கண்டிப்பாக இந்தக் கதையும் கட்டுரையும் " வயது வந்தவர்களுக்கு மட்டும் " ( A ) STRICTLY FOR ADULTS ONLY )
உடல்மண்ணுக்கு!!!உயிர்தமிழுக்கு!!
உலகம் முழுவதும் வாழ்ந்து வரும்
எனது உயிரினும் மேலான அன்புத்
தமிழ் உடன் பிறப்புகளே !!
உங்கள் அனைவருக்கும் என் இனிய
காலை வணக்கங்கள் !!
அன்புநிறைந்த தமிழ் நெஞ்சங்களே!!
இப்போது நான் சொல்ல இருக்கின்ற
இந்தக் கதையும் கட்டுரையும்,
கண்டிப்பாக
"வயது வந்தவர்களுக்கு மட்டும் "
" STRICTLY FOR ADULTS ONLY "
அன்பர்களே !!
இது ஒரு கற்பனை வளம் மட்டுமே
நிறைந்த ஒரு அற்புதமான காதலின்
பெருமையை, ஆண்மையின்
வீரத்தை மட்டுமே அகிலம் எங்கும்
பறைசாற்றுகின்ற ஒரு அதி
மகோன்னதமான மதிநுட்பம்
நிறைந்த ஒரு பேரரசின்
சக்கரவர்த்திக்கும், அவனுக்கு
உடைகள் சலவை செய்து தரும் ஒரு
சலவைத் தொழிலாளிக்கும்
இடையே நடைபெறுகின்ற ஒரு
நல்லதோர் உரையாடலை மட்டுமே
மையமாக வைத்து நடந்ததாக
கற்பனையில் சித்தரிக்கப்பட்டுள்ள
ஓர் சிறுகதை. படித்து மகிழுங்கள்.
பக்கத்து வீட்டு நண்பர்களை மட்டும்
கூட்டிவந்து கதையைக் காண்பித்து
மகிழ்ச்சி அடையுங்கள் !!
இந்தக் கதை நடைபெறுவதாக
சித்தரிக்கப்பட்டுள்ள இடம் அரபு
நாடுகளுள் ஒன்றின் தலைநகராம்
பாக்தாத் நகரத்தில் இடம்
பெறுவதாக கதை அமைக்கப்
பட்டுள்ளது அன்பர்களே !!
அந்த நாட்டில் உள்ள பெண்கள்,
உலகின் முதல்தரமான அழகிகள்.
அழகு!! என்றால் அழகு !!அப்படி ஓர்
அழகு !!. நம் இந்து மதத்தைப்
பொறுத்தவரையில் படைப்புத்
தொழிலை ஏற்று செயல்படும்
மும்மூர்த்திகளுள் ஒருவர் தான்
பிரம்மதேவன் என்று நமது
புராணங்களில் புளுகி
வைத்துள்ளார்கள் நமது
முன்னோர்கள் நமக்கு மூத்தவர்கள்.
ஆக்கும் தொழில் பிரம்மனுக்கும்,
காக்கும் தொழில் விஷ்ணுவிற்கும்,
அழிக்கும் தொழில்
சிவபெருமானுக்கும் என்று
பகுதி,பகுதியாக, பிரித்துகொடுத்துப்
புளுகிச் சென்றிருக்கிறார்கள்
அவர்கள். அந்த இடத்திற்குள்ளாகச்
சென்று எனது இந்தப் பொன்னான
இளங்காலைப் பொழுதை நான்
வீணடித்திட விரும்பவில்லை. இது
நமது இந்து மதத்தில் ஒரு பிரிவினர்
வைத்திருக்கும் மத நம்பிக்கை.
ஆங்கிலத்தில் ஒரு பழமொழியை
எனது அன்புள்ள தந்தை அடிக்கடி
என்னிடம் கூறுவதுண்டு. அது
என்னவென்றால் :-
IS IT CRIME ? !! TO IGNORE ANOTHER'S
FAITH ? IT IS A CRIME !!
இந்தவாசகத்தின்தமிழ் விரிவாக்கம்
என்னவென்றால் இது ஒரு குற்றமா?
மற்றவர்களின் நம்பிக்கையையும்
எண்ணங்களையும் மறுப்பது,
ஒதுக்குவது, மதித்திடத் தவறுவது
ஒரு குற்றமா ? என்று ஒரு
கேள்வியை எழுப்பி அதற்கு என்ன
பதில் அங்கே தந்திருக்கிறார்கள்
என்று சொன்னால், அது குற்றமே !!
என்று. அந்தக் கருத்துக்கு 1௦௦
விழுக்காடுகளும் மேலாக மதிப்பு
தருபவன்தான் உங்கள் அன்புத்தமிழ்
பேசிடும்சகோதரன்மதுரை T.R.பாலு.
ஆக அப்படி பிரம்மனால்
படைக்கப்பட்ட உலகின்
மிகச் சிறந்த,பிரசித்திபெற்ற
பேரழகிகள் வாழ்ந்த,
வாழ்ந்துகொண்டு இருக்கும்,
இனிமேல் வருங்காலத்திலும்
வாழப்போகும் ஒரு நாடு,ஒரு
நகரம்தான் பாக்தாத் நகரம். அந்த
நாட்டின் முடிசூட்டியசக்ரவர்த்தியாக
திகழ்ந்தவன்தான் சுல்தான்
அஹமது. அவனது சாம்ராஜ்யம்
பரந்து, விரிந்து கிடந்தது.
சக்கரவர்த்தி அல்லவா. அந்தப்
புறத்தில் உள்ள அழகிகளுக்கா
பஞ்சம். ஏறத்தாழ 2௦௦ அழகிகளுக்கு
மேல் அங்கே வசித்துவந்தார்கள்
சக்கரவர்த்திக்கு " பணிவிடை "
செய்து அவரை மகிழ்விப்பதற்கு.
(உம்...ஏக்கப்பெருமூச்சு...ஏங்கும்
பெருமூச்சு...இவனது தந்தை
இவனை உற்பத்தி செய்திடத்
தேர்ந்தெடுத்த நேரம் செய்திட்ட
புண்ணியம்..நமக்கு எல்லாம் எந்த
ஜென்மத்தில் இப்படி ஒரு பாக்கியம்
கிடைக்கப்போகிறது.தலையெழுத்து
வத்தலோ,இல்லை தொத்தலோ,
ஒல்லியோ இல்லை குண்டோ,
கருப்போ,மாநிறமோ,இல்லை
சிகப்போ நெட்டையோ இல்லை
குட்டையோ இல்லை நடுத்தர
உயரமோ, அது என்னவோ
நமக்குன்னு ஒன்னே ஒண்ணுதான்
வாய்க்கும் அதுதான் அதைத்தான்
நம்ம உயிர்மூச்சு அடங்கிடும்
வரைக்கும் கட்டி அழுதிட வேண்டும்
என்று இறைவன் நம்
ஒவ்வொருவரின் தலையிலும்
எழுதி வைத்திருக்கிறான்
அன்பர்களே!! அதனால்தான்
கவியரசர் கண்ணதாசன் ஒரு
பாடலில் குறிப்பிட்டு இருப்பார்.
அந்தப் பாடல் இடம் பெற்ற படம்
எனது மானசீக குருநாதர் இயக்குனர்
சிகரம் திரு K.பாலச்சந்தர் அவர்கள்
எழுதி இயக்கிய வண்ணக்
காவியமான 1976ம் ஆண்டினில்
வெளிவந்த " மன்மத லீலை " என்ற
படத்தில் வரும் ஒரு பாடல் ................. )
மனைவி அமைவதெல்லாம்
இறைவன் கொடுத்த வரம் !! மனது
மயங்கி என்ன உனக்கும் வாழ்வு
வரும் என்று அந்தப் பாடல் வரிகள்
வரும். அந்தப் பாடலின்
நடுப்பகுதியில் ஒரு காவியச் சிறப்பு
மிகுந்த பகுதி என்று ஒன்று உண்டு....
பொருத்தம் உடலிலும் வேண்டும் !!
புரிந்தவன் துணையாக வேண்டும் !!
கணவனின் துணையோடுதானே
காமனை வென்றாக வேண்டும் !!
என்று !! என்ன ஒரு அற்புதமான
வரிகள்இது. மனிதகுலம் இந்த
மண்ணில் முற்றிலுமாக
அழிந்துபோகும் வரையிலும்
அழிந்திடாத காலம் என்ற
பெட்டகத்தின் கல்வெட்டில்
பொறிக்கப்பட்ட வரிகள் இது.தங்கத்
தகட்டில்வைர ஊசியின்
முனைகொண்டு எழுதிட வேண்டிய
வாசகம் இது)
ஆக இப்படிப்பட்ட புண்ணியம்செய்த
முஹலாய சக்கரவர்த்தி சுல்தான்
அஹமதுவிற்கு ஏகப்பட்ட
மனைவிமார்கள், இது போதாது
என்று நூற்றுக்கணக்கான அந்தப்
புரத்து அழகிகள் வேறு ( டேய்!! தம்பி
யார் யாருக்கோ வயித்தெரிச்சல்
போல பல சத்தம் வருதுடா தம்பி !!
அத்த முதலில் கவனி !!) அப்படி
இருக்கும் வேளையில் சுல்தான்
அஹமது இந்த அத்தனை
பெண்மணிகளையும் அவரவர்களது
ஆசைதீர்ந்திட அனுதினமும்
அனுபவித்து வந்தான், அதற்கு
என்ன காரணம் ? அங்குதான் ஒரு
விஷயம் அது ஒரு பரம இரகசியம்
அன்பர்களே !! இந்தக் கதை மீண்டும்
நாளையும் தொடர்கிறது. அதுவரை
ஒரு சிறிய விளம்பர இடைவேளை!!
சற்றே பொறுத்து இரும் பிள்ளாய் !!
மீண்டும் சந்திப்போம்.
நன்றி!! வணக்கம் !!
அன்புடன். மதுரை T.R. பாலு.
எனதருமைவாசகப் பெருமக்களே !!
எனது இதுபோன்ற பல்வேறு
கதைகள், கவிதைகள், பொது
சிந்தனைத் தேன்துளிகள்,
திருக்குறள் விளக்கங்கள்.. என்று
பல்வேறு வகையான, பலதரப்பட்ட
எண்ணற்ற கருத்துக்குவியல்கள்
எனது தனிப்பட்ட இணையதளப்
பக்கம்
Facebook.com/MaduraiTRBalu
என்னும் பக்கத்திற்குச் சென்று
அங்கே உள்ள பலவகைத்
தலைப்புகளுள்நீங்கள் Astrology for All
என்னும் தலைப்பினை க்ளிக் செய்து
பாருங்கள், முதலில் அந்தப்
பக்கத்தை நீங்கள் அனைவரும்
விரும்புங்கள்(LIKE) பிறகு
படியுங்கள். இப்ப சற்றே
ஓய்வெடுங்கள். நானும் எடுக்க
வேண்டும். எதை ? ஓய்வை. ஓகோ !!
அப்படியா !! நன்றி!!வணக்கம்!!
அன்புடன். மதுரை தT.R.பாலு.
No comments:
Post a Comment