தொடர்ச்சி...பாகம் எண்.3. " கண்டிப்பாக வயது வந்தவர்களுக்கு மட்டும் " ( A ) STRICTLY FOR ADULTS ONLY !!
உடல்மண்ணுக்கு!!உயிர்தமிழுக்கு!!
சக்கரவர்த்தி சுல்தான் அகமது
ஆயுளை நன்கு அனுபவித்துக்
கொண்டு வரும் வேளையில்
மன்னருக்கு துணிமணிகள்
வெளுத்துக் கொண்டுவரும்
சலவைத் தொழிலாளி இபுறாஹீம்
கதையை இப்போது பார்ப்போம்.
அவன் மிகவும் நல்லவன். மிகவும்
பயந்த சுபாவம் உள்ளவன்.
இல்வாழ்க்கை விஷயத்தில் மிகவும்
தளர்ந்தவன். என்றாவதோ (!!),
எப்போதாவதோ (?)தான் இவனால்
மனைவி நூர்ஜகானுடன் இணைந்து
இருக்க முடிகிறது.இதனாலேயே
இவனை அவள் மதிப்பதும் இல்லை.
மரியாதை தருவதும் இல்லை.
இபுறாஹீம் சொல்லுகின்ற எந்த
சொல்லுக்கும் பதில் சொல்வதும்
இல்லை. அதன்படி நடப்பதும்
இல்லை. ( ஆகா !! இதுவன்றோ
பதிபக்தியை வெளிப்படுத்தும்
புனிதமான குணத்தின் வெளிப்பாடு)
(இன்றையதினம் நாட்டினில் 77
விழுக்காடுகளுக்குமேல் உள்ள
ஆண்களுக்கு அவரவர்களது
வீட்டினில் கிடைத்திடும்
அருமையான மரியாதையின்
நிலைமையும் இதுதான்.)
ஆனால் இவன் மனைவி
நூர்ஜகானோ தன் கணவனுக்கு
நேர்மாறான குணம் கொண்டவள்.
அவள் தான் விரும்பும் நேரத்தில்!!
விரும்பும்படி (!?!) கணவன்தனக்கு
சுகம்தர வில்லையே !!என்ற அந்த
ஆதங்கத்தினால் அவள் எப்போதும்
வெறுப்புடனேயே கணவனுடன்
உறவு பெயரளவிற்கு குடித்தனம்
நடத்திக்கொண்டு இருந்தாள்.
(இதுவும்கூட இந்தக் காலப்
பெண்மணிகளில் தொண்ணூறு
விழுக்காடுகளுக்குமேல் இதே
நிலைதான் நீடிப்பதாக எனது
நண்பன் பாண்டியன்
நெடுஞ்செழியன்
சொல்கிறான்) இந்நிலையில்
மன்னருக்கு துணிமணிகள்
வெளுத்து அதை அரண்மனைக்கு
கொண்டு சென்றிட
எத்தனித்துக்கொண்டு
இருக்கும்போது இந்த தம்பதிகள்
இருவருக்கும் இடையில்
நடைபெறுகின்ற உரையாடலை
நான் உங்களுக்கு நேரலையாகத் தர
முடிவு செய்துள்ளேன். ஆனால் அது
ஒரு சிறிய இடைவேளைக்குப்
பிறகுதான்.
மீண்டும் சந்திப்போம். அதன் பிறகு
சிந்திப்போம்.
நன்றி !! வணக்கம் !!
அன்புடன். மதுரை T.R.பாலு.
தொடர்ச்சி........பாகம் எண்.3.
இபுறாஹீம்:- நூறு !! (மனைவி
நூர்ஜஹானை எப்போதும் இவன்
இப்படித்தான் செல்லமாக
கூப்பிடுவான்) நான் போயி
மன்னருக்கு துணிமணியை
கொடுத்துட்டு வந்துரட்டுமா ?
நூர் :- என்ன ? சைபரு !! நீ எங்க
போனாத்தான் எனக்கு என்ன ?
வீட்டிலே இருக்குற பொம்பளையை
ஒழுங்கா துவைச்சு, வெளுக்கத்
தெரியாத ஆளு நீ !! உம்...நீ எங்க
போனாத்தான் எனக்கு என்ன ?
போ..போ..(வெறுப்புடன் உதட்டில்
ஒரு சுளிப்பு--இது பெண்களுக்கே
கைவந்த கலை )
இபுறா:- என்ன நூறு !! இப்படி
கோச்சுக்கிரே !! நான் என்ன
செய்யட்டும். நானும் எவ்வளவோ...
(இவன் பேசி முடிக்கவில்லை-
அதற்குள் மனைவி குறுக்கிட்டுப்
பேசுகிறாள்)
நூர்:- யோவ் !! போதும்யா..போதும்..
உன்கிட்டே நான் ஒன்னும்விளக்கம்
கேக்கல. குருடனை புடிச்சு ராஜ முழி
முழின்னா அவன் எப்படி முழிப்பான்?
இதெல்லாம் உன்ட்ட சொல்லி ஒரு
பிரயோஜனம் கிடையாதுன்னுதான்
எனக்கு ஆறு மாசமாத் தெரிஞ்சு
போச்சுல்லே. போ..போய்த்தொலை!
எல்லாத்துக்கும் கொடுத்து
வச்சிருக்கணும். உம்..எனக்குத்தான்
அந்தக் கொடுப்பினை இந்த
ஜென்மத்திலே இல்லைங்கறது
ஆறு மாசத்துக்கு முன்னாலேயே
தெரிஞ்சு போச்சே !!இப்ப பொலம்பி
என்ன பிரயோஜனம் . போய்யா. போ.
இதையாச்சும் உருப்புடியா போயி
ஒழுங்கா செஞ்சுட்டு வாய்யா !!
(என்னய்யா இது ரொம்ப ரொம்ப
அநியாயமா இருக்கு. ஒரு
ஆம்பிளையோட கஷ்ட நஷ்டம்
தெரிஞ்சு " அனுசரிச்சு " நடக்காத
பொம்பளைஒருபொம்பளையாய்யா
இல்ல நான் கேக்கிறேன்)
இபுறா:- சரி !!நூறு!! நான் வாரேன் !!
(தன்மனசுக்குள்ளே :- உன்கிட்டே
எம்புட்டு தரம் சொன்னாலும் நீ
புரிஞ்சிக்க மாட்டேங்கிற.நான்என்ன
வேணும்னா...அப்படி...இருக்கேன் ?
என்னலே முடியலை..அதுக்கு நான்
என்ன செய்ய முடியும்? எல்லாம்
அல்லா என் தலையிலே அப்படி
எழுதிட்டாரு, என்று முனகியபடியே
அரண்மனை நோக்கி கிளம்பினான்
சக்கரவர்த்தியின் வெளுத்த
துணிமணிகளைகையில்சுமந்தபடி.)
" அரண்மனைக் காட்சி " !!
சக்கரவர்த்தி சுல்தான் அகமது
மிகுந்த மன மகிழ்ச்சியுடன் அந்த
மூலிகைப் பொடிகள் கலந்த
தாம்பூலம் தரித்துக் கொண்டு அவர்
" பகல் நேர பூஜைக்கு " தன்னைத்
தயார் செய்து கொண்டு இருக்கும்
வேளையில் இபுறாஹீம் கவலை
தோய்ந்த முகத்துடன்
துணிமணிகளைக் கொண்டு போய்
சக்ரவர்த்தியிடம் தருகிறான்.
இபுறா:- சலாம் அலேக்கும் சர்க்கார்!!
சுல்தான்:- அலேக்கும் சலாம் !!
வ.ரஹ்மத்துல்லாயோ
பாரக்காத்துஹூ !! என்னடா
இப்ராகிம் !!என்னஆச்சு உனக்கு
தும் க்யா ஹுவா ?
இபுறா:- விடுங்க சர்க்கார். என்
துன்பம் என்னோட தொலையட்டும்
உங்களோட உருப்படிக சரியா
இருக்கான்னு பாத்துக்கிடுங்க
சர்க்கார் !!
சுல்தான்:- டேய். என்னடா. அப்படி
ஒரு மனக் கவலை அதுவும் இந்த
வயசுலே !! உனக்கு நிக்காஹ்
முடிஞ்சு இன்னும் ஆறு மாசங்கூட
ஆகலையே சொல்லுடா ? என்ன
விசயம்னு. சொன்னாத்தானேடா
அதுக்கு என்ன செய்யலாம்னு நாம
யோசிக்கலாம். சொல்லுடா நான்
உன் சர்க்கார் கேக்றேன். சும்மா
பயப்படாம சொல்லு.
இபுறா:- இல்ல !! சர்க்கார்கிட்டேயே
அத (?) எப்படி சொல்றதுன்னு தான்
நான் யோசிக்கிறேன்.
சுல்தான்:- டே !! இப்ராகிம்.. நான்
உன்ட்ட ராஜாவும் தொழிலாளியும்
போலவாடா பழகுறேன். சொல்லு.
வீட்டுலே நடந்ததைசொல்லு !!
(சுல்தானின் கட்டாயத்தினால் தனது
ஆண்மைக் குறைவு, அதனால்
மனைவி மதிக்காமல் நடப்பது இது
போன்ற அத்தனையையும் ஒன்னு
விடாமல் சொல்லிவிடுகிறான்.
இவை அத்தனையையும்
பொறுமையாகக் கேட்ட மன்னர்
தனது வாயில் ஒதுக்கிவைத்திருந்த
மூலிகைத் தாம்பூலத்தின்
சக்கையை இபுறாஹிம்மின்கையில்
வைத்துவிட்டு இப்போது மன்னர்
பேசுகிறார்)
சுல்தான்:- (இப்ராகிமைப் பார்த்து) நீ
இப்ப என்ன செயறேன்னா
இன்னைக்கு இரவு சாப்பிட்டபின்
இந்த சக்கையை உன் வாயில்
வைத்து அதிலிருந்து வரும் சாரை
முழுங்கு. அரைமணிநேரம் கழித்து
உன் மனைவியுடன் " சேரு ".அதுக்கு
அப்புறம் என்ன நடக்குதுன்னு பாரு.
இப்ப உடனே நீ வீட்டுக்குப் போய்ச்
சேரு !!
இபுறாஹீம் வீட்டுக்குப் போய்
மன்னர் சொன்னபடியே சக்கையை
சாப்பிட்டபின் வாயில் ஒதுக்கி
சாரைமுழுங்கி அரைமணி நேரம்
கழித்து தனது மனைவி
நூர்ஜகானோடு இணைந்தான். இடி
முழக்கம் கேட்டது. அவளைப்
பொடிப்பொடியாக்கி நொருக்கி
நூலெடுத்துவிட்டான்.அவளை
பின்னிப் பெடலெடுத்து விட்டான்
இபுறாஹீம். மனைவியை
இன்பத்தில் இமயத்தின் உச்சிக்கே
கொண்டு சென்ற திருப்தியுடன்
வெளியே வந்தவன் அந்த
சக்கையைதுப்பிவிட்டுசொன்னான்:-
அப்பப்பா !! அம்மாடியோ! மன்னர்
தந்த சக்கையே இந்தப் போடு
போட்டா !! அவருக்கு " சாரு "
"என்னென்ன வேலை எல்லாம் "
சென்ஜிருக்கும்.
எல்லாப் புகழும் இறைவனுக்கே !!
அல்லா ஒருவரே துணை நமக்கு !!
அஸ்ஸலாமு அலேக்கும். நன்றி!!
வணக்கம்!!
அன்புடன் .மதுரை T.R.பாலு.
No comments:
Post a Comment