Thursday, 27 February 2014

கம்பம் நகரின் சிறப்பு என்ன என்று உங்களுக்குத் தெரியுமா நேயர்களே ?






உடல்மண்ணுக்கு!!உயிர்தமிழுக்கு!!



உலகம் முழுவதும் வாழ்ந்துவரும்                                 



என் அன்புக்கும் பாசத்திற்கும் உரிய                             



அன்புத்தமிழ் உடன்பிறப்புகளே !!                                 



உங்கள் அனைவருக்கும் வணக்கம்.                             



இன்றைய தினம் நமது கட்டுரையில்                           



நான் உங்கள் அனைவருக்கும் தெரிவிக்க உள்ள 



கருத்து என்னவென்றால், அது முன்பு மதுரை 



மாவட்டத்தில் இருந்ததும் தற்போது தேனீ 



மாவட்டத்திற்கு மாற்றப்பட்டதும் ஆன கம்பம் 



நகரைப்பற்றிய ஒரு சிறப்புக் கட்டுரையே ஆகும். 



அது  1991ம் ஆண்டு. தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு 



தேர்தல் நடைபெற இருந்த காலம். அப்போது 



முத்தமிழ் வித்தகர், முதுபெரும் தமிழ்நாட்டின் 



அரசியலில் வாழும் ஒரே தலைவர் கலைஞர்             



திரு மு.கருணாநிதி அவர்கள் தனது தேர்தல் 



பிரச்சாரத்தை  துவக்கிட,ஆரம்பிக்க, அவர் 



தேர்ந்து எடுத்த நகர்தான் கம்பம் ஆகும். திராவிட 



முன்னேற்றக் கழகத்தின் முன்னணித் 



தலைவர்களாலேயே இதைப் புரிந்துகொள்ள 



முடியாமல் திகைத்து இருந்த காலம் அது. 



என்னடா இது ? தமிழகத்தில் எத்தனையோ 



நகரங்கள் இருந்திடும்போது, ஏன் தலைவர் 



கலைஞர் அவர்கள் இந்த கம்பம் நகரைத் தேர்ந்து 



எடுத்தார் என்பது புரியாமல் குழம்பிக்கொண்டு 



இருந்தனர். அவர்கள் அனைவரின் 



மனக்குழப்பத்தை தலைவர் கலைஞர் அவர்கள் 



பொதுக்கூட்ட மேடையில், தனது  உரையினை



அவர்  நிகழ்த்துகின்ற பொழுது தீர்த்து வைத்தார் 



என்பது காலம் நமக்கு எடுத்துக் கூறிடும் ஒரு 



வரலாற்று நினைவலைகள். கலைஞர் அவர்கள் 



தமது தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அங்கே 



உரையாற்றிடும்போது இதைப்பற்றி அவர் அன்று 



குறிப்பிட்டதை நான் இங்கே இன்று உங்களுக்கு 



வழங்குவதில் மிகவும் மட்டற்ற மகிழ்ச்சி 



அடைகின்றேன் அன்பு உள்ளங்களே !!                 



தலைவர் ஆற்றிய உரை இதோ :-                     



அன்பிற்கினிய ஆன்றோர் பெருமக்களே !! 



அறிவிற்சிறந்த சான்றோர் பெருமக்களே !! 



தாய்மார்களே !! இளம் வாலிப உள்ளங்களே !! 



நாளைய உலகின் நம்பிக்கை நட்ஷத்திரங்களே !! 



என் உயிரினும் மேலானஅன்பு உடன்பிறப்புகளே!!



உங்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த 



வணக்கத்தை நான்இங்கேதெரியப்படுத்திடும்  



இந்த நல்ல வேளையில் இந்த 1991ம் ஆண்டு 



நடைபெற உள்ள சட்டமன்றத்திற்கான தேர்தல் 



பிரச்சாரக்கூட்டத்தை நான் ஏன் இந்தக் கம்பம் 



நகரினில் இருந்து துவக்குகிறேன் என்று 



கேட்டால் ஒரு இயக்கம் தனது 



வெற்றிக்கொடியினை ஏற்றி மகிழ்வதற்கு ஒரு 



கம்பம் தேவை.அந்த நமக்கு கிடைத்திட 



இருக்கும் இந்த சட்டமன்ற தேர்தல் வெற்றியை 



கொடியாக ஏற்றிட நான் இந்தக் கம்பம் நகரின் 



வெற்றியை நல்லதோர் கம்பமாக பறக்கவிட 



எண்ணியே முதன்முதலாக தேர்தல் பிரச்சாரக் 



கூட்டத்தை இந்த கம்பம் மாநகரிலிருந்து 



துவக்கிட எண்ணி முடிவெடுத்து இங்கிருந்து 



திராவிட முன்னேற்றக் கழகப் 



பொதுக்கூட்டங்கள் நடத்திட ஆரம்பித்து 



இருக்கிறேன் (இவ்வாறு தலைவர் பேசி 



முடித்தவுடன் கூட்டத்தின் கரவொலி அடங்கிட 



ஐந்து மணித்துளிகள் ஆகின) என்னே ஒரு 



அமைதியான அரசியல் கணிப்பு. வாழ்க அவரது 



தொண்டு.வளர்க அவர்தம் தமிழ்மொழி நினைவு. 



 நன்றி !! வணக்கம்!!                                                             



 அன்புடன். மதுரை T.R.பாலு.


No comments:

Post a Comment