(தமிழ் சினிமாத் தொழில் சம்பந்தப்பட்ட கட்டுரை இது) மனுசனை மனுசன் சாப்பிடுறாண்டா தம்பிப் பயலே !! இது மாறுவதெப்போ ? தீருவதெப்போ ? நம்ம கவலை !!
உடல்மண்ணுக்கு!!உயிர்தமிழுக்கு!!
உலகம் முழுவதும் வாழ்ந்து வரும்
என் உயிரினும் மேலான அன்புத்
தமிழ் உடன் பிறப்புக்களே !!உங்கள்
அனைவருக்கும் இனிய இதயம்
கனிந்த காலை வணக்கம் !!
அன்பர்களே !! கட்டுரைக்கு நான்
இங்கே தலைப்பாகக் கொடுத்து
இருப்பது அந்தநாள் பொதுஉடமைக்
கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண
சுந்தரத்தின் பாடல் வரிகளுள் முதல்
வரியே ஆகும். மறைந்த சாண்டோ
சின்னப்ப்பாத் தேவர் தயாரித்து
புரட்சி நடிகர் M.G.R. நடித்து
வெளிவந்த "தாய்க்குப்பின் தாரம்"
என்ற திரைப்படத்தில்
T.M.சவுந்திரராஜன் பாடிய தேனினும்
இனிய தெள்ளுதமிழ்ப் பாடல் அது.
அன்றைக்கு கவிஞர் இந்தப் பாட்டை
மிராசுதார்கள், பெருநிலக்கிழார்கள்
இவர்களுக்கும் இவர்களது ஆதிக்க
உணர்வுகளை எதிர்த்தும் குரல்
கொடுக்கவிவசாயதொழிலாளர்கள்
பொங்கி எழவேண்டும் என்றஅவரது
எண்ணத்தின் விளைந்த புரட்சி
சிந்தனையில்உதயம்ஆனது.ஆனால்
இன்றைக்கு இதே பாடல் நமது
தமிழ் சினிமாத் தொழிலுக்காக
இந்த வரிகளை உபயோகிக்க
வேண்டியுள்ளதே என்பதனை
எண்ணுகின்றபோது எனக்கு
வேதனையும் பெருமூச்சும் கண்ணீர்
ரூபத்தில் வெள்ளமெனப்
பெருக்கெடுத்து ஓடுகிறது
என்பதுதான் உண்மை
எனது அன்புத் தமிழ் நெஞ்சங்களே!!
ஆம் !! நான் சொல்வது முற்றிலும்
உண்மை. முழுக்காலும் உண்மை.
உண்மையைத் தவிர வேறு ஒன்றும்
இல்லை. இல்லை.இல்லவே
இல்லை.அன்பர்களே !!
இன்றையதினம் நமது
தமிழ்த் திரை உலகினில் புதிது
புதிதாக பல்வேறு கலைஞர்கள்,
பலபல துறைகளில் மிக வேகமாக
முன்னேறி வருகின்ற ஒரு
காலகட்டத்தில் நாம் வாழ்ந்து
கொண்டு இருக்கின்றோம்
அது இயக்குனர் துறையாகட்டும்,
இல்லைஇசைஅமைப்புத்துறையாக
இருக்கட்டும்
இல்லை இது போல நடிப்புத்
துறையாகட்டும் எல்லாவற்றிலும்
புதிய இளைஞர்கள் தத்தமது
திறைமை களை வெளிப்படுத்தி
புது சாதனைகள் பல புரிந்திடத்
தயார் நிலையினில் வரும்
வேளையில் அவர்கள் எண்ணம்
நிறைவேறும்வகையில்இன்று
அவர்களால் தயாரிக்கப்படும்
புதிய திரைப்படங்களைஅவர்களால்
வெளியீடு செய்திட இயல்கின்றதா ?
என்று கேட்டால் அதுதான் இல்லை
அன்பர்களே !! எங்கும் சிக்கல்
எதிலும் சிக்கல்.
படங்களைத்திரையிடும் சினிமாத்
தியேட்டர்களைத் தங்களது
கட்டுப்பாட்டினில்
வைத்திருக்கும் பல்வேறு
கோடீஸ்வர நிறுவனங்கள்
அவர்கள் விரும்பும் மிகக் குறைந்த
விலையில் புது தயாரிப்பாளர்கள்
படத்தை விற்றுவிட்டால்
இங்கே எந்தவிதமான
பிரச்சினையும் இல்லை. ஆனால்
அதற்கு மாறாக, அடிமாட்டு
விலைக்கு இந்த இளைஞர்கள்
தயாரித்த படங்கள் விலைக்கு
கேட்கப்படும்போது
அவர்கள் அடைந்திடும் மனத்
துயருக்கும் கவலைக்
கண்ணீருக்கும் என்றென்றும்
குறைவு என்பதே கிடையாது
அன்பர்களே. இப்படி ஆதிக்க
சக்திகளின் கைகளில்
நமது தமிழ்த் திரைப்பட உலகம்
அகப்பட்டுக் கொண்டு ஆண்டுகள்
பல ஆயிற்று. ஆனால்
அவர்களை எதிர்த்து சிறுபடத்
தயாரிப்பாளர்களால்
எதுவுமே அந்தக் கோடீஸ்வர பட
வெளியீட்டு நிறுவனங்களை
எதுவுமே செய்திட முடிவதில்லை .
இதுதான் உண்மை. படம்
தயாரித்த செலவுக்கு இந்தப்
பெருமுதலாளிகள் வாங்கினால்
அந்தக் கணமே இந்தப் புதுப்பட
முதலாளிகள் மிகவும் புண்ணியம்,
பாக்கியம் செய்திருக்கிறார்கள்,
பூர்வ புண்ணியத்தில்
என்றுதான்எண்ணவேண்டி உள்ளது.
எவனாவது கைநட்டப்பட்டுத்
தொழில் புரிந்திட இந்த நாட்டினில்
முன்வருவார்களா? என்பதை
சிந்தித்துப் பார்த்திட
வேண்டும் என் உயிரினும் மேலான
அன்புத் தமிழ் நெஞ்சங்களே.
இன்றையதினம் ஏறத்தாள இருநூறு
படங்களுக்கு மேல் படம்
முடிவடைந்து வெளியீட்டிற்காகக்
காத்திருக்கும் சூழலில்
நான் இந்தக் கட்டுரையை
அவர்களது சார்பாக
எழுதுகின்றேன்.
இப்போது பட்டுக்கோட்டை,
விவசாயத்தொழிலாலர்களுக்காக
அன்னார் (பட்டுக்கோட்டையார்)
எழுதிய பாடலின்
சிலவரிகளை எழுதுகின்றேன்.
அதன் பின்னர் இந்த சினிமாத்
தொழிலாளர்களுக்காக அதே
பாடலை சற்று மாற்றி எழுதி, இந்த
இரண்டு பாடல்களையும் உங்களது
சீரிய கவனத்திற்குக் கொண்டு
வருகின்றேன்.விவசாயிகளுக்காக
பட்டுக்கோட்டைஎழுதிய பாடல் :
வானம் பொழியுது பூமி விளையுது
நாட்டிலே !!
நாம வாடி வதங்கி
வளப்படுத்துறோம் வயல !!
ஆனா தானியமெல்லாம் வேற
ஒருத்தன் கையிலே !!
இது தகாதுன்னு எடுத்துச்
சொல்லயும் புரியலே !!
அதாலே மனுசனை மனுஷன்
சாப்பிடுறாண்டா
தம்பிப் பயலே !!
இது மாறுவதெப்போ ?
தீருவதெப்போ நம்ம கவலை!!
அன்பர்களே!! இதே பாடலை
இன்றையதினம்
இங்கே உள்ள உழைக்கும் புது
சினிமாத்தொழிலாளர்களுக்காக
நான் சற்றே மாற்றி எழுதிய பாடல்
இது:-
கதையை எழுதுறோம்!!
எடுத்து முடிக்கிறோம் !!
இந்த ஊரிலே !!
நாம இராத்திரி பகலா உழைச்சுக்
களைக்கிறோம் ஸ்டுடியோவிலே !!
ஆனா பட வெளியீடுமட்டும்
பெருமுதலாளிங்க கையிலே !!
இது தகாதுன்னு எடுத்துச்
சொல்லியும் அங்கே புரியல்லே !!
அதாலே மனுசனை மனுஷன்
சாப்பிடுறாண்டா
தம்பிப் பயலே !!
இது மாறுவதெப்போ ?
தீருவதெப்போ?
நம்ம கவலை !!
எனவே !! அன்பர்களே நமது தமிழ்த்
திரையுலகின் இளம், புது,உத்வேகம்
நிறைந்த நல்லநல்ல
கலைஞர்களை, தொழில்நுட்ப
வல்லுனர்களை அந்த எல்லாம்
வல்ல இறைவன்தான் காப்பாற்றிட
வேண்டும் என்று நன்றி கூறி இந்தக்
கட்டுரையை நான் இத்துடன் இங்கே
நிறைவு செய்கின்றேன்
நன்றி !! வணக்கம் !!
அன்புடன் மதுரை T.R.பாலு.
No comments:
Post a Comment