உடல்மண்ணுக்கு!!உயிர்தமிழுக்கு!!
உலகம் முழுவதும் வாழ்ந்துவரும்
எனது அன்புத் தமிழ் உடன்பிறப்புகளே !!
இன்றையதினம் நான் உங்களுக்கு வழங்க
இருக்கும் இந்தக்கட்டுரையில் எந்தக் கருத்தை
விளக்கிட இருக்கிறேன் என்று சொன்னால்
அதுதான் நமது இந்துக்கோவில்களில் உள்ள
வெளிப்புறச் சுவர்களுக்கு ஏன் சிகப்பு மற்றும்
வெள்ளை வர்ணங்கள் பூசப்பட்டு உள்ளன ?
அந்தக்காரணம் உங்களில் யாருக்காவது
தெரியுமா என்று ஒரு கேள்வியுடனேயே எனது
இந்தக் கட்டுரை ஆரம்பம் ஆகின்றதுஅன்பர்களே
தெரிந்திருந்தால் சரி. தெரியாதவர்களுக்கு நான்
தரும் விளக்கம் இதோ :-
அன்பர்களே !! இந்த இரண்டு வர்ணங்களான
சிகப்பு மற்றும் வெள்ளை இவைகளுக்குள்ளாகத்
தான் மனித ஜனனமே அடங்கி உள்ளது. ஆம்
அன்பர்களே !! உங்களுக்குப் புரிய வில்லை !!
இதில் வெள்ளை என்பது ஆண்சுக்கிலத்தின்
நிறத்தையும் சிகப்பு என்பது பெண்உதிரத்தின்
நிறத்தையும் இங்கே குறிக்கின்றது. இந்த
இரண்டும் ஒரு ஆணிடம் இருந்து வெள்ளை நிற
சுக்கிலமும் அது போய் ஒரு பெண்ணின்
கருவறையில் உள்ள சினைமுட்டைகள் சேர்ந்து
உள்ள உதிரத்தின் நிறமான சிகப்புடன்
இணைந்தால் மட்டுமே எப்படி ஜீவன் இந்த
பூமியில் கருவாகி பின்னர் உருவாகிறதோ அதை
நினைவு படுத்தும் விதமாகவே கோவிலின்
வெளிப்புறச் சுவர்களுக்கு அந்த இரண்டு
வர்ணங்களையும் பூசி அந்தந்த ஊரில்
வாழ்ந்திடும் ஆண்களும் பெண்களும் அந்த
இந்து திருக்கோவில்களுக்குச் சென்று எல்லாம்
வல்ல அந்த இறைவனின் நாமத்தை பாடி பயன்
பெறவேண்டும் என்றேதான் கோவில்களின்
வெளிப்புறச் சுவர்களுக்கு சிகப்பு மற்றும்
வெள்ளை வர்ணங்கள் பூசப்படுகின்றது இந்தக்
கருத்தை எனக்கு கூறியவர் எனது ஏழாவது
வகுப்பில் எனக்குத் தமிழ் பாடம் நடத்திய
(அப்போது எனக்கு வயது 11-இன்றைக்கு
கிட்டத்தட்ட 5௦ ஆண்டுகளுக்கு முன்பு நடந்த
சம்பவம் இன்றளவும் என் மனமதில் பசுமரத்து
ஆணிபோல பதிந்து இருக்கின்றது)மறைந்த
ஊமச்சிகுளம் K.இராம அய்யர் ஆவார்.
அன்பர்களே !! கட்டுரை இத்துடன் நிறைவு
பெறுகின்றது. அடுத்து விரைவினில்சந்திப்போம்.
நன்றி !! வணக்கம் !!
அன்புடன் மதுரை TRபாலு.
குட் அருமை...
ReplyDelete