உடல்மண்ணுக்கு!! உயிர்தமிழுக்கு!!
இதை உரக்கச்சொல்வோம்
உலகுக்கு!!
இனம் ஒன்றாக, மொழி வென்றாக,
புது வேல் எடுப்போம் விடிவுக்கு!!
நம் வெற்றிப் பாதையில் நரிகள்
வந்தால் விருந்து வைப்போம்
விண்ணுக்கு!!
வீரர்கள் வாழும் திராவிட நாட்டை
வென்றவர் கிடையாது !!
வேலும் வாளும் தாங்கிய மறவர்
வீழ்ந்ததும் கிடையாது !!
குள்ளநரிக்கூட்டம்வந்து
குறுக்கிடும்!!
நல்லவர்க்குத்தொல்லைதந்து
மடக்கிடும்!! நீ
எள்ளளவும் பயம் கொண்டு
மயங்காதேடா !! அவற்றை
எமனுலகுக்கு அனுப்பிவைக்கத்
தயங்காதேடா !!
தமிழ் இனம் காக்க வாழ்ந்திடுங்கள்!!
தனித்தமிழில்மட்டுமேபேசிடுங்கள்!!
ஆங்கிலமொழி கலப்பு ஏதுமின்றி !!
தமிழ்பேசிடும் சகோதர,சகோதரிகள்,
நடுவினில் உரையாடும் பொழுது!!
அன்பும் நல்ல பண்பும் ஒருங்கே
அமையப்பெற்ற உலகெங்கிலும்
வாழ்ந்துவரும் எனது உயிருக்கும்
மேலாகநான்நேசித்துவரும் என்
இதய சிம்மாசனத்தில் வைத்து
அனுதினமும் பூஜித்துவரும்
தன்மான சிங்கங்களின் மொத்தத்
திருஉருவாகவாழ்ந்துவரும் எனது
அன்புத்தமிழ்உடன்பிறப்புகளே !!
உங்கள் இமைகள்திறந்திடும் இந்த
இனியகாலைவேளையில்உங்கள்
வாழ்கையில் எந்தவிதமான
சுமைகளும்இல்லாமல், சுகங்கள்
மட்டுமே நிலவிவரவேண்டும் என
அந்த எல்லாம்வல்லஇறைவனை
வேண்டிநிற்கும்உங்கள் அன்புச்
சகோதரன் மதுரை T.R.பாலுவின்
சிரம்தாழ்ந்த,கரம்குவிந்த,மனம்
நிறைந்த,இதயம்கனிந்த,நல்
வாழ்த்துக்களுடன் இணைந்திட்ட
காலை வணக்கங்கள் உரித்தாகுக!!
அன்புத் தமிழ் நெஞ்சங்களே!!
இன்றையதினம் நான் என் எண்ணச்
சிறகுகள் வலைப்பதிவினில் பதிவு
செய்திடத் தேர்ந்துஎடுத்துள்ள
தலைப்பு, ஏதோ நானும் மதுரைக்-
-காரன்தான் அதனால்தான் இங்கே
எனக்குமட்டுமே அந்த நகர்தனை
சொந்தம் கொண்டாடிடும் உரிமை
உள்ளது,அந்த நகரின் வரலாற்றுச்
சிறப்புகளின் அடிப்படையில் அதன்
பெருமைகளை விளக்கிக்கூறும்
உரிமை உள்ளது , சொல்லும்
ஆற்றல் உள்ளது என எண்ணி
நான் இந்தக் கட்டுரைதனை இங்கே
உங்கள் அனைவரின் பார்வைக்கும்
நல்ல விருந்தாய்ப் படைக்கிறேன்
என்று யாரும் என்னைத் தவறாக
எண்ணிட வேண்டாம் என்று நான்
இந்தத் தருணத்தில் உங்கள்
அனைவரையும் வேண்டி விரும்பிக்
கேட்டுக்கொள்ளக் கடமைப்பட்டு
இருக்கிறேன் எனது அன்புத் தமிழ்
நெஞ்சங்களே !!
வரலாற்றில் இந்த மதுரை மண் ஏன்
இந்த அளவு சிறப்பும் பெருமையும்
பெற்றுள்ளது?அதற்கான அடிப்படை
காரணம்என்ன ?எது நடந்ததினால்
மதுரை இந்த அளவிற்கு உலகோர்
அனைவராலும் போற்றப்படுகிறது
அந்த நல்லதோர் சிந்தனையின்
அடிப்படையில் இந்தக்கட்டுரையை
உங்களது பொற்கமலபாதங்களில்
வைத்துப் பணிவுடன் கட்டுரையை
சமர்பிக்கின்றேனே ஒழிய வேறு
ஒன்றும் கிடையாது, என்பதை தமிழ்
கூறு நல்லுலகினில் வாழ்ந்துவரும்
அன்புத் தமிழ் நெஞ்சங்கள் முதலில்
புரிந்துகொள்ளவேண்டும் என நான்
கேட்டுக்கொள்கிறேன் அன்பர்களே !!
பொதுவாக இறைவன் திருவருளின்
மேல்உண்மைஅன்பும்மாறாப்பற்றும்
கொண்டஇறைநேசர்எதை எண்ணி
இங்கே வாழ்கிறார்என்று கேட்டால்
அன்பர்களே !! இறைவன்தான் இந்த
பூமியைபடைத்தான்,ஜீவராசிகளைப்
படைத்தான் அவனே இந்த உலகின்
சிருஷ்டிகர்த்தா, அவன் அன்றி
அணுவும் அசையாது என்கின்ற
எண்ண உணர்வுகளோடுதான்
இந்தமண்ணில் வாழ்ந்துகொண்டும்
வளர்ந்துகொண்டும் வருகிறார்கள்
இறைநேசர்கள்,என்அன்புத்தமிழ்
நெஞ்சங்களே !!
அந்தஇறைநேசர்கள்இந்துமதத்தைப்
பொறுத்தவரைஇருவேறுகூறுகளாக
பிரிவுகளாக, இங்கேஅமைந்துள்ளது
என்பதுயாரும்மறக்ககூடாத, மறுக்க
முடியாதஉண்மை.அப்படிஎன்றால்
அந்த இறைநேசர்களில் உள்ள அந்த
இருவேறுபிரிவுகள்எவைஎவை என
கேட்டால் அந்த இரண்டுதான்
அன்பர்களே
1) சைவம்,
மற்றொன்று
2)வைஷ்ணவம்
அந்த வைஷ்ணவத்தில் இருவேறு
பிரிவுகள் உண்டு.ஒன்று தென்கலை,
மற்றும் ஒன்று வடகலை. நான்
அந்தப் பகுதிக்குள் செல்ல
விரும்பவில்லை. ஏன் என்றால்
கட்டுரையின் உண்மையான கருத்து
முடிவுக்குள் வைஷ்ணவர்களுக்கு
இடம் இல்லை என்ற
காரணத்தினால் நான் அந்த
வைஷ்ணவப்பிரிவின் இருவேறு
சிறப்புகள்என்னென்ன,என்று
எல்லாம் ஆராய்ந்து அவைகளைப்
பற்றி எல்லாம் உங்களிடம் விளக்கி
கூறிடும் ஆற்றலை வல்லமையை
அந்த ஆண்டவன் எனக்கு
அளித்திருந்தாலும் கூட இந்தக்
கட்டுரையைப்பொறுத்தவரை
அவைகள் தேவையற்ற ஒன்று
என்பதினால் என் கவனத்தினை
நான் முழுக்க,முழுக்க சைவ
மதத்தின் மேல் மட்டுமே செலுத்தி
ஆராய்ந்ததன் அடிப்படையில் நான்
கண்டுபிடித்த அந்த உண்மை, அதன்
சிறப்பு,அதன்பெருமை இவைகளைப்
பற்றிஎல்லாம் உங்களிடம்
விளக்கிகூறிடஇந்தக்காலைவேளை
உங்கள் கவனத்தை, உங்கள்
காதுகளை சிறிது நேரம் எனக்கு
கடனாகத்தரவேண்டிவிரும்பிகேட்டு
கொள்கிறேன்
என் அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!
இந்துமதத்தின்பல்வேறுபிரிவுகளில்
மிகமுக்கியமான இடத்தினை
தன்வசம் பெற்றுள்ள சைவத்தின்
மூல ஆதாரக் கடவுள் எல்லாம்
வல்ல அந்த இறைவன்
சிவபெருமான் என்றுதான் அங்கே
சொல்லப்பட்டுள்ளது. அந்த சிவனே
அனைத்து உலகிலும் உலகில்
உள்ள மண்,மண்ணில் உலவிடும்
ஜீவராசிகள்,உயிரினங்கள்
இவைகளை எல்லாம் காத்து
இரட்சிக்கும் தெய்வம் எனவும்
நமக்கு புராணங்களும் இதிகாச
நூல்கள் பலவும் தெளிவுறவிளக்கிக்
கூறி உள்ளது அன்பர்களே!!
ஆக சிவபெருமானே இந்த உலகில்
உள்ள மண் அனைத்திற்கும்
உரியவன்,அவனது
திருப்பாதங்களில்தான் இந்த
மண் அவனது ஆளுகையின்கீழ்
உள்ளது என்ற கருத்தினில்
யாருக்கும் எவருக்கும் இருவேறு
கருத்துக்கள் உள்ளது என்று
கூறிவிட இயலாது.
இப்போது தலைப்பு சம்பந்தப்பட்ட
விஷயத்திற்குள்ளாக செல்லலாம்
அன்புத் தமிழ் நெஞ்சங்களே !!
சிவனது பாதத்தின் கீழ் உள்ள மண்,
சிவனது சிரசின்மேல் வைத்து
எடுக்கப்பட்ட சுமக்கப்பட்ட இடம்என
ஒன்று இருக்கிறது சொன்னால்
அந்தச் சிறப்பு பெற்ற ஒரே ஒரு
ஊர்தான் அன்பர்களே !!
நான்மாடக்கூடல் என்ற
தனிச்சிறப்பினை தன்னகத்தே
பெற்ற அந்த மருது மரங்கள்
நிறைந்திருந்த காரணத்தினால்
அந்த மருது மரத்தின் பெயரே அந்த
ஊருக்கு,நகருக்கு"மருது" என்று
வைக்கப்பட்டு, அந்த மருது என்ற
பெயர் நாளடைவினில் சற்றே
உருமாறி,பெயர்மாறி, பின்னொரு
காலத்தினில் அது " ம து ரை " என
பெயர் மாற்றம் செய்யப்பட்ட
ஊர்தான் அந்த ஊரின் மண் மட்டுமே
சிவனதுசிரசில்ஏற்றிவைக்கப்பட்ட
சிறப்பினை தன்னகத்தே
கொண்டுள்ள ஊர்" மதுரை "
மட்டும்தான் .இதற்கான
ஆதாரம் எது என்று கேட்டால் ஆய
கலைகள் அறுபத்துநான்கு அதில்
பிட்டுக்கு மண் சுமந்த லீலை என்று
ஒன்று உண்டு. அந்த லீலையில்
வீட்டுக்கு ஒருவர் வந்து வைகை
ஆற்றில் மண் அள்ளிடவேண்டும்
என்ற பாண்டிய மன்னன்
ஆணையிட, ஒரு சிவபக்தை ,
ஒரு வயதான மூதாட்டி,அவளுக்கு
வம்ச வாரிசு இல்லை. எனவே என்
சிவபெருமானே, அரச கட்டளை
நிறைவேற்றிட எனக்கு பிள்ளை
என யாரும் இல்லை,நான் என்
செய்வேன் என்று கண்ணீர் மல்க
இறைவனைப் பிரார்த்தனை
செய்திட்ட வேளையில்
அந்த சிவபெருமானே தனது பக்தை
அந்தவயதானமூதாட்டிக்காக தானே
முன்வந்து அந்தக்கிழவியிடம்
அனுமதி பெற்று அவளது
பிரதிநிதியாக வைகை
ஆற்றினில் மண் அள்ளிட வருகிறார்.
அப்போது பல கூடைகளில் மண்
அள்ளிய காரணத்தினால் ஏற்பட்ட
அசதியை சற்றே போக்கிட எண்ணி
அங்கு உள்ள மர நிழல் ஒன்றினில்
சிவன் ஓய்வு எடுத்து உறங்கும்
வேளையில்,அங்கே வேலை
செய்திடும்-நபர்கள் எப்படி
ஒழுங்காக வேலை செய்கின்றனரா
என்று மேற்பார்வையிட
வந்த பாண்டிய மன்னன்,படுத்து
உறங்கிக் கொண்டிருப்பது எல்லாம்
வல்ல சிவபெருமான் என்பதனை
அறிந்திடாத காரணத்தினால்
யாரப்பா நீ !! வேலை
செய்திடும் இந்த வேளையில்
உறங்கிக்கொண்டு இருப்பது என
பலமுறை உரக்கச்சொல்லியும்
உறக்கத்தில்இருந்த சிவபெருமான்
அந்த உறக்கத்தில் இருந்து
விடுபடாத காரணத்தினால்
கோபமுற்ற பாண்டிய மன்னன்
அவன் அருகே உள்ள பிரம்பு
ஒன்றினைஎடுத்து படுத்துக்கொண்டு
இருக்கும் அந்தத் தொழிலாளி
(அவன்தான் உலகத்தின்
முதலாளி சிவபெருமான் என்று
அறியாமல்) அவன் முதுகினில்
ஒரு அடி கொடுக்கிறான் பாண்டிய
மன்னன்.அதேவேளைமன்னனுக்கும்
அவன் அருகேயுள்ள அத்துனை
பேர்களுக்கும் அவரவர்கள்
முதுகினில் அடி விழுந்ததுபோன்ற
உணர்வு ,அந்த நடுமுதுகினில்
விழுந்த அடிதான் மனிதனது
முதுகுத்தண்டு வடம் என்று
சொல்பவர்களும் உண்டு.
பகுத்தறிவுச் சிங்கங்கள் அதனை
மறுப்பதும் உண்டு.
அதன் பிறகே மன்னன் உணர்ந்தான்
அது சிவபெருமான் என்று.இதுதான்
புராணவரலாறு.மதுரை நகரினில்
நடந்த,எழுதப்பட்டுள்ள வரலாறு.
எனவே என் அன்புத் தமிழ்
நெஞ்சங்களே !! இந்த ஒரே ஒரு
காரணத்தினால்தான் மற்றெந்த
ஊர்களுக்கும் இல்லாத தனிச்சிறப்பு,
தனிபெருமை,அந்தஸ்த்து,கெளரவம்
மதுரைநகருக்குகிடைத்துள்ளது
என்பதே, எனதுசிற்றறிவுற்குள்ளாக,
நான் ஆராய்ச்சி செய்ததன் விடை,
இது ஒன்றுதான் அன்பர்களே !!
" மதுரை " என்று சொன்னாலே ஏன்
அனைவரும் பயப்படுகிறார்கள்,ஏன்
சற்றே நடுங்கி பின்வாங்குகிறார்கள்
என்று கேட்டால் இறைவன்
சிவபெருமானே
தனது தலையில் மதுரை மண்ணை
சுமந்தார் என்ற ஒரே
காரணத்திற்காக
மட்டுமே, என்று சொல்லி எனது
இந்தமிக நீண்ட,நெடிய, கட்டுரையை
நான் நிறைவு செய்கிறேன்
அன்பர்களே !!
மீண்டும் அடுத்த " எண்ணச்
சிறகுகள் "வலைப்பதிவினில்
உங்கள் அனைவரையும்
சந்திக்கிறேன். அதுவரை உங்கள்
அனைவரிடமும் இருந்து அன்பு
வணக்கம் கூறி விடைபெறுகிறேன்.
நன்றி !! வணக்கம் !!
அன்புடன்,
மதுரை T.R.பாலு.
No comments:
Post a Comment