உடல்மண்ணுக்கு!!உயிர்தமிழுக்கு!!
உலகம் முழுவதும் வாழ்ந்துவரும்
என் உயிரினும் மேலான அன்புத்
தமிழ் உடன்பிறப்புகளே !!
உங்கள் அனைவருக்கும் எனது
இனிய,இதயம் கனிந்த, காலை
வணக்கம் முதலில் உரித்தாகட்டும்!!
அன்பர்களே !!
மனிதனை விலங்கினங்களில்
இருந்து வேறுபடுத்திக்காட்டிடும்
ஒரே ஒரு அடையாளச் சின்னம்தான்
இந்த " சிரிப்பு " என்பது !! இந்த
ஒப்புயர்வற்ற சிரிப்பின் மகிமையை
கலைவாணரைப்போல வேறு
எவரும் இவ்வளவு தத்ரூபமாக
விவரித்தவரும் கிடையாது.
விளக்கிக் கூறியவரும் கிடையாது.
அப்படிப்பட்ட கலைவாணரின்
சிறப்பியல்புகளைப் பற்றிய ஒரு
சிந்தனை நீரோட்டம் நிறைந்த
கட்டுரைத் தொகுப்பு இது !! உங்கள்
அனைவரின் கனிவான
கவனத்திற்கு !! படித்து
மகிழ்ந்திடுங்கள்!! நீங்களும் சிரித்து
வாழ்ந்திருங்கள் !!
அது 1956ம் ஆண்டு. அந்த வருடத்தில்
வெளியான திரைக்காவியம்தான்
முத்தமிழ்அறிஞர்தலைவர்கலைஞர்
கதை வசனத்தில் உருவான
காவியத் திரைப்படம்தான்நேஷனல்
பிக்சர்ஸ் தயாரித்து திரையிட்ட
நடிகர் திலகம் சிவாஜி கணேசன்
மற்றும் நாட்டியப் பேரொளி பத்மினி
இருவரும் இணைந்து நடித்தபடம்
"ராஜா ராணி ". இதில் கலைவாணர்
N.S.கிருஷ்ணன் T.A.மதுரம்இருவரும்
கதாபாத்திரத்துடன் ஒன்றிய சிரிப்பு
நடிகர்கள் ஆவர். இயக்கம் A.பீம்சிங்.
இந்தப் படத்தில்தான் சிரிப்பு பற்றிய
ஒரு சிந்திக்க வைத்திடும் பாடல்
இடம் பெற்றுள்ளது. பாடலுக்குஇசை
அமைத்தவர்காலம்சென்றT.R.பாப்பா
ஆவார். இப்போது நாம் பாடலைப்
பார்ப்போமா நேயர்களே ?
**************$$$$$$$$$$$$$$************
சிரிப்பு !! இதன் சிரத்தை சீர்தூக்கி
பார்ப்பதே நமது பொறுப்பு !!
கருப்பா வெளுப்பா என்பதை
எடுத்துக்காட்டும் கண்ணாடி சிரிப்பு !!
மனம் கருப்பா வெளுப்பா என்பதை
எடுத்துக் காட்டும் கண்ணாடி சிரிப்பு!!
இது கறையை நீக்கி கவலையைப்
போக்கி மூளைக்குத் தரும்
சுறுசுறுப்பு!!
(சிரிப்பு )
துன்ப வாழ்விலும் இன்பம் காணும்
விந்தை புரிவது சிரிப்பு !! இதைத்
துணையாய் கொள்ளும் மக்கள்
முகத்தில்துலங்கிடும்தனிச்செழிப்பு!!
(சிரிப்பு )
பாதையில்போகும் பெண்ணைப்
பார்த்து பல்இளிப்பதும் ஒருவகை
சிரிப்பு !! அதன்
பலனாய் உடனே பரிசாய்க்
கிடைப்பது!!காதறுந்தபழஞ்செருப்பு!!
(சிரிப்பு)
சிந்திக்க தெரிந்த மனித குலத்துக்கே
சொந்தமான கைஇருப்பு !!
வேறு ஜீவ ராசிகள் செய்ய முடியாத
செயலாகும் இந்த சிரிப்பு !!
(சிரிப்பு)
இது அதிகாரிகளின் ஆணவச்சிரிப்பு!!
இது அடங்கிநடப்பவரின்அசட்டு
சிரிப்பு!!
இது சதிகாரர்களின் சாகசச் சிரிப்பு!!
இது சங்கீதச் சிரிப்பு !!
(சிரிப்பு)
அன்புத் தமிழ் நெஞ்சங்களே !!
கலைவாணரின் நினைவுகள், அவர்
நமக்கு விட்டுச் சென்ற
விலைமதிப்பற்ற ஆஸ்தி என்பது
இந்த சிரிப்பு மட்டுமே. எனவே
வாழ்வினில் நாம் அனைவரும்
எப்போதும் இன்முகத்தோடும்
புன்சிரிப்போடும் வாழ்ந்து நம்மால்
முடிந்தவரை, நாலு பேருக்கு உதவி
செய்து வாழ்ந்திடுவோம்.
அன்பு இல்லாதவன் மிருகம் !!
ஆற்றல் அற்றவன் முடவன் !!
இசையை ரசிக்காதவன் செவிடன் !!
ஈகை செய்யாதவன் கஞ்சன் !!
உண்மை பேசாதவன் திருடன் !!
ஊருக்கு உழைப்பவன் உத்தமன் !!
எழுத,படிக்கத்தெரியாதவன்குருடன்!
ஏழையைமதிக்காதவன் பிசாசு !!
ஐயம் தெளிந்தவன் அறிஞன் !!
ஒழுங்கு கற்றவன் யோக்கியன் !!
ஓடியாடி வேலைக்கு செல்பவன்
உழைப்பாளி !!
ஔவைத் தமிழை மதிக்காதவன்
சிங்களவன் !!
கட்டுரை இத்துடன் நிறைவு
பெறுகிறது !!
மீண்டும் நாளை வேறு ஒரு
தலைப்பினில் உங்கள்
அனைவரையும் சந்திப்பேன்.
நன்றி !! வணக்கம் !!
அன்புடன் !! மதுரை T.R.பாலு.
No comments:
Post a Comment