Friday, 21 February 2014

வெட்கமாக இருக்குது !! எனக்கு வெட்கமாக இருக்குது !! தமிழ்நாட்டில் ஆளும் கட்சியின் பார்வையில் இருப்பது , எதிர்க்கட்சியா ? அல்லது எதிரிக் கட்சியா ?









உடல்மண்ணுக்கு!!உயிர்தமிழுக்கு!!



உலகம் முழுவதும் வாழ்ந்து வரும் 



என் அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!



உங்கள் அனைவருக்கும் வணக்கம்.


இன்றையதினம் நம் தமிழகத்தில் 


ஆளும் கட்சியின் பார்வையில் 


(சட்டமன்றத்திற்கு உள்ளேயும் சரி 


வெளியேயும் சரி)இவர்களைத்தவிர 


இருக்கும் அனைத்துக் கட்சிகளையும் 


எதிரிக்கட்சிகளாகவே பாவிக்கும் குணம்



மட்டும்தான் காணப்படுகிறது. தே.மு.தி.க.


வின் வாக்கு வங்கிகளில் உள்ள ஓட்டுக்கள் 


மட்டும் இல்லை என்று சொன்னால் இந்த 


அ.இ.அ.தி.மு.க. ஆளும் கட்சியாக 


வந்திருக்கவே முடியாது என்பதுதான் 


அரசியல் ஆர்வலர்களின் கணக்கு. அந்த 


கட்சியின் தலைவர் திரு விஜயகாந்த் இன்று 


என்னபாடு படுகிறார் என்பது நாடும் வீடும் 


அறிந்த உண்மை. சேராத இடந்தனிலே 


சேர வேண்டாம் என்று அவ்வை சொன்ன 


பழமொழி எவ்வளவு உண்மை என்பதை 


விஜயகாந்த் இப்போதாவது புரிந்து கொண்டு 


இருப்பார் என்று கருதுகிறேன். அவர் அதனை 


உண்மையிலேயே புரிந்தவர் என்றால் எதிர்


வரும் பாராளுமன்றத் தேர்தலில் அவர் 


யாருடன் கூட்டணி வைத்துக்கொள்ள வேண்டும் 


என்பது பத்து வயதுப் பையன்கூட சொல்லுவான் 


அது திராவிட முன்னேற்றக் கழகம் ஒன்றுதான் 


என்று. ஆனால் என்ன செய்யப்போகிறார்என்பது 


கடவுளுக்கே வெளிச்சம். அந்த தே.மு.தி.க. தவிர 


ஏனைய கட்சிகளான காங்கிரஸ்,முஸ்லிம்லீக், 


புரட்சி தமிழகம்,விடுதலை சிறுத்தைகள் கட்சி,


மனித நேய மக்கள் கட்சி என்று அங்கிங்கு 


எனாதபடி எல்லா கட்சிகளுமே ஆளும் 


கட்சியின் பார்வையில் கண்ணோட்டத்தில் 


எதிரிக் கட்சிகளே அன்றி எதிர்க் கட்சி அல்ல.




ஆனால் கம்யூனிஸ்ட்கள் மட்டும் தலை 


தப்பிய கட்சிகள். அது வலதானாலும் சரி 


அல்லது இடது ஆனாலும் சரி இவர்கள் 



அகிலஉலக கட்சியாக ஒருகாலத்தில் 



இருந்தவர்கள்  அந்த கம்யூனிஸ்ட்டுக்கள் 


இன்றையதினம் ஆளும்கட்சியின் 


அடிவருடிகளாக, அடிமைகளாக, ஆனதால் 



இவர்கள் இப்போதெல்லாம் கம்யூனிஸ்ட்கள் 


என்று அழைக்கப்படுவதே இல்லை. இவர்களை 


மக்கள் கமிஷன் ஏஜெண்டுகள் என்றுதான் 


அழைக்கிறார்கள்.ஆனால் அந்தக்கட்சியின் 


அடிமட்டத் தொண்டர்கள் எவரும்மாறாமல்அந்த 


பொதுவுடைமைசித்தாந்தத்தில்இருந்து  


அவர்களை வழிநடத்திக்கொண்டு 


செல்லவேண்டிய தலைமையில் இருக்கும் 


பெரும்பான்மையான தலைவர்கள் ஆளும் 


கட்சியின் அடிமைகளாக ஒன்றிரண்டு  சீட்


(பாராளுமன்ற ராஜ்ய சபா ) பெறுவதற்காக 


மாறி வருவதையும் மண்டிபோடுவதையும்


உண்மையான கம்யூனிஸ்ட் தொண்டர்கள் 


ஏற்றுக்கொள்ள அவர்கள் மனசாட்சி என்பது 


மறுத்து வருகின்றது என்பது உண்மையிலும் 


உண்மை என்றுதான் கூறிட வேண்டியுள்ளது.


ஏன் என்றால் இங்கே நிலைமை அப்படி உள்ளது.


லட்சியமா அல்லது லட்சங்களாஎன்றால்அங்கே 


வெல்வது என்னவோ லட்சங்களாகத்தான்  


இருக்கிறது என்பதே நிஜம்.  ஆனால் முன்பு 


பெருந்தலைவர் காமராஜர் காலத்தேயும் சரி 


அதன்பின்னர் தலைவர் கலைஞர் காலமும் 


சரி, ஆளும்கட்சி எதிர்வரிசையில் அமர்ந்து 


உள்ளவர்களை எதிர்க் கட்சியாகத்தான் 


பாவித்து வந்தது என்பது வரலாறு நமக்கு 


எடுத்து உரைக்கும் உண்மை. இங்கே 


வயதுக்கு எல்லாம் ஒரு மதிப்பும் இல்லை 


மரியாதை என்பது சிறிதளவுகூட இல்லவே 


இல்லை. இதை சொல்லிடவே எனக்கு 


வெட்கமாகத்தான் இருக்கிறது. ஏய் !!


கருணாநிதி என்று ஆளும் கட்சியால் அதன் 


தலைமையால் சட்ட மன்றத்திலேயே 


அழைக்கப்படும் அநியாயம் இருக்கிறதே 


அப்பப்பா உச்சரிக்கவே நா நடுநடுங்குகிறது 


ஆனால் பெரும்தலைவர் காமராஜர் 


முதல் அமைச்சராக அமர்ந்திருந்த அந்தக் 


காலத்திலெல்லாம் அவர் தி.மு.க. வை 


மதிப்போடும் மரியாதையோடுமே நடத்தி 


வந்திருந்தார் என்பது வரலாறு நமக்கு 


கூறிடும் உண்மை. ஒரு முறை தலைவர் 


கலைஞர் அவர்களின் அன்புத் தாயார் 


அஞ்சுகத்தம்மாள் இயற்கை எய்திவிட்ட 


சூழலில் கலைஞர் வெளியூரில் ஒரு 


பொதுக்கூட்டத்திற்கு திருச்சி வரை 


சென்றிருந்த நேரமது. செய்தியைக் 


கேட்டவுடன் ஓடோடி வந்த முதல்நபர் 


யார் தெரியுமா அன்பர்களே !! பெருந்தலைவர் 


காமராஜர்தான். அவர் அப்போது தமிழ்நாட்டின் 


முதலமைச்சர் பொறுப்பில் இருந்தகாலம்.


திரு மு.க. அங்கே இல்லை என்பதை அறிந்த 


கர்மவீரர் இறுதி சடங்கிற்கு என்னென்ன 


செய்திடவேண்டுமோ அவ்வளவையும் 


கலைஞர் வருவதற்கு முன்னமேயே செய்து 


முடித்துவிட்டு கலைஞர் வந்தவுடன் இறந்த 


அஞ்சுகத்தம்மையாரை அடக்கம் மட்டுமே 


செய்திடவேண்டிய அத்துணை வேலைகளையும் 


பெருந்தலைவர் காமராஜரே செய்துமுடித்த 


அந்தப் பெருந்தன்மை எங்கே ? இன்றைய 


ஆட்சியாளர்களின் சிறுமதி படைத்திட்ட


அனைத்து செயல்களும் எங்கே ?  நினைத்தாலே 


எனக்கு வெட்கமாக இருக்குது !!  


நன்றி !! வணக்கம் !!



மதுரை T.R.பாலு.

No comments:

Post a Comment