Wednesday, 16 October 2013

சென்னை--கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு தேவையா ? அவ்வளவு பெரிய இடமும் தோட்டமும்? சிந்தனை நிறைந்த ஒரு சீர்திருத்தக் கட்டுரை-- உங்களின் கனிவான கவனத்திற்கு !!






உடல்மண்ணுக்கு!! உயிர்தமிழுக்கு!! 



இதை உரக்கச் சொல்வோம் 



உலகுக்கு!!                                                     



இனம் ஒன்றாக, மொழி வென்றாக, 



புது வேல் எடுப்போம் விடிவுக்கு!!       



நம் வெற்றிப் பாதையில் நரிகள்       



வந்தால் விருந்து வைப்போம் 



விண்ணுக்கு!!                                               




அச்சம் என்பது மடமையடா!!       



அஞ்சாமை திராவிடர் உடமையடா!! 



ஆறிலும் சாவு !! நூறிலும் சாவு !!   



தாயகம் காப்பது கடமையடா!! 



தாயகம் காப்பது கடமையடா!!         




குள்ளநரிக்    கூட்டம்   



வந்துகுறுக்கிடும் !!                     



நல்லவர்க்குத் தொல்லை தந்து 



மடக்கிடும் !! நீ எள்ளளவும்  பயம் 



கொண்டு மயங்காதேடா!!அவற்றை 



எமன்உலகுக்கு அனுப்பி வைக்கத் 



தயங்காதேடா !!                                           




வேப்பமர உச்சியில் நின்னு பேய் 



ஒன்னு ஆடுதுன்னு விளையாடப் 



போகும்போதுசொல்லி வைப்பாங்க!!



உந்தன் வீரத்தைக் கொழுந்திலே 



கிள்ளி வைப்பாங்க !!                   



வேலையற்ற வீணர்களின் 



மூளையற்ற வார்த்தைகளை 



வேடிக்கைக்காகக்கூட நம்பி 



விடாதே !!                                         



வீட்டுக்குள்ளே பயந்து கிடந்தது 



வெம்பிவிடாதே!!நீவெம்பிவிடாதே !!



உலகம் முழுவதும் வாழ்ந்து வரும் 



என் உயிரினும் மேலான அன்புத் 



தமிழ் உடன்பிறப்புகளே !!                 



இந்த இனிய காலைப் பொழுதினில் 



உங்கள் இமைகள் திறந்திடும் இந்த 



வேளையில்,உங்கள் வாழ்க்கையில் 



சுமைகள் எதுவும் இன்றி, சுகமாய் 



வாழ்ந்திட, எல்லாம் வல்ல 



இறைவன் உங்கள்  அனைவருக்கும் 



அருள் புரிய வேண்டும், என உளமார 



வேண்டி,விரும்பி, பிரார்த்தனை 



செய்திடும் உங்கள் அன்புத் தமிழ் 



மொழி பேசிடும் உடன்பிறப்பு         



மதுரை T.R.பாலுவின் சிரம் தாழ்ந்த, 



கரம் குவிந்த, இதயம் கனிந்தகாலை 



வணக்கங்களுடன் கூடிய 



வாழ்த்துக்கள்.  நிற்க !!                           




இன்று அதிகாலை நான் கண் 



விழிக்கும் போது மணி 3.3௦. (இரவு 



தூங்கச் செல்லும் போது 1.௦௦ மணி) 



பொதுவாக பிரம்ம முகூர்த்தத்தில் 



கண் விழிக்கும் மனிதனுக்கு மூளை 



சாதரணமாக படுக்கையைவிட்டு 



எழுந்து கடமை ஆற்றிடும் சராசரி 



மனிதனை விட, அவனது ஆற்றலை 



விட, பன்மடங்கு அதிகமாகவே 



வேலை செய்யத் துவங்கும் என்பது 



நமது முன்னோர்கள் நமக்கு கற்றுத் 



தந்த பாடம். (ஆனால் நம்மில் 



எத்தனைபேர்கள் அதனைக் 



கடைப்பிடித்து நமது 



வாழ்க்கையைத் துவக்குகிறோம் 



என்பது வேறு விஷயம் என் அன்புத் 



தமிழ் நெஞ்சங்களே!!)  ஒருவேளை 



நான் இந்த அளவுக்கு தமிழில் 



சிறப்பாக கட்டுரைகள், கவிதைகள், 



பொன் மொழிகள்,கதைகள், 



இதுபோன்ற அறிவு பூர்வமான 



விஷயங்களை நேயர்களாகிய 



உங்களுக்கு நான் வழங்கிடுவதற்கு 



இதுவும் ஒரு காரணமாக 



இருக்கலாம். யார் கண்டது ?    அப்படி 



நான் கண் விழித்த வேளையில் என் 



சிந்தனை சிறகுகள் அதன் 



சிறகுகளை விரித்தபடி எனது இதய 



வானத்தில் (உள்ளத்தால் 



தூண்டப்பட்ட எண்ணத்தில்)பறந்து 



கொண்டிருந்த பொழுது ஒரு 



சமுதாய சீர்திருத்தக் கருத்து ஒன்று 



அங்கேஉதயமானது.அது இங்கே 



கட்டுரை வடிவினிலே உங்கள் 



இனிய கண்களுக்கு விருந்தாகக் 



காட்சி அளிக்கிறது, எனது 



அன்புத்தமிழ் உடன் பிறப்புகளே !! 



அந்த சிந்தனைதான் நான் இப்போது 



கட்டுரையின் தலைப்பினிலே 



குறிப்பிட்டுள்ளபடி, " சென்னை--



கிண்டியில் உள்ள ஆளுநர் 



மாளிகைக்கு தேவையா? அவ்வளவு 



பெரிய இடமும் ? தோட்டமும் " 



என்று தோன்றியது அன்பர்களே !! 



அந்த சிந்தனையைத்தான் இப்போது 



உங்களோடு பகிர்ந்து கொள்ள வந்து 



உள்ளேன் அன்பர்களே !! 



அந்தக்காலத்தில் புரட்சி நடிகர் 



என்று, முத்தமிழ் அறிஞர், தமிழ் 



இனத்தின் ஒரே காவலர், வாழும் 



சாக்ரடீஸ் என்று போற்றப்படும், 



இந்தத் 9௦ வயது முதிர்ந்த 



பிராயத்தில்கூட, தமிழன் தன்மான 



உணர்வுகளுடன்தான் வாழ 



வேண்டும், சிறுநரிக்கூட்டங்களின் 



சலசலப்பிற்கு அவன் அஞ்சி விடக் 



கூடாது என்று இந்தத் தள்ளாத 



வயதினிலும் தள்ளுவண்டியின் 



மூலமாகவே சென்று தமிழ் 



இனத்திற்காக போராடுவது ஒன்றே 



தனது வாழ்க்கையின் இலட்சியம், 



எத்தனை தோல்விகள் வந்தாலும், 



சூழ்ந்திருப்போர்களில் சிலர் 



சூழ்ச்சிகள் பல செய்திட்டாலும் தன் 



இலட்சியத்தினை நோக்கிப் 



பயணித்திற்கொண்டு இருக்கும் 



உண்மைத்தமிழ் இனத்தின் ஒரே 



பாதுகாவலர், எங்களின் இனமானத் 



தலைவர் திரு மு. கருணாநிதி 



அவர்களால் பட்டம் பெற்ற, 



முன்னாள் தமிழகத்தை ஏறத்தாழ 13 



ஆண்டுகள் ஆட்சி செய்திட்டவரும் 



தனக்குப்பின்னால் ஒரு கேடுகெட்ட, 



சுய சிந்தனை என்பது ஒரு நயா 



பைசா அளவிற்குக் கூட இல்லாத, 



திறமை என்றால் அங்கே 



தேடிக்கண்டுபிடிக்கும் அளவுக்கு 



ஆட்சி செய்த, பழி வாங்கும் 



எண்ணம் மட்டுமே தனது 



மூலதனமாகக் கொண்டு செயல் 



பட்ட ஒரு தலைமையை 



உருவாக்கிய ( நான் இங்கேமறைந்த 



நாவலர் நெடுஞ்செழியன் பற்றிக் 



குறிப்பிடுகிறேனே ஒழிய வேறு 



யாரையும் பற்றி அல்ல)புகழினை 



கொண்டவருமான M.G.R. அந்தக் 



காலத்தில் நடித்துவெளிவந்த 



வண்ண தமிழ்த்திரைப்படம்தான்       



 "என் அண்ணன் " என்ற படம்.அதில் 



காவியக் கவிஞர் மறைந்த வாலி 



ஒரு அற்புதமான பாடல் ஒன்றினை 



இயற்றி இருப்பார். அந்தப் 



பாடல்தான்  இதோ உங்கள் 



அனைவரின் பார்வைக்கு :-                  



நெஞ்சம் உண்டு !! நேர்மை உண்டு !! 


ஓடு ராஜா !! நேரம் வரும் !! 


காத்திருந்து பாரு ராஜா !!               


அஞ்சி, அஞ்சி, வாழ்ந்தது போதும் 


ராஜா !!                                                               


நீ ஆற்று வெள்ளம் போல் எழுந்து 


ஓடு ராஜா !!                                                 


அண்ணாந்து பார்கின்ற மாளிகை       

                                                                 கட்டி !! 


அதனருகினில் ஓலைக்குடிசை கட்டி 


பொன்னான உலகென்று பெயரும் 


இட்டால் !!                                                   


இந்த பூமி சிரிக்கும் !! அந்த சாமி 


சிரிக்கும் !!                                                   



என்று ஒரு வரி வரும். அதுபோல 



இங்கே சென்னை மாநகரின் 



வீதிகளிலே ஒண்டுவதற்குக் கூட 



இடம் இன்றி, அன்றாடம் 



நடைமேடைகளிலும், 



தெருமுனைகளிலும்,



எண்ணற்ற ஏழைகள் 



வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் 



பாடு மிகவும் சிரமம்தான், எப்போது, 



இந்த மழைக்காலம் வரும்போது. 



என்னதான் ஓலையிலே குடிசைகள் 



அமைத்து இருந்தாலும் அதிலிருந்து 



விழுகின்ற ஒவ்வொரு சொட்டு 



மழை நீரும், அவைகள் மழைநீர் 



அல்ல, அன்பர்களே !! அவர்கள் 



ஒவ்வொருவரின் இதயத்திலும் 



வடிந்து கொண்டு இருக்கின்ற 



உதிரம் என்றுதான் நான் 



சொல்லுவேன். இப்போது நான் 



உங்கள் அனைவரின் சிந்தனைக்கு 



முன்பாக வைத்திடும் கேள்விப் 



பொருள் என்னவென்றால், இப்படி 



அன்றாடம் இந்தநாட்டுக் குடிமக்கள் 



சிக்கல்பட்டு, சிரமப்பட்டு, 



கஷ்டப்பட்டு, வாழ்ந்துவரும் ஒரு 



சூழலில், ஒரு ஆளுநருக்கு/அவரது 



ஒட்டுமொத்தக் குடும்பத்திற்கு 



மட்டும் இவ்வளவு பெரிய 



விசாலமான இடமும், அவ்வளவு 



பெரிய அளவுள்ள அழகு 



மாளிகையும் தேவையா? சிந்திக்க 



வேண்டும் தோழர்களே !! நான் 



என்ன சொல்கிறேன் என்றால், 



அவரைப் பொறுத்தவரை அவர் ஒரு 



மத்திய அரசாங்கத்தின் சொல்படி 



கேட்டு ஆடுபவர். வேண்டுமானால் 



ஒரு 5௦௦௦ சதுர அடி இடம்கூட அவர் 



ஆக்கிரமித்துக் கொள்ளட்டும்.நான் 



வேண்டாம்என்றுசொல்ல வில்லை. 



அதுபோகமீதி உள்ள இடத்தில் ஏழை 



எளிய மக்களுக்கு, அவர்களும் 



இன்பமுற வாழ்ந்திடல் மிகமிக 



அவசியம் என்று நாம் 



கருதுவோமேயானால்அவர்களுக்கு 



அங்கே நல்ல கான்கிரீட் வீடுகள் 



கட்டித் தந்து அவர்களின் கண்ணீரை 



நாம் துடைத்திட முன் வரலாமே ? 



சிந்திப்பீர் !! செயல்படுவீர் !! 



பேறிஞர் அண்ணா நாமம் வாழ்க !! 



தமிழினத் தலைவர் முத்தமிழ் 



அறிஞர் கலைஞர் 



திரு மு.கருணாநிதி அவர்களின் 



தொண்டு உள்ளம் வாழ்க !! வளர்க !! 



என்றுகூறி உங்கள் அனைவரிடமும் 



நன்றிபாராட்டி விடை பெறுகிறேன் !!



வாழ்வோம் வளமுடன் !!                         



நன்றி !! வணக்கம் !!                             



அன்புடன். மதுரை T.R. பாலு.

No comments:

Post a Comment