பிஸ்மில்லாஹ் ஹிர் ரஹ்மானிர்
ரஹீம் !!
அஸ்ஸலாமு அலேக்கும் !!
அளவற்ற அருளாளனும் நிகரற்ற
கொடையாளனுமாகிய எல்லாம்
வல்ல அல்லாஹ்வின்
கருணையால் இந்தக் கட்டுரை
இங்கே உங்கள் அனைவருக்கும்
வழங்கப்படுகின்றது நேயர்களே !!
இந்த உலகத்தில் பணம் என்பது
எவ்வளவு முக்கியத்துவமான ஒரு
விஷயமாக நமது சமூகத்தில் கருத
இடமுள்ளது என்பதனை இங்கே
திரைப்படங்களில் எந்த அளவுக்கு
வலியுறுத்தப்படுகிறது என்பதனை
அலசி ஆராய்வதுதான் இந்தக்
கட்டுரையின் முக்கிய நோக்கம்
ஆகும். " பணம் " என்ற பெயரில்
அந்தக் காலத்தில் வெளிவந்த
படத்தில் இடம் பெற்ற, முத்தமிழ்
அறிஞர் தலைவர் திரு கருணாநிதி
அவர்கள்இயற்றிய இந்தப்பாடலை,
மறைந்த கலைவாணர்
N.S.கிருஷ்ணன் தனது
சொந்தக்குரலில் பாடிய
இந்தப்பாடலில்தான் எத்தனை
சிறப்புகள் இந்த " பணத்தை " பற்றி !!
இந்தப்பாடலைப் பார்த்தால்
உங்களுக்கே தெரியும் அதன்
முக்கியத்துவம்.
****************************************
எங்கே தேடுவேன் ?
***************************************
எங்கே தேடுவேன் ? எங்கே
தேடுவேன்?
பணத்தை எங்கே தேடுவேன் ?
உலகம் செழிக்க உதவும் பணத்தை
எங்கே தேடுவேன்?
அரசர் முதல் ஆண்டியும்
ஆசைப்படும் பணத்தை எங்கே
தேடுவேன் ?
(எங்கே )
கருப்புமார்கெட்டில்
கலங்குகின்றாயோ ?
கஞ்சன் கையிலே
சிக்கிக்கொண்டாயோ ?
கிண்டி ரேசில் சுற்றி
கிறுகிறுத்தாயோ ?
அண்டினபேர்களை ரெண்டும்
செய்யும் பணத்தை
எங்கே தேடுவேன் ?
(எங்கே)
பூமிக்குள் புதைந்து
புதையலானாயோ ?
பொன்நகையாய் பெண்மேல்
தொங்குகின்றாயோ ?
சாமிகள் அடிதனில்
சரண் புகுந்தாயோ ?
சந்நியாசிகோலத்தோடு
உலவுகின்றாயோ ?
(எங்கே தேடுவேன்)
திருப்பதி உண்டியலில்
சேர்ந்து விட்டாயோ ?
திருவண்ணாமலை
குகை புகுந்தாயோ ?
இருப்புபெட்டிகளில்
இருக்கின்றாயோ ?
இரக்கம் உள்ளவரிடம்
இருக்காத பணம்தனை
எங்கே தேடுவேன் ?
(எங்கே தேடுவேன்)
தேர்தலில் சேர்ந்து
தேய்ந்துபோனாயோ?
தேக சுகத்துக்காக
ஊட்டி சென்றாயோ ?
சுவற்றுக்குள் தங்கமாய்
பதுங்கி விட்டாயோ ?
சூடம்சாம்பிராணியாய்
புகைந்து போனாயோ?
எங்கே தேடுவேன் பணத்தை
எங்கே தேடுவேன் ?
உலகம் செழிக்க உதவும்
பணமே !! பணமே !!
(எங்கே)
இதேபோல " அலிபாபாவும்
நாற்பது திருடர்களும் " படத்தில்
பணத்தை அதன் சிறப்பு பற்றிய
பாடல் இதோ :-
நாங்க ஆடுவதும் பாடுவதும்
காசுக்கு !! இங்கே ஆனந்தக்
கூத்தாடுவதும் காசுக்கு !!
நாங்க கூடுவதும் குழைவதும்
காசுக்கு !! காசுக்கு !!
இந்த அளவுக்கு முக்கியத்துவம்
பெற்றிருந்த பணம்தனைப்பற்றி
சிறப்பான இடம் மேலே குறிப்பிட்ட
இரண்டு பாடல்களிலுள் இடம்
பெற்று இருந்தாலும்கூட இந்தப்
பணம் மட்டும் அல்ல வாழ்க்கை.
இதைவிட முக்கியமானது
குணம்தான் என்று ஒரு தமிழ்த்
திரைப்படப் பாடல் ஒன்று நமக்கு
விளக்கிக் கூறுகிறது.
அந்தப்பாடலையும் நாம் சற்று
பார்ப்போமா நேயர்களே !!
பணம் என்னடா ?
பணம் பணம் ?
குணம்தானடா நிரந்தரம் !!.
நான் என்னிடத்தில் இல்லாததா ?
என்னவென்று பார்க்காததா ?
மனித இயல்பை ஒழித்து பகட்டை
வளர்க்கும் பணம் என்னடா பணம்?.
மிருக குணத்தை வளர்க்கும் !!
இயல்பை ஒழித்து பகட்டை
வளர்க்கும் பணம் என்னடா பணம் ?
எனும் பாடலும் இதே தமிழ்த்திரை
வானில் ஒலித்த நாட்களும் உண்டு.
அதேபோல மற்றும் ஒரு பாடல் :-
பணம் இருந்தால் போதுமடா
மடியிலே !! அய்யா !!
பாசமென்ன ? நேசமென்ன ?
உலகிலே ?
அட !!...பணமே !!....அட !!...பணமே !!
என்று மற்றும் ஒரு பாடலும் உண்டு.
எனவேஅன்புத்தமிழ்நெஞ்சங்களே !!
பணம்தான் வாழ்க்கையின் உயிர்
மூச்சு !! இதனை மதிக்காமல் நாம்
வாழ்ந்தால் மானமே போச்சு!!
இதுபோலவே அந்தக்காலத்தே
வெளிவந்த "சக்கரம் " எனும்
திரைப்படத்தில் வந்த இப்பாடல்
மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்றாகும்.
காசேதான் கடவுளடா !!
அந்தக்கடவுளுக்கும் இது
தெரியுமடா!!
கைக்கு கைமாறும் பணமே !!
உன்னைக் கைப்பற்ற நினைக்குது
மனமே !!
நீ தேடும்போது வருவதுண்டோ ?
விட்டுப்போகும்போது
சொல்வதுண்டோ ?
என்று ஒரு பாடலும்
அந்தக்காலங்களில் மிகவும்
அருமையானதொரு பாடலாகக்
கருதப்பட்டது.
இதைதான் எங்கள் ஊர்
மதுரையினில் ஓடிடும்ஆட்டோவில்
வாசகமாகவேஎழுதியிருப்பார்கள்.
அது என்னவென்றால் :-
கருவறையிலிருந்து கல்லறை
செல்லும் வரையில் நமக்குத்
தேவை சில்லறையே !! அதே போல
மற்றும் ஒரு பாடலில் :-
இல்லானை (பொருள்/பணம்)
இல்லாளும்(மனைவி) வேண்டாள் !!
ஈன்றெடுத்த தாய் வேண்டாள் !!
செல்லாது அவன் வாய்சொல் !!
இந்தப் பாடலின் பொருள் :-
தனது பையில், கையில் காசு,பணம்,
அற்றவனை முதலில் அவனது
மனைவியே விரும்பிட மாட்டாள்.
அவனை பத்து மாதம் சுமந்து பெற்ற
அன்னை விரும்பிட மாட்டாள்.
அவனது வாயிலிருந்து
வரும் எந்த சொல்லும்
செல்லுபடியாகவே ஆகாது !!
அதுபோலவே மற்றும் ஓர்பாடலில்:-
இன்சொல்லன் தாள்நடையன்
ஆயினும் ஒன்றில்லானேல்
வன்சொல்லினது வாய் திறவா !!
என் சொல்லினும் கைத்துடையான்
காற் கீழ் ஒதுங்கும் கடல்ஞாலம்
பித்துடைய !! அல்ல பிற !!
என்றும் சொல்லப்பட்டு உள்ளது.
இப்பாடலின் பொருள்:-
இனிமையாகப் பேசக்கூடியவன் !!
அதிர்ந்து நடக்கத்தெரியாதவன்.
அமைதியுடன் நடப்பவன் !! அப்படி
அவன் இருந்தபோதிலும்
அவனிடம் காசு,பணம் இல்லை
என்று சொன்னால், இந்த உலகம்
அவனை இப்படித்தான் சொல்லும்.
அது என்னவென்றால் அவன்
"" கிடக்கிறான்யா !! வெறும்பய !! ""
இப்படித்தான் அடைமொழி சொல்லி
அவனை குறிப்பிட்டுக்காட்டும்.
அப்படிப்பட்ட இந்த உலகம் என்பது
வெறும் பைத்தியக்காரத்தனமான
உலகமே அன்றி வேறு எதுவும்
அல்ல.
பாருங்கள் அன்பர்களே !!
பணத்தின் சிறப்பை !!
ஆனால் ஜோதிட விதிப்படி
யாரெல்லாம் செல்வம்,செல்வாக்கு
மிக்கவர்களாக இருந்திட முடியும்
என்று கேட்டால் :-
இராசிக்கட்டத்தினில் லக்னாதிபதி
உச்சம் பெற்று இருந்தால், அவன்
நல்ல கிரகங்களின் பார்வை பெற்று
இருந்தால், அவன் குருவினால்
பார்க்கப்பட்டு இருந்தால், மேலும்
ஒன்பதாம் பாவாதிபதியான
பாக்கியாதிபதி மற்றும்
பதினொன்றாம் வீட்டுக்கு
அதிபதியான இலாபாதிபதியும்நல்ல
பலத்தோடும்நல்ல புண்ணிய
கிரகங்களின் சேர்க்கையோஅல்லது
பார்வையோ பெற்று இருப்பின்
அவர்களுக்கு மட்டிலுமே
மேலேசொன்ன அந்த
ஜோதிடவிதிப்படி பண யோகம்
சும்மா தாறுமாறாகவே வந்து
அமையும்.
அதே சமயம் நமது சங்ககால
இலக்கியங்கள் என்ன சொல்கிறது
என்று பார்போமா :-
நீரளவே ஆகுமாம் நீராம்பல் !!தான்
கற்ற
நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு !!
மேலைத் தவத்தளவே ஆகுமாம்
தான் பெற்ற செல்வம் !!
குலத்தளவே ஆகுமாம் குணம் !!
என்னே ஒரு அதி அற்புதமான
கருத்துக்கள் செறிந்த ஒரு பாடல்.
அன்பர்களே !! இந்தப்பாடலின்
பொருள் என்னவென்றால் :-
ஆற்றில் ஓடுகின்ற நீரின் அளவு
எவ்வளவு உயரமாக
இருக்கின்றதோ அந்த அளவிற்கு
வந்து தாமரைகொடி பூ பூக்கும்.
நாம் எந்த அளவு கல்வி பயின்று
இருக்கின்றோமோ அந்த அளவிற்கு
நமக்கு நுண்ணறிவு (INTELLIGENCE)
இருக்கும்.
அது போலவே நாம் சென்ற
பிறவியில் எந்த அளவிற்கு
தான,தர்மங்கள் செய்திருந்தோமோ
அந்த அளவிற்கே இந்தப் பிறவியில்
நாம் செல்வந்தராக இருந்திட
முடியும்.
நாம் எந்த குலத்தை/ஜாதியை/
பிரிவை/வர்ணாசிரமத்தில் பிறந்து
உள்ளோமோ அந்த அளவிற்கு
மட்டும்தான் நமது குணம் என்பது
நம்மிடம் அமையும்.
இதுதான் பாடலின் பொருள் என்
அன்புத் தமிழ் நெஞ்சங்களே !!
இந்த அளவினில் கட்டுரை நிறைவு
பெறுகின்றது. மீண்டும் அடுத்த
பதிவில் நாம் அனைவரும்
சந்திபோம். அதுவரையில்
கட்டுரையில் இடம் பெற்ற
கருத்துக்களைப் பற்றி நாம்
சிந்திப்போம் என்று சொல்லி இந்த
அளவில் உங்கள் அனைவரிடமும்
இருந்து நான் விடைபெறுகின்றேன்.
நன்றி !! வணக்கம்!!
அன்புடன் மதுரை T.R. பாலு.
No comments:
Post a Comment