Thursday, 10 October 2013

மனிதனைத் தீய வழிகளில் இட்டுச் செல்லும் சைத்தானின் பூர்வாங்கம்..தொடர்ச்சி....பாகம் எண்.3....!!






உடல்மண்ணுக்கு!! உயிர்தமிழுக்கு!! 


இதை உரக்கச்சொல்வோம் 


உலகுக்கு !!                                       



இனம்ஒன்றாக,மொழிவென்றாக, 


புது வேல் எடுப்போம் விடிவுக்கு !! 


நம் வெற்றிப் பாதையில் நரிகள் 


வந்தால் விருந்து வைப்போம் 


விண்ணுக்கு !!



உலகம் முழுதும் வாழ்ந்துவரும் 


அன்புத்தமிழ் நெஞ்சங்களே !! 


அனைவருக்கும் அன்பு நிறைந்த 


வணக்கம்.                                               



மனிதனைத் தீய வழிகளில் இட்டுச் 


செல்லும் சைத்தானின் 


பூர்வோத்திரம் பற்றிய எனது 


முந்தைய கட்டுரைகள் பாகம் எண்.1, 


பாகம் எண் .2, ஆகிய இரண்டு 


பகுதிகளையும் நீங்கள் படித்து 


மகிழ்ந்து இருப்பீர்கள் என்று நான் 


கருதுகிறேன். இப்போது நான் 


உங்கள் எல்லோருக்கும் தரும் இந்த 


பாகம் எண்.3, இறுதிப் பகுதியை 


படித்து அகம் மகிழ்ந்திட வேணுமாய் 


கேட்டுக் கொள்கிறேன்.                         



பாகம் எண்:- 2ன் இறுதிப் பகுதியை 


நான் மீண்டும் இங்கே தர விரும்பு-     -


-கிறேன், அப்போதுதான் உங்களால் 


தொடர்ச்சியாக கட்டுரையை 


படித்திட இயலும் என்று கருதி 


இங்கே நான் மீண்டும் தருகின்றேன். 



எல்லாம் வல்ல இறைவன் முதலில் 


இந்த பூமியைப் படைக்கிறான்.பிறகு 


அதில் கல்,மண்,பாறைகள் 


இவற்றைப்படைத்துவிட்டுப் பின்னர் 


புழு,பூச்சி,பறவை இனங்கள், 


விலங்கு  இனங்கள்,தாவர 


இனங்கள், மரம்,செடி,கொடி 


வகைகள், இவைகளை எல்லாம்         


படைத்து விட்டு பிறகு நீர் 


நிலைகள்,நதிகள், ஆறுகள், 


மலைகள்,அதன் பின் அருவிகள் 


இவைகளை எல்லாம் படைத்து 


விட்டபின்பு, இறைவன்  இவைகள் 


அனைத்தையும் திறம்பட  ஆளுமை 


செய்து அவற்றின் முழுமையான 


பலன்கள் அனைத்தையும் 


அனுபவிக்க ஒரு இனம் 


ஆண்டவனுக்குத் தேவைப்படவே, 


அவன் தேவ,பூத கணங்கள் 


எல்லோரையும் அழைத்து 


இவர்களின் துணைகொண்டு 


தான் படைத்த பூமியில் இருந்துமண் 


அள்ளி வரச் சொல்லி ஆணை 


இடுகிறான் இறைவன்.அந்தபூமியில் 


இருந்து எடுத்துவரப்பட்ட மண்ணில் 


இருந்து இறைவனால் உருவாக்கப் 


பட்டவனே இந்த ஆறு அறிவு 


படைத்த மனிதன் ஆகும். இந்த 


மனிதனை முழு வடிவமாக ஆக்கிட 


இறைவன் எடுத்துக் கொண்ட 


முயற்சி அளப்பரியது. அது 


போற்றுதலுக்கு உரியதும் கூட.          



சரி !! முழு வடிவ அழகுடன் 


உச்சந்தலை முதல் உள்ளங்கால்கள் 


வரை இறைவனால் உருவாக்கப் 


பட்ட மனிதன் இப்போது ஆயத்த 


நிலையில் இருக்கிறான்.இறைவன் 


அவனுக்கு விலை மதிப்பில்லாத 


உயிரை வழங்கிட வேண்டியதுதான் 


இப்போது மிச்சம் உள்ள ஒரே 


செயல்.அப்போது அழைத்தான் 


இறைவன் (நாம் இந்துக்கள் 


இறைவன் என்று சொல்கின்றோம். 


எனது இஸ்லாமிய இனத்தைச் 


சேர்ந்த எனது அன்புத் தோழர்கள் 


இறைவனை " அல்லா " என்று 


அழைக்கிறார்கள் அவ்வளவுதான் 


வேறுபாடு!! சொல்லில்மட்டுமே !!) 


அனைத்து பூத கணங்களையும், 


தேவர் குலத் தலைவன் உட்பட 


தேவாதி தேவர்கள் எல்லோரையும், 


இவர்கள் தவிர உயர் நிலைப்  பஞ்ச 


பூதங்கள் என்று அழைக்கப் படும் 


நீர்,ஆகாயம், நிலம்,காற்று,மற்றும் 


நெருப்பு (இந்த இடத்தில் நாம் 


நெருப்பு என்று சொல்கின்றோம்--


இஸ்லாமியர்கள் இந்த நெருப்புக்கு 


என்று உண்டான தலைவனாக  


"சைத்தான் " என்றே 


அழைக்கிறார்கள்) இவர்கள் 


எல்லோரையும்அழைத்தஇறைவன், 


தனது புத்தம் புதிய படைப்பான, 


பூமியில் இருந்து எடுத்துவரப்பட்ட 


மண்ணில் இருந்து தன்னால் வடிவ-


மைக்கப்பட்ட மனித பிண்டத்தை 


அவர்களிடம் காண்பிக்கின்றான் 


எல்லாம் வல்ல இறைவன்.அவர்கள் 


எல்லோரும் இறைவனின் 


படைப்பின் பெருமையை உணர்ந்து 


மெய் சிலிர்க்கின்றார்கள். 


இப்படிப்பட்ட ஒரு மாபெரும் 


அதிசயம் ஒன்றினைப் படைத்திட்ட 


இறைவனை வணங்கி அனைவரும் 


அகம் மகிழ்கின்றார்கள். அப்போது 


அவர்கள் மத்தியில் இறைவன் சில 


கருத்துக்களை பதிவு செய்கிறான். 


எனது அன்பிற்கும் பாசத்திற்கும் 


உரிய தளபதிகளே !!                       


இப்போது நான் இங்கே உங்கள் 


அனைவரையும் அழைத்தது இந்த 


புதிய படைப்பான மனிதனைப் 


பார்ப்பதற்கு மட்டும் அல்ல. 


இவனால் இந்த பூமி எந்த வகையில் 


பெருமைப்படப் போகிறது, எந்த 


வகையில் முன்னேற்றம் காணப் 


போகிறது, இவன் எவ்வளவு 


ஆச்சர்யமான மற்றும் அதிசயமான 


காரியங்களையும் மற்றும் பலவித 


சாதனைகளையும் செய்திடக் 


காத்துக்கொண்டு இருக்கிறான் 


என்பதையும் உங்கள் அனைவரின் 


கவனத்திற்குள் கொண்டு வந்து, 


என்னால் அவ்வளவு சிறப்பும் சிறந்த 


அறிவாம் ஆறாம் அறிவுதனை நான் 


இந்த மானுடனுக்கு வழங்கி 


உள்ளேன் அதை வைத்து இவன் பல 


விதமான விஞானமும் தொழில் 


நுட்பமும் கற்று இந்த பூவுலகை 


பொன்னுலகாக மாற்றிவிட 


இருக்கிறான் என்பதையும் உங்கள் 


அனைவரின் சிந்தனைக்கும் நல்ல 


ஒரு விருந்தாக படைத்து 


இருக்கிறேன்.இப்போது 


நான்அனைவருக்கும் ஓர் 


ஆணையிடுகிறேன். நீங்கள் 


அனைவரும் என்னால் 


படைக்கப்பட்ட இந்த மானுடனை 


வணங்கிவிட்டு பின் 


வாழ்த்துக்களைத் தெரிவித்து விட்டு 


செல்ல வேண்டும் என்று ஆணை 


இடுகிறேன் என்று இறைவன் 


சொன்னவுடன் எல்லா தேவர்குல 


திலகங்களும், தேவர்களின் 


தலைவனும் பஞ்ச பூதங்களுள் 5 


நபர்களில் ஆகாயம், நீர், நிலம், 


காற்று ஆகிய நால்வர் வந்து 


வணங்கி பின் வாழ்த்திவிட்டு 


கலைந்து சென்றனர்.இப்போது 


எஞ்சி நிற்பது நெருப்பினால் 


படைக்கப்பட்டவனும் பஞ்ச 


பூதங்களுள் அக்னிக்கு அதிபதியும் 


ஆன சைத்தான் மட்டும் தனது 


முகத்தில் எந்தவிதமானஉணர்சிகள் 


வெளிக்காட்டா வண்ணம் சிலை 


போல நின்று கொண்டு இருந்தான். 


இறைவனின் ஆணைக்கு 


அடிபணிந்து அவன் அந்தமண்ணால் 


செய்த மானிடப் பிண்டத்தை 


வணங்கவும் இல்லை, வாழ்த்தவும் 


இல்லை. இப்போது இறைவன்           


சைத்தானைப் பார்த்து கேட்டான், 


என்ன ? நான் சொன்னேன் ? ஏன் நீ 


இப்படி மெளனமாக நின்றுகொண்டு 


இருக்கிறாய் ? உடனே சைத்தான் 


மிகவும் அடக்கமாக பதில் சொல்லத் 


தொடங்கினான். இறைவா !! நான் 


உங்களை எத்தனை முறை 


வேண்டுமானாலும்வணங்குவதற்கு 


காத்துக்கொண்டு இருக்கிறேன். 


ஆனால் இந்த மண் பிண்டத்தை 


வணங்கிட என் மனம் எனக்கு 


உத்தரவு  தர மறுக்கிறது. நான் என் 


செய்வேன் இறைவா !! இது 


சைத்தான் சொன்ன பதில். உடனே 


இறைவன், ஏ !! சைத்தானே !! நீ 


இறை பக்தியில் உலகத்துக்கே 


முதல் உதாரண புருஷன். அது 


எனக்கும் தெரியும். நான் 


சொல்கிறேன்.இவன் வெறும் மண் 


பிண்டம் அல்ல. இவனால் இந்த 


உலகம் நன்மை பெறப்போகிறது. 


உயர்வு அடையப் போகிறது. அதை 


யாராலும் தடுத்து நிறுத்திட 


இயலாது. இப்போது நான் 


கேட்கிறேன்? வணங்கிட முடியுமா ?


இல்லை முடியாதா? சைத்தானோ 


இல்லை இறைவா என்னை 


மன்னித்துவிடு. என்னால் அது 


முடியவில்லை. உடனே இறைவன் 


எப்போது என் உத்தரவிற்கே நீ 


செவிசாய்த்து மதிப்பு அளித்து 


அதனை செவி மடுக்கவில்லையோ 


இனிமேல், உனக்கு இந்த 


சொர்கத்தில் இடம் இல்லை. எனவே 


நீ இங்கிருந்து வெளியேறிவிடு. 


உடனே சைத்தான், போகிறேன் 


இறைவா !! போகிறேன். ஆனால் 


நான் பூமியில் போய் என்ன செய்யப் 


போகிறேன் என்பதை நான் 


இங்கேயே,இப்பொழுதே உங்களிடம் 


சொல்லிவிடுகிறேன். எந்த உயர்ந்த 


நோக்கத்திற்காக இந்த மண் 


பிண்டத்தை,மானுடனை தாங்கள் 


படைத்தனையோ, அவனை 


எந்தெந்த வகையில் அவன் 


மனத்தை கெடுக்க முடியுமோ அந்த 


அனைத்து வழிகளையும் பயன்- 


படுத்தி அவனை, நீ எண்ணியவாறு 


உயர்ந்த நிலைதனை அடையவிட 


மாட்டேன். இது உன்மேல் ஆணை !! 


என்று கூறிவிட்டு சைத்தான் இங்கே 


நாம் வாழ்ந்து கொண்டு இருக்கும் 


பூமிக்கு வந்து விட்டான். அன்றில் 


இருந்து இன்றுவரை மனிதனை 


அவன் மனத்தை எந்தெந்த தீய 


வழிகளில்இட்டுச்சென்று இறைவன் 


எந்த உயர்ந்த நோக்கத்திற்காக 


மனிதனைப் படைத்தானோ அந்த 


நோக்கத்தைக் கெடுப்பது ஒன்றே 


சைத்தானின் வேலையாக 


இருக்கிறது. இந்த சைத்தான்தான் 


மனிதனை, புகையிலைப் பழக்கம், 


கஞ்சா அடிக்கும் பழக்கம், மதுப் 


பழக்கம், விலைமாந்தர்களிடம் 


மனிதனை போகச் செய்திடும் 


எண்ணத்தினை, அவனது மனதில் 


உருவாகுவது, திருடுவது, பொய் 


சொல்லிடச் சொல்வது, அடுத்தவர் 


பொருள் மீது ஆசைப் பட வைக்கும் 


மன உணர்வுகளை பதியவைப்பது 


இது போன்ற இத்யாதி,இத்யாதி 


 நடவடிக்கைகளில் மனிதன் 


ஈடுபடுவது போன்ற தீய வழிகள் 


அனைத்திலும் மனிதனை இட்டுச் 


செல்வது ஒன்றே சைத்தானின் 


வேலையாக இந்த உலகம் முழுதும் 


சைத்தான் செய்துகொண்டு 


இருக்கிறான்.இந்த இறைவனுக்கும் 


சைத்தானுக்கும் நடக்கும் மௌன 


யுத்தத்தில் வெல்லப்போவது யார்? 


இதுதான் இன்று நம் முன்னே உள்ள 


கேள்வி ? அதற்கான விடைஎல்லாம் 


வல்ல இறைவனிடம் உள்ளது. 


தர்மத்தின் வாழ்வுதன்னைச் சூது 


கவ்வும் இறுதியில் தர்மம் வெல்லும் 


என்ற உபதேசத்தின் வரிகள்நிச்சயம் 


இன்றில்லாவிட்டாலும் என்றாவது 


ஒரு நாள் வெல்வது என்பது உறுதி.


அது  வேதத்தின்  தத்துவம். 


எல்லாப் புகழும் இறைவனுக்கே !! 


இறைவன்ஒருவனே துணை நமக்கு. 


இவ்வளவு மிகப் பிரம்மாண்டமான 


கட்டுரையைப் படித்து இரசித்திட்ட 


என் அன்புத் தமிழ் நெஞ்சங்களே!!


உங்கள் அனைவருக்கும் எனது 


நெஞ்சார்ந்த நன்றியும் !! 


பாராட்டுதல்களும்.



நன்றி !! வணக்கம் !!                       



அன்புடன். மதுரை T.R.பாலு.

No comments:

Post a Comment