Tuesday, 18 February 2014

வட்டித் தொழில் செய்வது லாபமானதா ? பாவமானதா ?







உடல்மண்ணுக்கு!!உயிர்தமிழுக்கு!!



உலகம் எங்கும் வாழ்ந்துவரும் என் 



உயிரினும் மேலான அன்புத்தமிழ் 



நெஞ்சங்களே !! வணக்கம்.



இன்றையதினம் எங்கும் மிக எளிதாக 


ஒரு தொழில் நடத்திடலாம் என்றால் 


அஃது வட்டித் தொழில் ஒன்றே ஆகும்


அன்பர்களே அப்படி நாம் செய்திடும் 


இந்த வட்டித் தொழில் லாபமானதா 


அல்லது பாவம் ஆனதா ? இதுதான் 


இன்று நம்முன்னே உள்ள கேள்வி.



இந்தக் கேள்விக்கு நாம் பதில் தரும் 


முன்பாக சில விளக்கங்களையும் 


ஒரு கதையையும் உங்களுக்கு நான் 


விளக்கிக் கூறிட ஆசைப்படுகிறேன்.


முதலில் கதை.பிறகு விளக்கம். என்ன 


சரியா ?



ஒரு ஊரில் ஒரு பெண் ஒருத்தி 



அவள் பெயர் சிவகாமி. திருமணம் 



முடிந்து ஏறத்தாள 15 ஆண்டுகள் 



ஆகியும் குழந்தை இல்லை.பாவம்



என் செய்வாள். போகாத கோவில் 



இல்லை. பார்க்காத வைத்தியமும் 


இல்லை. ஆனால் குழந்தைப்பேறு


மட்டும் இல்லவே இல்லை. 



அப்போது அந்த ஊருக்கு ஒரு பிரபல 


சுவாமிகள் ஒருவர் விஜயம் செய்தார்.



வாக்கு பலிதம் உள்ளவர். சொன்னது 



சொன்னபடியே நடக்குமாம். அவர் 



வந்திருப்பது தெரிந்து சிவகாமி 



அவரைத் தரிசனம் செய்தாள். 



அப்போது அவளது கண்களில் நீர் 



வழிந்து கொண்டு இருந்தது இதைக் 


கண்ணுற்ற சுவாமிகள் சிவகாமியைத் 


தன்னருகே அழைத்தார். என்னம்மா 


உனக்குக் குழந்தை இல்லையா ?என


கேட்டார். ஆம் என்றாள் அவள்.



உடனே சுவாமிகள் குழந்தை கிடைக்க 


நீ எந்த எல்லை வரையிலும் செல்வாயா ?


என கேட்டார். அவளும் குழந்தை கிடைத்திட 


நான் எந்தவிதமான தியாகமும் செய்யத்தான் 



தயார் என்றாள்.   உடனே சுவாமிகள



பெண்ணே உனக்கு இன்றிலிருந்து 



1௦ வது மாதம் குழந்தையைத் தருகிறேன்.



ஆனால் அந்தக் குழந்தையின் மலத்தை 



நீ உண்ண வேண்டும் என்ன சரியா என 


கேட்க சம்மதித்தாள்  பெண்.  உடனே 


சுவாமிகள் ஆசீர்வதித்து அனுப்பினார்.


சுவாமிகள் சொன்னபடியே சிவகாமிக்கு 


அழகான ஆண் குழந்தை பத்தாவது 



மாதம் பிறந்தது. கொழுகொழு என 



குழந்தை நல்ல சிகப்பு நிறம்,சுருட்டை 


முடிஎன பார்க்க அசல் இளவரசனைப்


போலவே பிறந்தது. ஆனால் இவள் 


மனம் ஒப்பவில்லை.அந்தக் குழந்தை 


மலத்தை உண்ண. சரியாக மூன்று 


ஆண்டுகள் கழித்து அந்த ஊருக்கு 


அந்த சுவாமிகள் விஜயம் செய்தார்.


அன்று திடீரென்று குழந்தை நன்கு 


விளையாடிக்கொண்டு இருந்தது 


நுரை நுரையாக கக்கி மயங்கி 


விட்டது. சிவகாமி குழந்தையை 


தூக்கிக்கொண்டு சுவாமிகள் காலடியில் 


போட்டு அழுதாள்.  உடனே சுவாமிகள் 


புன்னகைத்தபடியே இப்ப அழுது என்ன 


பிரயோஜனம் சிவகாமி. குழந்தை 


வரம் வேண்டி நீ செய்திடவேண்டியதை


செய்யாததால் குழந்தைக்கு இந்த 


நிலை. இப்போதும்கூட நீ இந்தக் 


குழந்தையின் மலத்தைத் உண்ண 



தயங்கினால், குழந்தை இறப்பதைப் 


பார்த்து நீ மயங்கவேண்டி வரும்.


என்ன சொல்கிறாய் என கேட்க 


உடனே சிவகாமி சுவாமி எனக்கு 



குழந்தை இல்லையே என்ற ஏக்கத்தில் 



தாங்கள் சொன்ன கட்டளைக்கு அடி 



பணிந்தேன். ஆனால்  எனது மனம் 



மலத்தை உண்ண மறுக்கிறதே 


சுவாமி நான் என் செய்வேன். வேறு 


ஏதாவது பரிகாரம் உண்டா சொல்லுங்கள் '


சுவாமி என்றாள்.  உடனே சுவாமிகள் 


புன்னகைத்தபடியே கேட்டார். உங்கள் 



ஊரில் வட்டித்தொழில் செய்து பிழைப்பு 


நடத்திடும் பெரும் செல்வந்தர்கள் 


எவரேனும் உண்டோ. ஆம் சுவாமி.



இருக்கிறார். பாலகிருஷ்ணன் செட்டியார் 



என்று பெரும் தனவந்தர் ஒருவர் உள்ளார்.


அவருக்குத் தொழிலே வட்டிக்கு பணம் 


கொடுத்து அந்த வட்டியைவைத்துத்தான் 


சாப்பிட்டுக்கொண்டு வருகிறார். உடனே 


அதற்கு சுவாமிகள் சரி அப்படி என்றால் 


நீ உனது வீட்டில் இருந்து சாதத்தை 


எடுத்துக்கொண்டு சென்று அந்த வட்டிக்கு 


பணம் தருபவரின் வீட்டின் நிழலில் இருந்து 


சாப்பிட்டு வரவேண்டும். அப்படி  நீ



சாப்பிட்டால் அந்த சாதம் மலத்திற்கு 


சமம். அது போல  நாற்பத்தி எட்டு நாட்கள் 


சாப்பிட்டால் அத்தோடு



குழந்தையின் தோஷம் நீங்கிவிடும்.


அதற்கு மேல் நீயும் குழந்தையும்



ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் 



இருப்பீர்கள் என்று சொல்லி சிவகாமியை 



ஆசீர்வதித்து அனுப்பினார். 



எப்படி இருக்கிறது பார்த்தீர்களா நேயர்களே !!


இந்தக் கதையில் இருந்து நீங்களே யூகித்துக் 


கொள்ளுங்கள் வட்டித் தொழில் செய்து 


வாழ்வது லாபமானதா அல்லது பாவமானதா 


என்று.


நன்றி. வணக்கம்.



அன்புடன் மதுரை T.R.பாலு.

No comments:

Post a Comment