Sunday, 9 February 2014

கலைவாணர் N.S.கிருஷ்ணன்---கலைந்திடாத நினைவுகள் !!







உடல்மண்ணுக்கு!!உயிர்தமிழுக்கு!!




உலகம் முழுவதும் வாழ்ந்து வரும்




எனது உயிருக்கும் மேலாக நான்




போற்றி வணங்கிவரும் என் அன்பு




உடன்பிறப்புகளே !! உங்கள்




அனைவரையும் இந்த இனிய காலை




வேளையில் நான் வணங்கி மதித்து




மகிழ்கின்றேன் என் அன்புத்தமிழ்




நெஞ்சங்களே !!










    கலைவாணர் N.S.கிருஷ்ணன் !!









காலத்தால் மறந்திட முடியாத




மறந்திடக்கூடாத ஒருவர் அவர்.




மனிதருள் மாணிக்கத்தைப் போன்ற




உத்தமர், தான் ஈட்டும் பொருள், இது




தனக்கு மட்டும் சொந்தம் அல்ல,




தன்னோடு சேர்ந்தோர்அனைவருக்கும்




தன்னை நாடி இல்லையெனவருவோர்




அனைவருக்கும் பங்கு உண்டு என்ற




உயரிய நோக்கத்திற்கு, இவர்தான்,




இவர் ஒருவர்தான், உண்மையிலேயே




சொந்தக்காரர் என்று சொன்னால்




அந்தகருத்துக்குஇருவேறுஅர்த்தங்கள்




என்றென்றும் இல்லாமல் வாழ்ந்துபின்




மறைந்துள்ள அதிசய மனிதர் ஆவார்.




ஆனால் அவர் இந்த மண்ணை விட்டு




மறைந்தாலும் மனிதர்களது மனசை




விட்டு என்றுமே அகலாதவர் மேலும்




விலகாதவர் என்று சொன்னால் அது




உண்மையிலும் உண்மைஎனதுஅன்புத்




தமிழ் நெஞ்சங்களே !!




அன்பர்களே !! தனது இறுதிமூச்சு அவர்




உடலைவிட்டுப் பிரியும்வரை தன்னை




நாடிவந்தோர் அனைவருக்கும்இல்லை




என்று   சொல்லாமல்  இருக்கும்




அனைத்தையும் வாரிவாரி வழங்கிய




உத்தமர் ஒருவர் தமிழ் சினிமாஉலகில்




உண்டென்றால் அந்த ஒருவர் மறைந்த




கலைவாணர் NS கிருஷ்ணனைத் தவிர




வேறு யாராக இருக்க முடியும்.  ஈகை




என்ற அகராதியில் புதியதொரு




பக்கத்தை உருவாக்கியவர் அவர்




ஒருவரே.  எல்லோரையும் சிரிக்க




மட்டுமே வைத்தார்கள் இவருக்கு முன்




தமிழ் சினிமாவில் தோன்றிய சிரிப்பு




நடிகர்கள். அனால் இவர் ஒருவர் மட்டுமே




சிரிக்கவும் வைத்து பின் சிந்திக்கவும்




வைத்தவர் இதனாலேயே இவருக்கு




கலைவாணர் என்ற பட்டம் வழங்கப்




பட்டதோ என்னவோ ? நானறியேன்.




சிரிப்பு என்னும் மனிதனின் சிறந்த




குணத்திற்கு ஒரு புதிய பரிமாணம்




இவரால் வழங்கப்பட்டது என்றால்




அதில் வியப்பு ஏதும் இல்லை.சிரிப்பின்




அத்தனை விசேஷ குணங்களையும்




இவர் ஒருவரே தனது  பாடல் மூலமாக




மக்களுக்கு கொண்டு சென்றார். அந்தப்



பாடலில் அவர் என்ன சொல்கிறார்



என்றால் :-





சிரிப்பு !! இதன் சிரத்தை சீர்தூக்கி



பார்ப்பதே நமது பொறுப்பு !!



கருப்பா? வெளுப்பா? என்பதை



எடுத்துக் காட்டும் கண்ணாடி சிரிப்பு !!



மனம் கருப்பா வெளுப்பா ? வெளுப்பா ?



என்பதை எடுத்துக்காட்டும் கண்ணாடி



சிரிப்பு !!



இது களையை நீக்கி, கவலையைப்



போக்கி மூளைக்குத் தரும் சுறுசுறுப்பு!!



துன்ப வாழ்விலும் இன்பம் காணும்



விந்தை புரிவது சிரிப்பு !!



இதைத்  துணையாய்க்கொள்ளும்



மக்கள் முகத்தில் துலங்கிடும் தனி



செழிப்பு.!!



பாதையில்போகும்பெண்ணைப்பாத்து



பல் இளிப்பதும் ஒருவகை சிரிப்பு !!



அதன் பலனாய் உடனே பரிசாய்க்



கிடைப்பதுகாதறுந்த பழஞ்செருப்பு !!



சிந்திக்கத் தெரிந்த மனித குலத்துக்கே



சொந்தமான கையிருப்பு !!



வேறு ஜீவராசிகள்செய்யமுடியாத



செயலாகும் இந்த சிரிப்பு !!



இது அதிகாரிகளின் ஆணவச்சிரிப்பு!!



இது அடங்கி நடப்பவரின் அசட்டுச்



சிரிப்பு !!



இது சதிகாரர்களின் சாகாசச் சிரிப்பு !!



இது சங்கீதச் சிரிப்பு !!





என்று ஒரு பாடலைப்பாடி சிரிப்புக்கே





தனி ஒரு இலக்கணம் வகுத்துத்





தந்தவரும் மறைந்த கலைவாணர்




N.S.கிருஷ்ணன் ஒருவரே !!                




தனது வாழ்நாள் முழுவதும் தான்




பாடுபட்டு சம்பாதித்த பணம், பொருள்




அத்தனையையும் வறியவர்களுக்கும்




ஏழைகளுக்கும் தன்னை நாடி வந்தோர்




அனைவருக்கும் வாரி வாரி வழங்கிய




உண்மையான கொடைவள்ளலும் இவர்




ஒருவரே. தான் வசதியுடனும்




வளமையுடனும் இருக்கும்வரையிலும்




சரி, வறுமையில் உழன்றுகொண்டு




இருந்தபோதிலும் சரி, இருப்பதை




எல்லாம் வாரிக்கொடுத்த வள்ளல்




ஒருவர் உண்டு என்றால் அதுவும்




மறைந்த கலைவாணர் N.S.கிருஷ்ணன்




மட்டுமே !!




தமிழ்சினிமாவில் அந்தக்காலத்தில்




லட்ச,லட்சமாக (இன்றைய மதிப்பில்




என்றால் கோடி,கோடியாக) பணம்




சம்பாதித்து இருந்தாலும்கூட அவர்




ஜாதகத்தில் அவரது தசா, புத்திகள் '




மாறிடும் போது வறுமைஎன்னும்




கொடுமைக்கு ஆளானபோதிலும்கூட




அவர் தான தருமம் செய்வதை




ஒருபோதும் கைவிடவில்லை.




இவரிடம் கடைசியாக கையில்




இருந்தது ஒரே ஒரே வெள்ளிக்கூஜா




மட்டுமே.  இவரது சொந்த




ஊரான நாகர்கோவிலில் இருந்து




வறியவர் வந்து உதவி என்று




கேட்டபோது இவரிடம் அவருக்கு




பணம் கொடுக்க இவரது கையில்




ஒரு பைசாகூட இல்லாத நிலையில்




தனது மனைவி T.A.மதுரத்தை




பார்த்து கண்ஜாடை காட்டினர்.   




உடனே மதுரம் தங்களிடம் 




கடைசியா இருக்குற அந்த ஒரே 




ஒரு வெள்ளிக்கூஜாவைக் 




கொண்டுவந்து கலைவாணரிடம் 




தந்தார். அதை வாங்கி N.S.கிருஷ்ணன் 




தன்னிடம் உதவி கேட்டு வந்தவரிடம் 




கொடுத்துட்டு தம்பி இத்தோட என் 




ஆஸ்திகள் எல்லாமே காலி. இதை 




நீ வச்சுக்கோ. இனிமே உனக்கு 




தர எங்கிட்ட என்னையைத் தவிர 




வேற எதுவும் தர முடியாது என்று 




சிரிச்சுக்கிட்டே சொன்னாராம். 




இதன் பிறகு  இவர் செய்யாத ஒரு 




கொலைப் பழி இவர் மீது சுமத்தப் 




பட்டு அதற்காக சிறைவாசம் 




அனுபவிச்சு வெளியே வந்தகிருஷ்ணன் 




சாப்பாட்டுக்கே ரொம்ப கஷ்டமப் 




பட்டு கடைசியில் நோயின்




தாக்குதலுக்கு ஆளானார். தனியார் 




மருத்துவமனையில் வைத்துப் 




பார்ப்பதற்குப் பண வசதி இல்லாததால் 




அரசு பொது மருத்துவ மனையில் 




சிகிச்சை பெற்று வந்தபோது திடீர் 




என்று இவர் இறந்துவிட்டதாக 




வதந்தி கிளம்பிவிடவே அரசு பொது 




மருத்துவ மனையின் முன்பாக மக்கள் 




வெள்ளமென கூடிவிட்டனர். போக்குவரத்து 




நெரிசல் வேற ஆகிவிட்டது.மருத்துவ 




மனை ஊழியர்கள் இருவர் கைபிடித்து  




N.S.கிருஷ்ணனை அழைத்துவந்து 




ஜன்னல் வழியாக மக்களைப் பாத்து




இவர் கையை ஆட்டிக்கிட்டே 




சிரித்துக்கொண்டே சொன்னாராம் 




அன்பு ரசிகப் பெருமக்க்களே !! நான் இன்னும் 




உசுரோடதான் இருக்கேன். நான் இன்னும் 




சாக வில்லை என்று சத்தம்போட்டு 




சிரிச்சுக்கிட்டே சொன்னாராம். இதனைக் 




கேட்டு மக்கள் சிரிக்கவில்லை ஆனால் 




அழுதுகொண்டே கலைந்து சென்றனர்.




இந்த நிகழ்வுகள் எல்லாம் மறைந்த 




கலைவாணர் N.S.கிருஷ்ணனின் வாழ்வில் 




நடந்த கலைந்திடாத நினைவுகள் ஆகும்.





நன்றி !! வணக்கம் !!






அன்புடன். மதுரை T.R.பாலு.

No comments:

Post a Comment