தொடர்ச்சி....பாகம் எண் 2.
ஒரு நல்ல நாள் பார்த்து முழுமதி &
காந்திஜானகி அம்மையார்
இருவரும் இறைவனின் சந்நிதானம்
முன்பாக மாலைமாற்றிக்கொண்டு
மோதிரம் அணிந்து கொண்டு
இல்வாழ்க்கை என்னும் நெடிய
பயணத்தைத் தொடர்ந்தனர்.
(இப்போது முழுமதிக்கு வயது 21
காந்திஜானகி அம்மையாருக்கு
வயது 44)....கட்டுரைதொடர்கிறது........
பாகம் எண்:- 3.
காலம்,கடல் அலை, கடன் வட்டி
இந்த மூன்றுக்கும் உள்ள ஒரு
ஒற்றுமை என்ன என்று தெரியுமா
நேயர்களே !! இவை மூன்றும் யார்
உத்தரவுக்கும் பணிந்திடாமல்
நாளொரு மேனியும் பொழுதொரு
வண்ணமுமாகத் தம் கடமைகளை
செய்துகொண்டே இருக்கும்
ஆற்றல்,வல்லமை,வளர்ச்சி
கொண்டவைகளாக இருப்பதே
காரணமாகும். எப்படி என்றால்
காலம், அது இரவு,பகல்,நாள்,வாரம்,
மாதம், வருடம் என்று
கூடிக்கொண்டே போகும்.
அதுபோலவே கடல் அலை,
கரையைநோக்கி நுரைகள்கொண்டு
வந்த வண்ணமாகவே இருக்கும்
ஓய்வு, ஒழிவு,மறைவு ஏதும்
இல்லாமல். அது போலத்தான்
வட்டியும், அசல் தொகை, பணம்
பெற்றவரின் கைகளில் இருக்கும்
வரை, வட்டி என்பது குட்டி
போட்டுக்கொண்டுதான் இருக்கும்.
இவைகள் போலவே முழுமதி,
காந்திஜானகி இருவரும் அன்பாக
இல்லறம் நடத்தி வந்தனர் ஏறத்தாழ
24 ஆண்டுகளுக்கும் மேலாக.
இப்போது காந்திஜானகி
அம்மையாருக்கு வயது 68.
முழுமதிக்கு வயது 45. இப்போது
நான் இங்கே ஒரு கருத்தைப் பதிய
வைத்திட விரும்புகிறேன்
அன்பர்களே !! அது என்னவென்றால்
ஒரு ஆடவனுக்கு அவன்
பிறப்புமுதல் இறப்புவரை அவன்
இத்தனை பெண்களோடு தொடர்பு/
திருமணம்/சேர்த்து வைத்துக்
கொள்ளுதல், இந்த சம்பவங்கள்
எல்லாமே இறைவனின் கருணை
இருந்தால் மட்டுமே சாத்தியம்ஆகும்
என்பது பொது விதி. நம் இந்து
சாஸ்திரப்படி ஒவ்வொருவருடைய
ஜனன கால ஜாதகத்தின் படி 7ம்
இடம் என்பது முதல் மனைவியே
ஆகும். அதுபோலவேதான் 11ம் இடம்
என்பது இளைய தாரம்/இலாப
ஸ்தானம்/அயன,சயன,சுக போக
பாக்கிய ஸ்தானம் என்று கற்று
அறிந்த ஜோதிட வல்லுனர்கள்
சொல்வார்கள். நான் எதற்காக
இந்தக் கருத்தை இங்கே
குறிப்பிடுகிறேன் என்று சொன்னால்
நம் முழுமதிக்கு அந்த இளையதார
யோகம் அவருக்கு இறைவனால்
வழங்கப்பட்டு உள்ளது. இவரது
கடைக்கு அடிக்கடி ஜவுளி வாங்க
வரும் அழகிய பெண் ஒருத்தி அவள்
பெயர் ஆஷா (வயது 21) என்பதே
ஆகும். மதிய நேரம் கடையில்
கூட்டம் ஏதும் இல்லாமல் முழுமதி
தனியே கல்லாவில்இருக்கும் நேரம்,
கடையில் உள்ள தொழிலாளர்கள்
யாரும் இருக்க மாட்டார்கள். அது
மதிய உணவு இடைவேளை ஆகும்.
ஆஷா தினமும் இந்த வேளையில்
பார்த்து ஜவுளி வாங்க வருவது
நாளடைவில் ஆஷாவுக்கு
வாடிக்கை ஆகிவிட்டது.
முழுமதியும் இவர் வரும் நேரம்
அவருக்கு தேவையான
துணிமணிகளை தருவதில்
தனிக்கவனம் செலுத்தி அவரோடு
நல்ல முறையில் நட்பு பாராட்டி
வந்தார். நாள் ஆக, ஆக, இந்த நட்பு
என்பது முழுமதி,ஆஷா இருவரும்
ஒருவரை ஒருவர் மனதாரவிரும்பும்
நிலை வரை கொண்டு சென்று
விட்டது. உலை வாயை
மூடிவிடலாம்.ஆனால் ஊர் வாயை ?
அது எவராலும் மூடிட இயலாது .
இந்த காதல் விஷயம் காந்திஜானகி
அம்மையாரின் செவிகளுக்கும்
எட்டியது. ஆனால் இந்தக் காதலை
காந்திஜானகி அம்மையார்
எதிர்ப்பாரா அல்லது நிராகரிப்பாரா
இந்த விஷயத்தில் நடந்தது என்ன ?
தயவு செய்து நாளைவரை சற்று
பொறுத்து இருங்களேன் !! ..............
நன்றி !! வணக்கம் !!
அன்புடன்,மதுரை TR.பாலு.
(தொடரும்)
தொடர்ச்சி......பாகம் எண்:-4.
முழுமதியான் & ஆஷா இவர்களின்
காதல் விவகாரம் காந்திஜானகி
அம்மையாரின் காதுகளுக்குப்
போனவுடன் சற்று நேரம் அமைதி
காத்து, அதன் பின்னர், தீவிரமாக
யோசித்தார்...யோசித்தார்...பின்னர்
ஒரு முடிவுக்கு வந்தவராக தனது
கணவரை அழைத்தார். இப்போது
இந்த இருவரிடையே நடைபெற்ற
உரையாடலை பார்ப்போமா ?
காந்திஜா:- என்னங்க !! எப்ப
வந்தீங்க ?
முழுமதி:- (தயங்கிய படியே)
நான்..இப்பத்தான்...வந்தேன்..
காந்திஜா:- ஏன் நின்னுட்டே
இருக்கீங்க!! உக்காருங்க !! உங்கட்ட
கொஞ்சம் பேசணும்..அதான்...
கூப்பிட்டு அனுப்பினேன்.
முழுமதி:- நானும் உன்கிட்ட ஒன்னு
பேசனும்ன்னுதான் சந்தர்ப்பம்
எதிர்பாத்துட்டு இருந்தேன். ஒரு
விஷயமா பேசணும்.
காந்திஜா:- என்னங்க ? எந்த
விஷயத்தைப் பத்தி ? உங்களோட
புதிய காதல் விஷயத்தைப் பத்தித்
தானே ?
முழுமதி:-(சற்றே அதிர்ச்சியோடு)
காந்திஜா !! ( அவர் குரலில் பயம்
தெரிந்தது)
காந்திஜா:- ஏங்க !! இந்த விஷயம்
எனக்கு எப்படி தெரிஞ்சுதுன்னு
தானே நீங்க அதிர்ச்சி அடையுறீங்க ?
ஒன்னும் பயம் தேவை இல்லை .
இதை நீங்க எங்கிட்ட முன்கூட்டியே
சொல்லி இருக்கலாம். நான் என்ன
கூடாதுன்னோ,இல்ல வேண்டாம்
அப்படியா நான் சொல்லப்போறேன்?
இல்லைங்க !! அந்த அளவுக்கு நான்
ஒன்னும் கல் நெஞ்சு உடையவள்
இல்லை. எனக்கும் வயசாயிட்டே
போகுது. எனக்கு அப்புறம் உங்களை
கவனிச்சுக்கிறதுக்கு எனக்கு
அப்புறம் ஒரு ஆள் உங்களுக்கு
தேவை இல்லாமலா போயிரும்.
நான் போனதுக்கு அப்புறம்,
அப்டீன்னா அந்தப் பெண்ணை நான்
பாக்கவா முடியும். அவளை நான்
இப்ப உயிரோடு இருக்கும்போதே
பார்க்கிற, பழகுற சந்தர்ப்பத்தை
எனக்கு நீங்க தர
மாட்டீங்களா? (என்று அழுதபடியே
தள,தளத்த குரலில் விம்மியபடியே
முழுமதியை இறுகக்கட்டி
அணைத்துக்கொள்கிறாள்)
(ஆகா !! என்ன பெருந்தன்மையான
குணம் !! இந்த மாதிரி பரந்த,
பெருந்தன்மையான குணம் இந்த
நாட்டினில் உள்ள சம்பந்தப்பட்ட
பெண்களுக்கு இருந்தா, சண்டை
எதுக்கு ?, சச்சரவுதான் எதுக்கு? அட..
என்ன..நான்...சொல்றது..சரியா..)
ஸ்ரீமான் பொதுஜனம்:- சரி இல்லை
அய்யா !! இங்கே அந்த
அம்மையாருக்கு வயசு 68. அவருக்கு
வயசு 45...ஆஷாவுக்கு வயசு 21.
காந்திஜானகி சொல்றது கரீட்டு.
அவங்களுக்கு வயசாயிட்டே
போதுன்னு சொல்றது என்னவோ
சரிதான். ஆனாலும் இந்த 45 க்கு 21
லேசாக கொஞ்சம் இடிக்குதே..அதே
அந்தப் பழைய கதைதாங்கானும்
இங்கேயும் தொடருது. எந்தப்பழைய
கதை? காந்திஜானகி அம்மையார்
முழுமதியை இரண்டாம் புருஷனாக்
கல்யாணம் பண்றப்ப இருந்த அதே
இடைவெளிதான் இங்க இப்பயும்
தொடருதுன்னு சொல்றேன். அப்ப
அம்மையாருக்கு 45 அவருக்கு 21.
அதே வயசு வித்தியாசம் இப்ப
உல்டாவாதொடருதுன்னேன்..
முழுமதிக்கு 45 ஆஷாவுக்கு 21அட..
என்ன நான் சொல்றது சரியா ?)
முழுமதி:- என்ன காந்தி..நீ இப்படி
சம்மதம் சொல்லுவேன்னு எனக்கு
முன்கூட்டியே தெரிஞ்சு இருந்தா
நானும் ஆஷாவை உனக்கு
முன்னாலேய கண்லே காம்பிச்சு
இருக்க மாட்டேனா? எங்கே இதுஒரு
பெரிய விஷயமா, விவகாரமா
ஆகுமோன்னு நான் பயந்துட்டே
இருந்தேன். நல்லவேளை நீதான்
என்னைக் காப்பாத்துனே.
காந்திஜா :- சரி .. இப்ப ..நீங்க என்ன
செய்றீங்கன்னா...நாளைக்கே
ஆஷாவை கூட்டிட்டு வந்து என்.
என்கிட்டே காட்டுங்க. அப்புறம்
சீக்கிரமா ஒரு நல்ல நாளா பாத்து
உங்க கல்யாணத்தை
வச்சுக்குவோம். தயவு செய்து இப்ப
நான் உங்ககிட்ட ஒரு அன்பான
வேண்டுகோள் ஒன்னு சொல்வேன்.
அதை நீங்க மறுக்காம சரின்னு
சொல்வீங்களா?
முழுமதி:என்னம்மா..இப்படி..கெஞ்சி
கேக்கிறே !! நீ தான் எனக்கு கண்
கண்ட தெய்வம். உன் உத்தரவுக்கு
நான் மட்டும் இல்ல.. ஆஷாவும்
என்னென்னைக்கும் கட்டுப்பட்டு
இருப்போம்..போதுமா..(என்று
சொல்லும்போதே அவருக்கும்
விம்மலோடு கூடிய அழுகை
வருகிறது.அதைக் கட்டுப்படுத்திக்
கொண்டு) அம்மையாரின் மீது
அவரின் பிடிகள் இன்னும் சற்று
அதிகமான இறுக்கத்துடன்....
சொல்லும்மா .. நான் என்ன
செய்யணும்..அப்டீன்னு..
காந்திஜா:- வேற ஒன்னும்
இல்லைங்க நானே பெண்ணுக்குத்
தோழியா இருந்து உங்க ரெண்டு
பேருக்கும் கல்யாணம்
செஞ்சுவைக்கிற அந்தபாக்கியத்தை
எனக்கு நீங்க தரனும். அதுதான்
எனக்கு புண்ணியமும் கூட. நான்
உங்களுக்கு 21 வயசு இருக்கிறப்போ
என் 45 வயசான நான் உங்களை
கல்யாணம் செஞ்சு உங்களோட
அந்தக் கால இளமைக்கு நான்
செஞ்ச துரோகத்துக்கு இது
ஒன்னுதாங்க நீங்க எனக்குத் தரும்
பாவ மன்னிப்பு/பிராயசித்தம்.
முழுமதி:- யம்மா !! தயவு செஞ்சு
அப்படி பெரிய வார்த்தை எல்லாம்
வேணாம். உன் இஷ்டப்படித்தான்
இனிமே இங்க எல்லாமே நடக்கும்.
காந்திஜா:- அது போதுங்க எனக்கு..
(முழுமதியைக் கட்டி அணைத்து
இருந்த பிடியை சற்றே தளர்த்தி
பின் வழியும் தனது கண்ணீரைத்
துடைத்துக்கொண்ட படியே..சரிங்க
நாளைக்கு வெள்ளிக்கிழமைதான்.
ஆஷாவை என்னை வந்து பாக்கச்
சொல்லுங்க.. என்று சொல்லிவிட்டு
அவரது அறைக்குள் செல்கிறார்
காந்திஜானகி அம்மையார்.
அடுத்த காட்சி.
மறுநாள். வெள்ளிக்கிழமை காலை
மணி 9.3௦. ஆஷா தனக்குக் கிடைத்த
அவளது அன்புக்காதலன்
முழுமதியின் தொலைபேசியில்
அவர் அழைத்த வேண்டுகோளை
ஏற்று ஆஷா ஒரு ஆட்டோவில்
காந்திஜானகி அம்மையாரின்
மாளிகை வாசலின் முன்பாக வந்து
சேருகிறார். ஒரு பெரிய இரும்பு
வாயில்கதவு. அருகே காவலுக்கு
ஒரு ஆள். அவரிடம் ஆஷா சென்று
விசாரிக்க முயலும்போதே அந்த
காவலாளி, வாங்க அம்மா. அய்யா
இப்பத்தான் வந்து சொல்லிட்டுப்
போனாருங்கம்மா..இந்த
மாதிரி..நீங்க வருவீங்கன்னு..
போங்க .... உள்ளே..போயி... அந்த .......
வரவேற்பு அறையில் சென்று
உக்காந்திருங்க. அம்மாவும்
அய்யாவும் கொஞ்ச நேரத்தில வந்து
பாப்பாங்க என்று சொல்கிறான்
அந்தக் காவலாளி. ஆஷாவும்
உள்ளே சென்று அங்கேஅமர்கிறாள்.
ஒரு நிமிட இடைவேளையில்
முழுமதியும் காந்திஜானகி
அம்மையாரும் வந்து சேர்ந்தனர்.
அவர்கள் இருவரையும்
கண்டவுடன் ஆஷா அதுவரையில்
தான் அமர்ந்திருந்த நாற்காலியை
விட்டு எழுந்து நிற்கிறாள். அப்போது
காந்திஜா:- ( சற்றே அவசரத்துடன்)
அம்மா!!..அம்மா!!ஏன்..ஏன்..நிக்கிறே.
சும்மா உக்காரு கண்ணு. எனக்கு
இந்த மாதிரி வெளி வேஷமான
மரியாதை எல்லாம் எப்பவுமே
பிடிக்காது. மதிப்பு, மரியாதை,
இதெல்லாம்
உள்ளத்துல இருக்கணும்.
சும்மா உதட்டளவுல
இருந்தா யாருக்கு என்ன
பிரயோசனம் ?.
ஆஷா :- உண்மைதான்,இப்ப நீங்க
சொல்றது. இருந்தாலும் வயசுன்னு
ஒன்னு இருக்கே !!
காந்திஜா:- என்னம்மா வயசு..உம்..
எல்லாருக்கும் ஒருநாள் வயசு
கூடிட்டேதான் இருக்கப்போது !!
எனக்கு இப்ப வயசாயிட்டுது.
இன்னும் ஒரு 4௦, 45 வருஷம் கழித்து
உனக்கும் என்னோட வயசு
வரத்தான் போகுது. அத பாத்தா
எப்படி. (இப்படி அம்மையார்
சொல்லிட்டே இருக்கும்போது,
முழுமதி,ஆஷா இவர்கள் இருவரும்
காந்தி ஜானகி அம்மையாரின்
கால்கள் முன்பாக மண்டியிட்டு
வணங்க முற்படுகின்றனர். உடனே
அந்தச் செயலைத் தடுக்க முயலும்
அம்மையார், ஆஷாவைத் தனது
இருகரங்களால் தொட்டு தூக்கிட
முயல்கிறார்.) என்ன ஆஷா ? இப்ப
தானே சொன்னேன். எனக்கு இந்த
காலில் விழுந்து வணங்கும்
வழக்கம் என்னைக்குமே பிடிக்காது
ஏன்..ஏன்னா இறைவன் ஒருவனக்கு
மட்டும்தான் நம் சிரசு தரைதொட்டு
வணங்கிடனும்.(கணவரைப்பார்த்து)
ஏங்க..அவதான் சின்னப்பொண்ணு..
ஏதோ தெரியாம கால்ல விழுந்தா ..
என்ன .... நீங்களுமா?
முழுமதி :- அப்படி இல்லம்மா !! உம்
பெரிய மனசுக்கு முன்னாலே இது
எல்லாம் வெறும் தூசு..
காந்திஜா:- (ஆஷாவைப் பார்த்து)
நீ உக்காரு கண்ணு. ஏங்க.அட......
உங்களைத்தானே..நீங்களும் அவ
பக்கத்தல போயி உக்காருங்க..உங்க
ரெண்டு பேர் ஜோடிப் பொருத்தம்
எப்படின்னு பாக்கிறேன்.(மூவரும்
இப்ப "கொல்" என்று சிரிக்கின்றனர்.
அன்பர்களே !! இந்தக்கதையின்
இறுதி மற்றும் பாகம் எண் :-5 நாளை
வெளிவரும். அதுவரை சற்று
அமைதியாக இருக்க வேண்டும்.
நன்றி !! வணக்கம் !!
அன்புடன். மதுரை T.R.பாலு.
நேயர்கள் அனைவருக்கும் எனது
இதயம் கனிந்த, அன்பு நிறைந்த
" தீப ஒளித்திருநாள் "
நல்வாழ்த்துக்கள் !!
வாழ்வோம் நாம் அனைவரும்
அன்புடனும் !! தூய்மைத் தமிழ்ப்
பண்புடனும் !!
No comments:
Post a Comment