அணிந்து கொண்டு இல்வாழ்க்கை
என்னும் நெடிய பயணத்தை
தொடர்ந்தனர்.(இப்போது
முழுமதிக்கு வயது 21. காந்திஜா
அம்மையாருக்கு வயது 44.)
(கட்டுரைமீண்டும்நாளை தொடரும்)
No comments:
Post a Comment