Tuesday, 10 December 2013

மாணவனின் விருப்பமும் --- மக்களின் விருப்பமும் !! -- ஒரு சிறப்பு கண்ணோட்டம்.!!







உடல்மண்ணுக்கு!! உயிர்தமிழுக்கு!! 



உலகம் முழுவதும் வாழ்ந்துவரும் 



என் உயிரினும் மேலான அன்புத் 



தமிழ் நெஞ்சங்களே !! முதலில் 



உங்கள் அனைவருக்கும் எனது 



இதயம் கனிந்த வணக்கம்.                       



அன்பர்களே !!                                                 



நான் சிறுவயதுள்ள போது எனது 



கல்வி அறிவினை விருத்தி 



செய்துகொள்வதற்காக எனது 



தந்தை எனக்கு மாலை வேளை 



மணி 5.௦௦ முதல் 7.3௦ மணி வரை 



கூடுதலாக ஒரு ஆசிரியரை எங்கள் 



வீட்டிற்கே வரவழைத்து எனக்குப் 



பாடம் சொல்லிகொடுக்க ஏற்பாடு 



செய்திருந்த நாட்கள் அந்த காலம்.   



காலை மணி 9.௦௦ முதல் மாலை 



மணி 4.3௦ வரை பள்ளிக்கூடத்தில் 



படிப்பினைப் படித்துவிட்டு, பிறகு 



திரும்பவும் வீடுவந்து ஒரு அரை 



மணிநேர இடைவெளியில் மீண்டும் 



அதே புத்தகத்தை  எடுத்துப்படிஎன்று 



சொன்னால் எவனுக்கு ஐயா 



படிப்பின் மீது நாட்டம் வரும் ? இல்ல 



நான் கேக்கிறேன். இதால தான்யா 



என் படிப்பே கெட்டுக் குட்டிச் 



சுவராப்போச்சு. இந்தக்கால +2வோட 



படிப்பும் நின்னு போச்சு எனது படிப்பு 



அந்தக்கால P.U.C. என்று 



சொல்லப்படும் Pre 



universitycourseஎன்றவிரிவாக்கத்தைத் 



தன்னகத்தே கொண்ட 



புகுமுகவகுப்பு என்ற படிப்புக்கு 



இணையானது. நான் சிறு 



பிராயம்தொட்டே கவிதை 



படைக்கும் ஆற்றல் கொண்டவனாக 



இருந்த காரணத்தினால் டியூஷன் 



வாத்தியார் வாராமல் இருக்க 



வேண்டி ஒரு பாட்டு பாடுவேன்.  அது 



இந்தப் பாடல் தான்:-                                      



நெடுமால் திருமுருகா !! எனக்கு           

நித்தநித்தம் இந்த இழவா ?                 


வாத்தியார் சாகாரா ? என்     


வயித்தெரிச்சல் தீராதா ?                        





என்று என்னுடைய 1௦ வயதிலேயே 



பாடல் புனைந்தவன் நான். 



என்னுடைய அந்த 5௦ஆண்டுகளுக்கு 



முன்பு எழுதிய அந்தப் பாடலில் 



உள்ள அதே கருத்துக்களின்படியே 



இன்று ஒரு நாட்டின் 



தென்கடைக்கோடியில் உள்ள ஒரு 



மாநிலத்து மக்களின் மன 



நிலைமையும் உள்ளது (சமீபத்தில் 



ஒரு இடைத்தேர்தல் நடைபெற்ற 



அந்த சட்டமன்ற தொகுதியைத் 



தவிர்த்து ஏனைய சட்டமன்றத்தில் 



உள்ள வாக்குரிமை பெற்ற 



வாக்காளர்கள்/பொதுமக்கள் )என்று 



நீங்கள் கருதுவீர்களேயானால் 



அதற்கு நான் எப்படி பொறுப்பு ஆக 



முடியும்? இதுதான் என் கேள்வி ? 



அத்தகைய பொதுமக்கள் இதுபோல 



பாடலைப் பாடினால் ?                               




நெடுமால் திருமுருகா ?                             


நித்தம் வேணும் இடைத்தேர்தல் !!   


எங்கள் தொகுதி M.L.A. சாகாரா ? 


எங்கள் கவலை தீராதா ?                     


எங்கள்ஓட்டுக்கும்பணம்                                                                                   வாராதா ? 


நாங்களும் செழிப்புடன் இருந்திடக்                                                               கூடாதா ? 




மிக்க நன்றி !! வணக்கம் !!                     


மீண்டும் நாளை சந்திப்போம் !!             


அன்புடன். மதுரை T.R. பாலு.

No comments:

Post a Comment