Monday, 16 September 2013

இந்தக் கணக்கு உங்களுக்கு தெரியுமா ?-- இதுதான் உண்மையிலேயே அதிசயக் கணக்கு !!






உடல்மண்ணுக்கு!! உயிர்தமிழுக்கு !!


இதை உரக்கச்சொல்வோம்


உலகுக்கு !!


இனம் ஒன்றாக, மொழி வென்றாக,


புது வேல் எடுப்போம் விடிவுக்கு !!


நம் வெற்றிப்பாதையில் நரிகள்


வந்தால் விருந்து வைப்போம்


விண்ணுக்கு !!




உலகெங்கிலும் வாழ்ந்துவரும்


என் உயிரினும் மேலாக மதித்து


நான் வணங்கி வரும் அன்புத்


தமிழ் உடன்பிறப்புகளே !!


அனைவருக்கும் என் இதயம்


கனிந்த நல்வாழ்த்துக்களுடன் 


இணைந்த வணக்கம்!!




இயற்கை பசுமை தனது இரு


கரங்களையும் பச்சைப்பசேல்


என்ற நிறத்தில் அந்த பூமி மாதா-


-விற்கு சேலை அணிவித்து


பார்த்து எங்கு நோக்கினாலும்


நெற்களஞ்சியங்கள். நல்ல


வளமை நிறைந்த அந்த ஊரின்


பெயர் தஞ்சை. வளமை என்றுமே


சோர்வு என்பதைக் காணாத அது


ஒரு சுந்தரபூமி. காவிரி அன்னையின்


கடைக்கண் பார்வையினால் மூன்று


போகமும் விவசாயம் செய்து


அந்த ஊர் மக்கள் வாழ்ந்துவந்த


வேளையில் அந்த ஊரினில்


திருவாளர் சிங்காரம் செட்டியார்


என்பவர்  லேவாதேவி தொழில்


செய்து வந்தார். வட்டிக்கு வட்டி


என குட்டி போட்டுக்கொண்டு


நாளொரு மேனியும் பொழுதொரு


வண்ணமுமாக அவரின் செல்வம்


நல்ல வளர்ச்சிகண்டு வந்தது.


இருந்தும் என்ன பிரயோஜனம்.


அவரது மனைவி மங்களம் ஒரு


மன நோயாளி. குழந்தை பாக்கியம்


இல்லை. கல்யாணம் செய்து 2௦


வருடங்கள் உருண்டு ஓடிவிட்டது.


போகாத புண்ணிய ஷேத்திரம் என


எதுவும் இல்லை.பார்க்காத


வைத்தியமும் எதுவும் இல்லை.


நம்ம செட்டியாருக்கோ  இரத்தக் 


கொதிப்பு,சர்க்கரை நோய்,என்று 


அவர் வீடே ஒரு நடமாடும் 


நோயாளிகள் நிறைந்த மருத்துவ 


மனையாகவே காட்சி அளித்தது.


ஒருவேளை  பாவமான தொழில்


என்ற பட்டியலில் முதல் இடம்


பிடித்துள்ள வட்டித் தொழில்தனை


செய்வதாலோ என தெரியவில்லை.


இது ஒருபுறம் இருந்தாலும் நம்


செட்டியார் வருமானம் பார்ப்பதில்


காட்டுப் புலிதான். அன்று  அவரிடம்


ஒரு செல்வந்தர்  பெயர் செந்தில்.


தனக்கு மிகவும் அவசரமாக ஒரு


சொத்து ஒன்றினை முடிக்க உள்ள-


-தாகவும் அதற்கு உடனடியாக பணம்


 5இலட்சம் ரூபாய்தேவைப்படுவதாக


சிங்காரம் செட்டியாரிடம் கேட்டார்.


நீங்க எவ்வளவு பெரிய செல்வந்தர்.


இருந்தாலும் வீடுதேடி வந்து பணம்


கேட்டுட்டீங்க. அதனாலே என்னாலே


இல்லைன்னு சொல்ல முடியலே.


உங்க வீட்டுப் பத்திரத்தை கொண்டு


வாங்க.இன்னைக்கு வெள்ளிகிழமை


நான் யாருக்கும் பணம் தரமாட்டேன்.


ஆனா யார் கொடுத்தாலும் வாங்கிக்


கிடுவேன். நீங்க நாளைக்கு வந்து


வீட்டுப் பத்திரத்தை அடமானம் வச்சு


சனிக்கிழமை வாங்கிக்குங்க என்று


சொன்னார் சிங்காரம் செட்டியார்.


ஆனா நாளைக்கு நான் உங்களுக்கு


பணம் தரும்போது ஒரு விஷயம்


சொல்லுவேன். நீங்க அந்தப்படி


இப்ப வாங்கபோற ஐந்து லக்ஷம்


ரூபாயைத்திருப்பித்தர வேண்டும்.


என்ன சரியா ? என்று கேட்டார்


செட்டியார் சிங்காரம்.உடேனே


(பணத்தேவை உள்ள செந்தில்


நிலை எப்படி இருந்தது என்றால்


இரவு நேரம்,உறவுக்கான காலம்,


மனைவி எனக்கு அது வேணும்,


இது வேணும் என்று சொல்லிடும்


போது மறுத்துப் பேசிட முடியாத


கணவனின் நிலையில் இருந்தார்)


செந்தில், அய்யா நீங்க எப்படி


வேணும்னு கேக்கிறீங்களோ


அப்படியே தரேன் என்று சொல்லி


விட்டு மறுநாள் சிங்காரம் செட்டி


வசம் வீட்டுப் பத்திரத்தை அவர்


அடமானம் வைத்து ஐந்து  லக்ஷம்


ரூபாய் பணத்தை வாங்கிக் கொண்ட


பின் இப்போது செட்டி சொன்னார்


அய்யா செந்தில் அவர்களே !!


இப்ப நீங்க வாங்கின பணம் ஐந்து 


லக்ஷத்தை ரூபாயை எப்படித்


திருப்பித் தரணும்னு சொன்னா


நாளைக்கு வரீங்க. வெறும் ஒரே


ஒரு ரூபா தாங்க.மறுநாள் இரண்டு


ரூபா அதற்கு அடுத்தநாள் நான்கு


ரூபாய் என்று அடுத்ததடுத்த நாள்


இரட்டிப்பு ஆக்கிக் கொண்டே ஒரு


முப்பது நாள் எனக்கு தந்தால் அது


போதுமானது எனக்கு என்றார்.


உடனே செல்வந்தர் மனத்தில் மிக


சந்தோஷ அடைந்து  சரியான


கிறுக்குப் பயலா இருக்கானே என


 நினைத்துக்கொண்டுசரி என்று 


சொல்லி கையெழுத்து


போட்டு பணம் பெற்றுக்கொண்டு


கிளம்பி விட்டார்.




இப்போது நேயர்களே நீங்கள்


சொல்லுங்கள், யார் மிகவும்


புத்திசாலி  ? செட்டியாரா இல்லை


செந்திலா?




உண்மையில் புத்திசாலி என்பது


செட்டியார்தான். எப்படி என்றால்


செந்தில் வாங்கிய கடன் தொகை


வெறும் ஐந்து  லக்ஷம்தான். ஆனால்


அவர் திருப்பித்தரும் தொகை இந்த


தினசரி இரட்டிப்புமுறைப்படி


எவ்வளவு ரூபாய் வரும் என்பது


உங்களுக்கு தெரியுமா நேயர்களே ?


அதுதான் கட்டுரையில் சொன்னபடி


இந்தக் கணக்கு உங்களுக்குத்


தெரியுமா ? என்பது.



முப்பது நாளில்செந்தில், சிங்காரம் 


செட்டியாரிடம்வாங்கின கடன் ஐந்து 


லக்ஷத்திற்குசெந்தில் திருப்பி தரும் 


தொகை ரூபாய்எவ்வளவு என்றால், 


தயவுசெய்து யாரும் மயக்கம் 


போட்டு விடாதீர்கள் அன்பர்களே.


ரூபாய். 1௦7 கோடியே 37 லட்சத்து 


41 ஆயிரத்து 823 ஆகும். இது எப்படி 


இருக்கு !!


அன்பர்களே !! நான் மேலே சொன்ன 


கணக்கு தமிழ் இனத்தலைவர் 


முத்தமிழ் 


அறிஞர் திரு.மு.கருணாநிதி 


அவர்கள் திரைக்கதை,வசனம் 


எழுதி, நடிகர் திலகம் சிவாஜி,


கன்னடத்துப் பைங்கிளி திருமதி 


சரோஜாதேவி, ரங்கராவ்,MR. ராதா, 


T.P.முத்துலட்சுமி. (சிரிப்பு நடிகர்கள் 


அய்யா தெரியாதையா ராமாராவ், 


A.கருணாநிதி ஆகியோர் நடித்து 


வெளிவந்த, பிரசாத் பிலிம்ஸ் 


தயாரித்த " இருவர் உள்ளம் " என்ற 


கருப்புவெள்ளை திரைப்படத்தில் 


வந்த கதை. எப்படி எல்லாம் 


தலைவர் கலைஞர் சிந்தித்து 


இருக்கிறார்.


அவர் வாழும் காலத்தில் நானும் 


வாழ்வது என் பிறவி பெற்ற பயனாக 


நான் கருதுகிறேன்.


மீண்டும் எனது அடுத்த கட்டுரையில் 


உங்கள் அனைவரையும் நான் 


சந்திக்கிறேன்.


அதுவரை உங்கள் எல்லோருக்கும் 


என் இதயம் கனிந்த நன்றியும் 


வணக்கமும்.


வாழ்வோம் நாம் அனைவரும் 


வளமுடன்.


அன்புடன் மதுரை T.R. பாலு. 


No comments:

Post a Comment