Wednesday, 4 September 2013
மோதிரம் அணிவது எந்தெந்த விரல்களில் ? பாம்பு விரலில் (நீண்ட நடு விரல்)அணியலாமா கூடாதா?
உடல்மண்ணுக்கு!! உயிர்தமிழுக்கு !!
இதை உரக்கச்சொல்வோம்
உலகுக்கு !!
இனம் ஒன்றாக,மொழி வென்றாக,
புது வேல் எடுப்போம் விடிவுக்கு!!
நம் வெற்றிப் பாதையில் நரிகள்
வந்தால் விருந்து வைப்போம்
விண்ணுக்கு !!
தனித்தமிழில்மட்டுமேபேசிடுங்கள்!!
ஆங்கிலமொழிகலப்புஏதும்இன்றி!!
தமிழ் பேசிடும்சகோதர,சகோதரிகள்
நடுவில் உரையாடிடும் போது!!
உலகத் தமிழர்கள் அனைவருக்கும்
என் இதயம் கனிந்த வணக்கம்.
பொதுவாக மோதிரம் அணிவது
என்பது மனிதகுலம் இந்த பூமியில்
கருதப்பட்டு வந்துள்ளது.
அந்த வகையில் மனித விரல்கள்
ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு
காரணப் பெயர்கள் உண்டு. அவை
பின் வருமாறு:-
1) " கட்டை விரல்". இந்தவிரல்
முக்கியத்துவம் நிறைந்தது.இந்த
விரலின் துணை இல்லாமல் மீதி
எந்தக் காரியத்தையும் செய்திட
இயலாது.
2) "ஆள்காட்டி விரல்" என இந்த
விரலுக்கு இந்தப் பெயர் வந்தது
என்பது இந்த விரலின் பெயரிலேயே
உள்ளது.
3) " நடு விரல் " இந்த விரலுக்கு
பாம்பு விரல் என்று மற்றும் ஒரு
பெயரும் உண்டு.
4) " மோதிர விரல் " இதனை RING
FINGER என்று ஆங்கிலத்தில்
சொல்வது உண்டு.இந்த விரல்
மட்டும்தான் மோதிரம் போட்டுக்
கொள்ள அங்கீகாரம் பெற்ற விரல்.
5) "சுண்டு விரல் " ஏன் இந்த பெயர்
இந்த விரலுக்கு வந்தது என்றால்
பெருவிரலையும் இந்த விரலையும்
ஒன்றோடு ஒன்று சேர்த்து விசை
கொண்டு சுண்டுவதால் இப்பெயர்
வந்தது.
ஆக மேலே சொல்லப்பட்டுள்ள
விபரங்களின் அடிப்படையில் நாம்
பார்த்தோமேயானால் மோதிரம்
அணிவது என்பது மோதிரவிரல்
ஒன்றிற்கு மட்டுமே உரிமை உள்ள
விரல் என்பது தெள்ளத்தெளிவாகப்
புரியும் என எண்ணுகிறேன். அது
மட்டும் அல்ல அன்புத் தமிழ்
நெஞ்சங்களே!! நடு விரல் என்று
சொல்லப்படும் பாம்பு விரலில்
மோதிரம் அணிந்து நீங்கள்
செல்வீர்களேயானால் உங்களுக்கு
நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சி-
-களுக்கும் நீங்களாகவேதடைகளை
ஏற்படுத்திக் கொள்கிறீர்கள் என்று
பொருள். ஒரு ஜோதிட சாஸ்திரம்
படித்தவன், பல ஜோதிடர்கள்
சொல்லிடக் கேட்டவன் என்ற
முறையில் நான் கூறுவது என்ன
என்றால் நடுவிரல் என்ற அந்தப்
பாம்பு விரலில் மட்டும் மோதிரம்
அணிந்திடாதீர்கள். அந்த விரல்
அதற்கு உரியது அல்ல. இதுவரை
நீங்கள் யாரேனும் அப்படி அணிந்து
அந்த விரல் மோதிரத்தை
யோசிக்க இடம் கொடுக்காதீர்கள்.
"சுபஸ்தே சீக்ரமே " என்றுசமஸ்கிரு-
-தத்தில் ஒரு பழமொழி ஒன்று
உண்டு. புத்திமதி சொல்கிறேன்
ஒரு ஜோதிடர் என்ற முறையில்
ஏற்றுக் கொள்வதும் அதனை
நிராகரிப்பதும் உங்கள் கையில்.
இந்த இடத்தில் கவியரசர்
கண்ணதாசனின் கவிதை/பாடல்
சொல்லுறதை சொல்லிப்புட்டேன் !!
செய்யிறதை செஞ்சுக்குங்க !!
நல்லதுன்னா கேட்டுக்குங்க !!
கெட்டதுன்னா விட்டுடுங்க !!
மீண்டும் அடுத்த கட்டுரையில் நாம்
சந்திப்போம். !!
சொல்லப்பட்டுள்ள
கருத்துக்களை சிந்திப்போம் !!
நன்றி !! வணக்கம் !!
அன்புடன் மதுரை T.R.பாலு.
Labels:
உண்மை நிலை,
எண்ணம்,
கட்டுரை,
கருத்து
Subscribe to:
Post Comments (Atom)
Dear Respected Sir
ReplyDeleteசுண்டு விரலில் மோதிரம் அணியலாமா?
நன்றி.
ReplyDelete