உடல்மண்ணுக்கு!! உயிர் தமிழுக்க
இதை உரக்கச்சொல்வோம்
உலகுக்கு!!
இனம் ஒன்றாக, மொழி வென்றாக,
புது வேல் எடுப்போம் விடிவுக்கு!!
நம் வெற்றிப் பாதையில் நரிகள்
வந்தால் விருந்து வைப்போம்
விண்ணுக்கு !!
உலகம் முழுதும் வாழ்ந்துவரும் என்
அன்புத் தமிழ் உடன்பிறப்புகளே!!
உங்கள் அனைவருக்கும் என்இதயம்
கனிந்த வாழ்த்துக்களுடன் கூடிய
வணக்கங்கள் உரித்தாகுக !!
அது அநேகமாக 1967 அல்லது 1969
இந்த ஆண்டுகளுக்கு இடையில்
உள்ள இடைப்பட்ட காலம் என்றே
நான் கருதுகிறேன். அப்போது
மதுரை மாநகரில் இருந்து இரண்டு
பண முதலாளிகள் சென்னை
நோக்கி வந்தனர். ஒருவர் பெயர்
பொட்டிக்கடை சுந்தரம் பிள்ளை.
மற்றொருவர் பெயர் பெரியநாயகம்
பிள்ளை. இந்த இருவரோடு அந்த
நாட்களில் கலை இயக்குனர்களுள்
பெயர் பெற்று விளங்கிய (ART
DIRECTOR) அங்கமுத்துவும்
இணைந்து ஒரு சினிமா கம்பெனி
ஒன்று துவக்கினர். பெயர்
உமையாள் புரொடக்ஷன்ஸ் என்று.
அப்போது எனக்கு வயது சுமார் 15
இருக்கும் (தற்போது வயது 6௦) இந்த
சினிமா கம்பெனி 3 படங்கள்
எடுத்தனர். முதல் படம் கலைஞர்
மு.கருணாநிதி அவர்கள் கதை,
திரைக்கதை, வசனம் எழுத
இயக்குனர் மறைந்த ப. நீலகண்டன்
படத்தை இயக்கினார். படத்தின்
பெயர் " அவன் பித்தனா ".இலட்சிய
நடிகர் S.S.இராஜேந்திரன், அவர்
மனைவி விஜயகுமாரி மற்றும் பலர்
நடித்திட படம் வெற்றி. அடுத்த படம்
கலைஞர் வசனம் எழுதி வெளிவந்த
படம் " தங்கத் தம்பி." படம் கையைக்
கடிக்காமல் ஓடியது. இதற்கு அடுத்த
படம் "உலகம் இவ்வளவுதான்".
இந்தப் படம் வெுளிவருவதற்கு
முந்திய ஆண்டு வந்த படம்தான்
இயக்குனர் திலகம் KS.கோபால
கிருஷ்ணன் இயக்கிய"பணமா
பாசமா" என்ற படம். அதில் ஒரு
பாடல் அந்தக் காலத்தில் மிகவும்
பிரசித்தி பெற்ற பாடல் அது.
L.R.ஈஸ்வரி பாடிய"இலந்தைப்பழம்"
பாட்டு. அதேபோல இந்த உலகம்
இவ்வளவுதான் படத்தில் ஒரு பழம்
சம்பந்தப்பட்ட பாடல் வேண்டும்
என்று கவிஞரிடம் கேட்க அவரும் ்
எழுதித்தந்தார். அந்தப் பாடல் தான் "
மாம்பழம் வாங்குங்க --இது
மல்கோவா பழமுங்க !! எல்லாம்
வித்துப் போச்சுங்க !! இருப்பது
ரெண்டு தானுங்க !! "
இதுதான் ஒரிஜினல் பாடல். ஆனால்
மத்தியத் திரைப்படத் தணிக்கைக்
குழு ஆட்சேபித்தது இந்தப் பாடல்
காம நெடி உள்ளது எனவே அந்த
இருப்பது ரெண்டு தானுங்க என்ற
வரியை மாற்றுங்கள் என உத்தரவு
பிறப்பித்தது. வேறு வழி இன்றி
அதை இருப்பது நாலு தானுங்க
என்று படத்தில் மாற்றப்பட்டது.
இதுதான் மத்தியத் திரைப்படத்
தணிக்கைக் குழு கோடு போட்ட
இடம். சரி அப்படீன்னா கோட்டை
விட்ட இடம் எது?
சொல்றேன்.சொல்றேன். அதே
பாடலில் அடுத்த பாராவைப்
பாருங்கள். உங்களுக்கே அது
புரியும்.கோட்டைவிட்ட இடம் எது
என்று. இப்போது பாடலைப்
பாருங்கள்:-
வாயி வச்சா புளிக்குங்க அது
பச்சையான காயுங்க !!
வாட்டமான என் பழத்துல
கூட்டமாகப் பாயுங்க !!
உள்ளே வச்சு வைக்கோல் போட்டு
பழுக்க வச்சதில்லைங்க !! "
"உச்சிமரக்கிளையினிலே் உருண்டு
திரண்ட பழமுங்க "
இப்ப உங்களுக்கு புரியும்னு
நினைக்கிறேன் மத்தியத்திரைப்படத்
தணிக்கைகுழு கோட்டைவிட்ட
இடம் எது என்று.
அதுதான் நம்ம ஊரிலே ஒரு
பழமொழி ஒன்னு சொல்வாங்க.
கள்ளன் (திருடன்) பெருசா ? இல்ல
காப்பான் (பூட்டு) பெருசா?
அப்படீன்னு.
மீண்டும் நாளை வேறு ஒரு
தலைப்பினில் உங்கள்
அனைவரையும் நான் சந்திக்கிறேன்
நன்றி !! வணக்கம் !!
அன்புடன். மதுரை T.R.பாலு.
No comments:
Post a Comment