Friday, 7 February 2014

மறைந்த நடிகர் நடிகவேள் M.R.ராதா வழங்கிய தீர்ப்பு !!--( இது எப்படி இருக்கு ? )








உடல்மண்ணுக்கு!! உயிர்தமிழுக்கு!!



உலகம் முழுவதும் வாழ்ந்து வரும் 



என் உயிரினும் மேலான அன்புத் 



தமிழ் நெஞ்சங்களே !!



உங்கள் அனைவருக்கும் எனது 



அன்பு நிறைந்த வணக்கம்.




தமிழ்த்திரைப்படத்துறையில்தனக்கு 


என்று ஒரு இடத்தைத் தனியாக 



தக்க வைத்துக்கொண்டவர்தான் 



நடிகவேள் M.R. ராதா.



அவரது வாழ்க்கைப்பாதையைசற்று 



பின் நோக்கிப் பார்த்தால் அங்கே 



அவர் எத்தனை எத்தனை 



காட்டாறுகளைக் கடந்து 



வந்துள்ளார் என்பது தெளிவாகும்.



அந்த வகையில் இதோ இன்னும் 



ஒரு சம்பவம்/நிகழ்வு அவரின் 



வாழ்க்கைப் பாதையில். இதோ 



உங்கள் அனைவரின் கனிவான 



கவனத்திற்கு :-



ஒரு சமயம் நாதஸ்வரகச்சேரிக்கு



சென்றிருந்தார் நடிகவேள் M.R. ராதா.



அங்கே வித்துவான்கள்இருவருக்கு 




இடையில் நாதஸ்வர போட்டி. யார்




நன்றாக நீண்ட நேரம் சுதி பிசகாது




வாசிக்கிறார்கள்என்பதுபோட்டியின்



விதி/சாராம்சம்..ஆளுக்குஅரைமணி 



நேரம்வீதம்இரண்டுவித்வான்களும்



இசை மழையைபொழிந்துதள்ளினர்.



அதன் பிறகு நீதிபதி ஆசனத்தில் 



அமர்ந்து உள்ள நடிகவேள் 




M.R.ராதா தனது இறுதித்தீர்ப்பினை 




வழங்கினார்.எப்படி? இப்படி :-




அன்புள்ளஇசைரசிகப்பெருமக்களே!!



உங்க எல்லோருக்கும் வணக்கம். 



இன்னைக்கு இங்கே நடைபெற்ற 



நாதஸ்வரம் வாசிக்கும் போட்டியில் 



யார் நீண்ட நேரம் சுதி பிசகாமல் 



வாசிக்கின்றார்கள் என்பதைக் 



கண்டு தேர்வு செய்ய வேண்டியது



நீதிபதி எனதுகடமை.நானும்கடந்த



2 மணி நேரமாக கவனித்துக் 



கொண்டுதான் வருகிறேன். இதில் 



வலையபட்டி  வைத்தியநாதனும் 



சுருளிப்பட்டி சுந்தராங்கதனும் 



போட்டியில் கலந்துகிட்டாங்க.நீங்க 



நினைப்பீங்க இந்த ரெண்டு பேரில் 



ஒருவர்தான் வெற்றி பெறுவார் 



என்று. உண்மையில் அதுதான் 


இல்லீங்கோ.உண்மையிலேயேநான் 


சொல்றேன்.மிகநீண்டநேரம்வாயில் 



வைத்த குழலை கடைசிவரைக்கும் 



வெளியே எடுக்காமல் ஒத்து ஊதிய 



ஊமச்சிகுளம்  ஊமைத்துரைதான் 



மிகச் சிறந்த வித்வான் என்று நான் 



இங்கே தீர்ப்பு வழங்குகிறேன். ஏன்? 



ஏன்? அப்படீன்னு நீங்க கேக்கலாம் ?



காரணம் என்னான்னா கச்சேரி 



ஆரம்பம் முதல் முடிவு வரை சுதி



கொஞ்சம் கூட பிசகிடாமல், அதே 



போலவாயிலேவச்சகுழலை



கொஞ்ச நேரம் கூட வாயை விட்டு 



வெளியிலே எடுக்காம இருந்தாரே 



நம்ம ஒத்து ஊதுற வித்வான் 



ஊமச்சிகுளம் ஊமைத்துரைதான் 



இங்கே மிகச் சிறந்த நாதஸ்வர 



வித்துவான் அப்படீன்னு நான் தீர்ப்பு 



வழங்கி விடை பெறுகிறேன். 



நன்றி. வணக்கம். என்று 



கூறி விடை பெற்றார் நடிகவேள் 



மறைந்த M.R.ராதா.



இது எப்படி இருக்கு ?



நன்றி !! வணக்கம் !!




அன்புடன் மதுரை T.R. பாலு.

No comments:

Post a Comment