உடல்மண்ணுக்கு!!உயிர்தமிழுக்கு!!
அன்புள்ள உலகம் முழுவதும்
வாழ்ந்துவரும் எனது அன்பிற்கும்,
பாசத்திற்கும் உரிய, அன்புத்தமிழ்
உடன்பிறப்புகளே !!
உங்கள் அனைவருக்கும் எனது
இதயம் கனிந்த நல்
வாழ்த்துக்களுடன் கூடிய வணக்கம்
உரித்தாகட்டும்.
இன்றையதினம் என்ன
தலைப்பினில் எனது அன்பிற்குரிய
நேயர்களுக்கு கட்டுரை தரலாம்
என்று யோசித்துக்கொண்டு
இருக்கும் வேளையில்
தொலைகாட்சி நிகழ்சிகளைப்
பார்க்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது.
ஏண்டா பார்த்தோம் என்னும்
உணர்வு மட்டுமே எனக்கு
மிஞ்சியது. என்ன கொடுமையடா ?
இது!! எந்தத் அலைவரிசையைத்
திருப்பினாலும் எல்லா இடத்திலும்
இந்த சினிமா நிகழ்சிகளும் இந்த
நடிகைகள் வரலாறுகளை பேட்டி
எடுப்பதும் இதுபோன்ற நிகழ்ச்சிகள்
மட்டிலுமே ஒளிபரப்பு செய்து
கொண்டு இருக்கிறார்கள். அதிலும்
அவர்களை பேட்டி எடுக்கும் அந்தத்
தொலைகாட்சி நிகழ்ச்சித்
தொகுப்பாளர்கள் முகத்தில்தான்
என்னே மகிழ்ச்சி !! இந்தப் பிறவி
எடுத்த பலனை அனுபவிப்பதுபோல
அப்படி ஒரு சிரிப்பு !! இந்தமாதிரிஒரு
திருநாள்,பெருநாள்,பண்டிகை
நாட்களில் இந்த தரங்கெட்ட,
குணங்கெட்ட, நடிகைகளின்
மூஞ்சி,மொகரையை (முகத்தை)
காட்டாமல் உங்களால் நிகழ்ச்சி
தரவே முடியாதா? இல்ல நான்
கேக்கிறேன்!! இவளுக மூஞ்சிலே
முழிச்சாலே அந்த நாள்தான்
விளங்கிடுமா? நான் கேட்கிறது
நியாமா ? இல்லையா ? என்பதை
நேயர்களாகிய நீங்கள்தான் பதில்
சொல்லிட வேண்டுகிறேன்.
நன்றி !! வணக்கம்!!
அன்புடன். மதுரை T.R.பாலு.
No comments:
Post a Comment