தொடர்ச்சி.....பாகம் எண்:- 2." கள்ளக் காதல் " அந்தக்கால திரைப் படத்திலும் இருக்கத்தான் செய்திருக்கிறது --ஒரு மலரும் நினைவுகள்--A.V.M. புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் வெளிவந்த " செல்லப் பிள்ளை " திரைப்படத்தில் இருந்து ஒரு பாடல்,ஆடல் காட்சியும் நடிப்பிசைப் புலவர் K.R.ராமசாமியின் அனல் பறக்கும் வசனங்களும் --உங்கள் கனிவான பார்வைக்கு !!
உடல்மண்ணுக்கு!!உயிர்தமிழுக்கு!!
இதை உரக்கச்சொல்வோம்
உலகுக்கு!!
இனம் ஒன்றாக,மொழிவென்றாக,
புது வேல் எடுப்போம் விடிவுக்கு!!
நம் வெற்றிப்பாதையில் நரிகள்
வந்தால் விருந்து வைப்போம்
விண்ணுக்கு!!
வீரர்கள் வாழும் திராவிடநாட்டை
வென்றவர் கிடையாது !!வேலும்
வாளும் தாங்கிய மறவர்
வீழ்ந்ததும் கிடையாது !!
எத்தனையோ மேடு ,பள்ளம்
வழியிலே, உன்னை இடறவைத்து
தள்ளப்பார்க்கும் குழியிலே!!
அத்தனையும் தாண்டி காலை
முன்வையடா!! நீ அஞ்சாமல்
கடமைகளை செய்வாயடா!!
சத்தியமே இலட்சியமாய்க்
கொள்ளடா!! தலை நிமிர்ந்து உனை
உணர்ந்து செல்லடா!!
குள்ள நரிக்கூட்டம் வந்து
குறுக்கிடும் !! நல்லவர்க்குத்
தொல்லை தந்து மடக்கிடும்!! நீ
எள்ளளவும் பயம்கொண்டு
மயங்காதேடா !! அவற்றை எமன்
உலகுக்கு அனுப்பிவைக்கத்
தயங்காதேடா !!
வேப்பமர உச்சியில் நின்னு
பேய் ஒன்னு ஆடுதுன்னு
விளையாடப் போகும்போது
சொல்லி வைப்பாங்க !! உந்தன்
வீரத்தைக் கொழுந்திலேயே
கிள்ளி வைப்பாங்க !!வேலையற்ற
வீணர்களின், மூளையற்ற
வார்த்தைகளை வேடிக்கையாகக்
கூட நம்பிவிடாதே !! நீ
வீட்டுக்குள்ளே பயந்து கிடந்தது
வெம்பி விடாதே !! நீ வெம்பி
விடாதே !! நீ வெம்பிவிடாதே!!
உலகெங்கிலும் அன்பு மற்றும்
பாசம், இந்த இரண்டு அம்சங்களை
மட்டுமே தனது இரு கண்களாக
பாவித்து மெழுகுவர்த்தியின்
தியாக உணர்வுகளோடு வாழ்ந்து
வரும், என் உயிரினும் மேலான
அன்புத்தமிழ் உடன்பிறப்புகளே!!
உங்கள் இமைகள் திறந்திடும்
ஒவ்வொருகாலைவேளையிலும்
உங்கள்வாழ்வினில் எவ்விதமான
சுமைகளும் இல்லாமல், சுகங்கள்
மட்டுமே நிறைந்திடவேண்டும் என
அனுதினமும் எல்லாம் வல்ல
இறைவனை மனதாரவேண்டி
பிரார்த்தனை செய்திடும் உங்கள்
அன்புத் தமிழ்பேசும்உடன்பிறப்பு,
மதுரை T.R. பாலுவின் இதயம்
கனிந்த,சிரம் தாழ்ந்த,கரம்குவிந்த
அன்பும்,பண்பும் செறிந்த காலை
வணக்கங்களைஉங்கள்அனைவரது
பொற்கமல பாதங்களில் அன்புடன்
வைத்து சமர்ப்பிக்கிறேன். நிற்க !!
பொதுவாகஅன்பர்களே மனிதகுலம்
தோன்றி பின்னொருநாள் அழியும்
வரைஇந்தமுறைதவறியஉறவினில்
தலையாய இடத்தைத்தக்கவைத்துக்
கொண்டு இருக்கும் இந்தக் "கள்ளக்
காதல் " என்னும் கொடிய பாவம்
நம்மிடையே இருந்துகொண்டுதான்
இருக்கும் போலிருக்கிறது. அதற்கு
அந்தத் தீய எண்ண உணர்வுகளுக்கு
அந்தக்காலம், இந்தக்காலம் என்கிற
பாகுபாடுகளோ இல்லை கருத்து
மாறுபாடுகளோ இல்லவே இல்லை
என்றுதான்நாம்வரலாறு என்கின்ற
ஏட்டின் ஒவ்வொரு பக்கங்களையும்
புரட்டிப் பார்க்கும்போது அறிகின்ற
உண்மை என்றே நான் கருதுகிறேன்
என் அன்புத் தமிழ் நெஞ்சங்களே !!
அந்த வகையில், இந்த விபரீத
விளைவுகளைமனிதவாழ்க்கையில்
உருவாக்கிடும்"கள்ளக்காதல்"எனும்
ஒரு சம்பவம், அக்கால திரைப்படம்
ஒன்றினில் எவ்வளவு அழகாகக்
கையாண்டிருக்கிறார்கள் என்பதை
உங்கள் அனைவரின்கவனத்திற்கும்
ஒரு சிந்தனை விருந்தாக, சீர்திருத்த
மருந்தாக படைத்து மகிழ்கிறேன்.
இந்தக்கட்டுரை ஏதோ நேயர்களே!!
சற்று நீளமாகத்தான் இருக்கும்.
(யோவ். T.R.பாலு சார். உங்க
கட்டுரை எதுதான்கம்மியா இருந்ச்சு
இது இருக்ரதுக்கு?)
ஆனாலும் நம் தமிழ் இனத்திற்கே
உள்ள முக்கியமான அணிகலமாம்
அந்தப் பொறுமை என்கின்ற அந்தத்
தூய உணர்வுகளோடு நீங்கள்
யாவரும் இந்தக் கட்டுரையைப்
படித்து மகிழ்ந்திடவேணுமாய்
வேண்டிவிரும்பிக்கேட்டுக்கொண்டு
விடை பெறுகிறேன். நன்றி !!
A.V.M.புரொடக்ஷன்ஸ் தயாரிப்பான
"செல்லப்பிள்ளை" என்ற கருப்பு
வெள்ளைத் திரைப்படம், இது
வெளிவந்த ஆண்டு அனேகமாக
1956-1959 இந்தக் காலகட்டத்திற்குள்
இடைப்பட்டதாக இருக்கும் என்று
கருதுகிறேன் ஜூன் மாதம் 24ம் தேதி
அந்தக்காலமெட்ராஸ் வெலிங்க்டன்
திரையரங்கிலும்மற்றும்பிராட்வே
ராக்ஸி திரை அரங்கினிலும் மற்றும்
தமிழகம் முழுவதும் வெளிவந்து
வெற்றிக்கொடி நாட்டியதாக எனது
தந்தைசொல்லிடக்கேட்ட அனுபவம்
எனக்கு உண்டு. இப்போது அந்தப்
படத்தின்சம்பந்தப்பட்டஆடல்,பாடல்,
காட்சிகளைநாம்பார்ப்பதற்குமுன்
"செல்லப்பிள்ளை " திரைப்படத்தின்
கதைச் சுருக்கத்தை சொல்லி
விடுகிறேன் என் அன்புத் தமிழ்
நெஞ்சங்களே இதில்கதாநாயகனாக
நடித்திருப்பவர்மறைந்தநடிப்பிசைப்
புலவர் என்று எல்லோராலும்
பாராட்டப்பட்ட KR.ராமசாமி மிக
நேர்த்தியாக,நடித்திருப்பார்
என்று சொல்வதைவிட ஒருபடி
மேலே சென்று அவர் அந்தக்
கதாபாத்திரமாகவே
மாறி இருப்பார் என்று சொல்வதே
சாலச்சிறந்ததாக இருக்கும். அவரின்
ஆசை நாயகியாக நடிகையர்திலகம்
சாவித்திரி அவரும் K.R.R.உடன்
போட்டி போட்டு நடித்து இருப்பார்.
தாயைப் புறக்கணித்துத்தொட்டுத்
தாலிகட்டியமனைவியைக் கண்ணீர்
சிந்த வைத்து ஆசைநாயகியே கதி,
தனது உலகம்எனஇன்றும் நம்மில்
பலர் வாழ்ந்துவரும் அதேநிலையில்
தான்அவரும்சாவித்திரியோடுஒன்றி
இருப்பார்.ஆசைநாயகி சாவித்திரி
அதில் நாடக நடிகை கதாபாத்திரம்
ஏற்றுஇருக்கும்வேளை,அவருக்கு
நடன,நாட்டிய,வசனம்பேசிசொல்லி
தரும் நாடகக் கம்பெனி மேனேஜர்
வேடம்மறைந்தகுணச்சித்திரநடிகர்
T.S. பாலையாசிறப்புறநடித்திருப்பார்.
இவர் K.R.ராமசாமியைவிட அதிக
செல்வந்தர்.
பொதுவாக இந்த ஆசைநாயகி,
விலைமாதர்கள், இவர்களின்
அடிப்படை குணம் எது என்று
கேட்டால் அன்பர்களே !!
இந்தப்பெண் யார் ஒருவரால் தக்க
வைத்துக்கொள்ளப்பட்டுள்ளாறோ
அவரைவிட அதிக செல்வம் மிகுந்த
ஒருவரை இந்த ஆசைநாயகிகள்/
விலை மாதர்கள்சந்திக்கிறார்களோ
அத்துடன் முடிந்தது பழையகாதலர்
மேல் இவர்கள் கொண்டுள்ள பற்று,
பாசம் எல்லாம்.இவை எல்லாம்
வெறும் வெளி வேஷம்.புதியஆளின்
மீதுஇவர்கள்பார்வைசென்றுவிடும்.
ஏனென்றால்,அவர்களின்இயல்பான
குணமே அப்படித்தான் அன்பர்களே.
( ஏன் நயினா !! நாம் இப்ப உன்ட்ட
ஒன்னு கேப்பேன். நீ கோச்சுக்க
மாட்டியே...உம்....சொல்லு...
சும்மா ..தைரியமா..கேளு..தம்பி...
இல்ல..இவ்ளோ கரீட்டா அந்தப்
பொம்பள பத்தி க்ளீனா கட்பண்ணி
சொல்றியே !! உன்க்கும் ..அந்த..
மாதிரி..செட்..அப்..கிட்அப்..எனாச்சும்
வச்சுக்கினு இருக்கியா?...தபார்டா
அதான் நான்முன்னாலேயே உன்ட்ட
கோச்சுக்கதேன்னு சொல்ட்டுதானே
இத்த நான் உன்னாண்ட கேக்றேன்.
இப்டி சிரிச்சா எப்டி ?
சொல்லு நயினா.
அப்டி..எதாச்சும்..உம்..உம்..தபார்ட..
சிரிக்கிறாரு..
தம்பி..நான் ஒன்னும் உன்மேல
கோவிக்கலை.இது எல்லோரும்
சொல்றதுதான். இப்ப பாம்பு கடிச்சா
நாம் செத்துப்போயிருவோம். இதை
நாமஎன்னகடிவாங்கியசொல்றோம்.
இல்லையே.அதேமாதிரிதான்இதும்.)
சரி. நேயர்களே நாம இப்ப ஒரு சிறு
இடைவேளைக்குப் பின்னால்
கட்டுரையின் உள்ளே செல்வோமா ?
எனது அன்புத் தமிழ் நெஞ்சங்களே.
அதுவரை சற்று பொறுமைகாத்து
இருக்க வேண்டும் !!
நன்றி!! வணக்கம் !!
அன்புடன்.மதுரை T.R.பாலு.
(இடைவேளை முடிந்தது)
கட்டுரை தொடர்கிறது !!
மேலே குறிப்பிட்ட திரைப் படமான
"செல்லப்பிள்ளை" படத்தின்
கதா நாயகன் நடிப்பிசைப் புலவர்
K.R.ராமசாமி ஆவார்.
தனது தாய்,மனைவி,மக்கள்,
வீடு வாசல் இவை அனைத்தையும்
துறந்து ஆசைநாயகியாக நடித்த
நடிகையர் திலகம் சாவித்திரியேகதி
என்று வாழ்ந்திடும் போது,அவர் ஒரு
நடன நாட்டிய நாடக நடிகை. புதிய
நாடகம் ஒன்றிற்காக அவரை
ஒப்பந்தம் செய்திட வந்த நாடகக்
கம்பெனி முதலாளி T.S. பாலையா
இவர் KR. ராமசாமியைவிட அதிக
செல்வந்தர். அவரைப் பார்த்தவுடன்
ஆசைநாயகி சாவித்திரியின்
உள்மனதில் இருந்து KR. ராமசாமி
வெளியேறுகிறார். பாலையா
உள்ளே புகுந்துவிடுகிறார். (அடச்சீ.
இப்படி வர்றவன் கொள்ளப்பேர்
வீட்டிலே இருக்கிறவளைக்
கூட்டிகிட்டுஒடீருறாய்ங்கன்னுதான்
கொள்ளப்பேர் வீட்டுக்குள்ளேயே
யாரையும் விட்ரதுல்லே. ஏன்
இவனுக, தேடி வர்றவங்களை
வாசல்ல உள்ள கேட்ல வச்சே பேசி
அனுப்பிடுராய்ங்கன்ற நீண்டநாள்
சந்தேகத்துக்கு/கேள்விக்குத் தகுந்த
நல்லவிடை இன்னைக்குத்தான்யா
எனக்கு கிடைச்சது)அரசல் புரசலாக
இருந்த"கள்ளக்காதல்" விவகாரம்
சாவித்திரியை "வச்சுக்கிட்டு
இருக்கிற " கதாநாயகன்
K.R.ராமசாமியோடசெவிகளில்விழ,
அது உண்மைதானா என்று சோதிக்க
ஆசைநாயகி சாவித்திரிக்கு, தனக்கு
உடல் சரி இல்லை எனவே தான்
மருத்துவமனை செல்வதாகவும்
எனவே, தான் இன்று இரவு, அங்கு
உன் வீட்டிற்கு வந்து தங்கிட
முடியாது ஆகவே நாளைக்கு,தான்
வருவதாகச் சொல்லிவிட்டு
மருத்துவமனையில் சேர்கிறான்.
மாலை அவரை அங்கு வந்து
பார்த்துவிட்டு ஆசை நாயகி வீடு
திரும்பிய உடனே தனது புதியகாதல்
நாயகன் T.S.பாலையாவிற்குத்
தகவல் தெரிவிக்கிறாள், இன்று
அவர் வரமாட்டார் எனவே நாம்
இருவரும் சற்றே " உல்லாசமாக "
இருப்போமா என்று கேட்க, எப்படா
இதுபோல ஒரு சந்தர்ப்பம்
கிடைத்திடும் என்று அலையோ
அலை என அலைந்துகொண்டு
இருக்கும் ஆண்களுக்குள் பாலையா
என்ன விதிவிலக்கா ? உடனே
சம்மதம் தெரிவித்து இரவு எட்டு
மணிக்கு வருவதாகத்
தெரிவிக்கிறார். அது போலவே
அடுத்தவரின் கள்ளக்காதலியை
கொஞ்சி மகிழ்வதற்கு
சாவித்திரியின் வீட்டிற்கு சரியாக
எட்டு மணிக்கெல்லாம் வருகிறார்.
அங்கே மருத்துவமனையில் இருந்து
யாரிடமும் சொல்லாமல் நைசாக
வெளியே வந்த K.R.ராமசாமி நேரே
ஆசைநாயகி வீட்டுக்கு வருகிறார்.
கதவு தள்ளியவுடன் திறந்து
விடுகிறது. மாடியில் அங்கே T.S.
பாலையாவும் அவரது"புதியகாதலி"
சாவித்திரியும் மிகுந்த மன
மகிழ்வோடு ஆடல் பாடல் நிகழ்ச்சி
நடைபெற்றுக்கொண்டிருப்பதைக்
கண்ணுற்ற கதாநாயகன் அந்த
அறையினுள் நுழைந்ததும், அவரை
சற்றும் எதிர்பாராத ஆசை நாயகி
சாவித்திரி, ஆ!! நீங்களா!! இது
வெறும் ஒத்திகைதாங்க..
அப்படி..இப்படின்னு...மழுப்பி தனது
தவறை மறைக்கப் பார்ப்பதும் அதை
சிறிதும் இலட்சியம் செய்திடாத
கதாநாயகன் துப்பாக்கி முனையில்
சாவித்திரியை தொடர்ந்து ஆடச்
சொல்வதும் அவள் கள்ளக்காதலன்
T.S.பாலையாவை மாண்டலின்
இசை வாத்தியக் கருவியை ஒலி
எழுப்பிடச் சொல்லி அவர்மீது
துப்பாக்கியைக் காட்டி பயமுறுத்திக்
கட்டாயப்படுத்துவதும் பார்ப்பதற்கே
வெகு சிறப்பாக படம் பிடிக்கப்
பட்டவை. பின்னணிப் பாடகி ஜிக்கி
தனது தேனான குரல் வளத்தை
"காமரசம்"சொட்ட சொட்ட பாடுவது
அருமையிலும்அருமை. அந்தக்
காட்சி முழுவதையும் நான்
உங்களுக்கு கீழே தர இருக்கிறேன்.
(ஒரு சிறு இடைவேளைக்குப் பிறகு)
நன்றி !! வணக்கம் !!
அன்புடன். மதுரை T.R.பாலு.
No comments:
Post a Comment