Wednesday, 25 September 2013

மனிதன் ஏன் குறுக்கு வழியில் செல்கிறான்?எல்லாம் விநாயகர் காட்டிய வழிதான்!!--ஒரு சிந்தனை செறிந்த அறிவு பூர்வமான கட்டுரை--உங்கள் கவனத்திற்கு !!






உடல்மண்ணுக்கு!! உயிர்தமிழுக்கு!!


இதை உரக்கச்சொல்வோம்


உலகுக்கு!!


இனம் ஒன்றாக, மொழி வென்றாக,


புது வேல் எடுப்போம் விடிவுக்கு!!


நம் வெற்றிப்பாதையில் நரிகள்


வந்தால் விருந்து வைப்போம்


விண்ணுக்கு!!




தமிழ் இனம் காத்திட வாழ்ந்திடுக !!


தனித்தமிழில்மட்டுமேபேசிடுங்கள் !!


ஆங்கிலமொழி கலப்புஏதும்இன்றி!!


தமிழ் பேசும் சகோதர,சகோதரிகள்


நடுவில் உரையாடிடும் பொழுது!!




வீரர்கள் வாழும் திராவிட நாட்டை


வென்றவர் கிடையாது !!


வேலும், வாளும், தாங்கிய மறவர்


வீழ்ந்ததும் கிடையாது !!




குள்ளநரிக்கூட்டம்வந்துகுறுக்கிடும்!


நல்லவர்க்குத்தொல்லைதந்து


மடக்கிடும்!! நீ


எள்ளளவும் பயம்கொண்டு


மயங்காதிரு!! அவற்றை


எமனுலகுக்கு அனுப்பி வைக்கத்


தயங்காதிரு !!




உலகம் முழுவதும் வாழ்ந்து வரும்


என் அன்புத்தமிழ்உடன்பிறப்புகளே !!


அனைவருக்கும் வணக்கம்.




இன்றையதினம் நான் இந்தக்


கட்டுரைக்கு தேர்ந்து எடுத்துள்ள


தலைப்பினைப் பார்த்தவுடன்


என்னடா இது!! நம்ம மதுரை


T.R.பாலு கடவுள் இல்லை,கடவுள்


இல்லவே இல்லை என்ற கடவுள்


மறுப்புக்கொள்கைதனைக் கொண்ட 


பகுத்தறிவுக்கூட்டத்துடன் தன்னை 


இணைத்துக்கொண்டாரோ ? என்ற 


ஐயப்பாடுஉங்களில் எவருக்காவது 


வரவாய்ப்புகள்நிறையஉள்ளது.நான்


அதை மறுப்பதற்கு இல்லை. ஆனால்


நான் அப்படிப்பட்டவன் அல்ல. நான்


கடவுளை  மதிக்கும் கொள்கையைக்


கொண்டவன்தான். மேலும் இறை


அருள் இல்லாமல் எதுவும் இங்கே


நடப்பதுஇல்லைஎன்றஇறைஉணர்வு


கொள்கையில் நான் எப்போதும் 


கடுகுஅளவு கூட பின்வாங்கியதும் 


இல்லைஅந்த இறைஉணர்வுக் 


கொள்கையைக்கைவிடுபவனும் 


இல்லை என்பதனைதயவு செய்து 


என்மேல் சந்தேகம் கொண்ட


அன்பர்கள் முதலில் புரிந்துகொள்ள


வேண்டுகிறேன்.



சரி. நாம் இப்போது கட்டுரையின் 


உள்ளேசெல்வோம் என் அன்புத் 


தமிழ் நெஞ்சங்களே.



திருவிளையாடல் புராணத்தில் 


என்னசொல்லப்பட்டுள்ளதுஎன்றால் 


நாரதருக்கு  எவருக்குமே 


கிடைத்திடாத ஞானப்பழம்


ஒன்று கிட்டிடும் போது அதை சிவ


பெருமானுக்கு தரநினைத்துமுதலில்



அந்த பழத்தை சிவனிடம் கொடுக்க


முயலும் போது சிவன் அதை ஏற்க


மறுத்து பார்வதி தேவியிடம் தர 


அதைஏற்றுக்கொள்ள அன்னையும் 


மறுத்துஅவர்களது இரண்டு 


குழந்தைகளானவிநாயகருக்கும் 


முருகருக்கும் சமபங்காக 


பிரித்துக்கொடுத்திடலாம்


என்று எண்ணிடும்போது குறுக்கிட்ட


நாரதரோ பழத்தை பிரித்தால் பலன்


கிடைக்காது யாரேனும் ஒருவர் 


மட்டுமேஅந்த பழத்தை உண்ண 


வேண்டும் எனசொல்ல உடனே 


சிவனும் பார்வதிதேவிஇருவரும் 


சேர்ந்து தமது மைந்தர்களான 


பிள்ளையாரிடமும் அவன் 


தம்பியான முருகப் பெருமானிடமும் 


ஒரு போட்டி ஒன்றினை அறிவித்து 


அதில்யார்வெற்றி பெறுகிறார்களோ 


அவர்களுக்குத்தான்  இந்த அரிய


ஞானப்பழம்என்றுஅறிவிக்கின்றனர்.


(இந்தக் கதைதான் மறைந்த 


வரலாற்றுச் சிறப்புமிக்க தமிழ்த் 


திரைப்படங்களின் இயக்குனர்களுள் 


தனக்கு என்றுதனிஒரு இடத்தினைப் 


பெற்றுக்கொண்டு வாழ்ந்த 


தன்னிகரில்லாத இயக்குனர் 


A.P.நாகராஜன் அவர் உரைஎழுதி 


இயக்கிய " திருவிளையாடல் "என்ற 


அந்த வண்ணக் காவியத்தின் முதல் 


லீலைபற்றிவரலாறுஅன்பர்களே !!)




சிவபெருமான் கூறுகிறார்.விநாயகா,


வேல் முருகா. உங்களுள் யார் இந்த 


உலகத்தை முதலில் விரைவாக 

வலம்வந்து என்னையும் 


அன்னையையும் 


சந்திக்கின்றீர்களோ 


வெற்றிபெறுகிரீர்களோ 

அவர்களுக்குத்தான் இந்த 


ஞானப்பழம் 


என்று சொல்ல உடனே முருகன் 


இந்த உலகைத்தானே!! இதோ ஒரு 


நொடியில் சுற்றி வருகிறேன் என்று 


சொல்கிறார்.நேர்வழி ஒன்றுதான் 


தனது  ஒரே இலட்சியப்பாதை என்று 


இந்த உலகுக்கு எடுத்துக்காட்டுச் 


சின்னமாக விளங்கிய ஸ்ரீ முருகப் 


பெருமான் தனது வாகனமான 


மயில்மீது அமர்ந்து கொண்டு இந்த 


உலகத்தினை வலம் வந்து அதில் 


முதலிலும்வந்து ஞானப் பழத்தினை 


பெற வேண்டும் என்ற நேர்மை, 


உண்மை,நீதி,நியாயம்,சத்தியம்,நேர்


வழி என்ற அந்த நல்ல கொள்கை 


கோட்பாடுகளோடு வாழ்ந்து இந்த 


உலகத்து மக்கள் தன்னைதேடிவந்து 


அருள் வேண்டி நிற்கும் அருமை 


பக்த கோடிகளுக்கும் வாழ்க்கை 


நெறிமுறைகளாக போதித்து வரும் 


அந்த ஆறுமுகப் பெருமகன் மயில் 


ஏறிக் கிளம்பிவிட்ட சூழ்நிலையில் 


நம்ம பிள்ளையார் இருக்கிறாரே 


அவர் என்ன செய்தார் என்றால், 


உலகத்தைசுற்றி வருவதற்கு 


யாதொரு முயற்சியும் எடுக்க 


முனையாமல் நேரே நாரதரிடம் 


வந்து நாரதரே !! அம்மை அப்பர் 


என்றால் என்ன?உலகம் என்றால் 


என்ன ? என்று வினவ நாரதரோ 


அம்மையப்பர்தான் உலகம் !!


உலகம்தான் அம்மையப்பர் என்று 


பதில்உரைக்க,பிள்ளையார்,அப்படி 


நீங்கள் கூறுவது உண்மையானால் 


எனதுஅம்மைஅப்பனைச்சுற்றி


வந்தால்,இந்த உலகத்தைச் 


சுற்றி வந்ததாகத்தானே அர்த்தம் 


என்று கேள்வியை முன்வைக்க, 


நாரதரோ,


அதில் என்ன சந்தேகம்,இந்த உலகம் 


முழுவதையும் காத்து இரட்சிக்கும் 


புவனேஸ்வரரான உங்கள் அப்பா 


சிவன்,புவனேஸ்வரி உங்கள் 


அன்னை,(நான் இங்கே ஏன் அம்மா 


என்ற வார்த்தையை 


பயன்படுத்தவில்லைஎன்ன பொருள் 


உங்களுக்கே விளங்கி இருக்கும் 


என்றே நான் கருதுகிறேன்) 


பார்வதிதேவி ஆகிய 


இருவரையும் வலம் வந்தால் சர்வ 


ஈரேழு லோகத்தையும் சுற்றிவந்த 


தாகத்தான் அர்த்தம் என்று 


பொருள்உரைக்க, உடனே 


பிள்ளையார் தனது அப்பா,அன்னை, 


ஆகிய இருவரையும் சுற்றிவந்து 


பழத்தை தனதுகைக்கொள்கிறார். 


அப்போது நேர்வழியில் சென்று 


உலகத்தைச் சுற்றிவந்த முருகன் 


இந்த காட்சியைக் கண்டு வெகுண்டு 


எழுந்து அன்னையே என்ன நியாயம் 


என்றுகேட்டுஅதற்கு அவர்கள்தந்த  


வியாக்கியானத்தினை ஏற்க மறுத்து 


சிவலோகத்தைவிட்டு வெளியேறி 


தனி ஆறுபடைவீடுகளைப் படைத்து 


நின்றதாக நமக்கு புராண,இதிகாச 


நூல்கள் இங்கே பொருள் 


உரைக்கின்றன அன்பர்களே !!



மேற்சொன்னதிருவிளையாடல் 


கதையில்நடந்ததாகசொல்லப்பட்டு


உள்ள சம்பவங்களை வைத்து நாம் 


பார்கின்றபோது  நமக்கு  ஒரு 


உண்மை மிகத் தெளிவாக, 


உள்ளங்கையில் உள்ள 


நெல்லிக்கனி போல,கையிலே 


உள்ள கண்ணாடியாக 


தெரியவருகின்ற உண்மை 


என்னவென்றால் அது இதுதான்:-



1)  ஸ்ரீ முருகன் :- நேர்வழி,நீதி 


நேர்மை.



2)பிள்ளையார்:- 


குறுக்குவழி,அநீதி,கயமை.



ஆக எனது ஆராய்ச்சியின் முடிவின் 


வாயிலாக உங்கள் அனைவருக்கும் 


தெரிவிக்கும் முடிவு இதுதான் 


எனதன்பு தமிழ் உடன் பிறப்புகளே !!



மனிதன் குறுக்கு வழியில் சென்று 


தனது காரியங்களை ஆற்றிடும் 


குணங்களை அங்கே விதை 


விதைத்த பெருமை அந்த 


தொந்திக் கணபதிக்கே உரித்தானது.


அவரிடம் இருந்தேமனிதர்களுக்கும் 


அந்த கெட்டஎண்ணம் அவரவர்கள் 


மனத்தில் உதயம் ஆகி உள்ளது 


என்ற ஒரு கருத்துச் செறிவான 


முடிவுதான்.


எனது இந்த ஆராய்ச்சியின் 


முடிவினை உங்களில் எத்தனை 


பேர்கள் அதனை எற்றுக்கொள்ளப் 


போகிரீர்களோ அது நான் 


அறியேன்.இருப்பினும் ஏற்றுக்-


கொள்கின்ற நல்ல உள்ளங்கள் 


எல்லோருக்கும் என் நன்றி !!


ஏற்கமறுத்துவிட்டஉள்ளங்களுக்கும் 


என் தலைதாழ்ந்த வணக்கம்.



மீண்டும் எமது அடுத்த 


வலைப்பதிவில் உங்கள் 


அனைவரையும் சந்திக்கிறேன்.



வாழ்வோம் வளமுடன்.



நன்றி !! வணக்கம் !!



அன்புடன்.



மதுரை T.R.பாலு.








No comments:

Post a Comment