Saturday, 1 March 2014

தொடர்ச்சி... பாகம் எண்.2. மனைவிமார்களை கணவன்மார்கள் எப்படி நடத்திட வேண்டும் ? குரங்கின் கதையோடு கூடிய ஒரு விளக்கம் !!










பிஸ்மில்லாஹ் ஹிர் ரெஹ்மானிர் 


                            ரஹீம் !!



உடல்மண்ணுக்கு!!உயிர்தமிழுக்கு!!



அளவற்ற அருளாளனும் நிகரற்ற 



கொடையாளனுமாகிய எல்லாம் 



வல்ல அல்லாஹ்வின் 



திருப்பெயரை உச்சரித்து அவரின் 



திருநாமத்தை மனதுக்குள் 



உள்வாங்கி வணங்கி தொழுது 



இந்தக்கட்டுரையை நான் 



எழுதுகின்றேன்.  அஸ்ஸலாமு 



அலேக்கும் !!(உங்களுக்கு சாந்தியும் 



சமாதானமும் உண்டாகட்டும்)           



பொதுவாகவே அன்பர்களே !! 



தாயில்லாமல் நானில்லை !! தானே 



எவரும் பிறந்ததில்லை !! 



இது பழைய பாட்டு.                                       



இதில் புதிய பாட்டு 



மனைவியில்லாமல்யாரும்இல்லை.



புத்தி இல்லாமல் வாழ்ந்ததில்லை. 



அன்பர்களே !! நான் அடிக்கடி எனது 



நண்பர்களிடம் பேசும்போது 



சொல்வது உண்டு. மனைவி ஒரு 



மந்திரியாக இல்லாவிட்டாலும்கூட 



பரவாயில்லை. ஒரு "மாதிரியாக" 



மட்டும் இருந்துவிடக்கூடாது என்று. 



அப்படி மனைவியாகப்பட்டவள் 



கணவனின் கட்டுப்பாட்டில்இருந்திட 



வேண்டும் என்றால் அவன் செய்திட 



வேண்டிய செயல்கள் என்னென்ன ? 



அதனை நான் எனது நாளைய 



கட்டுரையில் உங்களுக்கு 



விரிவாகவும் விளக்கமாகவும் தர 



இருக்கிறேன். அதுவரை சற்றே 



பொறுமையுடன் இருந்திட 



வேண்டுகிறேன்.                                             



நன்றி !! வணக்கம் !!                                   



அன்புடன் மதுரை T.R.பாலு.                   



தொடர்ச்சி ...பாகம் எண். 2.                       



அன்பர்களே !!                                                 



இறைவனால் ஆண்களுக்கு 


தரப்பட்ட ஒரு சுகமான சுமைதான் 


மனைவி எனப்படுபவள். அவள் 


ஒருத்தி மட்டும் இங்கு இல்லை 


என்று வைத்துக்கொண்டால் 


ஆண்கள் உண்மையிலேயே 


காட்டுமிராண்டிகளாகத்தான்இங்கே 


காட்சி அளித்திருந்து இருப்பார்கள். 


சரி ! அதற்காக பெண்களுக்கு நாம் 


எவ்வளவு சுதந்திரம் அளித்திடலாம்


என்பதே இந்தக்கட்டுரையின் 


நோக்கம்.                                                       



அன்பர்களே !!                                               



அந்த அளவுகோலை நாம் 



தீர்மானிப்பதற்கு முன்பாக இங்கே 



ஒரு குரங்கின் கதையை சொல்ல 



நான் ஆசைப்படுகிறேன்.                         



மதுரை மாவட்டம் மேலூர் அருகே 



உள்ள ஒரு சின்னசிறு கிராமம்தான் 



நாவினிப்பட்டி. அங்கே எனது பால்ய 



சிநேகிதர் பெயர் நஞ்சுண்டப்பா. 



அவர் ஒருமிகப்பெரும் செல்வந்தர். 



கணக்கிலடங்கா சொத்து,சுகம்? 



உடையவர். என்னடா இவன் சுகம் 



என்ற வார்த்தையை அடுத்து ஒரு 



கேள்விக்குறியை எதற்காக 



வைத்திருக்கிறான் என்று நீங்கள் 



நினைக்கலாம் அன்பர்களே. 



அதற்கும் ஒரு காரணம் உண்டு. அது 



என்ன காரணம் என்றால் 



அன்பர்களே இவ்வளவுசொத்துக்கள் 



இருந்தும் அவர் பெயர் சொல்ல ஒரு 



பிள்ளை,வாரிசு என்பது இல்லை. 



ஆகவேதான் நான் அவர் 



அனுபவிக்கும் சுகத்திற்கு ஒரு 



கேள்விக்குறியை வைத்தேனே 



ஒழிய வேறு ஒன்றும் இல்லை.அவர் 



ஆசை ஆசையாக ஒரு குரங்கு 



ஒன்று வளர்த்து வந்தார். அதன் 



பெயர் கண்ணழகன். என்னங்க 



நண்பரே குரங்குக்குப் போயி இப்படி 



நல்ல ஒரு பெயரை 



வச்சிருக்கீங்களே என்று நான் 



கேட்டேன். அதற்கு அவர் 




நஞ்சுண்டப்பா:-என்ன ?, பாலா நாம் 



எல்லோரும் அதன் 



வழித்தோன்றல்கள் தானே என்றார். 



சரி!! இப்போது நாம் கட்டுரைக்குள் 



செல்வோமா ?                                               



அவருக்கு நான் என் மகனின் 



திருமணப் பத்திரிகை தருவதற்காக 



அவர் வீட்டிற்குச் சென்றிருந்தேன். 



திண்ணையை அடுத்து உள்ள பெரிய 



ஹாலில் சாய்வு நார்காலியில் 



அவர் அமர்ந்து இருந்தார். அவரது 



பக்கத்தில் அவர் வளர்க்கும் குரங்கு 



அதன் கழுத்தில் கட்டப்பட்டுள்ள 



கயிறு அவரின் ஒரு கையில். 



மற்றொரு கையில் ஒரு பிரம்பு. 



(இனி வருவது நேரலையில்)                


நஞ்சு:- வா பாலா. வா வா என்ன 


இப்படி அத்தி பூத்தாப்புலே.               



நான்:-  அதெல்லாம் ஒண்ணுமில்ல. 



வர்ற மாசி கடைசி முகூர்த்தத்தில் 



என் பையன் கல்யாணம். அதான் 



பத்திரிகை கொடுத்துட்டுப் 



போலாம்னு வந்தேன்.                             



 நஞ்சு:-  ரொம்ப சந்தோஷம்டா. 



ரொம்பநாள் பென்டிங் இல்ல. சரி 



பொண்ணு எந்த ஊரு?                                 


நான்:-  பொண்ணு கோவை 



மாநகரம். சம்பந்தி அங்கே பெரிய 



மில் ஓனர்.                                                     



நஞ்சு:- அப்படிப்போடு. புடிச்சாலும் 



புடிச்ச. புளியங்கொம்பாத்தான் 



புடிச்சிருக்கே. சரி எத்தனை பவுன் 



நகை, ரொக்கம்,சீர்வரிசை. சொல்றா 



விவரமா? அட நான் உன் சிநேகிதன் 



கேக்கிறேன்.                                                   



நான்:- டேய் உன்ட்ட சொல்றதுக்கு 



என்னடா எனக்கு. 15௦ பவுன் நகை. 



ரொக்கம் 1௦ இலட்சம், ஒரு ஆடி கார், 



காந்திபுரம் பக்கத்துலே ஒரு 



பங்களா. அவ்வளவுதான்.                     



 நஞ்சு:- நீ கொடுத்து வச்சவன்டா. ஐ 



ஆம் சாரி உம்மவன் ரொம்ப 



கொடுத்து வச்சவன்.                                 



(நஞ்சுண்டப்பா என்னிடம் 



பேசிக்கொண்டு இருக்கும் 



ஒவ்வொரு நிமிடத்திற்கும் 



ஒருமுறை பேசாமல் இருக்கு அந்தக் 



குரங்கின் தலையில்  லேசாக அந்தப் 



பிரம்புவைத்து தட்டிக்கொண்டே 



இருந்தார். நானும் அதைப்பார்த்து 



பின் பொறுமை இழந்துபோய் 



அவனிடம் கேட்டே விட்டேன்)             



 நான்:- ஏண்டா பாவம் அந்தக் 



குரங்கு. அது பாட்டுக்குப் 



பேசாமத்தானே இருக்கு. ஏண்டா 



அதைப்போயி லொட்டு 



லொட்டுன்னு பிரம்ப வச்சு 



அடிச்சுக்கிட்டே இருக்கே?                   



நஞ்சு:- அப்படியா தப்புத்தாண்டா 



எனக்கு உள்ளற கொஞ்ச வேலை 



இருக்கு. கொஞ்சநேரம் இந்தக் 



குரங்கை பாத்துக்கோ. எதுக்கும் 



இந்தப் பிரம்பை வச்சுக்கோ என்று 



சொல்லிவிட்டு அவர் வீட்டினுள் 



சென்றுவிட்டார். நான் பேசாமல் 



(அதாவது இந்தஇடத்தில் பேசாமல் 



என்று சொன்னால் பிரம்பைவைத்து 



குரங்கை அடிக்காமல் என்று 



பொருள் கொள்க) இருந்தேன். சிறிது 



நேரம் கழித்து சற்றுதொலைவினில் 



இருந்த அந்தக் குரங்கு எனது 



அருகினில் வந்தது. பிறகு எனது 



முகத்தைப் பார்த்தது. பின் எனது 



வேட்டியை பிடித்து இழுத்தது. பிறகு 



எனது மடிமேல்வந்து அமர்ந்தது. 



எனக்கு இப்போது பயம் 



வந்துவிட்டது. என் காதுகளைத் 



தனது கையால் பிடிக்க எத்தனித்தது 



உடனே நான் அலறிவிட்டேன். 



நண்பா என்னைக் காப்பாத்துகுரங்கு 



என்னை கொஞ்ச கொஞ்சமா கடிக்க 



வருதுடா என்றே சப்தம் இட்டேன். 



உள்ளே இருந்து சிரித்துக்கொண்டே 



வந்த எனது நண்பர் 



என்னைப்பார்த்து கேட்டார்:- என்ன 



நண்பா? கொஞ்ச நேரத்துக்கு முந்தி 



ஒரு கேள்வி கேட்டியே அது இப்ப 



உனக்கு ஞாபகம் இருக்கா? நான்ஏன் 



சும்மா இருக்கிற குரங்கை அடிக்கடி 



அடிச்சுக்கிட்டே இருக்கேன்னு. இப்ப 



உனக்கு விடை கிடைச்சிருக்கும்னு 



நினைக்கிறேன் என்றார். 



அப்போதுதான் எனக்குப் புரிந்தது 



குரங்கைப் பொறுத்தவரையில் 



அவரது அணுகுமுறை சரியேஎன்று.) 



நஞ்சு:- டேய் பாலா இந்த 



அணுகுமுறை குரங்குக்கு மட்டும் 



இல்லடா. அவரவர் வீட்டு 



பொம்பளையாளுக்கும் இதே 



முறையைத்தான் நாம 



கையாளனும். அப்பத்தான் அவளுக 



பேசாம கிடப்பாளுக என்றார்.             



அன்பர்களே !!                                                 



 இது அவரோட மதிப்பீடு 


பெண்களைப்பற்றி இருக்கலாம். 


ஆனா இதைப்பற்றி நீங்க என்ன 


நினைக்கிறீங்க? இதுதாங்க 


கட்டுரையின் கிளைமாக்ஸ்.               


விடையும் அதன்படி 


முடிவெடுப்பதும் நீங்கதான். 


நீங்கமட்டும்தான்.                                   


 நன்றி !! வணக்கம்!!                                   


 அன்புடன் மதுரை T.R. பாலு.                   


                    

No comments:

Post a Comment