உடல்மண்ணுக்கு!! உயிர்தமிழுக்கு!!
இதை உரக்கச் சொல்வோம்
உலகுக்கு!!
இனம் ஒன்றாக,மொழி வென்றாக,
புது வேல் எடுப்போம் விடிவுக்கு!!
நம் வெற்றிப் பாதையில்நரிகள்
வந்தால் விருந்து வைப்போம்
விண்ணுக்கு !!
வீரர்கள்வாழ்ந்திடும்திராவிட
நாட்டைவென்றவர் கிடையாது!!
வேலும்,வாளும் தாங்கிய மறவர்
வீழ்ந்ததும் கிடையாது!!
குள்ளநரிக்கூட்டம் வந்து
குறுக்கிடும்!!நல்லவர்க்குத்
தொல்லைதந்து மடக்கிடும் !!-நீ
எள்ளளவும் பயம்கொண்டு
மயங்காதிரு !! அவற்றை
எமனுலகுக்கு அனுப்பிவைக்கத்
தயங்காதிரு !!
தமிழினம்காக்கவாழ்ந்திடுங்கள்!!
தனித்தமிழில்மட்டுமேபேசிடுங்கள்!!
ஆங்கிலமொழி கலப்புஏதும்இன்றி!!
தமிழ் பேசும் சகோதர,சகோதரிகள்
நடுவில் உரையாடும் பொழுது!!
உலகம் முழுவதும் ஆங்காங்கே
வீரத் தமிழ் உணர்வுகளை நெஞ்சில்
சுமந்துகொண்டு கடமை ஒன்றே
உயிர் எனக் கருதி அன்பும் பண்பும்
தங்கள் வாழ்க்கையின் இரவென்றும்
பகலென்றும் வாழ்ந்துவரும் எனது
உயிரைவிட நான் மேலாக போற்றி
வணங்கி வரும் என் அன்புத் தமிழ்
உடன்பிறப்புகளே !!முதலில் உங்கள்
அனைவருக்கும் எனது சிரம் தாழ்ந்த,
கரம் குவிந்த,இதயம் கனிந்த, நல்ல
வாழ்த்துக்களையும் சேர்த்து நான்
தெரிவிக்கும் அன்பு மட்டுமே
நிறைந்தவணக்கங்கள் பலப்பல.
நிற்க !!
அன்பர்களே !! ஆழி(கடல்) சூழ்ந்த
இந்த உலகத்தை யார்படைத்தார்கள்
என்று ஒரு கேள்வியை நாம் எவர்
முன்பாக வைத்தாலும் அவர்கள்
கூறும் பதில், அது அவரவர்
சார்ந்துள்ள மதம்,மற்றும் அந்த
மதத்திற்கு என்று உண்டான புனித
நூல்கள், இவைகளை ஆதாரமாகக்
காட்டி அவர்களுடைய
தெய்வங்கள்தான்/அவர்கள்
வழிபடும் கடவுள்தான் இந்த
பூமியைப் படைத்தார்
என்று சொல்வார்கள்.
ஒரு இந்துவைக் கேட்டால் அவர்
கூறிடும் பதில்:- படைக்கும் தொழில்
எங்கள் பிரம்மனைச் சேர்ந்தது.
எனவே அவர்தான் இந்தபூமியைப்
படைத்தார் என்று சொல்வர்.அது
எப்படி அவ்வளவு நிச்சயமாய்ச்
சொல்கிறாய் அன்பனே
என்று கேட்டால் ஆம் அய்யா,
படைப்பது என்பது பிரம்மன்
தொழில், காப்பது என்பது ஸ்ரீ ஸ்ரீ
விஷ்ணுவின் தொழில், மற்றும்
அழிப்பது என்பது சிவனின் தொழில்
என்று சொல்வார்.( தனித் தனித்
துறைகளாகப்பிரித்துக்கொண்டு
செயல்படுவதுஎன்பதுசிக்கல்இன்றி
என்ற கருத்தாகக் கூட இருக்கலாம்)
அதே நேரம் ஒரு உண்மைக்
கிறிஸ்துமதத்தைச் சேர்ந்த
ஒருவரிடம் நாம் இந்தக் கேள்வியை
முன்வைத்தால் அவர் சொல்லும்
பதில் பரலோகத்தில் இருக்கின்ற
எங்கள் பிதாவே இந்த உலகத்தைப்
படைத்தார் என்று சொல்வார்.
(எல்லாத் துறைகளையும் பாவம்
அவர் ஒருவரே கவனித்தாக
வேண்டிய கட்டாயம் அவருக்கு)
இப்போது ஒரு இஸ்லாமிய
மதத்தைச் சேர்ந்த தோழரிடம் இதே
கேள்வியை நாம் கேட்டால் அவர்
சொல்வார் பதில் " அல்லா "
ஒருவரே.
இந்த பூமியையும் வானத்தையும்
கடலையும் அனைத்து ஜீவ
ராசிகளையும் படைத்தவர் அவர்
ஒருவரே என்று. இது இந்தத்
தோழரின் இறைநம்பிக்கை.
சரி. அன்பர்களே !! இப்போது இங்கே
நான் மூன்று மதங்களைச் சேர்ந்த
அன்பர்களைச் சந்தித்து இந்த
எனது கேள்வியை முன் வைத்தேன்.
இதில் நான் இந்தக் கட்டுரைக்கு
இங்கே ஆதாரமாக எடுத்துக்
கொள்ளும் மதம் " இஸ்லாம் "
மதமே ஆகும். அதற்குக் காரணம்
உள்ளது அன்பர்களே!!
என் சிற்றறிவுக்கு உட்பட்டவரை
இந்த இஸ்லாம் மதம் ஒன்றில்
மட்டும்தான் இறைவனை
வணங்கும் இடத்தில் (மசூதியில்)
உயர்ந்தவன் ,தாழ்ந்தவன்,
ஏழை,பணக்காரன்,உயர்
சாதிக்காரன்,தாழ்த்தப்பட்ட
பிரிவைச் சேர்ந்தவன், பிற்படுத்தப்
பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட
வகுப்பைச் சேர்ந்தவன், என்கின்ற
இனபாகுபாடுகள்ஏதும் இல்லாமல்,
அந்தநாட்டையே ஆளுகின்ற
மன்னன், சக்கரவர்த்தியேதொழுகை
நடைபெறும் இடமாகிய மசூதிக்கு
வந்தால், அவர்கூட முதலில்
வந்தால்மட்டும்முன்வரிசைஇல்லை
என்றால்அவர்எப்போதுவருகிறாரோ
அப்போதுஎங்கேஇடம்காலியாக
இருக்கிறதோஅங்கேசென்று அவர்
தொழுகை நடத்திட வேண்டும்.நம்ம
ஊர் கோவில்களில் உள்ளது
போல கடவுளை தரிசித்திட
கட்டணம்,பணம் படைத்தவன்,
முன்னாள் இந்நாள் அரசியல்வாதி,
மந்திரிகள்,உயர்அரசு அதிகாரிகள்,
மாவட்ட ஆட்சியர்கள்
இது போன்றவர்கள் இந்துக்கள்
கோவிலுக்கு வந்தால் போதும்
அங்கே இருக்கின்ற பிராமண
குலத்தினைச்சேர்ந்தஐயர்,ஐயங்கார்
மதப்பிரிவுகளைசேர்ந்தோர்கள் பண்
ணுகின்றஅலப்பறைஉண்மையில்
என்போன்றஉண்மைஇந்துக்களால்
தாங்கிக்கொள்ளவே முடியாது. ஏன்!!
என்ன காரணம் ?இந்தபிராமணர்கள்
அவர்களுக்கு மாலை, மரியாதை,
மற்றும்பரிவட்டங்கள் சூட்டுதல்
போன்ற " பாவலாக்கள் "
காட்டுகின்றார்கள் என்றால்,
அப்போது தானே ஐயா அவர்கள்
சாமிக்கு சூடம் காட்டும்
பூஜை தட்டுகளில் 1௦௦௦ ரூபாய்
மற்றும் 5௦௦ என பணமழை
பொழியும்.அவர்களும்அதை பெற்று
கொண்டுஅவாஅவாஆத்துக்குப்
போனா அங்கே மாமிகள் மிகவும்
மன மகிழ்ச்சி அடைந்து இரவு நல்ல
விருந்து படைப்பார்கள். நான்இங்கே
உணவைப் பற்றிச் சொல்கிறேன்
அன்பர்களே. நீங்கள் நான் வேறு
எந்தஉறவுகளைப்பற்றிச் சொல்கிறே
னோஎன்றுஎன்மேல்யாரும்
சந்தேகம் கொள்ளத் தேவை
இல்லை.இப்படித்தான் தரிசனம்
செய்திட வரும் பக்தர்களை தரம்
பிரித்து பணம் வாங்கி கும்பிட
வேண்டும் என்று எந்தசாமியாவது
சொல்லி உள்ளதா. ஒரு வேளை
அவ்வாறு சொல்லி
இருந்தால் அதற்குப் பெயர் சாமியா?
தெய்வமா? இல்லை அப்படிஎன்றால்
அது தெய்வம் இல்லை அதன் பெயர்
வெறும் கல்தான்.நான் கேட்கிறேன்
கேள்வி.
அன்பர்களே சிந்திக்க வேண்டும்.
இவாள் மட்டும்தான் கோவில் கர்ப்ப
கிரகம் வரை சென்று கடவுளை
பூஜித்திட,வழிபட ,உரிமை
படைத்தோர்,ஏனையோர்கள்
எல்லாம் மனிதர்களே
அல்ல என்று இவர்கள் கூறும் நிலை
இங்கே மாற வேண்டும். அதற்காக
எத்தனை எத்தனையோ
போராட்டங்கள் நடத்தியாகி
விட்டது. அனைத்தும் செவிடனின்
காதில் ஊதிய சங்காகத்தான் இன்று
வரை நிலைமை இங்கே உள்ளது
எனது அன்புத் தமிழ் நெஞ்சங்களே !!
அன்பர்களே !! எனது இந்தக்கட்டுரை
மனிதனைத் தீய வழிகளில் இட்டுச்
செல்லும் சைத்தானின்
பூர்வோத்திரம் (ஆரம்பக்காலகதை)
தெரியுமா ? என்ற தொடர் அடுத்தும்
உங்களைத் தேடி வர இருக்கிறது.
சற்று பொறுத்து அருள வேண்டும்
அன்பர்களே என்று கேட்டுக்
கொள்கிறேன்.மீண்டும் விரைவில்
சந்திப்போம். அதுவரை சற்று நாம்
இளைப்பாறுவோம்.
நன்றி !! வணக்கம் !!
அன்புடன்
மதுரை T.R.பாலு.
No comments:
Post a Comment