Wednesday, 2 October 2013

எறும்பு செய்த தவம் எறும்புக்கே எமன் ஆன கதை தெரியுமோ உங்களுக்கு !!-தெரிஞ்சுக்கிடுங்க அத இப்போது !!





பேரன்பிற்கும் பெருமதிப்பிற்கும் 


உரிய எனது அன்பு முழுதும் 


நிறையப் பெற்ற உலகெங்கிலும் 


வாழ்ந்து வரும் எனது அன்புத் தமிழ் 


நெஞ்சங்களே !!                                       



முன்பு ஒரு காலத்திலே


எறும்புகள் எல்லாம் கூடிக் கலந்து 


தங்களுக்கு தாங்கள் கடித்திடும் 


எந்த உயிரினங்களாலும் 


தங்களுக்கு மரணம் 


சம்பவித்துவிடக் கூடாது என்று 


எண்ணி அதைத் தடுத்து நிறுத்திவிட 


என்ன செய்வது என்று ஆலோசனை 


செய்ததாம். இறுதியாக எல்லாம் 


வல்ல இறைவனை நோக்கித் தவம் 


இருந்து அந்த சாகாத வரத்தினைத் 


தாங்கள் பெற்று விட வேண்டும் 


என்ற தணியாத பேராசையை 


மனதினுள் அடக்கி இறைவனை 


எண்ணித் தவம் செய்யத்துவங்கினர் 


அந்த எறும்பு கூட்டத்தினர். ஒரு 


மண்டலம் நாற்பத்தி எட்டு நாட்கள் 


அன்னம் ஆகாரம் தண்ணீர் இன்றி 


இறைவனின் திருநாமத்தை 


மட்டுமே மனமதில் உச்சரித்துக் 


கொண்டு தவம் இருந்து வந்தது 


அந்த ஏறும்புக் கூட்டம்.கடைசி நாள் 


வந்தது நாற்பத்தி எட்டு நாள் தவ 


விரதமும் முடிவடைந்த 


நிலையினில் எல்லாம் வல்ல 


இறைவன் அந்த எறும்புக் 


கூட்டத்தின் கண் முன்னே 


தோன்றினார். என் அருமை பக்த 


கோடிகளே!! உங்கள் தவ 


வலிமையை பாராட்டுகிறேன். 


நீங்கள் என்ன நோக்கத்திற்காக 


தவம் இருந்தீர்களோ அந்த தவ 


வேள்வியின் முக்கிய நோக்கம் 


என்ன? என்னிடம்எதை எதிர்பார்த்து 


நீங்கள் தவம் செய்தீர்கள் என்று 


எறும்புக் கூட்டத்தை நோக்கி 


வினவினார் இறைவன். 


அதற்கு எறும்புகள் கூட்டத்தின் 


தலைவன் ஏகாம்பரம் :- இறைவா 


எங்கள் வாழ்வு நாங்கள் 


வாழ்ந்திடும் நாட்கள் முக்கியமாக 


இந்த மனிதர்களால் நாங்கள் 


அவர்களை கடித்திடும் நேரம் 


அவர்கள் எங்களை சாகடித்து 


விடுகிறார்கள் இறைவா. அதனால் 


நாங்கள் பல்லாண்டுகாலம் உயிர் 


வாழ வேண்டியே இந்தத் தவம் 


செய்தோம். எங்கள் கோரிக்கையை 


இப்போது உங்களிடம் நாங்கள் 


தெரிவிக்கிறோம் என்று சொன்ன 


ஏகாம்பரம் (எறும்புகள் கூட்டத் 


தலைவன்) நாங்கள் கடித்தால் 


உடனே மரணம் அடையும் 


நிலைதனை அங்கே நாங்கள் 


மனிதனை கடித்திடும் நேரத்தில் 


தாங்கள் ஏற்படுத்தித் தர 


வேண்டுகிறோம் இறைவா இது 


ஒன்றேதான் எங்கள் இலட்சியம் 


என்று ஏகாம்பரம் சொன்னான். 


உடனே இறைவன் புன்னகை பூத்திட 


நன்கு யோசனை செய்துதான் 


நீங்கள் இந்த வரத்தை என்னிடம் 


முன் வைக்கிறீர்களா? என்று கேட்க 


ஆவேசத்துடன் ஏகாம்பரம்,நன்றாக 


ஆலோசனை செய்தாகி விட்டது. 


இது ஒன்று தான் எங்கள் தவ 


வேள்வியின் முக்கிய கோரிக்கை. 


"நாங்கள் கடித்தவுடன் மரணம் 


சம்பவிக்க வேண்டும் "என்று 


மனதில் மட்டும் மனிதனை என்று 


எண்ணிக்கொண்டு கோரிக்கையில் 


அந்த முக்கியமான வார்த்தையை 


ஏகாம்பரம் குறிப்பிட மறந்து 


விட்டான் இறைவனோ தன் மனதில் 


விதி யாரை விட்டது என்று 


மனதுக்குள் எண்ணி, சரி அப்படியே 


நீங்கள் விரும்பியவாறே நீங்கள் 


கடித்தவுடன் மரணம் சம்பவிக்கும் 


என்று ஆசீர்வாதம் செய்து விட்டு 


அந்த இடத்தில் இருந்து மறைந்தார் 


இறைவன். உடனே எறும்புகள் 


கூட்டத்தில்ஒரேஆட்டம்,பாட்டம்,


கொண்டாட்டம்தான் போங்கள். 


எதிர்காலத்தில் என்ன நடக்கப் 


போகிறது என்று அறியாமல் அந்த 


ஐந்து அறிவு ஜீவன்கள் ஆடின. இரவு 


வேளை வந்தது. வழக்கம் போல் 


படுத்து உறங்கிக்கொண்டு இருக்கும் 


ஒரு மனிதனின் உள்ளங்கையில் 


ஏகாம்பரம் (எறும்புகூட்டத்தின் தல ) 


இறைவன் தந்த வரத்தை சோதித்து 


பார்த்திட எண்ணி " நறுக் " என 


கடித்தான். உடனே முழித்த 


மனிதனோ " சட் " என்று அதை 


அடித்துவிட உடனே மரணம் 


சம்பவித்தது. இதுகண்ட 


ஏகாம்பரத்தின் பாரியாள் (மனைவி) 


எழிலரசி இறைவனை நோக்கி 


கத்தினாள். இறைவா அநீதி!! அநீதி!! 


உங்கள் வாக்குப் பொய்யாகப் போய் 


விட்டதே வாருங்கள் வாருங்கள்என 


இறைவனை நோக்கி கூக்குரல் 


இட்டாள்.இறைவனும் 


பிரசன்னமானார் என்ன அம்மா ஏன் 


இந்தக் கத்தல்,கதறல் என்று 


வினவிட எழில்அரசி உங்களிடம் 


நாங்கள் பெற்ற வரம் பொய்த்துப் 


போய்விட்டது இறைவா. இதற்கு 


நீங்கள் என்ன பதில் சொல்லப் 


போகிறீர்கள்? நான் என் கணவனை 


இழந்து நிற்கிறேன். கூறுங்கள் 


உங்கள் பதிலை.இதற்காகத்தானா 


நாங்கள் விரதம் இருந்து தவம் 


புரிந்தோம் என்றாள். புன்னகை பூத்த 


இறைவனோ இது எனது தவறு 


இல்லை கேட்க வேண்டிய வரத்தை 


சரிவர ஒழுங்காக வார்த்தைகளை 


அடுக்கி கேட்டிடாமல் கோட்டை 


விட்டதன் விளைவு என்றார் 


எம்பெருமான். நீங்கள் சொல்வது 


எனக்குப் புரியவில்லையே, இது 


எழிலரசியின் வாதம். உடனே 


இறைவன் பெண்ணே !! உன் 


கணவன் என்னிடம் வரம் 


கேட்கும்போது நாங்கள் எந்த 


மனிதரைக் கடித்தாலும் மரணம் 


அங்கே சம்பவிக்க வேண்டும் 


என்றுதான் கேட்டானே ஒழிய 


நாங்கள் எந்த மனிதரைக் 


கடித்தாலும் அந்த மனிதர்களுக்கு 


மரணம் சம்பவிக்க வேண்டும் என 


எந்த இடத்திலும் முன்வைக்க 


வில்லை. நான் மீண்டும் அவனிடம் 


கேட்டேன். நன்றாக யோசித்துத் 


தானே  நீங்கள் இந்தக் 


கோரிக்கையைக் என் முன் 


வைக்கிறீர்கள் என்றும் எச்சரித்தும் 


கேட்டேன் உன் கணவனிடம். ஆம் 


நன்றாக யோசித்துத் தான் 


கேட்கிறோம் நாங்கள் கடித்தவுடன் 


மரணம் சம்பவிக்க வேண்டும் 


என்றுதான் உன் கணவன் 


கேட்டானே ஒழிய நாங்கள் 


கடித்தவுடன் மனிதன் மரணம் 


அடைய வேண்டும் என்று கேட்க 


வில்லை. இதற்கு நான் எப்படி 


பொறுப்பாக முடியும். உங்கள் தலை 


எழுத்து. கேட்டீர்கள் இப்போது 


அனுபவிக்கிரீர்கள்.அதற்கு நான் 


என்ன செய்ய முடியும்.என்று 


சொல்லிவிட்டு இறைவன் அந்த 


இடத்தை விட்டு மறைந்தான். செய்த 


தவறை எண்ணி எறும்புகள் கூட்டம் 


வருந்தின. இனி வருந்தி என்ன 


செய்ய முடியும். இதுதான் 


எறும்புகளின் தலை எழுத்தாக 


முடிந்தது.                                                     



கதையின் மூலம் நாம் கற்றுக் 


கொள்ள வேண்டிய பாடம் :-   நாம் 


எவரிடமும் ஏதாவது வேண்டுதல்/


கோரிக்கைகள் வைக்கிறோம் என்று 


முடிவெடுத்தால் அந்தக் 


கோரிக்கையில் வார்த்தைகள் 


சரியாக முழுமை பெற்று உள்ளதா 


என்று ஒருமுறைக்கு இருமுறை 


சரியாக அலசிப் பார்த்து அதன் 


பின்னரே அதனை சமர்பித்திட 


வேண்டும் சம்பந்தப் பட்டவரிடம். 


இல்லை என்றால் இந்த எறும்பு 


போலவே நாமும் அகப்பட்டுக் 


கொள்ள வேண்டியதுதான்.இதைத் 


தான் முத்தமிழ் அறிஞர் கலைஞர் 


அவர்களின் கைவண்ணத்தில் 


உருவான " பூம்புகார் " 


திரைக்காவியத்தில் ஒரு பாடல் 


நமக்கு நினைவூட்டும். அந்தப் பாடல் 


இதோ :-                                                         



 புயல் வரும்முன் காப்பவனே                                                                        அறிவாளி!!


அது வந்த பின்னே தவிப்பவனோ                                                                     ஏமாளி!! 

வாழ்க்கை என்னும் ஓடம் !!


வழங்குகின்ற பாடம்!!-மானிடனின் 


மனதினிலே மறக்கவொன்னா                                                                             வேடம்!! 


வாழ்க்கை என்னும் ஓடம் !!               



என்று அந்தப் பாடல் ஒலிக்கும் 


அன்பர்களே !!                                           


 இத்துடன் இந்தக் கட்டுரை நிறைவு 


பெறுகிறது அன்பர்களே !!           


 மீண்டும் நாளை மற்றும் ஒரு 


தலைப்பினில் உங்களுக்கு வேறு 


ஒரு கட்டுரையை 


சமர்பிக்கிறேன்.அதுவரை உங்கள் 


அனைவரிடமும் அன்பு பாராட்டி 


விடை பெறுவது உங்கள் அன்புத் 


தமிழ் பேசும் சகோதரன் மதுரை 


T.R.பாலு.வணக்கம் நேயர்களே !!

No comments:

Post a Comment