உடல் மண்ணுக்கு!! உயிர்தமிழுக்கு!!
இதைஉரக்கச்சொல்வோம்
உலகுக்கு!!இனம் ஒன்றாக, மொழி
வென்றாக, புது வேல் எடுப்போம்
விடிவுக்கு!!நம் வெற்றிப் பாதையில்
நரிகள் வந்தால் விருந்து
வைப்போம் விண்ணுக்கு !!
மாட்சிமை தங்கிய தமிழக
முதல்வர் ஜெ ஜெயலலிதா
அவர்களுக்கு, மதுரை T.R. பாலு
எழுதும் தங்களின்
கனிவான கவனத்திற்கு ஒரு கடிதம்.
(தயவு செய்து உடனே கோபம்
கொள்ள வேண்டாம்-இவன் யார்
எனக்கு கடிதம் எழுதுவதற்கு என்று)
வான்புகழ் திருவள்ளுவர் எழுதிய
திருக்குறள் ஒன்றினை இந்தத்
தருணத்தில் தங்கள் பார்வைக்குத்
தருகிறேன்.
எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும்
அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு... ... ...
தங்களின் கட்சிக் கட்டுப்பாட்டை
நிலை நிறுத்தும் விதம் உள்ளபடியே
சொல்கிறேன் அது என்னை மிகவும்
வியக்க வைத்து உள்ளது பல
சந்தர்ப்பங்களில். அந்த அளவிற்கு
உங்களின் செயல் வேகம் சுனாமி
புயலை விடவும் வேகமானது.
ஆனால் அதே சமயம் தங்களிடம்
உள்ள மிக மோசமானஅணுகுமுறை
அது என்னவென்றால் யார் யாரைத்
தங்களுக்கு அவர்களது
செயல்களால் பிடிக்க வில்லையோ
உடனே அவர்களை
வெளிப்படையாக கட்சியை விட்டு
நீக்குவது என்ற அணுகுமுறை
ஒன்றுதான் முதல்வர் அவர்களே.
இதை கொஞ்சம் கொஞ்சமாக
மாற்றிக் கொள்ள முயன்று அதில்
நீங்கள் வெற்றி பெற்றுவிட்டீர்கள்
என்றால் நான் உள்ளபடியே
சொல்கிறேன் உங்களை மிஞ்ச இந்த
தமிழ்நாட்டினில் மட்டும் அல்ல
இந்தியாவிலேயே வேறு ஆள்
கிடையாது இதுதான் உண்மை.
பகையாளியின் குடியை உறவாடிக்
கெடு. இதுதான் தாங்கள் கலைஞர்
திரு மு.கருணாநிதி அவர்களிடம்
இருந்து தாங்கள் கற்றுக்கொள்ள
வேண்டிய முதல் பாடம் ஆகும்.
இன்று தங்களின் 66 வது பிறந்ததேதி
இந்த நல்ல நாளில் தாங்கள்
இனியேனும் மேலே சொன்னபடி
தாங்கள் தங்களின் குணமதை
மாற்றிட வேண்டிக் கேட்டுக்
கொள்கிறேன். (கட்டுரை இன்னும்
தொடரும்)
நன்றி !!வணக்கம் !!
அன்புடன் மதுரை TR பாலு.
No comments:
Post a Comment