Monday, 10 March 2014

இறைவன் படைப்பினில் மனித நரம்பினைத் தவிர ஏனைய அனைத்தும் கோணலாகிவிட்டால் குணம் மாறிடுமா ? என்ன ? --ஒரு புது விளக்கம் !!







    பிஸ்மில்லாஹ் ஹிர் ரஹ்மானிர் 




                          ரஹீம் !!



அஸ்ஸலாமு அலேக்கும் !!                     



அளவற்ற அருளாளனும் நிகரற்ற 


கொடையாளனுமாகிய எல்லாம் 


வல்ல அல்லாஹ்வின் 


கருணையால் இந்தக் கட்டுரை 


எழுதப்படுகின்றது.                               



அன்பர்களே !!                                       


இறைவனால் படைக்கப்படுகின்ற 


அனைத்தும் நேரானவைகளாகவே 


எப்போதும் படைக்கப்படுவதுஎன்பது 


கிடையாது. எல்லாவற்றிலும் 


கோணலானதுகளும் அவ்வப்போது 


படைக்கப்படுகின்றது. இதுவே இந்த 


துனியாவில் உண்மை. அப்படி சில 


கோணலாக படைக்கப்படுவதினால் 


அதன் அடிப்படைத் தன்மை எந்த 


அளவும் பாதிக்கப்படுவதும் 


இல்லை.



சங்க கால இலக்கியங்களில் ஒரு 


பாடல் மேற்சொன்ன கருத்தினை 


பிரதிபலிக்கும் வண்ணம் 


எழுதப்பட்டு உள்ளது. 



அந்தப் பாடல் இதோ 


உங்களனைவரின் கவனத்திற்கும் :-                                           



அரும்பு கோணிடில் அதன் மணம் 


                                                  குன்றுமோ ? 


இரும்பு கோணிடில் யானையை  


                                             வெல்லலாம் !! 


கரும்பு கோணிடில் கட்டியும் 


                                                     பாகுமாம் !! 


நரம்பு கோணிடில் நாம் அதற்கு என் 


                                                    செய்வோம் !!



பூ அதன் காம்புடன் கோணலாக 


இருப்பதினால் அதன் நறுமணம் 


என்றுமே குறைந்து போகாது !!         



இரும்பு வளைந்து கோணலாக 


இருந்தால் யானையை அடக்கக் 


கூடிய அங்குசமாக ஆகி அதனை 


அடக்கிடலாம் !!                                   



கரும்பு கோணலாக வளர்ந்தால் 


அதனைக் காய்ச்சி வெல்லக்கட்டி 


மற்றும் சர்க்கரைப்பாக ஆக்கி நாம் 


பயன்படுத்திடலாம் !!                       



ஆனால் மனிதனின் நரம்பு கோணல் 


ஆகிவிடின் நாம் அதற்கு என்ன 


செய்திடுவோம் ?  செய்ய முடியும் !! 



இதுதான் அந்தப்பாடலுக்கு 


உண்டான விளக்கம் ஆகும் 


அன்பர்களே !!                                           


மீண்டும் நாளை மற்றும் ஒரு 


தலைப்பில் உங்கள் அனைவரையும் 


நான் சந்திக்கிறேன். அதுவரை 


உங்கள் அனைவருக்கும் நன்றி கூறி 


விடைபெறுகின்றேன்.                               


நன்றி !! வணக்கம் !!                                     



அன்புடன். மதுரை T.R.பாலு.

No comments:

Post a Comment