உடல்மண்ணுக்கு!! உயிர்தமிழுக்கு!!
உலகெங்கிலும் வாழ்ந்துவரும் என்
உயிரினும் மேலான அன்புத்தமிழ்
உடன்பிறப்புகளே !!
இன்றைய தினம் நான் உங்களுக்கு
சொல்ல இருக்கும் கதை ஒரு
சிந்தனைக்கு உரிய ஒரு சிறுகதை.
இந்தக் கதையின் உட்கரு என்ன
என்று கேட்டால், இறைவன் நமக்கு
தரும் பல எச்சரிக்கைகளை நாம்
புறந்தள்ளிவிட்டு, நாமே எல்லாக்
காரியங்களையும் செய்து கொண்டு
இறைவனை மறந்து திரிந்து
ஆணவத்தால் அலைந்துகொண்டு
இருந்தோமேயானால் அந்த
இறைவன் சமயம் பார்த்து நம்மை
நாம் செய்திருந்த அந்த ஆணவம்
என்கின்ற அந்த நச்சுப்பாம்பு தனது
தலையை விரித்து படம் எடுத்து
உலகோரை எல்லாம் பயங்கொள்ள
வைத்து அப்போது நாம் ஆடிய
ஆட்டத்திற்கு தகுந்த பலனை தகுந்த
நேரத்தில் நமக்கு வழங்கி நம்
அறிவுக்குத் தகுந்த பாடத்தைநமக்கு
உரைத்திடும் வண்ணம் மிக மிகத்
தெளிவாக நம் முட்டாள்தனமான
அறிவுக்குத் தந்திடும் /தெரிந்திடும்
வண்ணம்/உரைத்திடும் வண்ணம்
நம்மை அவன் அறியச் செய்வான்
என்ற அந்த ஒப்பற்ற தத்துவத்தை
நமக்கு படிப்பினையாகத்
தந்திடுவான் என்பதே இந்தச்
சிறுகதையின் உள்பொருளாகும்.
எனவே இந்தக் கதையைப் படித்த
பிறகாவது மானுடர்களாகிய நாம்
நமது அன்றாட வாழ்வினில் எந்த
விதமான ஆணவமோ அல்லது
அகங்காரமோ இன்றி
அமைதியாகவும்பொறுமையாகவும்
ஆர்ப்பாட்டம் ஏதும் இன்றி "எல்லாம்
அந்த இறைவன் செயல் ", " எல்லாப்
புகழும் இறைவனுக்கே " என்ற
இந்தக் கருத்தை நம் உள்மனதுக்குள்
பதிய வைத்து அடக்கத்துடன்
மானிடர்களாகிய நாம் அனைவரும்
வாழ்தல் என்பது மிக மிக
அவசியமானது என்று தீர்க்கமாக
நாம் ஒவ்வொருவரும் தத்தமது
வாழ்க்கையில் கடைப்பிடித்து
வருவோமேயானால் என்றும் நம்
வாழ்வினில் இன்பத்தைத்தவிர
வேறு எந்தவிதமான
கஷ்டத்தையோ அல்லது
நஷ்டத்தையோ அந்த இறைவன்,
தன்னை முழுமையாக நம்பி
இருக்கும் தன்னுடைய
அடியார்களுக்கு ஒரு போது
வேதனையையோ அல்லது
சோதனையையோ ஒருபோதும்
வழங்கிடவே மாட்டான்.இந்தக்
கருத்து இறைவன் நமக்கு பட்டறிவு
மூலம் வழங்குகின்ற சொத்து. இதை
நாம் அனைவரும் நமது மனதுக்குள்
உள்வாங்கி பதிவு செய்து கொண்டு
வாழ்ந்திடுவோம் என்று நாம்
ஒவ்வொருவரும் நமக்குள் சத்தியம்
செய்துகொண்டு வாழ்ந்திடுவோம்.
சரி !! நேயர்களே !! நாம் அனைவரும்
இப்போது இந்தக் கட்டுரையின்
தலைப்பினில் குறிப்பிட்டு இருக்கும்
கதைக்குள்ளாகச் செல்லலாமே !!
முன்பு ஒரு காலத்திலே நம்
தாயகத்தை ஆண்டு கொண்டு
இருந்தது ஒரு அரக்கத்தனமான
கொடூரமான, பழிவாங்கும்எண்ணம்
மட்டுமே மனமதில் கொண்டுள்ள
ஒரு ஆதிக்க சக்தியின்பிரதிநிதியாக
பெண் ஒருத்தியின் தலைமையில்
ஒரு சர்வாதிகார, மற்றும் முழுக்க
முழுக்க யதேச்சிகாரத்தனம்
நிறைந்திட்ட அந்தப் பெண்ணின்
பெயர் சாந்த சொரூபிணி. கலி
காலத்தின் கொடுமையைப்
பார்த்தீர்களா !! அன்பர்களே !!
முத்தமிழ் அறிஞர், தலைவர்
கலைஞர் அவர்கள் தனது திரைக்
காவியமான " பராசக்தி " என்ற
திரைப்படத்தில்தான் , நடிகர் திலகம்
சிவாஜி கணேசனை அறிமுகம்
செய்வித்தார். இவர்,திரைப்படத்தில்
வெளிநாட்டில் இருந்து செல்வ
வளத்தோடு திரும்பியவரை ஒரு
ஜாலக்காரி,பஜாரி ஒருத்தி விரித்த
மாய வலைதனில் பருவக் கோளாறு
காரணமாக வீழ்ந்ததினால், தான்
ரங்கூனில் இருந்து கொண்டுவந்த
அனைத்து செல்வங்களையும்
இழந்து பிச்சைக்காரனைப் போல
தெருவுக்கு வந்து,பிச்சைக்காரனைப்
போல கேவலப்பட்டு, பிறகு
பைத்தியக்காரனாக வேடமணிந்து
அதன் பின்னர் வழியாக
நீதிமன்றத்தில் படத்தில் உச்சக்
கட்டக் காட்சியில் ஒரு வசனம்
பேசுவார் :-
உம்....தங்கையின் பெயரோ
கல்யாணி. ஆனால் கழுத்திலே
மாங்கல்யம் இல்லை ..............................
என்று வசனம் தந்திருப்பார். அது
போல இவள் பெயரோ சாந்த
சொரூபிணி ஆனால் கோபமும்
கொந்தளித்த உள்ளமும் தவிர
இவளிடம் நீங்கள் வேறு எதையும்
எதிர்பார்க்கக்கூடாது,எதிர்பார்த்திட
முடியாது. அப்படிப்பட்ட இராட்ஷஷி
இவள். ஆதி காலத்தில் இவள் ஒரு
நாட்டிய நடிகை. இவள் தாயாரும்
இவள் போலவே ஒரு அரண்மனை
சமஸ்தானம் ஒன்றினில்
நாட்டியமங்கையாகவே வலம்
வந்தவள். இவளது பேரழகு கண்டு
அந்த சமஸ்தானத்து மன்னர் சாந்த
சொரூபினியின் தாயாரை தனது
ஆசைநாயகியாகவே வைத்துக்
கொண்டார். அவருக்கும் இவளது
தாயாருக்கும் பிறந்தவள்தான் இந்த
சாந்த சொரூபிணி. எனவேதான்
இவளது உதிரத்திலேயே
கலந்திருப்பது தான் ஒரு ராணி
என்கின்ற திமிரும் கொழுப்பும்.இந்த
சாந்த சொரூபினியின் கதை
இதனைவிடவும் மிக அதிகமாக
சுவாரஸ்யமானது. இவளது
பேரழகில் மயங்கிய ஒரு குறுநில
மன்னரும் இவளைத் தனது ஆசை
நாயகியாகவேவைத்துக்கொண்டார்
அந்த மன்னரின் எதிரியுடன்
கைகோர்த்துக்கொண்டு இவள்
அவரையே சாகடித்துவிட்டு இன்று
ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து
கொண்டாள். இப்படிப்பட்ட
கொடியவள் ஆட்சிசெய்திடும்
நாட்டை கடும் பஞ்சத்திற்கு
உள்ளாக்கிட எண்ணிய இறைவன்
மாலை வேளையில், வருண
பகவானை அழைத்து, இந்த நாட்டில்
நீ தப்பித் தவறியும்கூட மழையைப்
பொழிந்துவிடக் கூடாது. இது எனது
கண்டிப்பான உத்தரவு என்று
இறைவன் சொன்னதும், உடனே
அதைக்கேட்ட வருணபகவான்,
ஏதோ சொல்லிட எத்தனித்த போது
அதனைக் கேட்க விரும்பாத
இறைவன், வருணனைப் பார்த்து, நீ
போகலாம், என்று சொன்னவுடன்
அரைமனதுடன் அந்த இடத்தை
விட்டு அகன்றான் வருணன்.அன்று
இரவு அந்தக் கொடுமைக்காரி சாந்த
சொரூபிணி ஆட்சி செய்திடும் அந்த
நாட்டினில் உள்ள எல்லாக்
கிராமங்களிலும் இறைவனின்
ஆணையை புறந்தள்ளி விட்டு,
கொட்டு கொட்டு என்று மழையைப்
பொழிந்து தள்ளிவிட்டான் வருண
பகவான். காலையில் விடிந்தவுடன்
இறைவன் தனக்கு வந்த அனைத்து
தகவல்களையும் ஆய்வு செய்து
கொண்டிருந்த இறைவன், வருண
பகவான் தனது ஆணையான
கொடுமைக்காரி,இராட்ஷஷி சாந்த
சொரூபிணி ஆளுகைக்கு உட்பட்ட
அனைத்து கிராமங்களிலும் ஒரு
சொட்டு கூட மழையேதும் பெய்து
விடக்கூடாது என்ற கட்டளையை
வருண பகவான் மீறிநடந்திருப்பதை
அறிந்த இறைவன் வருணன் மீது
கடுங்கோபம் கொண்டதுடன்உடனே
வருணனை தனது இராஜசபைக்கு
அழைத்தார். வருணனும் அங்கே
போய் நின்றார். அவனைப் பார்த்து
இறைவன் சினம் மிகக் கொண்டு
நான் உன்கிட்டே என்னசொன்னேன்.
நீ என்ன செய்திருக்கிறாய்? என்று
கேட்டவுடன், வருணன்இறைவனின்
பாதார விந்தங்களில் வீழ்ந்து
வணங்கி என்னை தாங்கள்
அருள்கூர்ந்து மன்னித்திட
வேண்டும் இறைவா. ஒவ்வொரு
விவசாயியின் வீட்டிலும் முக்கால்
மூட்டைக்குமேல் விதைக்கு உரிய
நெல் வைத்திருப்பதனை அறிந்த
நான் ஒரு முடிவெடுத்தேன். நாம்
ஒரேயடியாக மழை பெய்திடாமல்
பூமியை காயவிட்டு விட்டோம்
என்றால் அவனவன் இருக்கும்
முக்கால் மூட்டைக்குமேல் உள்ள
விதை நெல்லைசாப்பிட்டு ஒரு
மாதத்திற்கும் மேலாக உயிர்
வாழ்ந்திடுவான் அல்லவாஇதனைத்
தடுத்திடும் நோக்கத்தோடுதான்
நான் நேற்று கொட்டு கொட்டு என்று
எல்லா கிராம வயல்களிலும் மழை
பொழிந்து தள்ளி விட்டேன் தங்கள்
ஆணையை மீறி, இதை நம்பிஎல்லா
விவசாயிகளும் நாத்து வளர்க்க
விதை நெல்லை தூவி விடுவார்கள்
அல்லவா? அதன்பிறகு நாம்
மழையை பொழிந்துவிடாமல்
நிறுத்திவிட்டோமேயானால்
இப்படிப்பட்ட கொடுங்கோன்மை
ஆட்சியை இலவசங்களுக்காக
விற்றுவிட்ட அந்த பொதுமக்கள்
அனைவருமே உணவின்றி மடிந்து
விடுவார்கள் அல்லவே ? இந்த
ஒரேஒரு காரணத்திற்காகத்தான்
இறைவா, நான் நேற்றுமழைதனைப்
பொழிந்து தள்ளிவிட்டேன்,தங்களது
மேலான ஆணையையும் மீறி. இச்
சிறுயோனை மன்னியுங்கள், தவறு
இருந்தால் !! என்று வருண பகவான்
சொன்னவுடன், இறைவன்அருகிலே
வந்து வருணனைக் கட்டித் தழுவி
சபாஷ் !! நீ தான் எனதுமனம்கவர்ந்த
உண்மையான அரசியல் வாரிசு
என்றானாம். கதை இத்துடன்
முடிவடைகிறது அன்பர்களே !!
மீண்டும் நாளை அடுத்த பதிவினில்
உங்க அனைவரையும் நான்
சந்திக்கிறேன். அதுவரை உங்கள்
அனைவரிடமும் இருந்து அன்பு
நிறைந்த வணக்கம் கூறி விடை
பெறுவது உங்கள் அன்புத் தமிழ்
மொழி பேசும் சகோதரன்,
மதுரை T.R. பாலு., M.A.S.*
நன்றி !! வணக்கம் !!
பின்குறிப்பு :- என்னடா இது நம்ம
மதுரை T.R.பாலு சார், புதுசா
அவரோட பேருக்குப் பின்னாடி
என்னமோ பட்டபடிப்பு படிச்சமாதிரி
டிகிரி போட்டிருக்காரே என்று
நீங்கள் யோசித்து உங்களது
புருவங்களை உயர்த்திப் பார்ப்பது
எனக்கு இங்கே தெரிகிறது.
நான் என்ன செய்ய.. நான் என்ன
செய்ய...(வடிவேலு பாணியில்) நம்ம
கட்டுரையையும் படிக்கிற
எல்லோரும் குறைந்தபட்ஷம் ஒரு
" லைக் " (LIKE) கூட கொடுக்க
மாட்டேங்கிறாங்க. எழுதின எனக்கு
எந்தவிதமான பாராடுக்களோ,
இல்லை விமர்சனங்களோ வரவே
மாட்டேங்குது இன்னைக்கு
வரைக்கும். பாத்தேன் இனிமே
நம்மளை ஒரு ஆள்கூட பாராட்ட
மாட்டாய்ங்க. அதாலே எனக்கு
நானே ஒரு பட்டத்தை
சூட்டிகிட்டேங்க. அதுதான் M.A.S.
அப்படீன்னு. இதுக்கு இன்னா
அர்த்தம்னு கேட்டுக்கிடீங்கன்னா
இந்தாஇதுதாங்க அர்த்தம். M.A.S. னா
MASTER OF ALL SUBJECTS.
(ஏய் !! இந்தப் பட்டம் போதுமா !! அட
இன்னும் கொஞ்சம் வேணுமா ?)
இது எப்படி இருக்கு ?
நன்றி !! வணக்கம் !!அன்புடன் !!
மதுரை T.R. பாலு., M.A.S.,
No comments:
Post a Comment