Saturday, 28 September 2013

பொறுத்தது போதும் !! பொங்கி எழுங்கள் கலைஞரே !! எங்கள் தமிழ் இனத்தின் தலைவரே !! தொண்டர்களின் ஆணை கிடைத்து விட்டது !!







உடல்மண்ணுக்கு!!  உயிர்தமிழுக்கு!!


இதை உரக்கச் சொல்வோம் 


உலகுக்கு!!                                                     


இனம் ஒன்றாக, மொழி வென்றாக, 


புது வேல் எடுப்போம் விடிவுக்கு!!     


நம் வெற்றிப் பாதையில் நரிகள் 


வந்தால் விருந்து வைப்போம் 


விண்ணுக்கு !!                                         


வீரர்கள் வாழும் திராவிட நாட்டை 


வென்றவர் கிடையாது !!                   


வேலும், வாளும், தாங்கிய மறவர் 


வீழ்ந்ததும் கிடையாது !!                         


குள்ள நரிக்கூட்டம் வந்து 


குறுக்கிடும்!!                                               


நல்லவர்க்குத் தொல்லைதந்து       


மடக்கிடும் !! நீ                                                 


எள்ளளவும் பயம் கொண்டு 


மயங்காதிரு !!                                             


அவற்றை எமன்உலகுக்கு அனுப்பி 


வைக்கத் தயங்காதிரு !!                         



தமிழகம் உள்ளிட்ட உலகெங்கிலும் 


வாழ்ந்துவரும் எனது உயிரினும் 


மேலாக நான் போற்றி, வணங்கி 


வரும் எனது அன்புத் தமிழ் உடன் 


பிறப்புகளே !!                                         


உங்கள் அனைவருக்கும் எனது சிரம் 


தாழ்ந்த, கரம் குவிந்த அன்பு 


நிறைந்த வணக்கங்கள்.                           



இந்திய சினிமாவின்நூற்றாண்டுகள் 


கொண்டாட்டம் என விளம்பரம் 


செய்து மக்களின் வரிப்பணம் 


ஏறத்தாழ 1௦ கோடி ரூபாய்களுக்கு 


மேல் வாரி இறைத்துஅந்தவிழாவை 


ஏதோ அ.இ.அ.தி.மு.க.வின் மாநில 


மாநாடுபோல நடத்தி முடித்த 


பெருமை நமது தமிழக அரசையே 


சாரும். வாழ்க !! வளர்க !! 



அவர்களின் தமிழ்த் திரைப்படத்தின் 


மேல் உள்ள அக்கறை என்று 


சொல்வதைவிட இன்றைய தமிழ் 


திரைப்பட உலகின் முடி சூடா 


மன்னர்களாக விளங்கிவரும் சூப்பர் 


ஸ்டார் திரு ரஜினிகாந்த், உலக 


நாயகன் கமல்ஹாசன்,இசை ஞானி 


இளையராஜா போன்ற முக்கியமான 


கலை உலகின் சக்கரவர்த்திகளை 


முதலில் ஒரு இடத்தில் அமர 


வைத்துவிட்டு(தனக்கு அழைப்பு 


அனப்பவில்லை என்று தெரிந்தும் 


அதனைத் துச்சமென எண்ணி, 


தமிழ்த் திரை உலகின் முன்னணி 


நட்சத்திரங்கள்கௌரப்படுத்தப்படும் 


காட்சியைக் காண வந்த பெரிய 


மனம் படைத்த உள்ளத்துக்கு 


சொந்தக்காரரான இளைய தளபதி 


விஜய் அவர்களை கடைசி 


வரிசையில் அமர வைத்திட்ட 


கொடுமை)அதன்பின்அவர்களை 


பின்வரிசையில் அமரவைக்க 


வேண்டும் வேண்டும் மேடையில் 


இருந்து ஆணைபிறப்பித்ததன் 


மூலமாக தனது கொடூரமான, 


நயவஞ்சகம் நிறைந்த தனது 


உள்ளத்தின் வெளிப்பாடுகளை இந்த 


அகில உலகுக்கு வெளிச்சம் 


போட்டுக் காட்டிய மாண்பு ? 


நிறைந்த நல்ல உள்ளங்களுக்குத் 


தமிழ்த் திரைப்பட உலகம் 


என்றென்றும் நன்றிசெலுத்திடக் 


கடமைப் பட்டுள்ளது என்பதனை 


நான் இங்கே கோடிட்டுக் காட்டிட 


விரும்புகின்றேன்.இந்த இத்தனை 


அக்கிரமங்களுக்கெல்லாம் சிகரம் 


வைத்தால் போல் விழாவிற்கு 


கடைசி நாள் வரை திரையுலக 


முடிசூடா மன்னர்,தமிழ் இனத்தின் 


காவலர்,முத்தமிழ் அறிஞர், 


கலைஞர் அவர்களுக்கே விழாவின்


முந்தியநாள்இரவில் அழைப்பிதழ் 


கொடுத்த மாபெரும் சிறப்பு, ஆளும் 


நல்ல உள்ளம் படைத்த அரசையே 


சாரும்.நான் கேட்கிறேன், இது என்ன 


அவர்கள் சொந்தப் பணத்தில் அந்தக் 


கட்சி பொறுப்பேற்று நடத்திடும் 


விழாவா ? இல்லையே !! மக்கள் 


வரிப்பணத்தில் அரசாங்கம் ஏற்று 


நடத்திடும் பொதுவிழாவன்றோ ? 


இதிலா காட்டுவது சொந்த விருப்பு 


வெறுப்புகளை ? வெட்கம். வெட்கம். 


வேதனை.வேதனை. இவர்கள் எந்த 


சவக்காரம் ( சோப்)போட்டாலும் 


வெள்ளையாகவே மாட்டார்களா? 


கேவலம் !! கேவலம் !! தமிழ்த் திரை 


உலகுக்கு தமிழக அரசே அளித்த 


மாபெரும் அவமானம் !! இவை 


எல்லாவற்றையும் கூட பெரிய 


மனது கொண்டு மன்னித்து விட்டு 


விடலாம். ஆனால் கலைஞர் 


அவர்களின் பெயரை ஒரு இடத்தில் 


கூட  உச்சரிக்காமல் அவர் 


தீட்டிய அனல் கக்கும் வசனங்களை 


திரை இட்டுக் காட்டாமலும் 


மறைத்துவிட்ட கொடுமை 


இருக்கிறதே இதெல்லாம் ஹிட்லர், 


முசோலினி போன்ற பாசிச சக்திகள் 


காட்டிய வெறி உணர்வுகளைவிட 


பல மடங்கு தனி நபர் தாக்குதல் 


தன்மை படைத்தது. நன்றி.அரசுக்கு. 


அவர்களின் உள்ளத்தின் உள்ளே 


ஒளித்து மறைத்து இதுகாறும் அரசு 


போட்டு வந்த பகல் வேடத்தை 


அவர்களே மக்களுக்கு தங்களை 


தாங்களே அடையாளம் காட்டிக் 


கொண்ட விதத்திற்கு தமிழ்த் திரை 


உலகம் என்றென்றும் நன்றி 


பகர்ந்திட சந்தர்ப்பம் எதிர்பார்த்துக் 


காத்துக்கொண்டு இருக்கிறது. அது 


மட்டும் உண்மை, இது சத்தியம்.புகழ் 


பெற்ற இயக்குனர்கள் பாரதிராஜா, 


பாலு மகேந்திரா, பிரபல பின்னணிப் 


பாடகர்கள் S.P.பாலசுப்பிரமணியன் 


இசைக்குயில் P.சுசீலா, S. ஜானகி 


இவர்கள் எல்லாம் விடுபட்டவர்கள் 


பட்டியல். அநியாயங்களும் 


அக்கிரமங்களும்,நய 


வஞ்சகங்களும்,சூழ்ச்சி வலைகள் 


பின்னி அதில்வீழ்ந்திடும் பூச்சிகளை 


சாப்பிட்டு மனம் மகிழ்ந்திடும் விஷ 


ஜந்துகளைவிட மிகக் கொடுமை 


நிறைந்ததுஇந்தகேவலமான செயல்.


அரசாங்கத்திற்கு அவர்கள் தமிழ்த் 


திரை உலகுக்கு  செய்திட்ட  மேலே 


குறிப்பிட்ட எல்லாப் பாவங்களிலும் 


இருந்து பாவ விமோசனம் செய்திட 


நான் தரும் இந்த யோசனை ஒரு 


கடைசி வாய்ப்பு. இதை செய்தால் 


அரசுக்கு நல்லது. தலைவர் 


கலைஞர் அவர்களை நேரில்சென்று 


சந்தித்து அவரிடம் தேதி வாங்கி 


அந்த நல்லவர் தலைமையில் 


இதைவிட மிகப் பிரம்மாண்டமாக 


மற்றும் ஒரு விழாவினை 


அரசாங்கம்  எடுத்து செய்து மேலே 


குறித்திட்ட அந்த குறைகள் எல்லாம் 


நீக்கம் பெற்று , அழைக்கப்பட 


வேண்டியவர்கள் அனைவரையும் 


அழைத்து,சொந்த விருப்பு 


விருப்புகளை புறந்தள்ளிவிட்டு 


கலைஞர்கள் அனைவரையும் 


அரவணைக்கும் விதமாக அந்த 


விழா அமைந்திடல் மிக மிக 


அவசியம். அரசு இதை உடனடியாக 


செய்திடல் வேண்டும்.அப்படி செய்ய 


வில்லை என்றால் நஷ்டம் தமிழ்த் 


திரை உலகிற்கு எதுவும் இல்லை. 


அது ஒருவகையான சிறப்பான 


இலாபகரமான செயலாக 


கலைஞருக்குத்தான் போகப் 


போகிறது.சம்மதமா ? யோசித்துக் 


கொள்ளுங்கள் அரசே. 


யோசித்துக்கொள்ளுங்கள்.அவ்வள


வுதான் என்னால் சொல்ல முடியும். 


இடைக்கால முடிவு அரசாங்கத்தின் 


கைகளில். இறுதி முடிவு தமிழ்த் 


திரைப்படக் கலைஞர்கள் 


நெஞ்சினில். அப்புறம் உங்க இஷ்டம்.




கலைஞர் திரு மு.கருணாநிதி 


அவர்களுக்கு ஒரு அன்பு 


வேண்டுகோள் அல்லது தமிழ்த் 


திரை உலக ரசிகர்களுள் ஒருவன் 


என்ற முறையில் ஆணை 


இடுவதாகவே கூட வைத்துக் 


கொள்ளுங்கள் தலைவரே. நான் 


உங்கள் இயக்கத்தின் அந்தக் காலத் 


தொண்டன். உங்களை நேசிப்பவன். 


இதய சிம்மாசனத்தில் வைத்து 


அனுதினமும் பூஜிப்பவன்.உங்கள் 


எழுத்துக்களும்,வசனங்களும், 


எழுதிய பாடல்களும் எங்களுக்கு 


என்றுமே ஓர் கலங்கரை விளக்கு. 


கழுதைகள் அறிந்திடுமோ 


கற்பூரத்தின் தூய்மை நிறைந்த 


வாசனையை. அவர்களை விட்டுத் 


தள்ளுங்கள். நீங்கள் இனிமேல் 


என்ன செய்யப் போகிறீர்கள் ? இது 


ஒன்றுதான் தொண்டர்களாகிய 


நாங்கள் உங்களிடம் எதிர்பார்த்துக் 


காத்திருந்து கேட்கின்ற ஒரே 


கேள்வி. நீங்கள் வசனம் எழுதி, 


நடிகர் திலகம் சிவாஜிகணேசன் 


நடித்து அனல் பறக்கும் 


வசனங்களைக் கொண்டு அந்தக் 


காலத்தில் வெற்றிக் கொடி கட்டிய 


திரைப்படம் " மனோகரா". அதில் 


தங்களது கை வண்ணத்தில் வசனம் 


சும்மா விளாசித் தள்ளி இருப்பீர்கள். 


அதில் தர்பார் காட்சி முடிந்த பின் 


சிவாஜிகணேசன் சிறையில் 


அடைக்கப் பட்டு அதன்பிறகு 


மனோகரன சிறையில் இருந்து தப்பி 


ஓடிவிடுகிறான். தனது மைந்தன் 


வசந்தனுக்கு மகாராஜா 


புருஷோத்தமர் இளவரசர் பட்டம் 


அளித்திட மறுக்கவே வெறுப்பு 


அடைந்த வில்லி வசந்தசேனையாக 


வரும்  T.R.இராஜகுமாரி தனது 


பழைய/முன்னாள் காதலன்இமயபுரி 


அரசன் உக்கிரசேனனுக்குத் தகவல் 


அனுப்பி சாமியார்கள் உருவில் 


அவனும் அவனது படைகளும் சோழ 


சாம்ராஜ்யத்தில் உள்ளே புகுந்து 


ராஜாவையும் சிறையில் அடைத்து 


கொடுமைசெய்வதை அறிந்து 


மனோகரன் நாடு திரும்பிட அவனும் 


கைது செய்யப்பட்டு 


இறுதிக்காட்சியில் ராணி 


கண்ணாம்பாள் சிவாஜியிடம் 


பேசிடும் வசனம்தான் எனக்கு 


நினைவுக்கு வருகிறது கலைஞர் 


அவர்களே. எல்லாம் தாங்கள் 


எழுதியதுதான். யாருக்கு மன 


நிம்மதி கெட்டு விடக்கூடாது என்று 


என் மைந்தனை அவனது 


கரங்களைக் கட்டி 


வைத்திருந்தேனோ அவரையே நீ 


(வசந்தசேனை) சிறையில் தள்ளிய 


பிறகு மனோகரா, நான் சொன்ன 


பொறுமைக்கு எங்கே இருக்கிறது 


பெருமை ? என்று நீங்கள் எழுதிய 


அதே வசனம் இன்று காலத்தால் 


மீண்டும் உயிர் பெற்று இங்கே 


உலவிட வந்து விட்டது தலைவர் 


கலைஞர் அவர்களே. கேளுங்கள் 


இப்போது அதை நான் சொல்கிறேன். 


எந்தத் தலைவனின் தன்மான 


உணர்வுக்கு பங்கம் வந்து விடக் 


கூடாது என்று தொண்டர்களாகிய 


நாங்கள் பொறுமை காத்து 


இருந்தோமோ அந்தத் 


தலைவனையே இருட்டடிப்பு செய்து 


நீசர்கள் விழா எடுத்த பிறகு எங்கே 


இருக்கிறது எங்கள் பொறுமைக்குப் 


பெருமை. தொண்டர்களின் ஆணை 


கிடைத்துவிட்டது  கலைஞரே 


பொருத்தது போதும் பொங்கி 


எழுங்கள். நீதி நிலை பெற நீங்கள் 


வாய் வார்த்தை எதுவும் உரைத்திட 


வேண்டாம். ஒரு கண் ஜாடைமட்டும் 


காட்டுங்கள் நாங்கள் எங்கள் 


உணர்ச்சிகளுக்கு உருவம் காட்டி 


இந்த உலகையே நடுநடுங்கச் 


செய்திடும் வேளைவந்து 


விட்டது.உம்.புறப்படுங்கள்.புறப்படுங்


கள். .......



என இதுபோல வசனம் எழுதிட 


எனக்கும் ஆசைதான். ஆனால் 


ஆட்சியும் கோலோச்சும் 


அதிகாரமும் அங்கே இருக்கிறது. 


மூடனின் கையில் உள்ள பணம் 


முரடனின் கைகளில் உள்ள 


அணுகுண்டை விட பயங்கரமானது 


என்று என் தந்தை அடிக்கடி 


சொல்வார்கள் அதுதான் இப்போது 


என் நினைவினில் வருகிறது. 


இப்போது நீங்கள் வேறு எதுவும் 


செய்திட வேண்டாம். கழகத்தின் 


சார்பாக நீங்களே ஒரு நூற்றாண்டு 


விழா ஒன்று நடத்திட ஏற்பாடு 


செய்யுங்கள் முறையாக 


விழாவினை நடத்திட உங்களுக்கு 


நாங்கள் என்ன சொல்லியா தர 


வேண்டும்.ஏன் என்றால் நீங்கள் 


முறையாக அரசியலில் தந்தை 


பெரியார்,பேரறிஞர் அண்ணா 


இவர்களது பள்ளிகளில் கல்வி 


பயின்றவர் அல்லவா. எதிரிகள் 


வாய் அடைத்திட ஒரு விழாவிற்கு 


நம் அண்ணாஅறிவாலயத்தில் பார்


புகழ, ஊர் மகிழ, நடத்திடுங்கள் 


அப்போதுதான் தமிழ் திரைப்பட 


உலகம் நிம்மதிப் பெருமூச்சு விடும். 


எங்களது தன்மான உணர்வுகளுக்கு 


மதிப்பு அளிக்க இந்தத் 


தமிழகத்திலும் ஒரு தலைவன்   


இருக்கத்தான் செய்கிறான் என்று 


அவர்களின் கண்களில் ஆனந்தக் 


கண்ணீர் ஆறாகப்பெருக்கெடுத்து 


ஓடும்.அந்தக் காட்சியை காண 


முயற்சி எடுத்திட உங்கள் 


ஒருவரால் தான் முடியும். 


உங்களுக்கு மட்டும்தான் அந்தத் 


தகுதியும் திறமையும் உள்ளது. 


ஏற்பாடு செய்வீர்களா தலைவா ?. 




பதிலுக்காக காத்திருக்கும் உங்கள் 


உண்மைத் தொண்டன்.


மதுரை TR.பாலு .





No comments:

Post a Comment