Sunday, 8 September 2013

மதியூகம் நிறைந்த புலவரின் கவிதை நூல் அரங்கேற்றம் நடந்தது எப்படி ? அது இப்படி !!





உடல்மண்ணுக்கு!! உயிர் தமிழுக்கு!!


இதை உரக்கச் சொல்வோம்


உலகுக்கு !!


இனம் ஒன்றாக, மொழி வென்றாக,


புது வேல் எடுப்போம் விடிவுக்கு !!


நம் வெற்றிப் பாதையில் நரிகள் 


வந்தால் விருந்து வைப்போம் 


விண்ணுக்கு !!



தனித்தமிழில்மட்டுமேபேசிடுங்கள்!!


ஆங்கிலமொழிகலப்புஏதும்இன்றி!!


தமிழ்பேசும் சகோதர,சகோதரிகள் 


நடுவில் உரையாடிடும் போது!!




இந்தக் கதை நடைபெற்றதாகச் 


சொல்லப்படும் காலம் மதுரையை 


பாண்டியர்கள் அரசாண்ட காலம்.


அந்தக் காலத்தில் அந்த மதுரை 


நகரில் ஏறத்தாழ 3௦௦ புலவர்கள் 


வாழ்ந்துகொண்டு இருந்தனர்.


அவர்களுள் எந்தப் புலவராவது 


புதியதாக பாடல் ஒன்றினை 


அவர்களுள் யாரவது இயற்றி 


இருந்தால் அதனை அரசவைக் 


கவிமண்டபத்தில் மட்டுமே 


வைத்து ஊரில் உள்ள அத்தனை


299 புலவர்களின் ( இயற்றியவர் 


நீங்கலாக) முன்னிலையில் வைத்து 


அரங்கேற்றம் செய்திட வேண்டும்.


அப்போதுதான் அந்தப் பாடல் அரசு 


அங்கீகாரம் பெறும். இது அந்த 


புலவர்கள்சங்கம் அவர்களுக்கு 


உள்ளாக ஏற்படுத்திக்கொண்ட 


கட்டுப்பாடு.


ஆனால் அங்கே ஒரு சிறு சிக்கல் 


இருக்கிறது. அது என்னவென்றால் 


எல்லாப் புலவர்களுக்கும் எல்லா 


புலவர்களையும் பிடிக்காது.நேற்று 


கவிஎழுதவந்தவன், இவன் எல்லாம் 


கவிதை அரங்கேற்றுவதா? அதற்கு 


நாமும் செல்வதாவெட்கம்.வெட்கம்.


என புறக்கணிப்பது வாடிக்கை. 


இப்படிப்பட்டஇக்கட்டான சூழலில் 


புலவர்களுள் ஒருவரான திருவாளர் 


சூட்சுமக் கவிராயர் என்பவர் தமது 


கவிதை நூல் ஒன்றினை அரசவைக் 


கவிமண்டபத்தில் அரங்கேற்றம் 


செய்திடக்காத்திருந்தார்,காத்திருந்


தார்,காலமெல்லாம் காத்திருந்தார். 


கதை ஒன்றும் நடந்த பாடில்லை. 


எப்போது அரங்கேற்றம் என தேதி 


குறிப்பிட்டு அழைப்பு அனுப்பி 


இருந்தாலும் அங்கே ஒரு பத்து 


அல்லது இருபது புலவர்கள் வருவது 


என்பது கிடையவே கிடையாது.


அந்த நேரம் பார்த்து அந்த ஊரில்  


மிகப் பெரிய செல்வந்தர் ஒருவர் 


மரணம் அடைகிறார்.அந்த இறுதிச் 


சடங்கு நடைபெறும் இடத்திற்கு 


அத்தனை 299புலவர்களும் வருகை 


தந்தனர். அந்த நேரம் பார்த்து நமது 


புலவர் திருவாளர் சூட்சுமக் 


கவிராயர் எழுந்தார். மறைந்து 


போன நம்மை எல்லாம் இப்படி 


திடீரென விட்டு விட்டுச் சென்று 


விட்ட செல்வந்தர் செண்பகராம 


சிவபெருமான் பிள்ளை ஆத்மா 


சாந்தி அடைய நாம் அனைவரும் 


எழுந்து நின்று மௌன அஞ்சலி 


செலுத்திட வேண்டுகிறேன், என்று 


சொன்னார்.புலவர்கள் 299 பேரும் 


அவரது சொல்லுக்கு ஏற்ப எழுந்து 


நின்றுமௌனஅஞ்சலி செலுத்தினர். 


ஏன் என்றால் இந்தப் புலவர்கள் 


அத்தனைபேரும் மறைந்த 


செண்பகராமசிவபெருமான்பிள்ளை 


வீட்டிற்கே சென்று அவரைப்பாடி 


புகழ்ந்து பல பரிசுகளும் 


பொற்கிழிகளும் பெற்றுச் 


சென்றிருந்த காரணத்தினால் 



நமது சூட்சுமக் கவிராயர் விடுத்த 


அந்த வேண்டுகோளைப் 


புறக்கணிக்க அத்தனை


புலவர்களாலும் இயலவில்லை. 


மௌன அஞ்சலி முடிந்தது. 


இப்போது கவிராயர் தொடர்ந்தார் 


தமது பேச்சை. நான் இப்போது 


கவிதை நூல் ஒன்று எழுதி இயற்றி 


இருந்தேன்.அதை   அனைவரின் 


முன்பாக அரங்கேற்றம் செய்கிறேன் 


என்றாரே பார்க்கலாம். அனைத்து 


புலவர்களும் திடுக்கிட்டனர். யோவ். 


உமக்கு அறிவு என்பதே கிடையாதா? 


உமது கவிதை நூலினை 


அரங்கேற்றம் செய்திட இழவு 


வீடுதானா கிடைத்தது. அதை 


நாங்கள் ஒத்துக்கொள்ள முடியாது 


என்று சொல்லி எவ்வளவோ 


மறுத்துப் பார்த்தார்கள்.அந்த 


துக்க வீட்டிற்கு அந்நாட்டு அரசரும் 


வந்து இருந்தார். அங்கே என்ன 


சப்தம் என மன்னர் வினவினர். 


சூட்சுமக் கவிராயர் உடனே 


மன்னர் அருகே வந்து விஷயத்தைச் 


சுருக்கமாக சொல்லிட, மன்னரும் ஓ!


அப்படியாவிஷயம்எனகவிராயரிடம் 


பதில் உரைத்துவிட்டு,புலவர்களின் 


கூட்டத்தைப்பார்த்துசொன்னதாவது:-


அருமைப்புலவர்களேஉங்களுக்குள் 


கருத்துவேறுபாடுகள்,கொள்கை 


மாறுபாடுகள்,இவை எல்லாம் 


வருவது  என்பது தவிர்க்க 


இயலாததுதான்.அதனை நானும் 


ஒரு நாட்டு அரசன் என்ற முறையில் 


ஒத்துக் கொள்கிறேன். ஆனால் 


அதேசமயம் அதற்காக கவிதைநூல் 


அரங்கேற்றம் செய்திடும்போது 


வரமறுப்பது என்பது தமிழுக்கு நீவிர்  


இழைக்கின்ற மாபெரும் தவறாக,


மன்னிக்கமுடியாத தவறாகவேநான் 


கருதுவதற்குநீங்களேஇடம் அளித்து 


விட்டீர்கள். எனவே நீங்கள் செய்த 


தவறுக்கு பிராயச்சித்தமாக இந்த 


இழவு வீட்டினிலேயே நமதுசூட்சுமக் 


கவிராயரின் நூல் அரங்கேற்றம் 


செய்திடவேண்டும் அது இங்கேயே, 


இந்த இடத்தினிலே நடந்தாக 


வேண்டும் என்று மன்னர் என்ற 


முறையில் நான்ஆணையிடுகிறேன் 


என்று சொல்லிவிட்டு அரசர் சென்று 


விட்டார்.சூட்சுமகவிராயர்முகத்தில் 


எத்தனை மகிழ்ச்சி. அவரைத் தவிர 


ஏனைய299புலவர்களின்முகத்திலும் 


அசடு வழிந்திட வேறு வழியின்றி 


ஒப்புக்கொள்ள கவிதை நூல் 


அரங்கேற்றம் ஆனது.


(இந்தக் கதையின் உள்கருத்து:- 


எத்தனை இன்னல்கள் இடையில் 


வந்தாலும்எத்தனைஇடையூருகள்


குறுக்கிட்டாலும் எவன் ஒருவன் 


தனது மதி யூகத்தைப் பயன்படுத்தி 


சூட்சும அறிவினால், தான்நினைத்த 


காரியத்தை முடித்திட வேண்டும். 


அவனே "புத்திமான்"என்று 


எல்லோராலும்அழைக்கப்படுவான்.)



நன்றி !!  வணக்கம் !!


அன்புடன்,


மதுரை T.R. பாலு.



பின் குறிப்பு :- 


இந்தக் கதை நான் பத்து வயது


பாலகனாக இருந்தபோது எனது 


அன்பிற்குரிய தந்தை ,அவர்களது 


நண்பர்களிடம் சொல்லிய கதை, 


அதனைநான்இப்போது5௦ஆண்டு- 

-கள் பிறகு ,உங்கள் அனைவரிடமும் 


பகிர்ந்து கொள்கிறேன். இந்தப் புகழ் 


அனைத்தும் காலம் சென்ற என் 


அன்புத் தந்தையையே சாரும்.


நன்றி !!  வணக்கம் !!.


அன்புடன் மதுரை T.R. பாலு.


No comments:

Post a Comment