பிஸ்மில்லாஹ் ஹிர் ரஹ்மானிர்
ரஹீம் !!
அஸ்ஸலாமு அலேக்கும் !!
அளவற்ற அருளாளனும் நிகரற்ற
கொடையாளனுமாகிய எல்லாம்
வல்ல அல்லாஹ்வின்
திருப்பெயரை மனதில் உச்சரித்து
அவனைத் தொழுது இந்தக்
கட்டுரையை நான் எழுதிடத்
தொடங்குகிறேன்.
அன்பர்களே !!
பொதுவாக புதிதாக திருமணம்
செய்து கொண்ட இளம்தம்பதிகளை
ஆடி மாதம் விருந்துக்கு அழைத்து
பிறகு மாப்பிள்ளையை அவரது
வீட்டிற்கு அனுப்பிவிட்டு பெண்ணை
ஒருமாதம் தாயின் வீட்டிலேயே
இருக்க வைத்து அதன்பின் ஆவணி
மாதம்தான் மாப்பிள்ளை வீட்டிற்கு
அனுப்பி வைப்பதுதான் நமது
வழக்கம். இதன் காரணம் என்ன
என்று நம்மில் அனேகர் அறிந்து
இருக்க நியாயம் இல்லை.
இப்படி பெண்ணையும்
மாப்பிள்ளையையும் ஏன்
தனித்தனியாக பெற்றோர்கள்
பிரித்து வைக்கிறார்கள் என்றால்
அதன் உண்மைக் காரணம்
இதுதான்:-
ஆண்,பெண் இருவரும் ஆடி மாதம்
உடலுறவு கொண்டு அதனால் கரு
உண்டாகிவிட்டால்(பிறக்கப்போகும்)
ஆடியிலிருந்து பத்தாம் மாதமாம்
சித்திரை மாதம் குழந்தை பிறக்கும்.
அது ஒரு வேனல் காலம். மேலும்
சித்திரைச் சுழியில் குழந்தை
பிறப்பதும் குடும்பத்திற்கு ஆகாது
என்று ஒரு கருத்தும் நம்மிடையே
நிலவுகிறது. எனவே அப்படி ஒரு
சூழ்நிலை உருவாவதைத் தடுத்திட
ஆடிமாதம் தலைப்பிள்ளை வராமல்
இருப்பதற்காகவே புதுமண
தம்பதிகளை தனியே பிரித்து
விடுகின்றார்கள். இது நமது
முன்னோர்கள் காலம்காலமாக
கடைப்பிடித்து வந்ததொரு நல்ல
பண்பாடு. இதன் உண்மைக்காரணம்
அறிந்து நாம் இனிஎங்கிலும் இதைக்
கடைப்பிடித்து வாழ்ந்து நமது
பண்பாட்டிற்கு தலை
வணங்கிடுவோம்.
நன்றி !! வணக்கம் !!
அஸ்ஸலாமு அலைக்கும் !!
அன்புடன். மதுரை T.R.பாலு.
No comments:
Post a Comment