Thursday, 27 February 2014

இந்துக் கோவில்களின் வெளிப்புறச் சுவர்களுக்கு ஏன் சிகப்பு வெள்ளை வர்ணம் பூசுகிறார்கள் ? காரணம் தெரியுமா உங்களுக்கு !!






உடல்மண்ணுக்கு!!உயிர்தமிழுக்கு!!                         



உலகம் முழுவதும் வாழ்ந்துவரும்                               



எனது அன்புத் தமிழ் உடன்பிறப்புகளே !!                     



இன்றையதினம் நான் உங்களுக்கு வழங்க 



இருக்கும் இந்தக்கட்டுரையில் எந்தக் கருத்தை 



விளக்கிட இருக்கிறேன் என்று சொன்னால் 



அதுதான் நமது இந்துக்கோவில்களில் உள்ள 



வெளிப்புறச் சுவர்களுக்கு ஏன் சிகப்பு மற்றும் 



வெள்ளை வர்ணங்கள் பூசப்பட்டு உள்ளன ? 



அந்தக்காரணம் உங்களில் யாருக்காவது 



தெரியுமா என்று ஒரு கேள்வியுடனேயே எனது 



இந்தக் கட்டுரை ஆரம்பம் ஆகின்றதுஅன்பர்களே 



தெரிந்திருந்தால் சரி. தெரியாதவர்களுக்கு நான் 



தரும் விளக்கம் இதோ :-                                                   




அன்பர்களே !! இந்த இரண்டு வர்ணங்களான 



சிகப்பு மற்றும் வெள்ளை இவைகளுக்குள்ளாகத் 



தான் மனித ஜனனமே அடங்கி உள்ளது.   ஆம் 



அன்பர்களே !! உங்களுக்குப் புரிய வில்லை !! 



இதில் வெள்ளை என்பது ஆண்சுக்கிலத்தின் 



நிறத்தையும் சிகப்பு என்பது பெண்உதிரத்தின் 



நிறத்தையும் இங்கே குறிக்கின்றது. இந்த 



இரண்டும் ஒரு ஆணிடம் இருந்து வெள்ளை நிற 



சுக்கிலமும் அது போய் ஒரு பெண்ணின் 



கருவறையில் உள்ள சினைமுட்டைகள் சேர்ந்து 



உள்ள உதிரத்தின் நிறமான சிகப்புடன் 



இணைந்தால் மட்டுமே எப்படி ஜீவன் இந்த 



பூமியில் கருவாகி பின்னர் உருவாகிறதோ அதை 



நினைவு படுத்தும் விதமாகவே கோவிலின் 



வெளிப்புறச் சுவர்களுக்கு அந்த இரண்டு 



வர்ணங்களையும் பூசி அந்தந்த ஊரில் 



வாழ்ந்திடும் ஆண்களும் பெண்களும் அந்த 



இந்து திருக்கோவில்களுக்குச் சென்று எல்லாம் 



வல்ல அந்த இறைவனின் நாமத்தை பாடி பயன் 



பெறவேண்டும் என்றேதான் கோவில்களின் 



வெளிப்புறச் சுவர்களுக்கு சிகப்பு மற்றும் 



வெள்ளை வர்ணங்கள் பூசப்படுகின்றது இந்தக் 



கருத்தை எனக்கு கூறியவர் எனது ஏழாவது 



வகுப்பில் எனக்குத் தமிழ் பாடம் நடத்திய 



(அப்போது எனக்கு வயது 11-இன்றைக்கு 



கிட்டத்தட்ட 5௦ ஆண்டுகளுக்கு முன்பு நடந்த 



சம்பவம் இன்றளவும் என் மனமதில் பசுமரத்து 



ஆணிபோல பதிந்து இருக்கின்றது)மறைந்த 



ஊமச்சிகுளம் K.இராம அய்யர் ஆவார்.                 



அன்பர்களே !! கட்டுரை இத்துடன் நிறைவு 



பெறுகின்றது. அடுத்து விரைவினில்சந்திப்போம். 



நன்றி !! வணக்கம் !!                                                           



அன்புடன் மதுரை TRபாலு.

கம்பம் நகரின் சிறப்பு என்ன என்று உங்களுக்குத் தெரியுமா நேயர்களே ?






உடல்மண்ணுக்கு!!உயிர்தமிழுக்கு!!



உலகம் முழுவதும் வாழ்ந்துவரும்                                 



என் அன்புக்கும் பாசத்திற்கும் உரிய                             



அன்புத்தமிழ் உடன்பிறப்புகளே !!                                 



உங்கள் அனைவருக்கும் வணக்கம்.                             



இன்றைய தினம் நமது கட்டுரையில்                           



நான் உங்கள் அனைவருக்கும் தெரிவிக்க உள்ள 



கருத்து என்னவென்றால், அது முன்பு மதுரை 



மாவட்டத்தில் இருந்ததும் தற்போது தேனீ 



மாவட்டத்திற்கு மாற்றப்பட்டதும் ஆன கம்பம் 



நகரைப்பற்றிய ஒரு சிறப்புக் கட்டுரையே ஆகும். 



அது  1991ம் ஆண்டு. தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு 



தேர்தல் நடைபெற இருந்த காலம். அப்போது 



முத்தமிழ் வித்தகர், முதுபெரும் தமிழ்நாட்டின் 



அரசியலில் வாழும் ஒரே தலைவர் கலைஞர்             



திரு மு.கருணாநிதி அவர்கள் தனது தேர்தல் 



பிரச்சாரத்தை  துவக்கிட,ஆரம்பிக்க, அவர் 



தேர்ந்து எடுத்த நகர்தான் கம்பம் ஆகும். திராவிட 



முன்னேற்றக் கழகத்தின் முன்னணித் 



தலைவர்களாலேயே இதைப் புரிந்துகொள்ள 



முடியாமல் திகைத்து இருந்த காலம் அது. 



என்னடா இது ? தமிழகத்தில் எத்தனையோ 



நகரங்கள் இருந்திடும்போது, ஏன் தலைவர் 



கலைஞர் அவர்கள் இந்த கம்பம் நகரைத் தேர்ந்து 



எடுத்தார் என்பது புரியாமல் குழம்பிக்கொண்டு 



இருந்தனர். அவர்கள் அனைவரின் 



மனக்குழப்பத்தை தலைவர் கலைஞர் அவர்கள் 



பொதுக்கூட்ட மேடையில், தனது  உரையினை



அவர்  நிகழ்த்துகின்ற பொழுது தீர்த்து வைத்தார் 



என்பது காலம் நமக்கு எடுத்துக் கூறிடும் ஒரு 



வரலாற்று நினைவலைகள். கலைஞர் அவர்கள் 



தமது தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அங்கே 



உரையாற்றிடும்போது இதைப்பற்றி அவர் அன்று 



குறிப்பிட்டதை நான் இங்கே இன்று உங்களுக்கு 



வழங்குவதில் மிகவும் மட்டற்ற மகிழ்ச்சி 



அடைகின்றேன் அன்பு உள்ளங்களே !!                 



தலைவர் ஆற்றிய உரை இதோ :-                     



அன்பிற்கினிய ஆன்றோர் பெருமக்களே !! 



அறிவிற்சிறந்த சான்றோர் பெருமக்களே !! 



தாய்மார்களே !! இளம் வாலிப உள்ளங்களே !! 



நாளைய உலகின் நம்பிக்கை நட்ஷத்திரங்களே !! 



என் உயிரினும் மேலானஅன்பு உடன்பிறப்புகளே!!



உங்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த 



வணக்கத்தை நான்இங்கேதெரியப்படுத்திடும்  



இந்த நல்ல வேளையில் இந்த 1991ம் ஆண்டு 



நடைபெற உள்ள சட்டமன்றத்திற்கான தேர்தல் 



பிரச்சாரக்கூட்டத்தை நான் ஏன் இந்தக் கம்பம் 



நகரினில் இருந்து துவக்குகிறேன் என்று 



கேட்டால் ஒரு இயக்கம் தனது 



வெற்றிக்கொடியினை ஏற்றி மகிழ்வதற்கு ஒரு 



கம்பம் தேவை.அந்த நமக்கு கிடைத்திட 



இருக்கும் இந்த சட்டமன்ற தேர்தல் வெற்றியை 



கொடியாக ஏற்றிட நான் இந்தக் கம்பம் நகரின் 



வெற்றியை நல்லதோர் கம்பமாக பறக்கவிட 



எண்ணியே முதன்முதலாக தேர்தல் பிரச்சாரக் 



கூட்டத்தை இந்த கம்பம் மாநகரிலிருந்து 



துவக்கிட எண்ணி முடிவெடுத்து இங்கிருந்து 



திராவிட முன்னேற்றக் கழகப் 



பொதுக்கூட்டங்கள் நடத்திட ஆரம்பித்து 



இருக்கிறேன் (இவ்வாறு தலைவர் பேசி 



முடித்தவுடன் கூட்டத்தின் கரவொலி அடங்கிட 



ஐந்து மணித்துளிகள் ஆகின) என்னே ஒரு 



அமைதியான அரசியல் கணிப்பு. வாழ்க அவரது 



தொண்டு.வளர்க அவர்தம் தமிழ்மொழி நினைவு. 



 நன்றி !! வணக்கம்!!                                                             



 அன்புடன். மதுரை T.R.பாலு.


Wednesday, 26 February 2014

பிள்ளைகள் பிறப்பது எல்லாம் பூர்வ புண்ணிய பலன்களால் மட்டுமே !! இது ஒரு ஜோதிடம் சம்பந்தப்பட்ட விளக்க கட்டுரை !!






உடல்மண்ணுக்கு!!உயிர்தமிழுக்கு!!



உலகம் முழுவதும் வாழ்ந்து வரும்



என் அன்புத் தமிழ் உடன்பிறப்புகளே!!



உங்கள் அனைவருக்கும் வணக்கம்.


அன்பர்களே !!                                             



கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக 


நான் ஜோதிடத்தில் ஆராய்ச்சி செய்தவன் 


நான். மலேசியா நாட்டில் கோலாலம்பூர் 


நகரில் ஏறத்தாள  ஐந்து ஆண்டுகளுக்கு 


மேலாக அங்குள்ள மிகப் பெரிய அளவில் 


(மந்திரிகள், டத்தோக்கள் செல்வந்தர்கள் )


வாழ்ந்திடும் மனிதர்களுக்கு ஜோதிடம் 


சொன்னவன் அடியேன் என்பதை இந்த 


தருணத்தில் உங்களது கவனத்திற்கு 


கொண்டு செல்வதில் நான் உள்ளபடியே 


மிகவும் பெருமைப்படுகிறேன்.



எனவே நான் எனது இந்தக் கட்டுரையை 


ஜோதிடம் கலந்த ஒரு கட்டுரையாக இங்கே 


தருகின்றேன் என் அன்புத் தமிழ் நெஞ்சங்களே !!


பொதுவாக நம்மில் ஒரு சொல்வழக்கு என்று 


உண்டு. அது என்னவென்றால் :-



ஒருவருக்குப்பிள்ளைகள் மிகதிறமைசாலியாக,


நல்ல அறிவுள்ளவனாக, ஆற்றல் மிக்கவனாக,


விளையாட்டு வீரனாக, அரசியல் வித்தகனாக,


நடிகனாக, வசனகர்த்தாவாக, இதுபோல 


சமூகத்தில் குறிப்பிட்டுப் பேசப்படும் ஒரு தனி 


மனிதனாக பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து வந்தான் 


என்றால் என்ன சொல்வார்கள் நாட்டில் உள்ள 


மக்கள் :-



உம்....எல்லாம் அவங்க அப்பன் கோவணம் 


அவுத்த நேரம்தாண்டா !! காரணம் .......



என்று சொல்வது நம் மக்களின் வழக்கம். இது 


உண்மையா ? இல்லை. இல்லவே இல்லை. 


இதற்கு முழுக்க முழுக்க காரணம் இந்தப் 


பிள்ளையின் தாய்,தந்தை பூர்வ ஜென்மத்தில் 


செய்த அரும் பெரும் புண்ணியங்கள்தான் 


காரணம் என்றே ஜோதிட சாஸ்திரங்கள் நமக்கு 


எடுத்து உரைக்கின்றன. 



அன்புத் தமிழ் நெஞ்சங்களே !! பிரபல ஜோதிட 

சாம்ராட் சக்க்ரவர்த்தி வராஹி மிஹிரர் தான் 


எழுதிய ஜோதிட கிரந்தம் என்ற அந்த மிகப் 


பழமை வாய்ந்த நூலில் என்ன 


சொல்லியிருக்கிறார் என்றால் :-



ஒவ்வொருவருடைய ஜாதகத்திலும் 


அவரவர்கள் ஜனன கால லக்கினத்தில் இருந்து 


5ம் இடம்தான் புத்திர ஸ்தானம் என்பது. இந்த 


இடம் வெறும் புத்திர ஸ்தானம் மட்டும் அல்ல. 


இதோடுகூட இந்த இடத்திற்கு பூர்வபுண்ணிய 


ஸ்தானம் என்று மற்றும் ஒருபெயரும்உண்டு......... 


என்று மிகமிகத் தெளிவாக அங்கே அந்த நூலில் 


ஜோதிட சாம்ராட்வராஹிமிஹிரர்எழுதியுள்ளார் 


என்று, எனக்கு ஜோதிடம் பயிற்றுவித்த 


கற்றுக்கொடுத்த எனது வணக்கத்திற்கு உரிய 


ஆசான் மேன்மைதங்கிய வாடிப்பட்டி 


திரு.இராமமூர்த்தி சேர்வை அவர்கள் 


அவ்வப்போது ஜோதிட வகுப்புகள் எடுக்கும் 


நேரமதில் குறிப்பிடுவது உண்டு அன்பர்களே !! 


ஒவ்வொரு தாயும்,தகப்பனும், போன 


ஜென்மத்தில் எந்த அளவுக்கு புண்ணியங்கள் 


செய்துள்ளனரோ, அந்த அளவுக்கு மட்டிலுமே 


பிரதிபலனாக அவர்களுக்கு பிள்ளைகள் 


பெறக்கூடிய பாக்கியங்களை அந்த எல்லாம் 


வல்ல இறைவன் நமக்குத் தருகிறான் என்பதே 


முற்றிலும் உண்மை !!.முழுக்காலும் உண்மை !! 


எக்காலமும் இது ஒன்றே உண்மையாகும் !! 


இதில் மாற்றுக்கருத்துக்கு எள்ளின் முனையளவு 


கூட இடம் கிடையாது என்பதே எனது கருத்தும் 


ஆகும். எனவே நான் இந்த இடத்தில் என்ன 


குறிப்பிட விரும்புகிறேன் என்று சொன்னால்,


அன்பர்களே !! நாம் போன ஜென்மத்தில் 


என்னென்ன பாவங்களைச் செய்திருந்தோமோ 


அதனை நாம் அறிந்திட வாய்ப்புகள் இல்லை. 


ஆதலால் இந்த நடப்புஜென்மத்திலாவது 


நாலுபேருக்குநல்லதுசெய்து புண்ணியங்களைத் 


தேடிக்கொள்வோம். இது நம் அடுத்த 


ஜென்மத்திலாவது நல்ல பிள்ளைகளைப் 


பெற்று வளர்த்து ஆளாக்கிட நமக்கு உற்றதுணை 


புரியும் என்பதில் சந்தேகமே இல்லை.




மீண்டும் எமது அடுத்த ஜோதிடம் சம்பந்தப்பட்ட 


கட்டுரையில் நாம் ஒன்று கலந்திடுவோம். 


அதுவரை உங்கள் அனைவருக்கும் நன்றி 


பாராட்டி விடைபெறுவது உங்கள் அனைவரின் 


அன்பையும்,நட்பையும்,நல்லதோர் 


பாராட்டுக்களையும் பெற்ற அன்புத்தமிழ் உடன் 


பிறவாசகோதரன் :- 



மதுரை T.R. பாலு.


" அதை " நான் உனக்கு மட்டும் காட்டப்போறேண்டா !! கவிப்பேரரசு திரு வைரமுத்து அவர்களின் காமாந்தகப் பாடல்களில் இதுவும் ஒன்று








உடல்மண்ணுக்கு!!உயிர்தமிழுக்கு!!




உலகம் முழுவதும் உள்ள அன்புத் 


தமிழ் நெஞ்சங்களே !! வணக்கம்.



2004ம் ஆண்டு வெளிவந்த உலக 


நாயகன் திரு கமல்ஹாசன் நடித்து 


வெளிவந்த வெற்றிப் படம்தான் 


"வசூல் ராஜா M.B..B.S, "  என்னும் 


வண்ணத் திரைப்படம். திரு கிரேசி 



மோகன் அவர்களது கலகலப்பான 


நகைச்சுவைகள் நிறைந்த வசனம்,


திரு பரத்வாஜ் அவர்களது தேனினும் 


இனிய மெல்லிசை, இத்துடன்கூட 


கவிப்பேரரசு திரு வைரமுத்து அவர்களின் 


தேனான பாடல்களோடு திரு சரண் அவர்கள் 


மேற்படி படத்தை இயக்கி நல்ல வசூல் 


பெற்றுத்தந்த படம்தான் நான் மேலே 


குறிப்பிட்டுள்ள  " வசூல்ராஜா M.B.,B.S.,"


ஆகும். இந்தப்படத்தில் 5க்கும் மேற்பட்ட 


அருமையான பாடல்கள். அத்தனையும் 


சூப்பர் ஹிட்தான்.அவைகளுள் ஒன்றுதான் 


இந்த " காமாந்தகம் "  நிறைந்த பாடல்:-




சிரிச்சு சிரிச்சு வந்தான் சீனாதானா டோய் !!



சிரிக்கி சிரிக்கி மக காணாப்போனா டோய் !!



விடியும் மட்டும் விடியும் மட்டும் தேனாப் போனா 

                                                                                           டோய்!!


விடிஞ்சபின்னேவிடிஞ்சபின்னேகாணாப் போனா 

                                                                                          டோய் !!



                                                                         (சிரிச்சு சிரிச்சு) 





என்னுடைய தேகமிது எந்தையைப் போல் 

                                                                         வெக்கப்படும்!!

என்ன ஒருவாட்டி பாரு !!


அர்த்தமில்லா வார்த்தைகளின் அர்த்தங்களை 


அறியணுமா ? அதுக்கு இதுதாண்டா ஸ்கூலு !!


வேலிகட்டி வச்சாலும் வெள்ளைத்தோலை 


                                                                  பாத்துப்புட்டா 


கடக்கத் துடிக்குதடா காலு !!


அந்தியிலே இருந்து ஒரு மனுசப்பய வந்தாலும் 


இன்னும் போகலையே வாலு !!


ஓடும் தண்ணியிலே பாசி இல்லையே !!


உணர்ச்சி கொட்டிப்புட்டா நோயுமில்லையே !!


வாழ்க்கை வாழ்வதற்கே !!ஜெமினி எடுத்த படம் !!


அத நான் உனக்கு மட்டும் காட்டப்போறேண்டா !!


                                                                       (சிரிச்சு சிரிச்சு)



அன்பர்களே !! பார்த்தீர்களா  ? வாழ்க்கையின் 


யதார்த்தங்களை தனது வார்த்தை அலங்கார 


ஜாலங்களால் கவிதையினுள் நனைத்து 


காயப்ப்போட்டுஇருக்கிறார்!!எனது அன்பிற்குரிய 


மதிப்பிற்குரிய கவிப்பேரரசு திரு வைரமுத்து 


அவர்கள் !!


இதற்கு என்ன காரணம் என்று நீங்கள் 


நினைக்கிறீர்கள் நீங்கள் ?.


என்ன காரணம்  என்றால் இவர் தடம் பிறழாமல் 


அன்றும்,இன்றும் இனி என்றென்றும் 


முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் பக்கமே 


நிற்பதனால்தான். வாழ்க அவர் பல்லாண்டு !! 


வளரட்டும் அவரின் கவித்துவத் தொண்டு  !!



நன்றி !! வணக்கம் !!



அன்புடன் மதுரை T.R. பாலு.

Monday, 24 February 2014

கொசுவை அடிப்பதற்கு கோடாலி எதற்கு ? (தமிழக முதல்வர் மாண்புமிகு ஜெ ஜெயலலிதா அவர்களின் கனிவான கவனத்திற்கு)









உடல் மண்ணுக்கு!! உயிர்தமிழுக்கு!!



இதைஉரக்கச்சொல்வோம் 



உலகுக்கு!!இனம் ஒன்றாக, மொழி 



வென்றாக, புது வேல் எடுப்போம் 



விடிவுக்கு!!நம் வெற்றிப் பாதையில் 



நரிகள் வந்தால் விருந்து 



வைப்போம் விண்ணுக்கு !!




மாட்சிமை தங்கிய தமிழக 



முதல்வர் ஜெ ஜெயலலிதா 



அவர்களுக்கு, மதுரை T.R. பாலு 



எழுதும் தங்களின் 



கனிவான கவனத்திற்கு ஒரு கடிதம்.



(தயவு செய்து உடனே கோபம் 



கொள்ள வேண்டாம்-இவன் யார் 



எனக்கு கடிதம் எழுதுவதற்கு என்று) 



வான்புகழ் திருவள்ளுவர் எழுதிய 



திருக்குறள் ஒன்றினை இந்தத் 



தருணத்தில் தங்கள் பார்வைக்குத் 



தருகிறேன்.




எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும்

                                                      அப்பொருள்


மெய்ப்பொருள் காண்பது அறிவு... ... ...




தங்களின் கட்சிக் கட்டுப்பாட்டை 



நிலை நிறுத்தும் விதம் உள்ளபடியே 



சொல்கிறேன் அது என்னை மிகவும் 



வியக்க வைத்து உள்ளது பல 



சந்தர்ப்பங்களில். அந்த அளவிற்கு 



உங்களின் செயல் வேகம் சுனாமி 



புயலை விடவும் வேகமானது. 



ஆனால் அதே சமயம் தங்களிடம் 



உள்ள மிக மோசமானஅணுகுமுறை 



அது என்னவென்றால் யார் யாரைத் 



தங்களுக்கு அவர்களது 



செயல்களால் பிடிக்க வில்லையோ 



உடனே அவர்களை 



வெளிப்படையாக கட்சியை விட்டு 



நீக்குவது என்ற அணுகுமுறை 



ஒன்றுதான் முதல்வர் அவர்களே. 



இதை கொஞ்சம் கொஞ்சமாக 



மாற்றிக் கொள்ள முயன்று அதில் 



நீங்கள் வெற்றி பெற்றுவிட்டீர்கள் 



 என்றால் நான் உள்ளபடியே 



சொல்கிறேன் உங்களை மிஞ்ச இந்த 



தமிழ்நாட்டினில் மட்டும் அல்ல 



இந்தியாவிலேயே வேறு ஆள் 



கிடையாது இதுதான் உண்மை. 



பகையாளியின் குடியை உறவாடிக் 



கெடு. இதுதான் தாங்கள் கலைஞர் 



திரு மு.கருணாநிதி அவர்களிடம் 



இருந்து தாங்கள் கற்றுக்கொள்ள 



வேண்டிய முதல் பாடம் ஆகும். 



இன்று தங்களின் 66 வது பிறந்ததேதி 



இந்த நல்ல நாளில் தாங்கள் 



இனியேனும் மேலே சொன்னபடி 



தாங்கள் தங்களின் குணமதை 



மாற்றிட வேண்டிக் கேட்டுக்




கொள்கிறேன். (கட்டுரை இன்னும் 



தொடரும்)




நன்றி !!வணக்கம் !!                                     



அன்புடன் மதுரை TR பாலு.

Friday, 21 February 2014

வெட்கமாக இருக்குது !! எனக்கு வெட்கமாக இருக்குது !! தமிழ்நாட்டில் ஆளும் கட்சியின் பார்வையில் இருப்பது , எதிர்க்கட்சியா ? அல்லது எதிரிக் கட்சியா ?









உடல்மண்ணுக்கு!!உயிர்தமிழுக்கு!!



உலகம் முழுவதும் வாழ்ந்து வரும் 



என் அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!



உங்கள் அனைவருக்கும் வணக்கம்.


இன்றையதினம் நம் தமிழகத்தில் 


ஆளும் கட்சியின் பார்வையில் 


(சட்டமன்றத்திற்கு உள்ளேயும் சரி 


வெளியேயும் சரி)இவர்களைத்தவிர 


இருக்கும் அனைத்துக் கட்சிகளையும் 


எதிரிக்கட்சிகளாகவே பாவிக்கும் குணம்



மட்டும்தான் காணப்படுகிறது. தே.மு.தி.க.


வின் வாக்கு வங்கிகளில் உள்ள ஓட்டுக்கள் 


மட்டும் இல்லை என்று சொன்னால் இந்த 


அ.இ.அ.தி.மு.க. ஆளும் கட்சியாக 


வந்திருக்கவே முடியாது என்பதுதான் 


அரசியல் ஆர்வலர்களின் கணக்கு. அந்த 


கட்சியின் தலைவர் திரு விஜயகாந்த் இன்று 


என்னபாடு படுகிறார் என்பது நாடும் வீடும் 


அறிந்த உண்மை. சேராத இடந்தனிலே 


சேர வேண்டாம் என்று அவ்வை சொன்ன 


பழமொழி எவ்வளவு உண்மை என்பதை 


விஜயகாந்த் இப்போதாவது புரிந்து கொண்டு 


இருப்பார் என்று கருதுகிறேன். அவர் அதனை 


உண்மையிலேயே புரிந்தவர் என்றால் எதிர்


வரும் பாராளுமன்றத் தேர்தலில் அவர் 


யாருடன் கூட்டணி வைத்துக்கொள்ள வேண்டும் 


என்பது பத்து வயதுப் பையன்கூட சொல்லுவான் 


அது திராவிட முன்னேற்றக் கழகம் ஒன்றுதான் 


என்று. ஆனால் என்ன செய்யப்போகிறார்என்பது 


கடவுளுக்கே வெளிச்சம். அந்த தே.மு.தி.க. தவிர 


ஏனைய கட்சிகளான காங்கிரஸ்,முஸ்லிம்லீக், 


புரட்சி தமிழகம்,விடுதலை சிறுத்தைகள் கட்சி,


மனித நேய மக்கள் கட்சி என்று அங்கிங்கு 


எனாதபடி எல்லா கட்சிகளுமே ஆளும் 


கட்சியின் பார்வையில் கண்ணோட்டத்தில் 


எதிரிக் கட்சிகளே அன்றி எதிர்க் கட்சி அல்ல.




ஆனால் கம்யூனிஸ்ட்கள் மட்டும் தலை 


தப்பிய கட்சிகள். அது வலதானாலும் சரி 


அல்லது இடது ஆனாலும் சரி இவர்கள் 



அகிலஉலக கட்சியாக ஒருகாலத்தில் 



இருந்தவர்கள்  அந்த கம்யூனிஸ்ட்டுக்கள் 


இன்றையதினம் ஆளும்கட்சியின் 


அடிவருடிகளாக, அடிமைகளாக, ஆனதால் 



இவர்கள் இப்போதெல்லாம் கம்யூனிஸ்ட்கள் 


என்று அழைக்கப்படுவதே இல்லை. இவர்களை 


மக்கள் கமிஷன் ஏஜெண்டுகள் என்றுதான் 


அழைக்கிறார்கள்.ஆனால் அந்தக்கட்சியின் 


அடிமட்டத் தொண்டர்கள் எவரும்மாறாமல்அந்த 


பொதுவுடைமைசித்தாந்தத்தில்இருந்து  


அவர்களை வழிநடத்திக்கொண்டு 


செல்லவேண்டிய தலைமையில் இருக்கும் 


பெரும்பான்மையான தலைவர்கள் ஆளும் 


கட்சியின் அடிமைகளாக ஒன்றிரண்டு  சீட்


(பாராளுமன்ற ராஜ்ய சபா ) பெறுவதற்காக 


மாறி வருவதையும் மண்டிபோடுவதையும்


உண்மையான கம்யூனிஸ்ட் தொண்டர்கள் 


ஏற்றுக்கொள்ள அவர்கள் மனசாட்சி என்பது 


மறுத்து வருகின்றது என்பது உண்மையிலும் 


உண்மை என்றுதான் கூறிட வேண்டியுள்ளது.


ஏன் என்றால் இங்கே நிலைமை அப்படி உள்ளது.


லட்சியமா அல்லது லட்சங்களாஎன்றால்அங்கே 


வெல்வது என்னவோ லட்சங்களாகத்தான்  


இருக்கிறது என்பதே நிஜம்.  ஆனால் முன்பு 


பெருந்தலைவர் காமராஜர் காலத்தேயும் சரி 


அதன்பின்னர் தலைவர் கலைஞர் காலமும் 


சரி, ஆளும்கட்சி எதிர்வரிசையில் அமர்ந்து 


உள்ளவர்களை எதிர்க் கட்சியாகத்தான் 


பாவித்து வந்தது என்பது வரலாறு நமக்கு 


எடுத்து உரைக்கும் உண்மை. இங்கே 


வயதுக்கு எல்லாம் ஒரு மதிப்பும் இல்லை 


மரியாதை என்பது சிறிதளவுகூட இல்லவே 


இல்லை. இதை சொல்லிடவே எனக்கு 


வெட்கமாகத்தான் இருக்கிறது. ஏய் !!


கருணாநிதி என்று ஆளும் கட்சியால் அதன் 


தலைமையால் சட்ட மன்றத்திலேயே 


அழைக்கப்படும் அநியாயம் இருக்கிறதே 


அப்பப்பா உச்சரிக்கவே நா நடுநடுங்குகிறது 


ஆனால் பெரும்தலைவர் காமராஜர் 


முதல் அமைச்சராக அமர்ந்திருந்த அந்தக் 


காலத்திலெல்லாம் அவர் தி.மு.க. வை 


மதிப்போடும் மரியாதையோடுமே நடத்தி 


வந்திருந்தார் என்பது வரலாறு நமக்கு 


கூறிடும் உண்மை. ஒரு முறை தலைவர் 


கலைஞர் அவர்களின் அன்புத் தாயார் 


அஞ்சுகத்தம்மாள் இயற்கை எய்திவிட்ட 


சூழலில் கலைஞர் வெளியூரில் ஒரு 


பொதுக்கூட்டத்திற்கு திருச்சி வரை 


சென்றிருந்த நேரமது. செய்தியைக் 


கேட்டவுடன் ஓடோடி வந்த முதல்நபர் 


யார் தெரியுமா அன்பர்களே !! பெருந்தலைவர் 


காமராஜர்தான். அவர் அப்போது தமிழ்நாட்டின் 


முதலமைச்சர் பொறுப்பில் இருந்தகாலம்.


திரு மு.க. அங்கே இல்லை என்பதை அறிந்த 


கர்மவீரர் இறுதி சடங்கிற்கு என்னென்ன 


செய்திடவேண்டுமோ அவ்வளவையும் 


கலைஞர் வருவதற்கு முன்னமேயே செய்து 


முடித்துவிட்டு கலைஞர் வந்தவுடன் இறந்த 


அஞ்சுகத்தம்மையாரை அடக்கம் மட்டுமே 


செய்திடவேண்டிய அத்துணை வேலைகளையும் 


பெருந்தலைவர் காமராஜரே செய்துமுடித்த 


அந்தப் பெருந்தன்மை எங்கே ? இன்றைய 


ஆட்சியாளர்களின் சிறுமதி படைத்திட்ட


அனைத்து செயல்களும் எங்கே ?  நினைத்தாலே 


எனக்கு வெட்கமாக இருக்குது !!  


நன்றி !! வணக்கம் !!



மதுரை T.R.பாலு.

Tuesday, 18 February 2014

வட்டித் தொழில் செய்வது லாபமானதா ? பாவமானதா ?







உடல்மண்ணுக்கு!!உயிர்தமிழுக்கு!!



உலகம் எங்கும் வாழ்ந்துவரும் என் 



உயிரினும் மேலான அன்புத்தமிழ் 



நெஞ்சங்களே !! வணக்கம்.



இன்றையதினம் எங்கும் மிக எளிதாக 


ஒரு தொழில் நடத்திடலாம் என்றால் 


அஃது வட்டித் தொழில் ஒன்றே ஆகும்


அன்பர்களே அப்படி நாம் செய்திடும் 


இந்த வட்டித் தொழில் லாபமானதா 


அல்லது பாவம் ஆனதா ? இதுதான் 


இன்று நம்முன்னே உள்ள கேள்வி.



இந்தக் கேள்விக்கு நாம் பதில் தரும் 


முன்பாக சில விளக்கங்களையும் 


ஒரு கதையையும் உங்களுக்கு நான் 


விளக்கிக் கூறிட ஆசைப்படுகிறேன்.


முதலில் கதை.பிறகு விளக்கம். என்ன 


சரியா ?



ஒரு ஊரில் ஒரு பெண் ஒருத்தி 



அவள் பெயர் சிவகாமி. திருமணம் 



முடிந்து ஏறத்தாள 15 ஆண்டுகள் 



ஆகியும் குழந்தை இல்லை.பாவம்



என் செய்வாள். போகாத கோவில் 



இல்லை. பார்க்காத வைத்தியமும் 


இல்லை. ஆனால் குழந்தைப்பேறு


மட்டும் இல்லவே இல்லை. 



அப்போது அந்த ஊருக்கு ஒரு பிரபல 


சுவாமிகள் ஒருவர் விஜயம் செய்தார்.



வாக்கு பலிதம் உள்ளவர். சொன்னது 



சொன்னபடியே நடக்குமாம். அவர் 



வந்திருப்பது தெரிந்து சிவகாமி 



அவரைத் தரிசனம் செய்தாள். 



அப்போது அவளது கண்களில் நீர் 



வழிந்து கொண்டு இருந்தது இதைக் 


கண்ணுற்ற சுவாமிகள் சிவகாமியைத் 


தன்னருகே அழைத்தார். என்னம்மா 


உனக்குக் குழந்தை இல்லையா ?என


கேட்டார். ஆம் என்றாள் அவள்.



உடனே சுவாமிகள் குழந்தை கிடைக்க 


நீ எந்த எல்லை வரையிலும் செல்வாயா ?


என கேட்டார். அவளும் குழந்தை கிடைத்திட 


நான் எந்தவிதமான தியாகமும் செய்யத்தான் 



தயார் என்றாள்.   உடனே சுவாமிகள



பெண்ணே உனக்கு இன்றிலிருந்து 



1௦ வது மாதம் குழந்தையைத் தருகிறேன்.



ஆனால் அந்தக் குழந்தையின் மலத்தை 



நீ உண்ண வேண்டும் என்ன சரியா என 


கேட்க சம்மதித்தாள்  பெண்.  உடனே 


சுவாமிகள் ஆசீர்வதித்து அனுப்பினார்.


சுவாமிகள் சொன்னபடியே சிவகாமிக்கு 


அழகான ஆண் குழந்தை பத்தாவது 



மாதம் பிறந்தது. கொழுகொழு என 



குழந்தை நல்ல சிகப்பு நிறம்,சுருட்டை 


முடிஎன பார்க்க அசல் இளவரசனைப்


போலவே பிறந்தது. ஆனால் இவள் 


மனம் ஒப்பவில்லை.அந்தக் குழந்தை 


மலத்தை உண்ண. சரியாக மூன்று 


ஆண்டுகள் கழித்து அந்த ஊருக்கு 


அந்த சுவாமிகள் விஜயம் செய்தார்.


அன்று திடீரென்று குழந்தை நன்கு 


விளையாடிக்கொண்டு இருந்தது 


நுரை நுரையாக கக்கி மயங்கி 


விட்டது. சிவகாமி குழந்தையை 


தூக்கிக்கொண்டு சுவாமிகள் காலடியில் 


போட்டு அழுதாள்.  உடனே சுவாமிகள் 


புன்னகைத்தபடியே இப்ப அழுது என்ன 


பிரயோஜனம் சிவகாமி. குழந்தை 


வரம் வேண்டி நீ செய்திடவேண்டியதை


செய்யாததால் குழந்தைக்கு இந்த 


நிலை. இப்போதும்கூட நீ இந்தக் 


குழந்தையின் மலத்தைத் உண்ண 



தயங்கினால், குழந்தை இறப்பதைப் 


பார்த்து நீ மயங்கவேண்டி வரும்.


என்ன சொல்கிறாய் என கேட்க 


உடனே சிவகாமி சுவாமி எனக்கு 



குழந்தை இல்லையே என்ற ஏக்கத்தில் 



தாங்கள் சொன்ன கட்டளைக்கு அடி 



பணிந்தேன். ஆனால்  எனது மனம் 



மலத்தை உண்ண மறுக்கிறதே 


சுவாமி நான் என் செய்வேன். வேறு 


ஏதாவது பரிகாரம் உண்டா சொல்லுங்கள் '


சுவாமி என்றாள்.  உடனே சுவாமிகள் 


புன்னகைத்தபடியே கேட்டார். உங்கள் 



ஊரில் வட்டித்தொழில் செய்து பிழைப்பு 


நடத்திடும் பெரும் செல்வந்தர்கள் 


எவரேனும் உண்டோ. ஆம் சுவாமி.



இருக்கிறார். பாலகிருஷ்ணன் செட்டியார் 



என்று பெரும் தனவந்தர் ஒருவர் உள்ளார்.


அவருக்குத் தொழிலே வட்டிக்கு பணம் 


கொடுத்து அந்த வட்டியைவைத்துத்தான் 


சாப்பிட்டுக்கொண்டு வருகிறார். உடனே 


அதற்கு சுவாமிகள் சரி அப்படி என்றால் 


நீ உனது வீட்டில் இருந்து சாதத்தை 


எடுத்துக்கொண்டு சென்று அந்த வட்டிக்கு 


பணம் தருபவரின் வீட்டின் நிழலில் இருந்து 


சாப்பிட்டு வரவேண்டும். அப்படி  நீ



சாப்பிட்டால் அந்த சாதம் மலத்திற்கு 


சமம். அது போல  நாற்பத்தி எட்டு நாட்கள் 


சாப்பிட்டால் அத்தோடு



குழந்தையின் தோஷம் நீங்கிவிடும்.


அதற்கு மேல் நீயும் குழந்தையும்



ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் 



இருப்பீர்கள் என்று சொல்லி சிவகாமியை 



ஆசீர்வதித்து அனுப்பினார். 



எப்படி இருக்கிறது பார்த்தீர்களா நேயர்களே !!


இந்தக் கதையில் இருந்து நீங்களே யூகித்துக் 


கொள்ளுங்கள் வட்டித் தொழில் செய்து 


வாழ்வது லாபமானதா அல்லது பாவமானதா 


என்று.


நன்றி. வணக்கம்.



அன்புடன் மதுரை T.R.பாலு.