Wednesday, 26 February 2014

பிள்ளைகள் பிறப்பது எல்லாம் பூர்வ புண்ணிய பலன்களால் மட்டுமே !! இது ஒரு ஜோதிடம் சம்பந்தப்பட்ட விளக்க கட்டுரை !!






உடல்மண்ணுக்கு!!உயிர்தமிழுக்கு!!



உலகம் முழுவதும் வாழ்ந்து வரும்



என் அன்புத் தமிழ் உடன்பிறப்புகளே!!



உங்கள் அனைவருக்கும் வணக்கம்.


அன்பர்களே !!                                             



கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக 


நான் ஜோதிடத்தில் ஆராய்ச்சி செய்தவன் 


நான். மலேசியா நாட்டில் கோலாலம்பூர் 


நகரில் ஏறத்தாள  ஐந்து ஆண்டுகளுக்கு 


மேலாக அங்குள்ள மிகப் பெரிய அளவில் 


(மந்திரிகள், டத்தோக்கள் செல்வந்தர்கள் )


வாழ்ந்திடும் மனிதர்களுக்கு ஜோதிடம் 


சொன்னவன் அடியேன் என்பதை இந்த 


தருணத்தில் உங்களது கவனத்திற்கு 


கொண்டு செல்வதில் நான் உள்ளபடியே 


மிகவும் பெருமைப்படுகிறேன்.



எனவே நான் எனது இந்தக் கட்டுரையை 


ஜோதிடம் கலந்த ஒரு கட்டுரையாக இங்கே 


தருகின்றேன் என் அன்புத் தமிழ் நெஞ்சங்களே !!


பொதுவாக நம்மில் ஒரு சொல்வழக்கு என்று 


உண்டு. அது என்னவென்றால் :-



ஒருவருக்குப்பிள்ளைகள் மிகதிறமைசாலியாக,


நல்ல அறிவுள்ளவனாக, ஆற்றல் மிக்கவனாக,


விளையாட்டு வீரனாக, அரசியல் வித்தகனாக,


நடிகனாக, வசனகர்த்தாவாக, இதுபோல 


சமூகத்தில் குறிப்பிட்டுப் பேசப்படும் ஒரு தனி 


மனிதனாக பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து வந்தான் 


என்றால் என்ன சொல்வார்கள் நாட்டில் உள்ள 


மக்கள் :-



உம்....எல்லாம் அவங்க அப்பன் கோவணம் 


அவுத்த நேரம்தாண்டா !! காரணம் .......



என்று சொல்வது நம் மக்களின் வழக்கம். இது 


உண்மையா ? இல்லை. இல்லவே இல்லை. 


இதற்கு முழுக்க முழுக்க காரணம் இந்தப் 


பிள்ளையின் தாய்,தந்தை பூர்வ ஜென்மத்தில் 


செய்த அரும் பெரும் புண்ணியங்கள்தான் 


காரணம் என்றே ஜோதிட சாஸ்திரங்கள் நமக்கு 


எடுத்து உரைக்கின்றன. 



அன்புத் தமிழ் நெஞ்சங்களே !! பிரபல ஜோதிட 

சாம்ராட் சக்க்ரவர்த்தி வராஹி மிஹிரர் தான் 


எழுதிய ஜோதிட கிரந்தம் என்ற அந்த மிகப் 


பழமை வாய்ந்த நூலில் என்ன 


சொல்லியிருக்கிறார் என்றால் :-



ஒவ்வொருவருடைய ஜாதகத்திலும் 


அவரவர்கள் ஜனன கால லக்கினத்தில் இருந்து 


5ம் இடம்தான் புத்திர ஸ்தானம் என்பது. இந்த 


இடம் வெறும் புத்திர ஸ்தானம் மட்டும் அல்ல. 


இதோடுகூட இந்த இடத்திற்கு பூர்வபுண்ணிய 


ஸ்தானம் என்று மற்றும் ஒருபெயரும்உண்டு......... 


என்று மிகமிகத் தெளிவாக அங்கே அந்த நூலில் 


ஜோதிட சாம்ராட்வராஹிமிஹிரர்எழுதியுள்ளார் 


என்று, எனக்கு ஜோதிடம் பயிற்றுவித்த 


கற்றுக்கொடுத்த எனது வணக்கத்திற்கு உரிய 


ஆசான் மேன்மைதங்கிய வாடிப்பட்டி 


திரு.இராமமூர்த்தி சேர்வை அவர்கள் 


அவ்வப்போது ஜோதிட வகுப்புகள் எடுக்கும் 


நேரமதில் குறிப்பிடுவது உண்டு அன்பர்களே !! 


ஒவ்வொரு தாயும்,தகப்பனும், போன 


ஜென்மத்தில் எந்த அளவுக்கு புண்ணியங்கள் 


செய்துள்ளனரோ, அந்த அளவுக்கு மட்டிலுமே 


பிரதிபலனாக அவர்களுக்கு பிள்ளைகள் 


பெறக்கூடிய பாக்கியங்களை அந்த எல்லாம் 


வல்ல இறைவன் நமக்குத் தருகிறான் என்பதே 


முற்றிலும் உண்மை !!.முழுக்காலும் உண்மை !! 


எக்காலமும் இது ஒன்றே உண்மையாகும் !! 


இதில் மாற்றுக்கருத்துக்கு எள்ளின் முனையளவு 


கூட இடம் கிடையாது என்பதே எனது கருத்தும் 


ஆகும். எனவே நான் இந்த இடத்தில் என்ன 


குறிப்பிட விரும்புகிறேன் என்று சொன்னால்,


அன்பர்களே !! நாம் போன ஜென்மத்தில் 


என்னென்ன பாவங்களைச் செய்திருந்தோமோ 


அதனை நாம் அறிந்திட வாய்ப்புகள் இல்லை. 


ஆதலால் இந்த நடப்புஜென்மத்திலாவது 


நாலுபேருக்குநல்லதுசெய்து புண்ணியங்களைத் 


தேடிக்கொள்வோம். இது நம் அடுத்த 


ஜென்மத்திலாவது நல்ல பிள்ளைகளைப் 


பெற்று வளர்த்து ஆளாக்கிட நமக்கு உற்றதுணை 


புரியும் என்பதில் சந்தேகமே இல்லை.




மீண்டும் எமது அடுத்த ஜோதிடம் சம்பந்தப்பட்ட 


கட்டுரையில் நாம் ஒன்று கலந்திடுவோம். 


அதுவரை உங்கள் அனைவருக்கும் நன்றி 


பாராட்டி விடைபெறுவது உங்கள் அனைவரின் 


அன்பையும்,நட்பையும்,நல்லதோர் 


பாராட்டுக்களையும் பெற்ற அன்புத்தமிழ் உடன் 


பிறவாசகோதரன் :- 



மதுரை T.R. பாலு.


No comments:

Post a Comment