உடல்மண்ணுக்கு!!உயிர்தமிழுக்கு!!
உலகம் முழுதும் வாழ்ந்துவரும் என்
உயிரினும் மேலான அன்புத் தமிழ்
நெஞ்சங்களே !! வணக்கம்.
அன்பர்களே !! இதுவரை நல்லதொரு
விஷயங்களையும், ஆன்மிகம் பற்றிய
கதைத் தொகுப்புகளையும் மட்டுமே
வழங்கிவந்த உங்கள் மதுரை TR பாலு
இன்றுசற்றுவித்தியாசமாகமனிதனின்
அன்றாட ஆனால் அதே நேரம் மேலே
சொன்ன அத்தனை பொருட்களையும்
விடுத்து சமூக நீதிக்குப் புறம்பான
ஒருவிஷயத்தில்தனதுசிந்தனையைச்
செலுத்தியதன் விளைவுதான் இதோ
இங்கேதனக்குமுற்றிலும்மாறுபாடான
ஒருகருத்தில்தன்சிந்தனையைஅவன்
செலவழித்ததனால் ஏற்பட்ட விளைவு
இந்த மது அருந்துதல் சம்பந்தப்பட்ட
ஒரு கருத்திற்குள்ளாகத்தனதுமூக்கை
நுழைத்திருக்கின்றான் நேயர்களே!!
அதுதான் குடிப்பழக்கம் உள்ள இந்த
நாட்டின் குடிமகன்கள் அவர்களது
உற்றார்,உறவினர்,நண்பர்கள் இவர்கள்
எல்லோருடனும்ஒருசேரஅமர்ந்துமது
குடித்திடும் வேளையில் கண்ணாடிக்
கிண்ணங்களை ஒன்றோடு ஒன்று மிக
இலேசாக தட்டி அல்லது இடித்து ஏன்
"சியர்ஸ்" என்று சொல்லிவிட்டு அதன்
பின்னரே மதுவினைதனதுஉதடுகளில்
வைத்து உறுஞ்சுகிறான் ? இந்தப்
பழக்கம் ஏன் ? எதற்காக ? ஏற்பட்டது
என்பதனைப்பற்றிய கெட்டதொரு
ஆராய்ச்சியில்ஈடுபட்டுஅதன்உண்மை
விளக்கத்தை இங்கே உங்களில் இந்தக்
கட்டுரையைபடிக்கும்அனைவருக்கும்
சற்றே விரிவாகவும் விளக்கமாகவும்
எடுத்துரைத்திட தனது வலைதளமான
இந்த " எண்ணச்சிறகுகள் "என்றதொரு
பக்கத்தைப் பயன்படுத்திட உங்களில்
அனைவரின் ஆசிகளையும் உத்தரவு-
-களையும் அவன் நாடி நிற்கிறான்.
தருகிறீர்களாஉங்களின்உத்தரவுகளை
தந்தால் மட்டுமே எழுதிடுவான்அந்தக்
கட்டுரையை !!
அனைத்து தமிழ் நெஞ்சங்கள் :-
தந்தோம் !!தந்தோம் !!
முழு மனதுடனே தந்தோம் !!
தந்தோம் !!ததிகிட தாம்தூம்தாம்தூம் !!
*******************************************
" சி ய ர் ஸ் "
*******************************************
அன்பர்களே !!
பொதுவாகவேஇந்தமனிதவாழ்வினில்
ஐந்து என்றஎழுத்துக்குத்தான்எத்தனை
ஆக்கிரமிப்புகள்.இதை உங்களுக்கு
விரிவாகவேவிளக்கிடவிரும்புகிறேன்.
இவனது பிறவி இந்தப் புவியில் ஒரு
"அவதாரம்" என்றே கருதப்படுகின்றது
இந்த " அவதாரம் " ஐந்து எழுத்து. சிறு
வயதில்இவன்முழுமனதுடன்ஈடுபடும்
"விளையாட்டு"இதுவும்ஐந்துஎழுத்து
அதன்பின்னர் இவன் வாலிபனாகி
இவனுக்குநடைபெறும்" திருமணம் "
ஐந்து எழுத்து. இவன்வாழ்ந்திடும்அந்த
வாழ்க்கை இவன் முன்ஜென்மத்தில்
செய்த அந்த "கர்மவினை "இதுவும்
அதேஐந்துஎழுத்து.இவனதுகடமைகள்
அனைத்தும் முடிவுற்றவுடன் இவன்
இவனுடைய வாழ்கையின்இறுதியில்
சந்திப்பதே மரணம் என்றஒன்று. அது
இவனது "அஸ்தமம் "இதற்கும்கூட
அதே ஐந்து எழுத்துதான்அன்பர்களே !!
ஒருவேளை எண் 1 முதல் 9 இந்த
அனைத்துஎண்களுக்கும்நடுநாயகமாக
இந்த 5 என்ற எண்விளங்குவதலேயோ
என்னவோ இவன்தான் ஐந்தின் முழு
பிரதிபலிப்பாகவே கருதபடுகின்றான்.
அப்படிஇவன்வளர்ந்திடும்போதுஇவன்
வாழ்ந்திடும் போது இவன் தனது
ஐம்புலன்களுக்கும் கட்டுப்பட்டேதான்
வாழ்ந்திட வேண்டும்என்பதேஇவனது
தலையெழுத்து. அவை எவை ?எவை ?
1) காணுதல்.
2) நுகர்தல்.
3) ருசித்தல்.
4) உணர்தல்.
5) கேட்டல்.
ஆக இவன் எதை உண்டாலும் சரி
அல்லது குடித்தாலும் சரி இந்த 5
புலன்களும் அதனை அனுபவித்திட
வேண்டும் அதுதான் பிரம்மன்
இவனது தலையில் எழுதிய அந்த
தலைஎழுத்து.
ஒரு மனிதன் மது அருந்திடும்போது
அதனைக்காண்கிறான் (1)காணுதல்
அதனை தனது வாய் அருகினில்
அந்த மதுவைக் கொண்டு செல்லும்
போது அவனது நாசியினால் அந்த
மதுவின் வாசத்தினை நுகர்கிறான்
(2)நுகர்தல்.
பிறகு கோப்பையில் உள்ள அந்த
மதுவை இவன் அருந்துகின்றபோது
அதன் சுவையை இவன் ருசிக்கிறான்
(3)ருசித்தல்.
அதன் பின் இந்த மதுவானது இவன்
உடலின் இரத்தத்தில் கலந்து அது
இவனது மூளைப்பகுதிக்குள்ளாகச்
செல்கின்றபோது அந்த மதுவில்
உள்ள ஆல்கஹால் என்ற வேதியப்
பொருளால் இவன் மயங்கிய
நிலையை அடைகின்றான்.
(4) உணர்தல்.
இப்போது அன்பர்களே எஞ்சிஇருக்கும்
ஒன்றே ஒன்று அது கேட்டல் என்ற
ஒன்றே ஆகும்.இந்த புலனுக்கு
மட்டும் ஏன் குறை வைப்பானேன்
என்று மனிதன் எண்ணியதால் தான்
இந்த கண்ணாடி மதுக்கோப்பைகளை
ஒன்றோடு ஒன்று லேசாக இடித்து
அதனால் அந்த கோப்பைகளில்
இருந்து வரும் " கிளிங் " என்கின்ற
ஓசையை இவன் செவிகளுக்கு
விருந்தாகப்படைக்கிறான்.(5) கேட்டல்.
பார்த்தீர்களா ? உங்களுக்கு இப்போது
தெரிந்து கொண்டீர்களா ? எதற்காக
குடிப்பழக்கம் உள்ளவர்கள் ஒருசேரக்
குடித்திடும்போது மதுகிண்ணங்களை
ஒன்றோடு ஒன்றுடன் லேசாக
இடித்துக்கொள்வதன் அர்த்தம் ?
ஆகா!!இந்ததமிழ்ச்சமுதாயத்திற்கு
என்றாவது ஒருநாள் அர்த்தம் உள்ள
கட்டுரையை எனதுஆயுட்காலத்திற்கு
உள்ளாக வழங்கிட வேண்டுமே என்ற
எனது தணியாத ஆசை இன்றுதான்
தணிந்தது அன்பர்களே !!
மீண்டும் நாளை மற்றும் ஒரு
தலைப்பினில் உங்கள்அனைவரையும்
நான் சந்திக்கிறேன் அதுவரை உங்கள்
அனைவரிடமும் இருந்து நன்றி
பாராட்டி விடை பெறுகின்றேன்.
நன்றி !! வணக்கம் !!
அன்புடன் மதுரை T.R. பாலு.
No comments:
Post a Comment