உடல்மண்ணுக்கு!!உயிர்தமிழுக்கு!!
உலகம் முழுவதும் வாழ்ந்துவரும்
என் உயிரினும் மேலான அன்புத்
தமிழ் நெஞ்சங்களே !!
அனைவருக்கும் எனது இனிய
இதயம் கனிந்த வணக்கங்கள் !!
இப்பவும் இந்தக் கட்டுரைக்கு நான்
என்ன தலைப்பு தேர்ந்தெடுத்து
எழுதுவது என்று
எண்ணிக்கொண்டிருக்கும்
வேளையில் " முரசு "
தொலைக்காட்சியில் " துக்ளக் "
பத்திரிக்கை ஆசிரியர் திரு சோ.
இராமசாமி நடித்து வெளிவந்த
பிரஸ்டீஜ் ப்ரொடக்ஷன்ஸ் தயாரித்த
"முகம்மது பின் துக்ளக் " என்ற
மாபெரும் வெற்றிக் காவியம்.
தாமும் அதில் நடித்து டைரக்சன்
"கற்றுக் கொள்ள முயற்சி " என்று
டைட்டிலில் பெயர் பதித்து திரு
"சோ" அவர்கள் மிகவும் சிறப்பாக
நடித்து இயக்கிய அந்தப்படத்தில்
இருந்து ஒரு அந்தக் காலத்தில்
மிகவும் பிரசித்திபெற்ற பாடல்
ஒன்று ஒலி/ஒளி பரப்பு
செய்திருந்தனர். அது என்ன பாடல்
என்றால், அந்தப் பாடல் இதுதான்
அன்பர்களே !!
காவியக்கவிஞர் வாலி அவர்கள்
இந்தப் படத்தில் அனைத்துப்
பாடல்களையும் எழுதி இருப்பார்.
இசை அமைப்பு மெல்லிசை மன்னர்
திரு M.S.விஸ்வநாதன் அவர்கள்.
இதில் வந்த டைட்டில் பாடல்தான்
அந்தப் பாடலில் வருகின்ற ஒரு
பாரா தான் என்னை இந்தக்
கட்டுரையை எழுதிடத் தூண்டியது
என்றால் அது மிகையான சொல்
அல்லவே அல்ல. இப்போது
பாடலைப் பார்ப்போமா நேயர்களே ?
இந்தப் பாடலை இந்தப் படத்திற்கு
இசை அமைத்த மெல்லிசை மன்னர்
திரு M.S.விஸ்வநாதன்
அவர்களே பாடியும் இருப்பார்
அன்பர்களே !!
நீ இல்லாத இடமே இல்லை !!
நீதானே உலகின் எல்லை !!
அல்லா !! அல்லா!!யா அல்லா !!
அல்லா !!
(நீ இல்லாத )
நிலம் வெளுக்க நீர்தான் உண்டு!!
நீர் வெளுக்க மீன்தான் உண்டு !!
மனம் வெளுக்க எதுதான் உண்டு ?
நபியே உன் வேதம் உண்டு !!
அல்லா !! அல்லா !!யா அல்லா !!
அல்லா!!
(நீ இல்லாத இடமே)
உடலுக்கு ஒன்பது வாசல் !!
மனதுக்கு எண்பது வாசல் !!
உயிருக்கு உயிராய்க் காணும் !!
ஒரு வாசல் !! பள்ளி வாசல் !!
அல்லா !! அல்லா !! யா அல்லா !!
அல்லா !!
( நீ இல்லாத இடமே )
இருப்போர்க்கு எல்லாம் சொந்தம்!!
இல்லார்க்கு எதுதான் சொந்தம் ?
நல்லார்க்கும்பொல்லார்க்கெல்லாம்
நாயகமே நீயே சொந்தம் !! அல்லா !!
அல்லா !! யா !! அல்லா !!
(நீ இல்லாத இடமே )
அன்பர்களே !!
இந்தப் பாடலில் இரண்டாவது பாரா,
அதில் உள்ள வரிகளை, சற்று உற்று
நோக்கி, கவனித்தீர்கள் என்றால்
அதில் என்ன சொல்லப்பட்டுள்ளது
என்றால் உடலுக்கு ஒன்பது வாசல்
மனசுக்கு எண்பது வாசல் என்று
வரிகள் வரும். அந்த ஒன்பது
வாசலையும் நாம் ஒழுங்காக,சரிவர
ஒரு நாளைக்கு குறைந்தது ஐந்து
வேளைகள் தண்ணீரைக் கொண்டு
சுத்தம்செய்து வந்தோமேயானால்
இந்த ஒரு பழக்கம் மட்டுமே
மக்களுக்கு போதுமானது. இதை
நாம் எப்படி கடைப்பிடிக்க வேண்டும்
என்றால், நான் வரிசைக்கிரமமாக
அதனை இங்கே சுட்டிக் காட்டிட
கடமைப் பட்டு இருக்கிறேன்.
1) முதலில் நாம் படுக்கையைவிட்டு
பிரம்ம முகூர்த்தம் என்று சொல்லப்
படும் அதிகாலை 4 மணி முதல் 4.3௦
மணிக்குள்ளாக எழுந்து முதலில்
முழங்கால்கள் தொடங்கி பாதம்
வரையிலும், முழங்கைகள்
தொடங்கி உள்ளங்கைகள்
வரையிலும், பிறகுகண்கள்,மூக்கின்
இரு துவாரங்கள், வாயை நன்கு
சுத்தம் செய்தல், இரண்டு
காதுகளையும் சுத்தம் செய்து அதன்
பிறகு நமது சிறுநீர் வெளியேறும்
இடம், பிறகு, குதம் என்று
சொல்லப்படும் உடலின் கழிவுப்
பொருள் வெளிஏற்றும் வாசல்
(இவை அத்தனையையும் கூட்டிப்
பாருங்கள் அன்பர்களே மொத்தம்
ஒன்பது வாசல்கள் வரும் )
இவைகளை ஒரு நாளைக்கு ஐந்து
வேளைகள் சுத்தமான நீரில் கழுவி
வந்தாலே போதுமானது. உங்களது
உடலில் தற்போது ஏதாவது
நோய்கள் இருந்தாலும் சரி அல்லது
எந்த நோயும் எதிர்காலத்தில் வந்து
நம்ம்மை தாக்காத அளவிற்கு
நமக்கு நோய் எதிர்ப்பு சக்தியைஇந்த
" சுத்தம் " நமக்குத் தருகிறது.
இதனை நாம் கீழ்க்கண்ட கால
நேரங்களில் செய்து வந்தால் நமக்கு
நன்மை பயக்கும்.
1) அதிகாலை பிரம்ம முகூர்த்த
நேரம் 4.௦௦ மணி முதல் 4.3௦
மணிக்குள்ளாக
2) நண்பகல் 1.௦௦ மணி முதல் 1.3௦
க்குள்ளாக
3) மாலை 4.3௦ To 4.45 மணிக்குள்
4) இரவு துவங்கும் நேரம் 6.15 To 6.3௦
மணிக்குள்.
5) இரவு 8.00 To 8.30 மணிக்குள்ளாக
ஆக இந்த ஐந்து வேளையும்
தவறாமல் சுத்தம் செய்து வர,
எந்தவிதமான நோய்,நொடிகளும்
வராமல் நாம் நூறாண்டுகள் வரை
வாழ்ந்திடலாம்.(இந்த பழக்கத்தைத்
தான் நமது இஸ்லாமிய நண்பர்கள்
நாள்தவறாமல்,ஐந்துவேளைகளும்
செய்து வருகின்றார்கள்
(கைகால்கள் மற்றும் ஏனைய
ஒன்பது வாசல்களையும்
"உதுவெடுப்பது " என்னும் மதத்தின்
கட்டளைப்படி செய்து எல்லாம்
வல்ல இறைவன் எல்லாம் வல்ல
அல்லாவைத் தொழுது வருவதால்
அவர்கள் தேக சுகத்துடனும்,
ஆரோக்கியத்துடனும்எந்தவிதமான
நோய்நொடி தாக்குதல்கள்
எதுவுமின்றி வாழ்கிறார்கள் என்பது
இங்கே குறிபிடத்தக்கது.)
கட்டுரையை நான் நிறைவு
செய்திடும் நேரம் வந்து விட்டது
அன்பர்களே !! நல்ல புத்திமதிகள்
நான் மேலே உங்களுக்கு தந்தது.
கடைப் பிடித்து மேன்மைபெற்று
வாழ்ந்திட எல்லாம் வல்ல
இறைவன் அவனின் திருவருள்
பெற்று நூறாண்டுகள் வாழ்வாங்கு
வாழ்ந்திட வேணுமாய்க் கேட்டுக்
கொண்டு நன்றி பாராட்டி விடை
பெறுகின்றேன். வணக்கம் !!
அன்பன். மதுரை T.R.பாலு.
No comments:
Post a Comment