Wednesday, 5 March 2014

கர்ப்பிணிப் பெண்களுக்கு சீமந்தம்/வளைகாப்பு விழா நடத்துவது எதற்காக ? தெரியுமா உங்களுக்கு ?







     பிஸ்மில்லாஹ் ஹிர் ரஹ்மானிர்


                              ரஹீம் !!




அளவற்ற அருளாளனும் நிகரற்ற 


கொடையாளனுமாகிய எல்லாம் 


வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் 


அந்த இறைவனை மனதினுள் நான் 


வணங்கி,தொழுது, இந்தக்கட்டுரையை 


உங்கள் முன்பாக பணிவன்புடன் இங்கே 


சமர்ப்பிக்கின்றேன்.



அஸ்ஸலாமு அலேக்கும் !!



உலகம் முழுவதும் வாழ்ந்து வரும் என் 


உயிரினும் மேலான அன்புத்தமிழ் 


நெஞ்சங்களே !!



பொதுவாக, ஒரு புதுமணத்தம்பதிகள் 


அவர்கள் இல்லறம் என்ற நல்லறம் 


நடத்தியதன் விளைவாக, அந்தப் பெண் 


தன் கணவரது வாரிசைத் தனது வயிற்றில் 


சுமந்து வருகின்றபொழுது, அந்தக் கருவிற்கு 


ஏழு, அல்லது ஒன்பது மாதங்கள் வரும்போது 


புகுந்த வீட்டினில் தாய், வயிற்றினில் வளரும் 


குழந்தை, இவர்கள் இருவருக்கும் சேர்த்து 


நடத்திடும் இனிய விழாவே இந்த சீமந்தம்/


வளைகாப்பு என்று சொல்லப்படுகிறது 



சரி. ஏன், எதற்காக இந்த வளைகாப்பு என்னும் 


விழா, நடத்தப்படுகிறது என்பது நம்மில் இன்று 


நூற்றுக்கு தொண்ணூறுபேர்கள்அறியாமலேயே 


அந்த விழாவினை நடத்துகிறார்கள்/அல்லது 


அதில் கலந்துகொள்கிறார்கள் என்பதே 


உண்மை.


அப்படி புரியாமல் இருப்பவர்களுக்காகவே நான் 


உங்கள் அனைவரின் சார்பாக அந்த விஷயத்தை 


புரியவைத்திடவே இந்தக் கட்டுரையை இங்கே 


எழுதிட வந்துள்ளேன் என் அன்புத் தமிழ் உடன்-


-பிறப்புகளே !!



****************************************************

                        சீமந்தம்/வளைகாப்பு !!

****************************************************



அன்பர்களே !!


இந்த சீமந்தம்/வளைகாப்பு விழாபொதுவாக 


புகுந்த வீட்டினரால் (கணவன் வீடு) நடத்தப்படும் 


ஒரு மங்களகரமான விழாவாகும். இதன்முக்கிய 


அம்சம் என்னவென்று கேட்டால்,சொந்தம்,பந்தம்,


அக்கம்பக்கத்து உறவுகள், நண்பர்கள் வீடு அந்த 


வீட்டினில் உள்ள சுமங்கலி பெண்கள் ஆகியோர்


இந்த விழாவின் முக்கிய விருந்தாளிகள் ஆவார்.


கருவுற்ற அந்த தாயை விழாவின் மேடையில் 


நடுநாயகியாக  அமரவைத்து  எல்லோரும் 


முதலில் ஆரத்தி ( சந்தனம்,குங்குமம் இடுவது)


எடுத்து அவளுக்கு ஆசீர்வாதங்கள் செய்து 


முடித்ததும் வளையல்கார செட்டியார் அங்கே 


வரவழைக்கப்பட்டு, கருவுற்ற தாய்க்கு இரண்டு 


கைகளிலும் தலா பதினொன்று அல்லது 


இருபத்தி ஒன்று என அவரவர்கள் விருப்பபடி 


கண்ணாடி வளையல்கள் அணிவிக்கப்படுகிறது. 


இங்கே எதற்காக கண்ணாடி வளையல்கள் 


என்று சொன்னால், அது எளிதில் உடைந்திடும் 


தன்மை படைத்தது. மேலும் அது பெண்ணின் 


கைகளில் அணிவிக்கப்படும் போது பெரிய 


மணிக்கட்டினைத் தாண்டி உள்ளே வெகு 

லாவகமாக பூட்டப்படுகிறது என்பார்களே. 


இந்த இடத்தில்தான் இந்த விழாவின் முக்கிய 


இரகசியம் ஒளிந்து இருக்கிறது அன்பர்களே !!


அது என்னவென்றால் குழந்தையைச்சுமந்து 


கொண்டுள்ள அந்தக் கருவுற்ற தாயின் மிக 


பெரிய மணிக்கட்டின் வழியாக கண்ணாடி 


வளையல்கள் உடைந்திடாமல் உள்ளே எப்படி


செல்கிறதோ, இறைவா அதுபோல இந்தத் 


தாயின் சிறிய மர்ம ஸ்தானத்தின் வழியே 


அந்த குழந்தையின் தலை எந்தவிதமான 


சிரமம் இல்லாமல் லாவகமாக வெளியில் 


வரவேண்டும் அதற்கு இறைவா நீதான் 


துணை செய்திடவேண்டும் என்ற ஒரு நல்ல 


பிரார்த்தனையோடு கூடிய ஒரு விழாவாக 


அங்கே அது கொண்டாடப்படுகிறது.




அன்பர்களே !! இதுதான் சீமந்தம்/வளைகாப்பு 



என்ற விழா நடத்தப்படுவதற்கு உண்மையான 



முக்கியமான காரணம் ஆகும்.



மீண்டும் நாளை வேறு ஒரு தலைப்பினில் 



உங்கள் அனைவரையும் தவறாமல் நான் எனது 



" எண்ணச் சிதறல்கள் "வலைதளத்தில் உங்கள் 



அனைவரையும் சந்திக்கிறேன்.



நன்றி !! வணக்கம் !!



அன்புடன். மதுரை T.R. பாலு.

No comments:

Post a Comment