உடல்மண்ணுக்கு!! உயிர்தமிழுக்கு!!
இதை உரக்கச் சொல்வோம்
உலகுக்கு!!
இனம் ஒன்றாக, மொழி வென்றாக,
புது வேல் எடுப்போம் விடிவுக்கு !!
நம் வெற்றிப் பாதையில் நரிகள்
வந்தால் விருந்து வைப்போம்
விண்ணுக்கு !!
வீரர்கள் வாழும் திராவிட நாட்டை
வென்றவர் கிடையாது !!
வேலும் வாளும் தாங்கிய மறவர்
வீழ்ந்ததும் கிடையாது !!
குள்ள நரிக்கூட்டம் வந்து
குறுக்கிடும் !!
நல்லவர்க்குத் தொல்லை தந்து
மடக்கிடும் !! நீ
எள்ளளவும் பயம்கொண்டு
மயங்காதிரு !!
அவற்றைஎமன்உலகுக்குஅனுப்பி
வைக்கத் தயங்காதிரு !!
உலகெங்கிலும் வாழ்ந்துவரும் என்
உயிரினும் மேலாக நான் போற்றி
வணங்கி வரும் அன்புத் தமிழ்
நெஞ்சங்களே!!
இங்கே கட்டுரையில் குறிப்பிடப்
படும்இந்த சம்பவம் நிகழ்ந்த ஆண்டு
அநேகமாக 1955 அல்லது அதற்குப்
பிந்திய ஆண்டாக இருக்கும் என்று
கருதுகிறேன். தமிழ்த் திரையுலகின்
முடிசூடா மன்னனாகத் திகழ்ந்தவர்
இரட்டைக் குரலோசையில் வசனம்
பேசி மக்கள் மனத்தை கொள்ளை
கொண்ட திராவிடர் கழகத்தைச்
சேர்ந்தவரும் பகுத்தறிவுத் தந்தை
பெரியாரின் பேரியக்கத்தில் தன்னை
இணைத்துக்கொண்ட மாபெரும்
நடிகர் M.R.இராதா நடித்து வெற்றி
கண்ட திரைப்படம்தான் " இரத்தக்
கண்ணீர் " அதில் அவர் மிக
சிறப்பாக நடித்தற்காக ஒரு பாராட்டு
விழா சென்னையில் தந்தை
பெரியார் தலைமையில்
நடைபெற்றது. பேரறிஞர் அண்ணா,
தலைவர் திரு மு.கருணாநிதி,
மறைந்த நாவலர் நெடுஞ்செழியன்
முதலானோர் கலந்துகொள்ள
பாராட்டு விழாமேடை சிறப்பு
பெற்றது. அப்போது சிறப்புப்
பேச்சாளர்கள் அனைவரும்
M.R.ராதாவைப் பாராட்டிப் பேசி
முடித்த நிலையில், இன்னும் பேச
வேண்டியது தலைவர் திரு
கருணாநிதி அவர்களும், பேரறிஞர்
அண்ணா மட்டுமே. அப்போது
பாராட்டு விழாவிற்குத் தலைமை
ஏற்ற தந்தை பெரியார், தலைவர்
திரு கருணாநிதி அவர்களைப் பேச
அழைத்திட, அவரும் பேசினார்
காட்டாற்று வெள்ளமென, பொங்கி
வரும் மலையினின்று வீழ்ந்திடும்
அருவிபோல ( தற்போது
தமிழகத்தில் உள்ள முக்கியமான
கட்சியின் தலைமை எந்த பொது
நிகழ்ச்சியாக இருந்தாலும் அவர்
ஆங்கிலத்தில் பொழிந்து
தள்ளுவதுதான் அவரது அன்றாடக்
கடமைகளுள் ஒன்றாகவே இதுநாள்
வரை செயல்படுகிறார். அதையும்
மீறி என்றாவது தமிழில் பேசுவது
என்றால் யாரோ,எவரோ, எழுதித்
தந்தததை அப்படியே வரி பிசகாமல்
அதுவும் அந்தக் காதித்ததைப்
பார்த்துத்தான் படித்திட முடியும்
என்பதையும் நான் பல்வேறு
சந்தர்ப்பங்களில் பார்த்து உள்ளேன்.
தலைவர் திரு மு.கருணாநிதி
அவர்கள் ஒருபோதும் இதுபோன்ற
மேடைப்பேச்சு நிகழும் இடத்தில்
இதுபோல தமிழ் பேசும் விதத்தைக்
கற்பழித்ததாக அவர் அரசியல்
வரலாற்றில் என்றுமே
செயல்பட்டதாக எந்த சம்பவமும்
கிடையவே கிடையாது. ஏன், ஏன்
என்றால் அவர்தான் ஆங்கிலமொழி
பயில்விக்கும் கான்வென்ட்
பள்ளியில் பயின்றவர் கிடையாதே)
நடிகர் M.R.இராதாவைப் பாராட்டி
அதற்குப் பின் :- இப்படி சிறப்பாக
நடித்த என் அன்பு நண்பர் இன்று
முதல் வெறும் நடிகர் M.R.இராதா
அல்ல இனிமுதற்கொண்டு அவர்
"நடிகவேள்" M.R. இராதாஎன்றுதான்
அனைவரும் அழைத்திட வேண்டும்
அந்த நடிகவேள் என்ற பட்டத்தை
அவருக்கு சூட்டுவதில் நான் மிகவும்
பெருமைப் படுகிறேன் என்று
மனமார பாராட்டிவிட்டு தனது
இருக்கையில் அமர, அதன் பின்னர்
அறிஞர் அண்ணா பாராட்டி அகம்
மகிழ்ந்தார். இறுதியாக பாராட்டு
ஏற்புரை என்று ஒரு பகுதி வந்தது.
அப்போது பேசிய "நடிகவேள்" என்று
பட்டம் பெற்ற M.R.இராதா தனது
ஏற்புரையில்:- எனக்கு இந்த சிறப்பு
மிக்க பாராட்டு நிறைந்த பட்டம்
வழங்கிய என் அன்புத் தமிழன் என்
ஆருயிர் நண்பன் கருணாநிதி
அவர்களுக்கு என் நன்றி. இன்று
எனக்குப் பட்டம் வழங்கியஅவருக்கு
(கருணாநிதி) இங்கே மேடையில்
அமர்ந்துள்ள அனைத்து
தலைவர்கள் ஒப்புதலுடன் நான்ஒரு
பட்டம் அவர்களுக்கு வழங்கிட
முடிவு செய்து உள்ளேன். அவர்
எல்லாத்துறைகளிலும் வல்லவர்.
பாட்டு எழுதுவதில் என்றாலும் சரி,
கதை எழுதுவது என்றாலும் சரி,
அந்த கதைக்கு திரைக்கதை
எழுதுவது, வசனம் எழுதுவது,
மேலும் இவை அனைத்திற்கும்
சிகரம் வைத்தாற்போல நடிப்பு என்ற
துறையையும் அவர் விட்டு வைக்க
வில்லை. எனவே நான் மேலே
குறிப்ப்பிட்ட அத்தனைதுறையிலும்
அவர் ஒரு நல்ல கலைகள் கற்றவர்
சிறந்தவர். எனவே இவருக்கு நான்
இன்று முதல்
"கலைஞர் "
என்ற பட்டத்தை
வழங்கிப் பெருமைப் படுகிறேன்.
ஆகவே நான் இன்று முதல் அவரை
"கலைஞர் " மு.கருணாநிதி என்றே
அழைப்போம். எல்லோரும் அதனை
கைதட்டி,ஆரவாரம் செய்து, அவரை
பெருமைப் படுத்த வேணுமாய்க்
கேட்டுக்கொண்டு இத்துடன் விடை
பெறுகிறேன்.
கலைஞர் கருணாநிதி வாழ்க !!
கலைஞர் கருணாநிதி வாழ்க !!
என்று நடிகவேள் M.R.இராதா
அழைத்திட, மேடையில் இருந்த
தலைவர்கள் அனைவரும் கைதட்டி
ஆரவாரம் செய்தனர். கூட்டத்திற்கு
வந்திருந்தோர்கள் எல்லோரும்
கைதட்டி தத்தமது அன்பை,
மகிழ்வை, கைதட்டி ஆரவாரம்
செய்து, தங்களது மகிழ்ச்சியை
பகிர்ந்து கொண்டனர். அந்த க்ஷணம்
முதல் இன்றுவரை, MGR. உட்பட,
தலைவரை, கலைஞர் கருணாநிதி
என்றே அழைத்து மகிழ்ந்து
இருந்தனர்.
ஒரு சிலர் போல இல்லாமல் " ஏய்
கருணாநிதி " என்று MGR. கூட தனது
இறுதிநாள் வரை அழைத்ததே
இல்லை.
இதுதான் அன்பர்களே !! முத்தமிழ்
அறிஞர் !! தமிழக மக்கள் மனத்தில்
என்றும் முதல்வர், மாண்புநிறைந்த
தலைவர் திரு மு.கருணாநிதி
அவர்கள் " கலைஞர் " என்றசிறப்புப்
பட்டம் பெற உதவிய நிகழ்வு என்ற
வரலாற்று உண்மை நினைவுகளை
நான் இதுகாறும் உங்களிடம்
பகிர்ந்து கொண்டேன். மீண்டும்
நாளை வேறு ஒருதலைப்பினில்என்
" எண்ணச் சிறகுகள் " என்ற
வலைதளத்தினில்உங்கள்
அனைவரையும் சந்திக்கிறேன்.
அதுவரை உங்கள் அனைவரிடமும்
அன்பு வணக்கம் கூறி விடை
பெறுவது உங்கள் அன்புத்தமிழ்
பேசும் உடன்பிறப்பு.
மதுரை TR.பாலு.
நன்றி ! வணக்கம் !!
அன்புடன். மதுரை T.R. பாலு.
No comments:
Post a Comment