Monday, 3 March 2014

புகைபிடிக்கும் பழக்கத்தை விட முடியவில்லையா ? இதோ ஒரு எளிய மாற்று வழி !!











        பிஸ்மில்லாஹ் ஹிர் ரஹ்மானிர் ரஹீம் !!





அளவற்ற அருளாளனும் நிகரற்ற 


கொடையாளனுமாகியஎல்லாம் வல்ல 


அல்லாஹ்வின் திருபெயரை தொழுது


இந்தக் கட்டுரையை நான் எழுதிடத் 


துவங்குகின்றேன்.



அன்பர்களே !!



எனது ஆருயிர் நண்பன் பெயர் கரிகாலன். 


பெயர்தான் கரிகாலனே ஒழிய நிறம் சுண்டி 


விட்டால் உதிரம் வந்து கொட்டும் அந்த அளவு 


சிகப்பு அவன். அவனுடைய தந்தை தஞ்சாவூர் 


எனவே தனது மகனுக்கு அவர் அந்த பெயர் 


வைத்திருக்கிறார் போலும். சரி அதை விடுங்கள் 


எத்தனை பெண்கள் இந்த நாட்டிலே ரம்பா, 


ஊர்வசி என பெயரை வைத்துக்கொண்டு 


பார்த்தால் ரம்பத்தைக் போன்ற கண்களையும் 


ஊசிப்ப்போன உளுந்தவடை போன்ற 


உருவங்களையும் கொண்டு இந்த நாட்டிலே 


உலவிக்கொண்டிருக்கிறார்கள் அதுபோலத்தான் 


எனது நண்பனின் பெயரும் என்று வைத்துக் 


கொள்ளுங்களேன்.



அவனுக்கும் கிட்டத்தட்ட என் வயதுதான். 


என்னைப்போலவே அவனுக்கும் தலை 


வழுக்கை. நாங்கள் இருவரும் 


ஈருடல் ஓருயிர். அவனுக்கு கடந்த சில 


மாதங்களாக ஏறத்தாள 3௦ ஆண்டுகள் 


விட்டுப்போயிருந்த இந்த கெட்ட 


புகைபிடிக்கும் பழக்கம், மீண்டும் அவனைத் 


தொற்றிக் கொண்டுள்ளது. எப்படி அதிலிருந்து 


மீள்வது என்று அவன் தெரியாத நிலையில், 


என்னைவந்து ஆலோசனைகேட்டான். 


இப்போது அவனுக்கு சொல்லும் அதே 


ஆலோசனையே அன்பு உள்ளங்களே !! 


உங்களுக்கும். நான் சொன்ன அந்த 


பதில் என எடுத்துக்கொள்ளுங்கள்.


நான் அவனிடம் சொன்னேன் தம்பி உடனடியாக 


சடார் என்று எந்த பழக்கத்தையும் 


நிறுத்திடக்கூடாதுஎனவே கொஞ்சம் 


கொஞ்சமாக நிறுத்து.முதலில் இந்த சிகரெட் 


பழக்கத்தை நிறுத்திவிட்டு நீ இன்று முதல்பீடிக்கு 


மாறு. (நான் ஏன் பீடிக்கு மாறிடு என்று 


சொன்னேன் என்றால் ஒரு சிகரெட் என்பது 


ஐம்பது  ( 5௦ ) பீடிகளுக்குச் சமம் என்று 


சொன்னேன்.உடனே அண்ணே என் தரம் என்ன? 


என் யோக்கியதை என்ன ? நான் போயி பீடி 


குடிச்சா என் மரியாதை,கெளரவம் என்ன 


ஆவுறது என்று அவன் கேட்டான்.


உடனே நான் சொன்னேன் தம்பி நம்மகிட்டே 


இல்லாததைப் பற்றி எல்லாம் 


கவலைப்படக்கூடாது அதை நீ 

முதலில் தெரிஞ்சுக்கோ. உடனே அவன் என்ன 


அண்ணே பேயை விட்டுட்டு பிசாசை பிடிச்சுக்கச் 


சொல்றீங்களே என்று சொன்னான். உடனே நான் 


சொன்னேன் தம்பி சிகரெட் பெரிய பேய். பீடி 


குட்டிப்பிசாசு. அண்ணே என்ன சொல்றேன்னு 


கேளுரா முதல்ல. தம்பி சிகரெட்டை சுத்தமா 


நிறுத்திட்டு இந்தபீடிக்கு வந்தீன்னா, முதல்லஒரு 


நாளைக்கு 2௦ சிகரெட்  குடிச்சன்னு வச்சுக்க 


இந்த பீடிக்கு வந்தா நாலு அல்லது 5 சிகரெட் 


குடிச்ச மாதிரி கணக்குத் தாண்டாவரும். 



"தவிரவும் நீ குடிக்கிற ஒவ்வொரு பீடியும் ஒரு 


தமிழ்க்குடும்பத்துக்கு செய்கின்ற உதவி 


பாத்துக்கோ " என்றேன்.


உடனே அவன் அண்ணே பீடி ரெண்டு தம்லே 


உதடு சுடும்னே என்ன செய்றது? என்றான்/. 


சுடத்தான் செய்யும் தம்பி. நீ என்ன நல்ல 


பழக்கத்தையா பழகி இருக்கே சுடாம 


இருக்கிறதுக்கு. அதுக்கும் ஒரு மாத்து வழி 


இருக்குடா. சுடாமல் பீடி குடிக்க? எப்படின்னே . 


என அவன் கேட்க. நான் சொன்ன பதில் இதோ:-  


ஒருதரம் பீடியை பத்தவச்சு உள்ளே புகையை 


இழுத்து அதுக்கு அப்புறம் உள்ளே இருந்து 


காத்தை அந்த பீடி வழியா வெளிய்டே விடு. 


இப்படி மாத்தி மாத்தி செஞ்சா கடைசி வரைக்கும் 


பீடி குடிக்கலாம் உனது உதடு சுடாம பீடியை 


குடிக்கலாம்டா என்றேன்.உடனே அவனும் 


சம்மதித்தான். காலையில் நாங்க 


நடைபயிற்சி முடிச்சுட்டு வரச்சே நான் 


அவனுக்கு என கைக்காசு செலவு பண்ணி 2௦ 


பீடிகள் கொண்ட ஒருகட்டு காஜா பீடி வாங்கித் 


தந்தேன் விலை வெறும் பதினெட்டு ரூபாய் 


மட்டுமே. இதேஇருபதுசிகரெட் வாங்கினோம்னா 


ரூபாய் 15௦ ஆகும். எப்படி நான் என் நண்பனுக்கு 


உதவி செஞ்சி இருக்கேன். 


பாத்தீங்களா நண்பர்களே. எனவே உங்களில் 


யாராவது புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவங்க 


இருந்த ப்ளீஸ் இந்த மாத்து யோசனைப்படி 


நடந்துக்குங்கன்னு நான்அன்போடு 


கேட்டுக்கொண்டு நன்றி சொல்லி விடை 


பெறுகின்றேன்.



அஸ்ஸலாமு அலேக்கும்.



நன்றி !! வணக்கம் !!



அன்புடன் மதுரை T.R.பாலு.  

No comments:

Post a Comment