Sunday, 1 September 2013

பிழைமொழியாகிப்போன பழமொழிகள் !!--சிறு விளக்கம் (புதுப்பிக்கப்பட்ட்ட மறுபதிவு)


உடல்மண்ணுக்கு!! உயிர்தமிழுக்கு!! 


இதை உரக்கச் சொல்வோம் 


உலகுக்கு !!                         


இனம் ஒன்றாக,மொழி வென்றாக, 


புது வேல் எடுப்போம் விடிவுக்கு!! 


நம் வெற்றிப்பாதையில் நரிகள் 


வந்தால் விருந்து வைப்போம் 


விண்ணுக்கு !!


பழமொழிகளா ?


அல்லது 


பிழைமொழிகளா?


உலகெங்கிலும் வாழ்ந்துவரும் 


எனது உயிரினும் மேலான அன்புத் 


தமிழ் உடன்பிறப்புகளே !!


இன்றைய தினம் உங்கள் 


கவனத்திற்கு நான் தரும் பிழை 


மொழி:-  

  " குட்டு வாங்கினாலும் மோதிர     


   கையால் குட்டு வாங்கணும் " !!


அதாவது இந்த பழ மொழிக்கு 


இதுவரை நாம்கொண்ட பொருள்   


என்னஎன்றால்குட்டு வாங்கினால்  


மோதிரம் அணிந்து கொண்ட 


கையால் மட்டுமே  குட்டு வாங்க 


வேண்டும் என்று. 


ஆனால் உண்மை பொருள் 


அதுவன்று. அதாவது உனக்கு 


சரிநிகர் சமமாக உன்னுடைய 


பலத்திற்கு சமமாக 


" மோதுகின்ற கையால் மட்டுமே 


குட்டு   வாங்க "  வேண்டும் 


என்பதுமட்டுமேஉண்மைப்பொருள். 


மோதுகிற கையால் குட்டு  வாங்க 


வேண்டும் இந்த சொல்பதமே 


நாளடைவில் உருமாறி குட்டு 


வாங்கினாலும் மோதிரக்கையால் 


குட்டு வாங்க வேண்டும் என 


மருவி சொல்லப்பட்டு வருகிறது. 


இதனை நேயர்கள் புரிந்துகொள்ள 


வேண்டும்.


மீண்டும்சந்திப்போம்.


நன்றி !!.வணக்கம் !!. 


அன்புடன், 


மதுரை T.R.பாலு..    

No comments:

Post a Comment