எல்லோரும் ஓர் நாள் சொல்லாமல் போகும் இடம் எது ? அந்த இடம்தான் " அல்லா " விடம் !!
உலகெங்கிலும் வாழ்ந்துவரும் என்
இனிய அன்புத் தமிழ் நெஞ்சங்களே!!
நேற்றையதினம் நமது முரசு
தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்
பட்ட அந்த நாள் திரைக்காவியம்,
நடிகர் திலகம் நடிப்பினில்
வெளிவந்த " தெனாலிராமன் "
படத்தினில் கடைசிப் பகுதி காட்சி
ஒன்றினில் இஸ்லாமியர் போல
வேடம் அணிந்து நடித்து இருப்பார்
நடிகர் திலகம். அப்போது தில்லி
நகரை ஆட்சி செய்திட்ட மன்னர்
பாபர் சக்கரவர்த்தியை சந்தித்திட
வேண்டி மன்னர் வரும் பாதையில்
ஒரு மையத்தான் குழி மைதானம்
ஒன்றினில்(இறந்தவர்களை
அடக்கம் செய்திடும்/புதைத்திடும்
இடம்) இரண்டு மாமரக் கன்றுகளை
நட்டுக்கொண்டே பாடுவதுபோன்ற
காட்சி அது. அதில் மனித வாழ்வின்
தத்துவங்களை விளக்கிடும்
விதமாக மறைந்த கண்டசாலாகுரல்
வளத்தில் ஒரு அருமையான பாடல்
இதோ உங்கள் கவனத்திற்கு:-
உல்லாசம் தேடும் !!
எல்லோரும் ஓர் நாள் !!
சொல்லாமல் போவார் !!
அல்லாவிடம் !!
அவர் அன்றாடும் தேடும் !!
செல்வங்களாலே !!
பின்னோர்கள் சந்தோஷம் !!
கொண்டாடுவார் !!
(உல்லாசம் தேடும்)
தாயாரின் கையிருந்து !!
சம்சாரம் கைக்கு வந்து !!
நோயாகும் முதுமை கொண்டு !!
கண் மூடுவார் !!
அதை ஓர் நாளும்
எண்ணாமல் ஆடுவார் !!
ஒன்றோடு மற்றொன்றை !!
நாடுவார் !!
(உல்லாசம் தேடும் )
குலை ஈன்ற வாழை !!
மாண்டுபோகும் விரைவிலே !!
அதன் இளைய கன்று !!
வளர்ந்து பொங்கும் உலகிலே !!
தினம் தோன்றும் வாழ்வில் !!
மனிதரெல்லாம் ஒருமுறை !!
இந்தத்துணையை எண்ணிப் !!
பார்க்க வேண்டும் மனதிலே !!
(உல்லாசம் தேடும் )
முத்தமிழ் அறிஞர் தலைவர்
கலைஞர் அவர்கள் கதை,வசனம்
எழுதி அந்த நாளில் மாநிலம்
முழுவதும் வெற்றிக்கொடி கட்டிய
படம்தான் நடிகர் திலகம் நடித்த
"மனோகரா" என்ற திரைக்காவியம்.
அதில் வில்லி வசந்த சேனை
(T.R.இராஜகுமாரி )அனுப்பியபோலிச்
சாமியார் ஒருவர் மனோகரனின்
தாயார் கண்ணாம்பாளிடம்
பொய்யாக ஒரு தகவலைக்
கூறுவார். அப்போது தலைவர்
கலைஞர் அந்தக் காட்சிக்கு ஒரு
அருமையான வசனம் எழுதி
இருப்பார். அது என்ன வென்றால் :-
உம்..உம்..உம்..(கனைப்புடன்)
கடலிடைத் துரும்பம்மா மனித
வாழ்வு !!
போய்விட்டான் !!உன் புதல்வன்
புண்ணிய லோகத்திற்கு !!
அன்று கலைஞர் எழுதிய தத்துவ
வரிகள் மனிதகுலம் மறையும் நாள்
வரை நிலை பெற்று இருக்கும்.
கிட்டத்தட்ட இதே கருத்தை
வலியுறுத்தி இஸ்லாமிய பாடகர்
நாகூர் E.M.ஹனீபா அவர்கள் ஒரு
பாடலில் என்ன பாடுவார் என்றால்:-
மவுத்தையே ( இறப்பையே) நீ
மறந்து வாழலாகுமா !!
மாறிடும் பூமியில் நீந்துதல்
ஞாயமாகுமா !!
மன்னாதி மன்னரெல்லாம்
மண்ணுலகில் நிலைத்ததில்லை !!
மகத்தான முறையில் வாழ்ந்த
மனிதரெல்லாம் நிலைத்ததில்லை !!
பொன்னான செல்வந்தரும்
இப்பூவுலகில் நிலைத்ததில்லை!!
பூவுலகின் இந்நிலையை
புரிந்திடாமல் பிதற்றுகிறாய் !!
நிச்சயம் மரணம் வரும் !!
நீ ஒருநாள் இறந்திடுவாய் !!
நேசரெல்லாம் அழுதபின்னே நீ
செந்தூக்கில் ஏறிடுவாய் !!
அச்சான கபர் ஸ்தானில் நீ அடங்கி !!
மண்ணாவாய் !! அந்நாளை
நினைத்திடாமல் நீயும் ஏனோ
பிதற்றுகிறாய்!!
என்று அந்தப் பாடல் வரிகள் மனித
வாழ்கையின் உண்மைத்
தத்துவத்தை விளக்கி
எடுத்துரைக்கும் பாடல் அது. எனவே
அன்பர்களே !! நாம் பிறக்கும்போது
எதையும் நமது கைகளில் கொண்டு
வரவும் இல்லை!! அதுபோலவே
இந்த துநியாவை (உலகத்தை)விட்டு
செல்லும்போதும் எதையும் நமது
கைகளில் கொண்டு போகப்
போவதும் இல்லை. இருப்பது
கொஞ்ச காலம் மட்டும்தான்.
அதுவரை நாலு பேருக்கு நம்மால்
முடிந்த நன்மைகளை செய்து
வந்தாலே போதுமானது என்ற
உணர்வுகளை நாம் நமது மனத்தில்
வளர்த்துக் கொண்டு
வாழ்ந்துமேயானால் எந்தத்
துன்பமும் நம்மை நெருங்குவது
என்பது இல்லவே இல்லை என்று
கூறி இந்தக் கட்டுரையை நான்
இங்கே,இப்போது நிறைவு
செய்கிறேன். நன்றி !! வணக்கம் !!
அன்புடன், மதுரை T.R.பாலு.
No comments:
Post a Comment