Tuesday, 17 September 2013

உருவத்தை வைத்து எடை போடாதே மனிதா !! அதன் உள்ளத்தைப் பார் !! உண்மை உனக்கு தெரிய வரும் !!





உடல்மண்ணுக்கு!! உயிர்தமிழுக்கு !!


இதை உரக்கச்சொல்வோம்


உலகுக்கு!!


இனம் ஒன்றாக,மொழிவென்றாக,


புது வேல் எடுப்போம் விடிவுக்கு!!


நம் வெற்றிப் பாதையில் நரிகள்


வந்தால் விருந்துவைப்போம்


விண்ணுக்கு !!



உலகம் முழுவதும் வாழ்ந்து வரும்


எனது உயிரைவிட நான் அதிகம்


நேசித்திடும் என் அன்புதமிழ்


உள்ளங்களே !!


முதற்கண் உங்கள் அனைவருக்கும்


என் சிரம் தாழ்ந்த கரம் குவிந்த


வணக்கங்கள் உரித்தாகுக !!



பொதுவாக இந்த உலகம் யாரையும்


எதையும் அதன்உருவத்தை மட்டுமே


வைத்து எடை போடுவதைத் தனது


வழக்கமாகவே கொண்டு சுழன்று


வருகிறது என்பது வரலாறு நமக்கு


கூறும் உண்மை. ஆனால் உண்மை


நிலை அது அல்ல அன்பர்களே !!



எப்படி என்று அந்தக் கால சங்க


கால பாடல் ஒன்றினில் மிகத்


தெளிவாகவே குறிப்பிட்டுள்ளனர்


நமது முன்னோர்கள். முதலில்


அந்தப் பாடலைப்படிப்பதற்கு முன்


இது சம்பந்தப்பட்ட கதை ஒன்றினை


நாம்பார்த்துவிடுவோம்நேயர்களே !!



தலைச்சுமை செய்து வணிகம்


செய்யும்ஒருவணிகர் உச்சிவேளை


ஆகிவிட்டதாலே சூரியனின் வெப்பம்


தாங்க முடியாமல் ஒரு மிகப்பெரிய


ஆலமரம் ஒன்றின் நிழலில் சற்றே


இளைப்பாறிப் படுத்துக்கொண்டு


இருக்கின்றபோது அந்த வணிகர்


தனது  மனதுக்குள் இறைவன்


படைப்பைப் பற்றி தனக்குள்


விமர்சனம் செய்கிறார்.  என்ன


இறைவா,இத்தனைபெரிய மரத்தைப்


படைத்துவிட்டு அதற்கு உண்டான


பழத்தை ஏன் இவ்வளவு சிறியதாக


படைத்துவிட்டாய். அதே நேரம் அந்த


ஆலமரத்திற்கு மிக அருகாமையில்


ஒருநெடியபனைமரம் ஒன்று உண்டு.


அந்த மரத்தையும் அதன் உருவில்


பெரிதான பழத்தையும் பார்க்கிறார்.


என்இறைவா, இத்தனைபெரியஆல


மரத்திற்கு இவ்வளவு சிறிய உருவம்


கொண்ட பழத்தையும் மிக நெடிய


உருகொண்ட பனைமரத்திற்கு


ஏன் இறைவா அவ்வளவு பெரிய


உருவம் கொண்ட பழத்தையும்


படைத்தாயோ ? நீ வேறு ஏதோ


நினைவினில் இந்தத் தவறை நீ


செய்தனையோ என இறைவனை


ஏளனம் செய்து தனது மனதில்


எண்ணிக்கொண்டு இருக்கும்போது


சொட்டென்று அவரின் தலைமீது


ஒரு ஆலம்பழம் வந்து விழுகிறது


லேசான வலியுடன் தலை நிமிர்ந்து


பார்க்கிறார். இறைவன் படைப்பின்


இரகசியத்தை அப்போதுதான் அந்த


வணிகர் உணர்கிறார். ஆலமரத்தின்


நிழலுக்காக பலர் வந்து அமருவார்.


ஆனால் அதேநேரம் பனைமரத்தின்


அடியில் ஒருவர்கூட நிழலுக்கு


ஒதுங்கிடமுடியாது இந்தக் காரணங்-


-களுக்காகவேதான் நீ அதனதன்


பயன்களுக்கேற்ப பழங்களைப்


படைத்து இருக்கிறாய். உனது


படைப்பின் திறன்மேல் நான் சற்று


சந்தேகம் அடைந்து ஏளனமாக


நினைத்து விட்டேன் என்னை


இறைவா மன்னிப்பாயாக.என


அந்த வணிகர் தன் இரு கரம்


கூப்பி வணங்கினார்.



நான் இங்கே எதற்காக இந்த ஆல


மர,பனை மர கதையைக் குறிப்பி-


-டுகிறேன் என்றால் இங்கே நான் 


குறிப்பிடும் பாடல் அந்த இருவேறு 


வகை மரங்களைப்பற்றியபாடல்.


முதலில் நாம் இப்போது பாடலைப் 


பார்ப்போம்.



தெள்ளிய ஆலின் சிறுபழத்தோர்                                                                          விதை 


செம்மீன் சினையினும் நுண்ணிதே                                                           ஆயினும் 


அண்ணல் யானை ஆட்பெரும்படை-                                                                 -யுடன்


மன்னருக்கிருக்க நிழலாகும்மே !!


தேம்படு பனையின்  திரள்பழுத்தோர்                                                                 -                                                                                விதை 


வானுற ஓங்கி வளமுற வளரினும் 


ஒருவருக்கிருக்க நிழலாகும்மா !!



ஆலமரத்தின் விதை என்பது மீனின் 


சினையை விட உருவத்தில் மிகமிக 


சிறியதாகஆனாலும்கூட மன்னரும்


அவரோடுஉள்ள  யானை,குதிரைப் 


படை,காலாட்படை  உள்ளிட்ட  பல 


ஆயிரம் வீரர்கள் அனைவருக்கும் 


தங்ககுளிர் தரு நிழலைத்தருகிறது.


ஆனால் உருவத்தில் பெரியதாக 


உள்ள பனைமரத்தின் விதையை 


நாம் மண்ணில் ஊன்றினால் அது 


மரமாக வானை நோக்கி வேகமாக 


உயரமாக வளரக்கூடும். ஆனால் 


அதே சமயம் அந்த மரத்தின் நிழலில் 


ஒருவராவது இளைப்பாற அந்தப்


பனைமரத்தால் இயலுமா ?



எனவே உருவத்தை வைத்து எடை 


போடக்கூடாது அன்பர்களே !!


அதன் உள்இருக்கும் உண்மையை


பார்த்து உணர்பவன் எவனோ 


அவனே உண்மையான பகுத்தறிவு 


உள்ள மனிதன் ஆவான். 


பெரிய கடப்பாரை கொண்டு 


பாறாங்கல்லை யாரும் இதுவரை 


உடைத்தததாக எவ்வித வரலாறும் 


இல்லை. சிறிய சிற்றுளி மட்டுமே 


அந்தப் பாறாங்கல்லை



தகர்கக்ககூடிய வல்லமையையும் 


சிலை வடித்திட உதவிடும் நல்ல 


ஆற்றலையும் பெற்றுத்தருகிறது.



எனவே அன்பர்களே யாரையும் 


உருவத்தை வைத்து எடை போடும் 


பழக்கத்தை இனியாவது கைவிட்டு


உள்ளத்தைப் பார்த்து மதிக்கும் 


தன்மையைவளர்த்துக்கொள்வோம் 


என்று உறுதி மேற்கொள்வோமாக !!



நன்றி !! வணக்கம் !!



அன்புடன் மதுரை T.R.பாலு.


No comments:

Post a Comment