Saturday, 26 October 2013

தொடர்ச்சி..... பகுதி எண் :2.....அனுதினமும் அர்த்தசாம பூசைசெய்து ஆண்டவனை வழிபட்ட அய்யரும் -- அனுதினமும் அர்த்தசாம வேளையில் வருவோர் அனைவருக்கும் உடல் இன்பத்தை அள்ளி வழங்கிய அழகிய விலைமகள் விமலா, இவர்கள் இருவரும் அவரவர் உயிர் உடலைவிட்டு பிரிந்த பின்பு இறுதியாக போனதெங்கே ?






உடல்மண்ணுக்கு!! உயிர் தமிழுக்கு!!



இதை உரக்கச்சொல்வோம் 


உலகுக்கு !!                                                     



இனம் ஒன்றாக, மொழி வென்றாக, 



புதுவேல் எடுப்போம் விடிவுக்கு!!   



நம் வெற்றிப் பாதையில் நரிகள் 



வந்தால் விருந்து வைப்போம் 



விண்ணுக்கு !!




உலகத்தமிழர்கள் 



அனைவருக்கும் இதயம் கனிந்த நல் 



வணக்கம்!!



கடவுள் ஏன் கல்லானார்? 



மனம் கல்லாய்ப் போன 



மனிதர்களாலே !!இது காவியக் 



கவிஞர் வாலி எழுதிய வரலாற்றுச் 



சிறப்புமிக்க வரிகள்.  



அன்புத் தமிழ் நெஞ்சங்களே !! 



இந்தக் கட்டுரையின் வாயிலாக 



நான் உங்களுக்கு சொல்லும் 



கதையில் ஒரு மையக் கருத்து 



ஒன்று உண்டு.அதை நான் 



கட்டுரையின் இறுதிப் பகுதியில் 



குறிப்பிட்டு இருக்கிறேன்.படியுங்கள். 



படித்தபின்பு நீங்கள் அனைவரும் 



சிந்தியுங்கள் !! அன்று நடிகர் திலகம் 



சிவாஜிகணேசன் நடித்துவெளிவந்த 



வண்ணக்காவியமாம் " கௌரவம் ". 



அதில் பாரிஸ்டர் 



ரஜினிகாந்த்வேடம்அணிந்து  அவர்



சொல்லும் ஒரு வசனம் ஒன்று 



உண்டு. அது என்ன என்றால் இதோ 



இதுதான் :-  




" கடவுள் பிரேம் போட்டு 



மாட்டிய படத்தில் இல்லைடி. நாம 



செய்யற  தொழிலில் இருக்கார். 



எனக்கு எதுக்குடி பட்டை? (மறைந்த 



நடிகை பண்டரிபாய்(சிவாஜி 



மனைவி) தரும் விபூதி 



பிரசாதத்தைப்பார்த்து சொல்லும் 



கணேசன், தனது கையில் உள்ள 



விஸ்கி பாட்டிலை அவளிடம் 



காண்பித்து எனக்குத்தான் இங்கே 



இருக்கேடி பட்டை என்று) 



இந்த வசனம்தான் நான் உங்களுக்கு 



கீழே தரும் கட்டுரையின் கருவுக்குத் 



தாய் !!  இப்போது நாம் கதைக்குள் 



செல்வோம் !!                                               



கீழப்பாவூர்.அழகிய  மாஞ்சோலை, 



தென்னந்தோப்புகள் பல நிறைந்த 



ஒரு கிராமம். அங்கு பெரும்பான்மை 



மக்கள் என்று யார் வசிக்கிறார்கள் 



என்று பார்த்தால் பூணூல் அணிந்து 



கோவிலில் இறைவனைத் தொட்டு 



பூசை செய்திடும் அய்யர்கள் அதிகம் 



வாழ்ந்திடும் சிற்றூர் அது.  




அதில் பஞ்சாபகேச அய்யர் என்னும் 



வயது சுமார்   65   வயது    நிரம்பிய 



(ஏறத்தாள 1௦ ஆண்டுகளுக்கு முன்பு 



மனைவி மங்களத்தை இழந்தவர் 



அவர்) அய்யர் அவர்கள்,  இறைவன் 



திருநாமம் ஒன்றினையே  பிறந்த 



நாள் முதல் இன்று வரை மிகவும் 



பயபக்தி நிறைந்த மனத்துடன் 



வணங்கி  வழிபட்டு  வாழ்ந்து 



வருபவர். ஒவ்வொரு நாளும் 



நள்ளிரவினில் நடைபெறும் அர்த்த 



சாம பூஜை செய்து ஆண்டவனை 



தொழுதிடும் பாக்கியம் பெற்றவர் 



இந்த பூஜையை ஆண்டுமுழுவதும் 



எந்த சிக்கலும் இன்றி,சிரமும் இன்றி 



தங்குதடை இல்லாமல் 



செய்துவந்தாதால்  என்றாவது ஒரு 



சிவராத்திரி அன்று தன் உயிர் 



பிரிந்தால் அது சொர்கத்தை 



நோக்கியே செல்லும் அந்த உயிர் 



என்ற கொள்கையில் அசைக்க 



முடியாத நம்பிக்கை கொண்டவர் 



திரு பஞ்சாபகேச அய்யர் அவர்கள். 



மனைவி மங்களம் இவரைவிட்டு 



பிரிந்த பின்பு இடைவிடாமல் அந்த 



அர்த்தசாம பூசையை இறைவனுக்கு 



நடத்தி வழிபட்டுவந்த வேளையில்- 



தான் அங்கே அவரது விதி தனது 



விளையாட்டினை துவக்கியது. 



எப்படி என்றால் அன்பர்களே !! 



அனுதினமும் இரவு 9 மணி 



சுமாருக்கு தனது வீட்டினைவிட்டு 



கிளம்பிடும் பஞ்சாபகேச அய்யர் 



அவர்கள், கோவிலை சென்று 



அடைவதற்கு  சுமார் 3௦ நிமிடங்கள் 



வரை ஆகும். சற்று தொலை 



தூரத்தினில்தான் கோவில் உள்ளது. 



இப்படியாக தனது இறைபணியைச் 



செய்துவந்த அய்யரின் வாழ்கையில் 



வந்தது வேதனை. ஐப்பசி மாத 



அடைமழை தனது வேலையை 



துவக்கிய நேரம் அது. பாதிதூரம் 



தனது வீட்டைவிட்டு வெளியே 



கிளம்பிய அய்யரால் மழை மிகக் 



கடுமையாகப் பொழிந்திட 



தொடர்ந்ததால் மழைக்கு ஒரு 



வீட்டிற்கு முன்னால்உள்ள 



வராண்டாவின் அருகே உள்ள 



ஜன்னல் பக்கம் ஒதுங்குகிறார்.அந்த 



வீடு யாருடையது என்று கேட்டால், 



அழகிய விலைமகள் விமலாவின் 



வீடுதான் அது. முன்பகுதியில் உள்ள 



ஜன்னல் உட்புறம் சரிவரத் தாளிடாத 



காரணத்தால், உள்ளே என்ன 



நடைபெறுகிறது என்பதைப் 



பார்த்திட மட்டுமே அல்ல, அங்கே 



நடைபெறும்  "நிகழ்வுகளின்"போது 



எழுகின்ற..ஆ..யம்மா...யப்பா... இது 



போன்றமுக்கல்,முனகல்முத்தொலி 



(முத்தமிடும் சப்தம்)



சத்தங்களும் பஞ்சாபகேச அய்யரின் 



செவிகளில் விழுந்திடாமல் 



இருக்கவில்லை. அப்படி முனகல் 



சப்தம் அன்றையதினமும் கேட்டது. 



என்ன சத்தம். உள்ளே இருக்கும் 



யாருக்காவது உடல்நிலை 



சரியில்லாது காய்ச்சலின் பாதிப்பு 



எல்லைமீறி சத்தம் வருகிறதோ 



என்று நினைத்து அய்யர் அவர்கள் 



அந்த ஜன்னல் இடைவெளியினில் 



தனது பார்வையைச்செலுத்துகிறார். 



அங்கே அய்யர் அவர்கள் கண்ட 



காட்சி அவரை மெய் நடுங்கிட 



வைத்தது என்பதே உண்மை 



அன்பர்களே !! அப்படி அது என்ன 



காட்சி ?                                                             



இடைவேளைக்குப் பின்னர் 



சந்திப்போம்--கதை என்னவாக 



இருக்கும் என்று இப்போது நீங்கள் 



சிந்திப்பீர்.(ஒரு சின்ன இடைவேளை)


                 "" இ டை வே ளை ""                



இடைவேளை முடிந்தது. இப்போது 



காட்சி தொடர்கிறது அன்பர்களே. 



லேசான இடைவெளி உள்ள அந்த 



ஜன்னலில் இருந்துவரும் 



ஓசையைக் கேள்வியுற்ற 



பஞ்சாபகேச அய்யர் என்ன செய்தார் 



தெரியுமா? அந்த ஜன்னல்அருகினில் 



வந்து லேசாக உள்ளே அதனைத் 



தள்ளிவிட அங்கே அவர் கண்ட 



காட்சி அவரை குலை நடுங்கிட 



வைத்தது என்பதே உணமை. ஆம் 



அன்பர்களே !! அங்கே விலைமகள் 



விமலா தனது பட்டுப்போன்ற 



உடலில் எந்த உடைகளும் 



இல்லாமல் ஆடவன் ஒருவனுடன் 



உடலுறவு கொண்டுள்ள காட்சிதான் 



அது. இதைக்கண்டவுடன் சடக்என்று 



தனது தலையை வேறு பக்கம் 



திருப்பிக் கொள்கிறார் பஞ்சாபகேச 



அய்யர் அவர்கள்.அட சர்வேஸ்வரா!!



என்ன கொடுமை இது. நான் இன்று 



யார் முகத்தில் முழித்தேனோ 



தெரியவில்லையே !! என்னை 



ஷமிக்கணும் !! ஷமிக்கணும் !!




( அப்டீனா பிராமணாள் பாஷையில் 



மன்னிக்கனும்னு அர்த்தமாம். என்ன 



பாஷையோ ?) இப்படித் தனது 



தலையில் அடித்துக்கொண்டஅய்யர் 



மீண்டும் அந்த ஜன்னல் இடுக்கின் 



வழியாக தனது பார்வையை 



செலுத்துகிறார். (அட.. என்ன.. 



T.R.பாலு சார்...சரி..விடுங்க..அய்யர்.. 



அவரும்..ஆம்பிளைதானே...அதிலும் 



வயசானவர்...பாக்க மட்டும்தானே 



முடியும்...இத்த போயி பெருசா 



எழுதிட்டு இருக்கீங்களே !! மேலே 



மேட்டருக்கு வா நயினா..அட.. 



என்ன..நான் சொல்றது) சிறிது 



நேரம் அந்த " சிறப்பு காட்சியைத் " 



தொடர்ந்து 4 நிமிடங்கள் பார்த்தார் 



அய்யர். அங்கே அறைக்குள் "படம்" 



முடிந்து விலைமகள் விமலாவும் 



அவளோடு உறவு கொண்டிருந்த 



ஆடவனும் கதையை முடித்து பின் 



எழுந்திட முயற்சிக்கும்வரைஅய்யர் 



அந்த ஆனந்தக் காட்சியை கண்டு 



களித்தார். மழையும் ஓய்ந்தது. 



இங்கே  வீட்டுக்குள் நடந்த 



கதையும் முடிந்தது. வெளியே வந்த 



அய்யர் அங்கே தொட்டியில் இருந்த 



தண்ணீரை எடுத்து தனது 



தலையிலும் உடம்பின் மீதும் 



தெளித்துக்கொண்டார். ஈஸ்வரா. 



நீதான் என்னை இரட்சிக்கவேண்டும் 



என்று வேண்டிக்கொண்டார். 



(ஆனால் இந்தப் பாவத்தைப் பார்த்த 



அவரது கண்களை மட்டும் ஏனோ 



நீர்கொண்டு கழுவிட வில்லை 



அய்யர் அவர்கள்.) தான் இன்று 



பார்த்த இந்தக் காட்சிக்கு ஒரு 



சாட்ஷி வேண்டுமே, அதற்காக ஒரு 



சிறு கல் ஒன்றினைத் தேர்ந்து 



எடுத்து அதனை விமலாவின் 



வீட்டின் முன்பாக உள்ள ஒரு பெரிய 



காலியாக இருந்த தண்ணீர்பிடிக்கும் 



ட்ரம் அதனுள் சேர்த்துவைத்தார் 



அய்யர் அவர்கள். நேராக 



கோவிலுக்கு சென்றார். அர்த்தஜாம 



பூஜையை முடித்தார்.பூஜையை 



மட்டுமே அவரால் செய்திட 



முடிந்தது. மந்திரத்தினை மட்டுமே 



அவரது உதடுகளால் உச்சரிக்க 



முடிந்தது. ஆனால் அவரதுஉள்ளத்து 



நினைவுகள் எல்லாம், ஏறத்தாழ 1௦ 



ஆண்டுகள் கழித்து தனது மனைவி 



மங்களம் இறந்ததற்குப் பிறகு 



பார்த்திடாத,பார்த்திட முடியாத 



(அதிலும் ஒரு அழகிய இளம் பெண்) 



காந்தர்வக் காட்சியை மட்டுமே 



மனம் நினைத்துக்கொண்டே 



இருந்தது. சும்மாவா சொன்னார்கள். 



சாண் பிள்ளை என்றாலும் ஆண் 



பிள்ளை என்று? ஒருகைப்பிடி 



உமியை எடுத்து தூக்கிடும் வலு 



உள்ளவரை ஒரு ஆண் மகனுக்கு 



"அந்த" ஆசை என்பது போகவே 



போகாதாம். பலபேர் சொல்லக் 



கேட்டிருக்கிறேன். அங்கே 



பார்ப்போம் விலைமகள் 



விமலாவின் வீட்டினில் என்ன 



நடந்தது என்று? வந்த ஆடவனிடம் 



தான் செய்த "வேலைக்கு "ஊதியம் 



பெற்றுக்கொண்டாள். சிரித்தபடியே 



அப்புறம்..அடுத்து..எப்ப..பாப்போம்..



ன்று கேட்க ?வந்தவனோ..என் 



விம்மிகுட்டி. மாசக் கடைசி 



இல்லையா. சம்பளம் 



வாங்கியவுடன் முதல் வாரம் ஒரு 



நாள் வாரேன்(இந்த வசனம் 



பெரும்பாலும்  விலைமாதர்கள் 



வீட்டிற்கு அடிக்கடி செல்பவர்கள் 



கூறிடும் வழக்கமான வசனம்தான் 



என்று என் நண்பன் நடேசன் 



சொன்னது அப்போது என் நினைவு 



க்கு வந்தது) என் செல்லகுட்டி 



என்று சொல்லியபடிய தான் 



கொண்டு வந்த சைக்கிளைத் 



தள்ளிக்கொண்டு சென்று விட்டான் 



அவன். மறுநாள் இரவு பஞ்சாபகேச 



அய்யர் அர்த்த ஜாம பூஜைக்காக 



கோவிலுக்குக் கிளம்பினார். 



நடந்தார்.நடந்தார்.வேகமாக 



நடந்தார். ஆனால் என்ன செய்வது.. 



விலைமகள் விமலாவின் வீட்டின் 



அருகே வரும்போது அவரையும் 



அறியாமல் அவரது கால்கள் பிரேக் 



போட்டது.(இது என்னடா சுத்தக் 



கன்றாவியா இருக்கே ? அடவிடுப்பா 



இப்ப நீ அந்த அய்யரோட இடத்துலே 



இருந்திருந்தீன்னா நீயும் தான் பிரேக் 



போட்டு இருப்பே.இங்க தான் நான் 



சத்ய ராஜ் நடிச்ச படத்துலே ஒரு 



பாட்டு வரும்.அதனை நான் நினைவு 



படுத்திக்கிறேன். எவன்டா புத்தன் 



இங்கே !! எவண்டா சுத்தம் இங்கே !! 



விளக்கை அணைச்சுப்புட்டா 



எவன்டா ராமன் இங்கே ? என்று ஒரு 



வரி வரும் )    சரி. அய்யரோட 



கால்கள் பிரேக் போட்டுச்சு.. 



அப்புறம்...என்ன...நடந்துச்சு... 



அச்சச்சோ...ராத்திரி மணி 1 



ஆயிருச்சு.... எனக்கு தூக்கம் வருது. 



மீதிக்கதையை நான் நாளைக்குச் 



சொல்றேனே ப்ளீஸ். குட் நைட்.   



அன்பர்களே கட்டுரை மீண்டும் 



நாளை தொடருவோம். 




நன்றி!! வணக்கம்!!                                   



அன்புடன். மதுரை T.R.பாலு.               


                                                       (தொடரும்) 



அன்பர்களே !! இந்தக் கட்டுரையின் 



தொடர்ச்சி இன்னும் சிறிதுநேரத்தில் 



உங்கள் கண்களுக்கு விருதாக வர 



இருக்கிறது. 



நன்றி !! வணக்கம் !! 



அன்புடன். மதுரை T.R. பாலு.

No comments:

Post a Comment