உடல்மண்ணுக்கு!!உயிர்தமிழுக்கு!!
இதை உரக்கச்சொல்வோம்
உலகுக்கு!!
இனம் ஒன்றாக, மொழி வென்றாக,
புது வேல் எடுப்போம் விடிவுக்கு!!
நம் வெற்றிப் பாதையில் நரிகள்
வந்தால் விருந்து வைப்போம்
விண்ணுக்கு !!
உலகம் முழுவதும் வாழ்ந்து வரும்
என் உயிரினும் மேலான அன்புத்
தமிழ் உடன் பிறப்புகளே !!
அனைவருக்கும் வணக்கம்.
கவிஞர் கண்ணதாசன் தமிழ்த்திரை
உலகில் முடிசூடா மன்னனாக
கவிஞர் திலகமாக,நடிகராக,வசன
கர்த்தாவாக, மாபெரும் சாதனைகள்
பல புரிந்திட்ட சக்கரவர்த்தியாக
வாழ்ந்தவர் என்பது உலகம் அறிந்த
உண்மை. ஆனால் இந்தத் தமிழ்த்
திரை உலகிற்கு அவர் வருவதற்கு
முன்பாக, இதில் கால் பதித்திடும்
கால கட்டத்திற்கு முன் அவர் என்ன
தொழில் செய்து கொண்டு இருந்தார்
என்பதுயாரும்அறிந்திடாதரகசியம்.
ஆம்அன்பர்களே!!நான் தெரிந்திடாத
அந்த விஷயம் எனது இணையதள
இரசிகர் மதிப்புக்குரிய மேடைப்
பேச்சாளர் நண்பர் பேராசிரியர் திரு
நெல்லை P. சுப்பையா அவர்கள்
5 தினங்களுக்கு முன்பாக என்னிடம்
பகிர்ந்துகொண்ட அந்த விஷயத்தை
நான் இப்போது அவர் அனுமதியுடன்
உங்கள் அனைவரிடமும் பகிர்ந்து
கொள்கிறேன் என் அன்புத் தமிழ்
நெஞ்சங்களே !!
கேட்டால் மிகவும் ஆச்சரியப்படும்
விஷயம் அது. நம்புவதற்கே கூட
சற்று கடினமாகத்தான் இருக்கும்.
என்ன பீடிகை பலமாக உள்ளதே !!
என யாரும் எண்ணிவிட வேண்டாம்.
விஷயம் அவ்வளவு சுவாரசியம்
நிறைந்தது அன்பர்களே !!
கவியரசர் பிறந்தஊர் சிறுகூடல்பட்டி
என்ற ஒரு சிறு கிராமம். அவரது
இயற்பெயர் முத்தையா என்பது.
அண்ணன் பெயர் ஸ்ரீனிவாசன்.
கண்ணதாசன்அவர்உறவினர்களுள்
ஒருவீட்டிற்கு தத்துப்பிள்ளையாக
சென்றவர். செட்டியார்கள் குலத்தில்
அவதரித்து ஞானச் செம்மல் அவர்.
அவர்வாழ்ந்து,கவி ஆயிரமாயிரம்
புனைந்து சாதனைஏராளம் செய்து
தத்துவப் பாடல் ஏராளமாக இயற்றி
மனிதகுலம் இந்த பூமியில் மறையும்
வரையில் தனது பெயரை யாரும்
மறந்திடாத வண்ணம் வாழ்ந்தவர்.
இன்றும் நம்மிடையே அவர் வாழ்ந்து
கொண்டுதானே இருக்கிறார். இந்தக்
கருத்தை மையமாக வைத்து அவரே
இயற்றி,நடித்த பாடல் காட்சி
ஒன்று "இரத்தத் திலகம்" என்ற
திரைப்படம் ஒன்றினில் அவர் கோட்
சூட் போட்டுகொண்டு பெரிய
தனவந்தராக காட்சி அளிப்பார் அப்
பாடல்காட்சியில்.முதலில் பாடலை
பாருங்கள் என் அன்புத்தமிழ்
நெஞ்சங்களே !!
ஒரு கோப்பையிலே என் குடிஇருப்பு!!
ஒரு கோலமயில் என் துணை இருப்பு!!
இசைப் பாடலிலே என் உயிர்துடிப்பு!!
நான் பார்ப்பதெல்லாம் அழகின் சிறப்பு!!
(ஒரு கோப்பையிலே)
காவியத்தாயின் இளைய மகன் !!
காதல்பெண்களின்பெருந்தலைவன்!
நான் பாமர ஜாதியில் தனிமனிதன்!!
நான் படைப்பதினால்என்பேர் இறைவன்!!
(ஒரு கோப்பையிலே)
மானிடஉலகை ஆட்டிவைப்பேன்!!
அவர்மாண்டுவிட்டால் அதைப்பாடி வைப்பேன்!!
நான் நிரந்தரமானவன்!! அழிவதில்லை!!
எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை!!
(ஒரு கோப்பையிலே)
எப்படிபார்த்தீர்களாஅன்பர்களே ஒரு
தீர்க்கதரிசனம் நிறைந்த கவியின்
பாடல் வாசகங்கள்!! அப்பப்பா. என்ன
தமிழ் !! என்ன தமிழ் !! என்ன
தத்துவம் !!
எல்லாப் புகழும் இறைவனுக்கே !!
இப்போதுநாம்கட்டுரையின் தலைப்பு
சம்பந்தப்பட்ட விஷயத்தினை
பேசுவோம்.
ஊரில் இருந்துபிழைப்புதேடி கவிஞர்
சென்னை வந்த அவர் ஒரு தமிழ்
பத்திரிக்கைஒன்றில் ஜோதிடப் பகுதி
தனில் வார இராசிபலன்கள் குறித்து
எழுதும் வேலையில்தான் சேர்ந்தார்.
பலமாதங்கள் பணிமுடித்தபின்பு
திரைஉலகில்நடிகராகஅறிமுகம்
ஆகி (1952ம் ஆண்டு வெளிவந்த
கலைஞர்திரு மு.கருணாநிதி
அவர்களது அனல்தெறிக்கும்
வசனங்கள் நிறைந்த,நடிகர்
திலகமாக பின்னொரு நாளில்
ஒளிவிடப்போகும் ஒரு
வெண்ணிலவு பிறவி
செவாலியே சிவாஜி கணேசனை
அறிமுகம் செய்த திரைப்படமான
"பராசக்தி" யில் நீதிமன்றக் காட்சி
ஒன்றினில் நீதி அரசர் வேடம் தரித்து
தன் வாழ்கையை அங்கே துவங்கிய
காலம். இதனால் அவர் ஏற்கனவே
வேலை செய்து வந்த அந்த ஜோதிடப்
பதிப்பினில் தொடர்ந்து வார ராசி
பலன்எழுதிட முடியாத,எழுதிட
இயலாதசூழ்நிலை. பத்திரிகை
ஆசிரியர் கவிஞர்அவர்களை
நேரிலே சந்தித்து, என்னஇப்படி
பாதியிலேயே வெளியேவந்து
விட்டீர்களே. இன்னும் ஒருமாத
காலம்அருள்கூர்ந்து இந்தப்
பணியை செய்திடஅவர்கோரிக்கை
வைத்தார். அதற்குகவிஞர், அய்யா
எனக்கு நேரம் இல்லை
உங்களுக்குவேண்டுமானால்
என்னால் ஒரு சிறு உதவி மட்டும்
செய்துதர இயலும். ஒரு மாதகாலம்
நான் சொல்வது போல வார ராசி
பலனை என் பெயரிலேயே பதிப்பு
செய்துவாருங்கள்.ஆனால் நான்
வந்து பணி செய்திட முடியாது
என்றார்.அப்போதுகுறுக்கிட்ட அந்தப்
பத்திரிக்கையின் பதிப்பு ஆசிரியர்
நீங்கசொல்றதுஎனக்குப்புரியலை.
என இழுத்தார்.அப்போது கவிஞர்
சொன்னாராம். சென்றவாரம் மேஷ
இராசிக்கு எழுதிய பலன்களை இந்த
வாரம் துலா ராசிக்கு அப்படியே
அட்ஷரம் பிசகாமல் தூக்கிப்
போடுங்கள். அதேபோல
துலா ராசிக்கு எழுதியதை சிம்ம
ராசிக்கும்
கடகராசிக்கு எழுதியதை கும்ப
ராசிக்கும் போல பிரதி வாரமும்
மாற்றிமாற்றிபதிப்பு செய்திடுங்கள்.
ஒரு மாதம் என்ன6 மாதங்கள் கதை
ஓடும் என்று கவிஞர்கூறிட
பத்திரிகை ஆசிரியர் திகைத்து
என்ன இது, இதுதான் சென்ற வாரமே
வெளிவந்து விட்டதே என்று
யாரேனும் கேட்டால் என்செய்வேன்?
என கேட்க அதற்கு கவிஞர் சொன்ன
பதில்தான்உண்மையில் புதுமை.
ஆம். அன்பர்களே !! அய்யா எந்த ஒரு
பத்திரிகையிலும் வார ராசி படிக்கும்
எந்த மனிதரும் அவர்ராசிக்கு என்ன
பலன் போட்டு உள்ளது என்றுதான்
பார்ப்பாரே ஒழிய அடுத்த ராசிக்கு
அவர் கண்கள் போகாது என்றாரே
பார்க்கலாம்.
இதுதான்அன்பர்களேகவிஞர் தமிழ்த்
திரைஉலகுக்குவருவதற்கு முன்பாக
அவர் பணிபுரிந்த இடம் ஒரு தமிழ்ப்
பத்திரிகை ஒன்றினில் வார ராசி
பலன்களை எழுதும் எழுத்துப் பணி
செய்திருந்தார் என்பதே !!
இன்னும் ஒரே ஒரு செய்தி !! கவிஞர்
கண்ணதாசன் பற்றியது. அதனைப்
பதிவு செய்தவுடன் நான் என் இந்தக்
கட்டுரையைநிறைவு செய்கிறேன்
எனது அன்புத் தமிழ் நெஞ்சங்களே !!
என்ன அது என கேட்டால் ஒருமுறை
காரைக்குடி அழகப்பா பல்கலைக்
கழகம் ஒன்றினில் கவிஞரை
அழைத்து அவரைகௌரவம் செய்து
பின் அவர் உரைநிகழ்த்திட ஒலி
வாங்கு கருவியின்முன்பாக (MIKE)
தனது பேச்சை அவர் அன்று
ஆங்கிலத்தில் தொடர ஆரம்பித்து
கூறுகிறார் :-
LADIES & GENTLEMEN
FIRST OF ALL I WOULD LIKE TO THANK
THE KARAIKUDI ALAGAPPAA
UNIVERSITY FOR THE KIND
PATRONAGE
GIVEN TO ME THIS DAY.
HERE MR. SHANMUGAM CHETTIYAR IS
THE VICE CHANCELLOR OF THIS
UNIVERSITY. BUT MYSELF
CHANCELLOR OF ALL VICES
என்றாரே பார்க்கலாம்.அரங்கத்தில்
கைதட்டல்ஒலி நிற்பதற்கு 3
நிமிடங்கள் ஆயிட்றாம்
மேலே சொன்ன ஆங்கிலபேச்சின்
தமிழ்மொழி பெயர்ப்பு இதோஉங்கள்
கனிவானபார்வைக்கு :-
சீமாட்டிகளே !! சீமான்களே !!
முதலில் நான் இந்தப்
பல்கலைகழகத்திற்கு
நன்றி கூற விரும்புகிறேன். எனக்கு
இவ்வளவு பெரிய மதிப்பு, மரியாதை
இன்றைய தினம் எனக்கு நீங்கள்
தந்ததற்காக.இங்கே திருவாளர்
சண்முகம்செட்டியார் இந்த
பலகலைக் கழகத்தின்துணை
வேந்தராக நம்மிடையே அமர்ந்து
உள்ளார். ஆனால் நானோ
எல்லாவிதமான
பழக்கங்களுக்கும் வேந்தராக
இங்கே வந்துஇருக்கிறேன்.
என்ன ஞானம்.என்ன அறிவு.
எல்லாப் புகழும் இறைவனுக்கே !!
அந்த ஆண்டவன் ஒருவனே துணை
நமக்கு !!.
மிக நீண்டநேரம்இந்தக் கட்டுரையை
நான் படைத்து அதை நீங்கள் படித்து
அதனால்உங்களுக்கு என்னால்
ஏதாவது காரியத் தாமதம் ஏற்பட்டு
இருந்தால் தாங்கள் என்னை
அருள்கூர்ந்து மன்னித்திட
வேண்டும்என கேட்டு அன்புடன்
விடைபெறுகிறேன்.
நன்றி !!வணக்கம் !!.
அன்புடன். மதுரை T.R.பாலு.
(நன்றி:- திரு நெல்லை P. சுப்பையா
அவர்களுக்குமேலே நான் எழுதிய
கட்டுரைக்கு முதல் வித்துஅளித்து
என்னை எழுதிடத் தூண்டியவர்
அவர் ஒருவரே. வாழ்க அவர்
பெருமை.நன்றி பல.வணக்கம் பல.
No comments:
Post a Comment