Thursday, 31 October 2013

திமிர் பிடித்த முதலாளியும் அவரை எதிர் கொண்ட தொழிலாளியும் !!--ஒரு சிறு கதை !!






உடல்மண்ணுக்கு!! உயிர்தமிழுக்கு!! 



இதை உரக்கச் சொல்வோம் 



உலகுக்கு!!                                                 



இனம் ஒன்றாக, மொழி வென்றாக, 



புது வேல் எடுப்போம் விடிவுக்கு!!நம் 



வெற்றிப்  பாதையில் நரிகள் 



வந்தால் விருந்து வைப்போம் 



விண்ணுக்கு !!                                             



உலகம் முழுவதும் வாழ்ந்து வரும் 



அன்பின் திருஉருவாய், அடக்கத்தின் 



முழு வடிவாய், பாசத்தின் 



பிறப்பிடமாய், பண்பின் 



உறைவிடமாய், இருக்கும், என் 



உயிரினும் மேலாக நான் 



போற்றி,வணங்கி வரும் என்அன்புத் 



தமிழ் உடன் பிறப்புகளே !!முதலில் 



உங்கள் அனைவருக்கும் எனது 



இதயம் கனிந்த, அன்பு நிறைந்த, 



சிரம் தாழ்ந்த, கரம் குவிந்த காலை 



வணக்கங்கள் உரித்தாகுக !!               



பொதுவாகவே இந்த உலகினில் 



கையில் நிறைய காசுகள் உள்ளவன் 



தன்னை முதலாளி என்றும், 



இவனிடம் மாதம் முழுவதும் 



வேலை பார்ப்பதன் மூலமாக தனது 



இரத்தத்தை வியர்வையாக 



வெளியேற்றி பாடுபடுபவனுக்கு 



இந்த உலகம் தந்துள்ள 



அடைமொழிப் பெயர்தான் 



தொழிலாளி என்பது. நான் ஒரு 



மதுரைக்காரன். அங்கே நான் 



வசித்திருந்தபோது அங்கே ஓடிய 



ஆட்டோ ஒன்றின் பின்புறம் எழுதி 



இருந்த வாசகம்தான் இப்போது என் 



நினைவின்பால் எழுகின்றது.         



உழைத்துக்கொடுப்பவன் 



அடிமையும் அல்ல !!. 



ஊதியம்தருபவன்எஜமானும்அல்ல!!



ஆனால் இன்றைய தினம்நாட்டினில் 



வாழ்ந்திடும் முதலாளிகளில் 



நூற்றுக்கு 95 விழுக்காடுகள் ஏதோ 



தான் தான் இந்த உலகிற்கேஎஜமான் 



என்றும் தன்னால்தான் இந்த புவியே 



இயங்குகிறது என்றும்  மனப்பால் 



குடித்தவர்களாகவே 



தென்படுவதுதான் இந்த நாட்டினில் 



உள்ள ஏழைத்தொழிலாளிகள்  



செய்த பாவம் !! தலை எழுத்து  !!                              



புரட்சி நடிகர் என்று முத்தமிழ் 



அறிஞர், தமிழ் இனத்தின் 



முன்னேற்றத்திற்காக இந்த அகவை 



9௦ லும் சக்கர நாற்காலியில் 



அமர்ந்து கொண்டே சர்வாதிகார 



ஆட்சியை எதிர்த்துக் குரல் எழுப்பி 



ஆட்சியாளர்களுக்கு சிம்ம 



சொப்பனமாகவே விளங்கி வரும் 



பேரறிஞர் அண்ணா கண்ட 



இயக்கத்தை வெறுமனே அவரது 



பெயரை மட்டும் கட்சிக்கு வைத்துக் 



கொண்டு அவரது நீண்ட நாள் கனவு 



திட்டமான சேது சமுத்திரதிட்டத்தை 



குழி தோண்டி புதைத்திடும் 



குணார்களைப்போல இல்லாமல் 



அவர் எண்ணங்கள், சிந்தனைகள் 



அவர் வாழ்ந்த காலங்களில் அவர் 



செயல்பாடுகள், இவை 



எல்லாவற்றையும் மனதில் நிலை 



நிறுத்தி செயலில் வலியுறுத்தி 



மத்திய அரசாங்கத்தையே தனது 



கட்டுப்பாட்டில் முன்னொரு 



காலத்தில் வைத்திருந்த 



திருக்குவளை முத்துவேலர் 



கருணாநிதி அவர்களால் பட்டம் 



பெற்ற M.G.R. நடித்து தேவர்பிலிம்ஸ் 



தயாரிப்பில் வெளி வந்த கருப்பு 



வெள்ளைப் படமான " தொழிலாளி" 



படத்தில் காவியக் கவிஞர் வாலி 



எழுதிய சரித்திரப் புகழ் பெற்ற 



பாடல்தான், 




ஆண்டவன் உலகத்தின் முதலாளி !! 




அவனுக்கு நானொரு தொழிலாளி!!



அன்னை உலகின் மடியின் மேலே 



அனைவரும் எனது கூட்டாளி !!         



 என்ற பாடலுக்கு ஏற்ப, 



இறைவன்தான் இந்த உலகினில் 



ஆளவந்த ஒரே முதலாளி என்ற 



கருத்தில் எனக்கு இருவேறு 



முடிவுகள் என்பது என்றைக்குமே 



இருந்தது கிடையாது, எனது அன்புத் 



தமிழ் நெஞ்சங்களே !!                             



நான் ஒரு காலத்தில் மதுரை 



மாநகரினில் மோட்டார் சாமான்கள் 



விற்பனை செய்திடும் கடை ஒன்று 



நடத்தி வந்திருந்தேன் என்று 



ஏற்கனவே உங்கள் அனைவருக்கும் 



முன்னொருநாள் நான் தெரிவித்து 



இருந்தேன் அல்லவா, அப்போது ஒரு 



சிலர் என்னை, என்ன  முதலாளி 



சவுக்கியமா? என்று வினவுவார்கள். 



அப்போது நான் அவர்களிடம் 



சொல்வேன் தயவு செய்து என்னை 



அந்தச் சொல் எடுத்து 



அழைக்காதீர்கள். ஏன்? என்று 



அவர்கள் என்னிடம் கேட்பார்கள். 



அப்போது நான் அவர்களுக்கு தந்த 



பதில் என்னவென்றால், ஆண்டவன் 



தான் நம் அனைவருக்கும்முதலாளி. 



தவிரவும் முதலாளி என்றபதத்திற்கு 



உண்மை அர்த்தம் என்ன தெரியுமா ? 



உங்களுக்கு என்றும் கேட்பேன். 



அதற்கு அவர்கள் சொல்லும் பதில், 



முதலாளி என்றால்முதலாளிதானே 



என்று சொல்வார்கள். உடனே நான் 



அவர்களிடம் சொல்வேன் 



உண்மையில் அந்த முதலாளி என்ற 



சொல்லுக்குஅர்த்தம் "எருமைமாடு" 



என்பேன். என்ன எருமைமாடா? அட 



போப்பாஎன்பார்கள்.நான்கூறுவதை 



சற்று பொறுமையாகக் கேளுங்கள். 



நான்ஏன்முதலாளியைஎருமைமாடு 



என்று சொல்கிறேன் என்ற அர்த்தம் 



உங்களுக்கு விளங்கும்.  மழை 



பெய்தாலும் வெயில் அடித்தாலும் 



எருமைக்கு தனது தீனி ஒன்றுதான் 



குறிக்கோளாக செயல்படும். அது 



போலத்தான் இந்த ஏகபோக 



முதலாளி வர்க்கமும். யார்செத்தால் 



என்ன? யார் பிழைத்தால் என்ன ? 



எனக்கு என்னுடைய வருமானம் 



ஒன்று தான் குறிக்கோள் என்று 



செயல்படுபவன்தான் முதலாளி 



என்பவன். எருமைக்கு எந்த 



விதமான உணர்ச்சியும் இருக்காது. 



நீங்கள் எவ்வளவுதான் அதனைப் 



பிரம்பினால் அடித்தாலும் அதற்கு 



வலி என்பது இருக்காது. ஏன் 



என்றால் அதன் தோல் அப்படி. அது 



போலத்தான் முதலாளி 



என்பவனுக்கும் எந்தவிதமான 



மனசாட்சியோ அது உணர்த்திடும் 



உண்மைகளை அறிந்திடும் 



அடிப்படை ஞானம் என்பதுஎன்றுமே 



இருக்காது என்று நான்அவர்களுக்கு 



விளக்கிக் கூறியபின்புதான் 



அவர்கள் என்னுடைய கருத்தை 



ஏற்றுக் கொள்வார்கள் அன்பர்களே. 



சரி !! நேயர்களே இப்போது நாம் 



கட்டுரைக்குள்ளாகச் செல்வோமா? 



திருமங்கலம் என்று ஒரு நகரம். 



அங்கே பெரு வணிகர்கள் ஏராளம். 



அதில் ஒரு வணிகர். அவர் பெயர் 



சிங்கமுத்து என்பது. திமிர் என்ற 



குணத்தின் ஓட்டு மொத்த 



உருவம்தான் அந்த வணிகர். இந்த 



இடம் ஐம்பெரும்காவியங்களுள் 



ஒன்றான சீவக சிந்தாமணி என்னும் 



நூலில் வணிகர்கள் யார் என்பது 



பற்றி அந்த காவியத்த்தில் என்ன 



குறிப்பிட்டுள்ளது என்பதனை நான் 



எனது அன்புத் தமிழ் உடன் 



பிறப்புகளுக்கு/நெஞ்சங்களுக்கு 



கோடிட்டு காட்டுவது என் கடமை. 




வன்மன வணிகர்தங்களைப் 


படைத்து வானரங்கள் என் செய்யப் 


படைத்தாய்?                                                   



பெண்என்னும் இனந்தனைப் 


படைத்து பின் பேய்களை என் 


செய்யப் படைத்தாய் ?..........................     



என்று அந்தப்பாடலில் வரிகள்வரும் 



அன்பர்களே !!இதன்பொருள் இதோ :-



வானரங்கள் (குரங்கு இனம்) 



செய்யக்கூடிய அனைத்து 



வேலைகளையும் இந்த வணிகர் 



என்று அழைக்கப்படும் 



வியாபாரிதான் செய்து 



முடிக்கிறானே ? பிறகு எதற்காக 



வானரங்கள் என்று தனியாக ஒரு 



இனத்தை நீ படைத்தாய்?                     



அது போலவேதான்                                     



பேய்கள் என்னென்ன வகையான 



லீலைகளையும் வேலைகளையும் 



செய்து முடிக்குமோ அவை 



அத்தனையையும் இந்தப் பெண்கள் 



என்ற இனம்தான் வீட்டுக்கு வீடு 




செய்துகொண்டு இருக்கிறதே, 




பிறகு ஏன் பேய்கள் என்று 



தனியாகஒரு 



இனத்தைநீபடைத்தாய் ? என்பதே !!                 


இந்தப் பாடலின் உட்கருத்து.இதனை 



நான் வெளியிட்டதற்காக வணிகர் 



சமுதாயமும் "அன்பு மட்டுமே" 



நிறைந்த காதல் என்ற 



சாம்ராஜ்யத்தின் இளவரசிகள் 



என்னை அருள்கூர்ந்து மன்னித்திட 



வேண்டுகிறேன். எதற்காக ? என்று 



கேட்டால், இவை ஒன்றும் எனது 



சொந்தக் கருத்து அல்லவே !! 



காவியப் படைப்பினில் நான் படித்த 



பாடலில் உள்ளவற்றை இங்கே 



எனது அன்பிற்குரிய இரசிகப் 



பெருமக்களிடம் நான் கொண்டு 



சென்றேன். அவ்வளவுதான். இது 



தவறா? ஆம் !! தவறுதான் என்று 



வணிகர்களும், வனிதையர்களும் 



 ஒரு முடிவு எடுத்தீர்கள் என்று 



சொன்னால் அதற்காக நான் 



உங்களிடம் எனது ஆழ்ந்த 



வருத்தத்தைத் தெரிவித்துக் 



கொள்ளக் கடமைப் பட்டுள்ளேன். 



நேயர்களே நாம் இப்போது 



கட்டுரையின் மையப் பகுதிக்குவந்து 



விட்டோம்.  



ஆக அந்தத் திமிர் பிடித்தசிங்கமுத்து 



என்ற வணிகர், தனது வணிக 



நிறுவனத்தினில் எடுபிடி வேலை 



செய்திட ஆள் ஒருவர் தேவை என்று 



தனது அன்பு நண்பர் 



அழகுமுத்துவிடம் சொல்லி 



இருந்தார். அவருக்கு இவரின் 



குணத்தைப் பற்றி மிக நன்றாகவே 



தெரியும். அழகுமுத்துவைப் 



பயன்படுத்தி பல வேலைகளை 



திருமங்கலம் நகராட்சியில் எந்த 



சிலவும் இல்லாமல் ஓசியாகவே 



முடித்தவர்தான் சிங்கமுத்து. அழகு 



முத்து நகராட்சியில் ஏற்கனவே 



பணியாற்றி ஒய்வு பெற்றவர். 



இவரது திமிர் பிடித்த குணம் பற்றி 



மிக நன்றாகவே இவருக்குத் 



தெரியும். எப்படி இவரைப் 



பழிவாங்குவது ?  என்று 



யோசித்துக்கொண்டிருக்கும் நேரம், 



இவரிடமே வேலைக்கு ஆள் 



வேண்டும் என்று கேட்டவுடனேயே 



அழகுமுத்து ஒரு முடிவுக்கு வந்தார் 



இதுதான் இவனை வேலை 



முடிக்கும் நேரம் என்று கருதி, 



இவரை விட மேலும் ஒரு பங்கு 



திமிர் பிடித்த ஒருவனை வேலைக்கு 



சேர்த்துவிட்டார், அழகு முத்து. 



புதியதாக வேலைக்குச்சேர்ந்தவரை 



பார்ப்பதற்குக் கூட சிங்கமுத்துவுக்கு 



நேரம் இல்லாமல், அவருக்குப் பல 



தொழில்கள். ஆனால் சிங்க 



முத்துவிடம் ஒரு வழக்கம். எது 



எப்படி இருந்தாலும் சரி. எல்லாத் 



தொழில் நிறுவனங்களிலும் 



சம்பளம் கொடுக்கும் அந்த 7ம் தேதி 



அவர் பிரசன்னமாகி விடுவார். (இந்த 



சம்பளம் 7ம் தேதி கொடுப்பதிலும் 



ஒரு அரசியல் பின்னணி 



வைத்திருக்கிறார்கள் இந்த 



முதலாளிகள்அன்பர்களே.அதுஎன்ன 



சூட்சுமம் என்று கேட்டால், யாராவது 



சம்பளத்தை வாங்கிக்கொண்டு 



அத்துடன் வேலையைவிட்டு 



விலகுகிறார்கள் என்று சும்மா ஒரு 



பேச்சுக்கு வைத்துக் கொள்வோம். 



எவனும் வேலையைவிட்டு 



போகவே மாட்டான்.  ஏன்னா அந்த 7 



நாள் வேலை பார்த்ததற்கு எவன் 



சம்பளம் தருவான்?அடடா.. என்ன... 



ராஜ தந்திரம். உழைக்கும் 



தொழிலாளி வர்கத்தின் நெத்தியில் 



குழைச்சு நாமத்தைப்போடும் 



விஷயத்தில.)   சரி !! நாம இப்ப 



கட்டுரையின் இறுதிப் பக்கம் 



 மிகநெருங்கி வந்து விட்டோம் 



நேயர்களே !! அந்த 7ம் தேதி 



சிங்கமுத்து சம்பளம் 



போடுவதற்காக புதிதாக நம்ம 



அழகுமுத்து வேலைக்குச் 



சேர்த்துவிட்ட ஆள் வேலை 



செய்திடும் எண்ணை மண்டிக்கு 



 வந்து சேர்ந்தார் இரவு 1௦ மணி 



அளவில். உழைத்ததொழிலாளர்கள் 



அனைவரும் சம்பளம் வாங்கிட 



வேண்டுமே என்பதற்காக 9.௦௦ 



மணிக்கே பணிகள் அனைத்தும் 



முடிந்திட்டாலும் காத்துக்கொண்டே 



இருந்தார்கள். இருந்தாலும் அந்த 



சம்பளம் போடும் தேதி அன்று 



பார்த்து இந்த முதலாளிகளின் 



முகத்தில் எப்படித்தான் அந்த 



எகத்தாளமான உணர்வுகள் 



கொப்பளிக்குமோ அந்த இறைவன் 



ஒருவனே அறிவான். என்னமோ 



சும்மா தானமாக பணம்  கொடுப்பது 



போல, அங்கே,  அந்த உழைப்பின் 



சிகரமாகவே விளங்கி தங்களது 



உதிரத்தை வியர்வையாக ஆக்கி 



எஜமானின் உயர்வுக்குப் பாடுபட்ட 



ஏழைத் தொழிலாளிகளின் 



கைகளில். இன்னும் எத்தனைகாலம் 



தான் ஏமாற்றுவார்இந்த நாட்டிலே?



என்ற பாடல் என்நினைவின்பால் 



எழுகின்றது எனது அன்புத்தமிழ் 



நெஞ்சங்களே !!   சிங்கமுத்து அந்த 



எண்ணை மண்டியில் 



வேலைபார்க்கும் 75 



தொழிலாளர்களுக்கும் சம்பளம் 



அடங்கிய உறையை ( COVER)



வைத்துக்கொண்டு 



ஒவ்வொருவரையும் நலம் 



விசாரித்துக்கொண்டே அதனைத் 



தந்து கொண்டு இருந்தார்அதற்குரிய 



இரசீதுகளில் கையொப்பம் 



வாங்கிக்கொண்ட பிறகு. கடைசி 



ஆளாக நம்ம புதிய நபர் வந்தார். 



அவரிடமும் கையெழுத்து 



வாங்கிக்கொண்ட பின்பு 



சம்பளத்தை அவரிடம் கொடுத்த 



பின்பு அவரைப்பார்த்து கேட்டார். 



ஏண்டா? நீ தான் புதுசா நம்ம 



அழகுமுத்து வேலைக்குச் 



சேர்த்துவிட்ட ஆளா ? என்று 



வினவினார். உடனே அந்தப் புதிய 



நபர் ஆமாம் என்பதற்கு 



அடையாளமாக தலையை 



ஆட்டினார். ஏண்டா ? (இப்படிப் 



பேசுவதுதான் ஏகபோக வர்கத்தின் 



தனி அடையாளம். தனி மனித 



நாகரீகம் என்று இவர்களிடம் 



கேட்டால், அப்படியா? அது என்ன ? 



எந்தக் கடையில் கிடைக்கும் என்று 



கேட்கும் அளவிற்கு புத்தியில் 



ஞானம் படித்த அறிவு ஜீவிகள் தான் 



இந்த முதலாளிகள் வர்க்கம். 



இவர்களுக்காகவேதான் கவிஞர் 



கண்ணதாசன் ஒரு பாடல் ஒன்று 



புனைந்து இருப்பார். அந்தப்பாடல்:- 



புத்தி உள்ள மனிதன் எல்லாம் 



வெற்றி காண்பதில்லை !!                   



வெற்றி பெற்ற மனிதன் எல்லாம் 



புத்திசாலி இல்லை !! என்று ) நீ 



என்ன ஊமையா ? கேட்டார் 



சிங்கமுத்து. அதற்கும் அந்தப்புதிய 



ஆள் இல்லை என்பதற்கு 



அடையாளமாக தனது தலையை 



இருபுறம் ஆட்டிட, சற்றே கடுப்பாகிப் 



போன சிங்கமுத்து, ஆமாண்டா !! 



உன் பேர் என்னடா! வாயைத்திறந்து 



பதில்சொல்லுடா ? மடையா? 



(பாருங்கள் எத்தனை "டா"க்கள் 



என்று) உடனே சட்டென்று பதில் 



தந்தான் அந்தப் புதிய ஆள். எம் பேரு 



பெருமாள் என்று சொன்னான் 



அவன். உடனே அதற்கு சிங்கமுத்து 



வாய்விட்டு சிரித்துவிட்டு, 



என்னது...என்னது...பெருமாளா? அட 



பைத்தியக்காரா? இந்த ஊரிலேயே 



நான்தாண்டா பெருமாள். நீ என்ன 



என்னையைவிட பெரிய ஆளா. 



ஏண்டா வேலைக்கார நாயே. இந்த 



பாரு.. உனக்கு 4 நாள் லீவு தாரேன். 



உனக்கு எந்த ஊரில வச்சு பேர் 



வச்சானுகளோ உன் ஆத்தா,அப்பன் 



அங்கே போயி பணிவான, 



 அடக்கமான பெயரா வச்சுகிட்டு 



வேலைக்கு வா. போடா..போடா.. 



அந்தப் பக்கம் என்று ஒரு 



பிச்சைக்காரனை விரட்டுவது போல 



விரட்டினார் சிங்க முத்து. லேசான 



புன்னகையை தனது இதழ்களில் 



தவழ விட்டபடியே வெளியே வந்த 



பெருமாள், நேராகத் தன்னை 



வேலைக்குச் சேர்த்துவிட்ட 



அழகுமுத்துவின் வீட்டிற்கு சென்று 



நடந்த விஷயங்கள் அனைத்தையும் 



சொன்னான் பெருமாள். கோபம் 



அடைந்த அவர், அப்படியா 




சொன்னான் அந்தத் திமிர் பிடிச்ச 



சிங்க முத்து. அவன் சிங்க முத்து 



இல்லடா. அவன் இனிமேல அசிங்க 



முத்துதான். இங்கே வா என்று 



பெருமாளை அழைத்தவர், அவன் 



காதினுள் ஏதோ கிசுகிசுத்தார். நாலு 



நாள் கழிச்சுபோப்பா வேலைக்கு. 



அப்ப அவன் கேப்பான்.என்ன புதுப் 



பேர் வச்சிருக்கே என்று? நான் இப்ப 



சொன்ன பெயரை நீ மறக்காமல் 



அவனிடம் சொல்லு. அப்பனாச்சும் 



அவனுக்கு புத்தி வருதா 



பாப்போம்.வழியனுப்பி வச்சார் 



அழகுமுத்து. 4 நாள் கழிச்சு 



மண்டிக்கு வேலைக்குப் போனான் 



பெருமாள். அங்கே முதலாளி 



ஆசனத்தில் அமர்ந்து இருந்த 



சிங்கமுத்து, அவனிடம் வாடா என் 



ராசாக்குட்டி.. என்னடா... நான் கேட்ட 



மாதிரி பேரை மாத்தி 



வச்சுக்கிட்டாயா? நல்ல பணிவான 



பேர் தானேடா ?.    வந்த சிரிப்பை 



மிகவும் சிரமப்பட்டு 



அடக்கிக்கொண்டு பதில் 



சொன்னான் அந்தப் பழைய 



பெருமாள் என்ற பேர் கொண்டிருந்த 



தொழிலாளி. அவன் சொன்ன அந்தப் 



புதிய பெயரைக் காதால் 



கேட்டவுடன் சிங்கமுத்து அப்படியே 



கல்லாவில் மயக்கம் போட்டு 



விழுந்துவிட்டார். என்னங்க இது 



அநியாயம். பெயரைக்கேட்டா 



மயக்கம் வருதா? அது என்னங்க 



அப்படிப் பேரு ? நீங்க 



கேக்கிறதுலேயும் நியாயம் 



இல்லாமல் இல்லை. அய்யா 



சஸ்பென்ஸ் எல்லாம் வேணாம். 



படக்குனு பேரைச் சொல்லுங்க. 



சொல்றேன் தம்பிகளா. 



சொல்லத்தானே போறேன். 



சொல்லாங்காட்டி என்னைய நீங்க 



என்ன விடவா போறீங்க. விடை 



கடைசியில் குறிப்பிட்டு 



இருக்கிறேன். பார்த்து தெரிந்து 



தெளிவு பெறுங்கள். இவ்வளவு 



பெரிய கட்டுரையை, கதையைப் 



படிச்ச எல்லோருக்கும் வணக்கம். 



அன்புடன். மதுரை TR.பாலு                        




பெயருக்கான விடை :-  அய்யா ! 



எங்க குலசாமி முன்னாலேதான் 



போயி நீங்க சொன்னமாதிரி 



என்னோட பேரை மாத்திட்டு 



வந்துட்டேன். எம் பேரு...எம் 



பேரு..எம் பேரு...                             



சிங்கமுத்து :-  என்ன்னடாபயம்.நான் 



ஒண்ணும் உன்னைய அடிக்க 



மாட்டேன் சொல்லுடா...                           



புதியவன் :- அய்யா இனிமேல எம் 



பேரு வந்து... " பெத்த பெருமாளு " 



சாமியோய்!! என்றானாம். 



(இதைக்கேட்ட சிங்கமுத்து 



அப்படியே கல்லாவின்மேலேயே 



மயங்கி வீழ்ந்தார் .)                                     




 ஆகா !! இது எப்படி இருக்கு !!     



இத்துடன் என் " திமிர் பிடித்த 



முதலாளியும் !! அவரை எதிர்         



கொண்ட தொழிலாளியும் !!      



என்ற சிறுகதை. மீண்டும் நாளை 



எனது அடுத்த பதிவினில் உங்கள் 



அனைவரையும் சந்திக்கிறேன். 



 நன்றி !!  வணக்கம் !!                         



 அன்புடன். மதுரை T.R. பாலு.