இன்று சர்வதேச மகளிர் தினம் !! வாழ்த்துக்கள் மங்கையர்களுக்கு !!
பிஸ்மில்லாஹ் ஹிர் ரஹ்மானிர்
ரஹீம் !!
அஸ்ஸலாமு அலேக்கும் !!
அளவற்ற அருளாளனும்
நிகரற்ற கொடையாளனுமாகிய
எல்லாம் வல்ல அல்லாஹ்வின்
கருணையால் இந்தக்கட்டுரையை
எழுதுகின்றேன்.
அன்பர்களே !! நீங்கள் யாவரும்
அறிவீர்கள் இன்று அகிலஉலக
மகளிர் தினம் என்று. ஆனால்
ஒருசிலர் மட்டுமே
அறிந்திருப்பார்கள் எப்படி இன்று
இந்த அகிலஉலக மகளிர்தினம்
அனுசரிக்கப்படுகிறது என்று. நாம்
அனைவரும் அதனை
அறிந்திடவேண்டி அதன்
உண்மைக்கருத்தை நான் இங்கே
உங்களிடம் விளக்கிக்கூறிட வந்து
உள்ளேன் அன்பர்களே !!
அது 1857ம் ஆண்டு. மார்ச் மாதம்
எட்டாம் தேதி. இன்றுதான்
அமெரிக்காவின் நியூயார்க் நகரில்
பணிபுரிந்த ஆயிரக்கணக்கான
பெண் நெசவுத் தொழிலாளிகள்
தங்களது உரிமைகளை
நிலைநாட்டிட போராட்டம் நடத்தி
வெற்றிபெற்ற நாளாகும்.
எட்டு மணிநேர வேலை, வாரத்தின்
ஒருநாள் ஓய்வு, பணி நிரந்தரம், இது
போன்ற பல்வேறு கோரிக்கைகள்
அந்த நாட்டின் ஏகாதிபத்திய
சக்திகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட
நாள்தான் இன்று ௦8-௦3-2௦14.
ஆகவேதான் உலகம் முழுவதும்
இந்த நாள் உலக மகளிர்தினம்என்று
அனுசரிக்கப்படுகிறது. அனைத்து
மகளிருக்கும் வாழ்த்துக்கள்.
நன்றி !! வணக்கம் !!
அன்புடன் மதுரை T.R. பாலு.
No comments:
Post a Comment