உடல்மண்ணுக்கு!! உயிர்தமிழுக்கு!!
இதை உரக்கச் சொல்வோம்
உலகுக்கு!!
இனம் ஒன்றாக,மொழி வென்றாக,
புது வேல் எடுப்போம் விடிவுக்கு!!
நம் வெற்றிப் பாதையில் நரிகள்
வந்தால் விருந்து வைப்போம்
விண்ணுக்கு !!
தமிழனாக வாழ்ந்திடுங்கள் !!
தனித்தமிழில்மட்டுமேபேசிடுங்கள்!!
ஆங்கிலமொழிகலப்புஏதும்இன்றி!!
தமிழ்பேசும் சகோதர,சகோதரிகள்
நடுவில்உரையாடும் போது!!
உலகெங்கிலும் வாழ்ந்து வரும் என்
உயிரினும் மேலான அன்புத்தமிழ்
உடன்பிறப்புகளே!!உங்கள்இமைகள்
திறக்கும் இந்த இனிய காலை
வேளையில் உங்கள் வாழ்க்கை
சுமைகள் ஏதும் இன்றி சுகமாய்
இனிதே சிறப்பாக அமைந்திட
எல்லாம் வல்ல இறைவனின்
திருவருள் உங்கள் யாவருக்கும்
கிடைத்து நீங்கள் அனைவரும்
நலமாக இருக்கவேண்டும் என்று
பிரார்த்தித்து உங்கள் அன்புச்
சகோதரன் வேண்டிக்கொள்கிறான்.
உங்கள் அனைவருக்கும் எனது
இதயம்கனிந்தவாழ்த்துக்களோடு
கூடிய காலை வணக்கம்.நிற்க.
மாமிச உணவு மனிதன்சாப்பிடும்
உணவாக மாறியது எப்போது ? :-
கல் தோன்றி மண் தோன்றாக்
காலத்தே பல்லாயிரம் ஆண்டுகட்கு
முன்பாகஆதிமனிதன் இந்த பூமியில்
இறைவனால் படைக்கப்பட்ட
இனமாக தோன்றியபோது
அவனோடு கூடவே பறவை
இனங்கள்,விலங்கு இனங்கள்,புழு,
பூச்சிகள்,தாவரம்,செடி,கொடி,மரம்
என பல்வேறு இனங்கள்,வகைகள்,
எல்லாம் வல்ல அந்த இறைவனால்
இந்த பூமியிலே படைக்கப்பட்டது.
உருவாக்கப் பட்டது.ஆனால் அந்தக்
காலத்தில் படைக்கப்பட்ட மனிதன்,
அவன் தனக்கு எல்லாம் வல்ல
இறைவனால் வழங்கப்பட்ட அந்த
ஆறாம் அறிவு என்றுசொல்லப்படும்
பகுத்துஅறிவு என்று ஒரு அறிவு
இருப்பதைஅறிந்திடாபருவமாகவே
வாழ்ந்தான்.வளர்ந்தான். அவனுக்கு
அந்தக் காலகட்டத்தில் விவசாயம்
என்றால்என்ன,அதைஎப்படிசெய்திட
வேண்டும் என்றெல்லாம் சிந்திக்க
இயலாத ஒரு சூழலில் அவன் தனது
வாழ்கையை நடத்தி வந்த காலம்
அது. அதனால்தனது வயிற்றுப்
பசியை அடக்க,வேறு வழி
தெரியாமல்,அதனால் மட்டுமே
அமைதியான மிருக இனத்தைச்
சேர்ந்த ஆடு,மாடு,ஒட்டகம்,மான்
போன்ற விலங்கு இனங்களையும்
பறவை இனங்களில் சேவல்,
கோழி,காடை,கவுதாரி,புறா,குருவி
போன்றபறவைகளையும்கல்மற்றும்
கூர்மையானமரக்கிளைகளைதனை
ஒடித்து மேலும் கூர்மையாக ஆக்கி
அதனை வில்லில் பூட்டி பாய்ச்சி
இது போன்றவற்றை ஆயுதங்களாக
பயன்படுத்தி அவைகளை கொன்று
பின் தின்றுவந்தான்கரடி,புலி,சிங்கம்
போன்றவைகள் அருகிலே சென்றிட
பயந்து உயிரைப் பெரிதாக எண்ணி
அந்த மிருகங்களை கொல்லத்தான்
செய்தானே தவிர உண்ண அவன்
முயற்சி எதுவும் எடுக்கவில்லை.
ஆக அப்படி தனது வாழ்கையை ஆதி
காலத்தில் துவக்கிய மனிதன் அதன்
பிறகு பல நூறு வருடங்களுக்குப்
பிறகு விவசாயம் செய்யத் துவங்கி,
நெல்,கோதுமை மற்றும் தானியம்
மற்றும் காய்கறி வகைகளையும்
பயிரடத்துவங்கினான்என்பது மனித
குல வரலாறு. அதன் பிறகு பல
நூறாண்டுகள்கழிந்தபின்பே அவன்
ஆடை அணிந்து முதலில் தனது
மானத்தைக் காப்பாற்றிக்கொள்ள
எண்ணி அந்த இறைவன் அளித்த
ஆறாம் அறிவான பகுத்தறிவுதனை
முதன் முதலாக பயன்படுத்த
துவங்கினான் என்பதே உண்மை.
அதன் பிறகு காலத்தின் பரிணாம
வளர்ச்சியில்பூமி முழுதும் வாழ்ந்து
வந்த மனிதன் பல கண்டங்களில்
பல்வேறு இனங்களாக பல்வேறு
மொழிகளை உருவாக்கி பேசிடவும்
கருத்துக்களை ஒருவருக்கொருவர்
பரிமாற்றம்செய்துகொள்ளஅவன்
பயன்படுத்திவந்தான். இந்தக்கால
கட்டத்திற்கு பின்பல ஆயிரம் காலம்
கழித்துஅவன்கல்விமூலம்விஞான,
மெய்ஞானம் அறிந்து கற்று அதன்
பயனாகநவநாகரீக உலகம் ஒன்றை
உருவாக்கத்தொடங்கினான் என்பது
மனிதகுலவரலாறுஅன்பர்களே. ஆக
அப்படி விஞானத்தின் மூலம் தனது
அறிவினைவிருத்திசெய்து கொண்ட
மனிதன்ஏனோதெரியவில்லைஆதி
மனிதனின்பழக்கவழக்கங்களுள்
தலையாய இடத்தைப் பிடித்து உள்ள
மிருகங்கள்,பறவைகள் இதுபோன்ற
உயிர்இனங்களைகொன்று தின்று
வரும் பழக்கத்தை மட்டும் அவன்
கைவிட,கைகழுவ மறுத்து அவன்
தன்உணவுப் பழக்கத்தை தொடர்ந்து
கடைப்பிடித்துவந்தான் என்பதுதான்
வரலாறு நமக்கு கூறும் உண்மை.
ஆங்கிலேய தத்துவப் பேராசிரியர்
முனைவர் ஜான் மைக்கேல் தனது
ஆராய்ச்சிகளுள் முதலாக வைத்து
என்ன அறிவித்தான் என்றால் :-
மானிட இனமே !! நீ உணவுக்கு எந்த
வகைகளை பயன்படுத்த வேண்டும்
எனில்எதைஉன்னால்உருவாக்கிட
தகுதி இருக்கிறதோ அதை மட்டுமே
உனக்கு உண்ணும் உரிமை உண்டு.
எனவே நோய்,நொடிகள்ஏதும்இன்றி
இந்த பூமியில் வாழ நினைத்தால் நீ
இந்தக் கொள்கையை கடைப்
பிடித்துக்கொள்.இல்லையேல் வெகு
விரைவில் மரணம் உனக்கு நேரிடும்
வாய்ப்புகள் ஏற்படும். அதை சந்திக்க
நேரிடும் இது உண்மை இந்த மாமிச
உணவு வகைகளை தவிர்த்து நீ
காய்கறி உணவுவகைகளை
உண்டால் நிச்சயம் நீ நூறாண்டுகள்
வாழ்வாய்.உன்னால் வாழ்ந்திட
முடியும் என்று நான் நாற்பது
ஆண்டுகளுக்கு முன்பு கல்லூரியில்
படித்தபோது அவர் எழுதிய
THE EPIC OF MAN என்ற புத்தகத்தை
இந்தப் பூவுலகிற்கு அளித்தவர்.
அதன் மூலமாக உண்மைகள்
பலவற்றை மனிதனுக்கு
அறிவித்தவர் அவரே. அவரது
பல்வேறு கருத்துக்கள்,சிந்தனைகள்
அந்தப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டு
இருந்தது அன்பர்களே.
நான் ஏன் இந்த மாமிச உணவை
மனிதன் உண்ணும் பழக்கத்தை
கைவிடவேண்டும் என்று
இவ்வளவுதூரம்வலியுறுத்துகிறேன்
என்று சொன்னால், முதலில்
இறைவன் நமக்கு அளித்த
மாபெரும்,வலிமை வாய்ந்த
சொத்து இந்த மானிடப் பிறவி
என்பது.
இதைத்தான் தமிழ் மூதாட்டி
அவ்வைக் கிழவி, முருகன்
அவளிடம் அரியது என்ன ?என்று
கேள்வி கேட்கும்போது கிழவி
சொன்ன முதல் பதில் இதுதான் :-
அரிது !! அரிது !! மானிடனாய்ப்
பிறத்தல் அரிது !!
மானிடராய்பிறப்பினும்கூன்,குருடு,
செவிடு,பேடு நீங்கிப்பிறத்தல்அரிது !!
கூன்,குருடு,செவிடு,பேடு நீங்கிப்
பிறந்த காலையில் ஞானமும்
கல்வியும் நயத்தல் அரிது !!
ஞானமும் கல்வியும்தான் நயந்த
காலையில் தனமும் தவமும் தான்
செய்தல் அரிது !!(இன்னும் பாடல்
வரிகள் உண்டு.நேரத்தைக் கருதி
விரைந்து முடிக்கிறேன்)
அப்படி அரிதாக நாம் பெற்ற இந்த
மானிடப் பிறவி முழுப்பயனையும்
நாம் பெறவேண்டும் எனில் முதலில்
நமக்கு முழு ஆயுளைஅனுபவிக்க
தரம் மிகுந்த, தகுதிவாய்ந்த, உடல்
வேண்டும் அந்த உடல் என்பது
உணவின் அடிப்படையில்
உருவாவது.நடைமுறைப்
படுத்தப் படுவது. ஆக நாம் நமது
உணவுப் பழக்கங்களைஎப்படி
கைக்கொள்கிறோமோ
அப்படித்தான் நமது உடலின்
வலிமை,சிந்திக்கின்ற
ஆற்றல்,நோய் நொடிகள்
ஏதும் இல்லாத நிலை, இவ்வளவும்
எதில் அடங்கி இருக்கிறதுகேட்டால்,
மேலேசொன்னஉணவுப்பழக்கத்தில்
மட்டுமே உள்ளது அன்பர்களே !!.
இரண்டாவதாக நமது வாய்
அமைப்பை நீங்களே சற்று
உற்றுநோக்கி கவனித்தால்
உங்களுக்கே புரியும் அந்த பற்களின்
அமைப்பு வாயின் மொத்தக்
கொள்ளளவு இவையெல்லாம்
காய்கறி உணவு உண்பதற்காகவே
இறைவனால்நமக்குதரப்பட்டுள்ளது
என்பது தெள்ளத் தெளிவாகும்.
மாமிச உணவினை மட்டுமே உண்டு
வாழ்ந்திடும் கரடி, சிங்கம், புலி,
போன்ற மிருகங்களுக்கு நீண்ட
கூர்மையான கோரைப் பற்களும்
மிகப் பெரிதான வாய் அமைப்பும்
கொண்டவைகளாக இறைவன்
படைத்து உள்ளதைத் தெரிந்த
பிறகாவது இந்த மனிதன் தனது
மாமிச உணவுஉண்ணும்பழக்கத்தை
கைவிட வேண்டும் என்று நான்
அருள்கூர்ந்து இந்தக் கட்டுரையைப்
படிக்கும் அத்தனை நல்ல
உள்ளங்களையும் வேண்டி,விரும்பி
கேட்டுக்கொள்கிறேன்.
மூன்றாவதாக, ஆட்டிறைச்சி அதில்
உள்ள கொழுப்பு, அப்பப்பா என்னால்
சொல்லிட இயலாது அன்பர்களே.
அதனை வேகவிடும்போதே
அத்தனை கொழுப்பு மேலே
மிதக்கின்றபோது சதைப்பகுதியின்
உள்ளே எவ்வளவு கொழுப்பு
இருக்கும் என நீங்களேகணக்கிட்டுப்
பார்த்துக்கொள்ளுங்கள்
அன்பர்களே. இதை தொடர்ந்து நாம்
சாப்பிட,சாப்பிட, அது,நமது இரத்தக்
குழாய்களின் உட்புறச் சுவர்களில்
நாளடைவில் கொழுப்பாகப் படிந்து
இரத்தம் நம் உடம்பில் உள்ள பல
பகுதிகளுக்கு சென்று அடையாமல்
மாரடைப்பு, இரத்தக்கொதிப்பு
போன்ற பலவிதமான இதய
நோய்களின் தாயாக இந்த மாமிச
வகை உணவுகள் மனிதனை ருசி
என்ற பெயரால் கொல்லாமல்
கொன்றுவிடுகிறது காலம் செல்லச்
செல்ல. இதையும் மாமிச உணவு
உண்ணுபவர்கள் கணக்கில்
எடுத்துக்கொள்ள வேண்டுகிறேன்.
காதலன் தமிழ்த்திரைப்படம் இதில்
இன்னிசைப்புயல் திரு A.R.ரஹ்மான்
அவர்கள் வரலாற்றுச் சிறப்பு மிக்க
பாடல் ஒன்றினை நமக்கு அளித்து
இருப்பார்.அது இந்தப் பாடல்தான் :-
ஊர்வசி !! ஊர்வசி !! டேக் இட் ஈசி
ஊர்வசி !!
ஊசி போல உடம்பிருந்தா தேவை
இல்லை பார்மசி !!
வாழ்க்கையில் வெல்லவே டேக்
இட் ஈசி பாலிசி !!
வானவில் வாழ்க்கையில் வாலிபம்
ஒரு பாண்டஸி (FANTASI) !!
என்றொரு பாடல் இடம்பெறும்
அதில் சொல்லப்பட்டுள்ளதுபோல்
ஊசி போல உடல் எப்போது நமக்கு
அமையும் என்றால் மாமிச
உணவைக் கைவிட்டு காய்கறி
உணவிற்கு மாறினால் மட்டுமே
நமக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது.
தொடர்ந்து சாப்பிட்டு வந்தோம்
என்றால் தொந்தியும்
தொப்பையுமாக குண்டான ஆண்/
பெண் தோற்றத்தோடு நடக்கவே
சிரமப்பட்டு மூச்சு வாங்கி நாம் ஒரு
நடைமுறை நோயாளியாகவே
மாறிவிடுவோம் அன்பர்களே.
இதையும் நீங்கள் கணக்கில்
எடுத்துக்கொள்ளுங்கள்.
அது போலவே நமது உடல்நலத்தை
மிகவும் கெடுக்கக்கூடிய
புகைபிடிக்கும் பழக்கம், அதுபோல
மதுப்பழக்கம் இவைகளும்
நமது ஆயுளைக் குறைப்பதில்
பெரும் பங்கு வகிக்கின்றன என்
அன்புத் தமிழ் நெஞ்சங்களே !!
இப்போது நான் கட்டுரையின்
இறுதிப் பகுதிக்கு வந்துவிட்டேன்.
இவ்வளவு மிக நீண்ட கட்டுரையை
உங்கள் உடல்நலத்திற்காகவும்
தேகத்தின்ஆரோக்கியத்திற்காகவும்
வேலை வெட்டி இல்லாத என்னைப்
போல ஒருசிலரால் மட்டுமே தர
முடியும். கவனமாகப் படித்துவிட்டு
நீங்கள் உங்கள் பழக்கவழக்கத்தை
மாற்றிக்கொண்டீர்கள் என்றால்
அது உங்கள் உடலுக்கு நல்லது.
அப்படி இல்லாமல் கீழே கண்ட இது
போன்ற உரையாடலுடன் நீங்கள்
நாளைத்துவக்குகிறீர்கள் என்று
நாம் வைத்துக்கொள்வோம்.
இன்று சனிக்கிழமை ஓய்வு தினம்
அதனால் :-
டேய் !! மாப்பிளே சங்கர் !! அவர்
மதுரை T.R. பாலு சார் கிடக்காருடா
பெருசு. அவருக்கு என்ன எல்லாம்
வாழ்ந்து அனுபவிச்சுட்டு
முடிச்சுட்டாரு.இப்போ நமக்கு
பெருசா அறிவுரை சொல்ல
வந்துட்டாரு. இப்ப நீ இன்னா
செய்றன்னா கோல்ட் பிளாக் கிங்ஸ்
ஒரு பாக்கட் வாங்கிக்க.அப்படியே
சிக்னேச்சர் விஸ்கி புல் எடுத்துக்க.
அப்படியேநம்மதிண்டுக்கல்தலைப்
பாக்கட்டிக்கடைக்குப்போய் ஒரு
பிளேட் மட்டன் பிரியாணி,ஒரு
பிளேட் சிக்கன் 65 அப்படியே சுக்கா
வறுவல் இதோட குடல் கொழம்பு
வாங்கிட்டுவாடா மாப்ளேநல்லா
சாப்பிட்டு அனுபவிப்போம்
அப்டீன்னுமுடிவெடுத்தா அது உங்க
இஷ்டம் எனக்கு ஏதும் இல்லை
கஷ்டம். ஒரு ஜோதிடர் என்ற
முறையில் சொல்லுகிறேன் தலை
எழுத்தை யாராலும் மாத்தி
அமைக்கவும் முடியாது. திருத்தி
எழுதவும் முடியாது.கவிஞர்
கண்ணதாசன் சொன்னது போல :-
சொல்லுறதை சொல்லிபுட்டேன் !!
செய்யுறதை செஞ்சுக்குங்க !!
நல்லதுன்னா கேட்டுக்குங்க !!
கெட்டதுன்னா விட்டுடுங்க !!
இவ்வளவு மிக நீண்ட கட்டுரயை
படித்த நல்ல உள்ளங்களுக்கு நன்றி.
அதை படித்து திருந்திய,திருந்திட
முயற்சி எடுக்கும் உள்ளங்களுக்கும்
மிக மிக நன்றி !!.வணக்கம் !!.
வாழ்வோம் வளமுடன் !!
மாமிச உணவை உண்ண
மறுப்போம் !!
நூறாண்டுகள் வரை வாழ்ந்திட
முயற்சி எடுப்போம்.
அன்புடன் மதுரை TR.பாலு.
No comments:
Post a Comment