உடல்மண்ணுக்கு!!உயிர்தமிழுக்கு!!
உலகம் முழுவதும் வாழ்ந்து வரும்
எனது அன்பிற்குரிய தமிழ்
உடன்பிறப்புகளே !! உங்கள்
அனைவருக்கும் எனது இனிய
2014 ஆங்கிலப் புத்தாண்டு
நல்வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.
இன்றைக்கு ஏறத்தாழ 49
ஆண்டுகளுக்கு முன் நல்லதொரு
வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு
தமிழ்த் திரைப்படம் வெளிவந்தது.
அது1965 ம் ஆண்டு.தமிழ்த் திரைப்பட
உலகிற்கோர் பொன்வருடம் இந்த
வருடம். ஏன் என்றால் இந்த
வருடத்தில்தான் ஸ்ரீ விஜயலட்சுமி
பிக்சர்ஸ் தயாரித்து, நடிகர்திலகம்
சிவாஜிகணேசன், மற்றும் நடிகையர்
திலகம் சாவித்திரி, இருவரும்
சிவனும், சக்தியுமாக, நடித்து
வெளிவந்த " திருவிளையாடல் "
என்ற வண்ணக்காவியம்
திரையிடப்பட்ட ஆண்டு அது. இந்தப்
படத்தில்அவ்வையார்வேடம் தரித்து
நடித்தவர்மறைந்த,வெண்கலக்
குரலோசைக்கு உரிமையானவர்,
K.B.சுந்தராம்பாள் ஆவார். மறைந்த
புகழ் பெற்ற இயக்குனர்களுள்
ஒருவரானா A.P.நாகராஜன் படத்தின்
கதை,வசனம், மற்றும் இயக்கம்,
ஆகிய இந்த மூன்று மாபெரும்
பணிகளைச் செய்து கடமை ஆற்றிய
அந்த வண்ணக் காவியத்தின்
இறுதிக்காட்சியில் சிவபெருமானை
ஒன்று,இரண்டு,மூன்று,நான்கு என
வரிசைப் படுத்திப் பாடு என்று
பார்வதிதேவி** (?) வேடமிட்டு
நடித்திருக்கும் நடிகையர் திலகம்
சாவித்திரி கேட்டுக் கொள்வார்.
உடனே அவ்வையாரும் பாடுவார்.
(** அன்பர்களே !! எனக்குப்
பொதுவாகவே பக்திப்படங்களில்
கடவுள் வேடம் தரித்து ஆண்கள்
நடித்திடுவதைக்கூட பொறுத்துக்
கொள்ள முடியும். ஆனால் அம்பாள்
வேடமிட்டு இந்த பஜா....களான.....
ஈனத்...டியாள்கள் நடிப்பதை
எப்பொழுதும் ஏற்றுக் கொள்ளும்
மனப்பக்குவம் அற்றவன்தான் நான்.
ஏன் என்றால் பால் என்பது இவர்கள்
நடிக்கும் வேடம் என்றால்
இவர்கள்தான் அந்தப் பால்இருக்கும்
பாத்திரங்கள். இந்த பாத்திரங்கள்
எப்படியெல்லாம், எங்கெல்ல்லாம்
சென்றிருக்கும்? யாரோடெல்லாம்
இணைந்து இருந்திருந்திருக்கும்,
எவரோடெல்லாம் படுத்துப் புரண்டு
இருந்திருக்கும், எனவே இவர்களது
வாழ்கையின் நெறிமுறைகள்
சரியில்லாதது ஆயிற்றே
என்றெல்லாம் எண்ணுபவன் நான்.)
சரி !! அன்பர்களே !! அந்தக்
கன்றாவியைப் பற்றி நாம் இப்போது
இந்தப் புத்தாண்டுதினத்தில்
பேசாமல் இருப்பதுதான் நமக்குப்
பயன் அளிக்கும். எனவே நாம்
இப்போது,அந்த, " விஷத்தை "
விட்டுசொல்லவந்தவிஷயத்தைப்
பார்ப்போம். பாடலைக்
கவனியுங்கள் :-
ஒன்றானவன் !!(கடவுள் ஒன்று)
உருவில் இரண்டானவன் !!
(சிவபார்வதியாக)-பாதிசிவன் பாதி
பார்வதியாக)
உருவான செந்தமிழில்
மூன்றானவன் ( இயல்தமிழ்,
இசைத்தமிழ்,நாடகத்தமிழ் )
நன்கான வேதத்தில்நான்கானவன் !!
(ரிக்,யஜுர்,சாம,அதர்வண வேதம்)
நமசிவாய என ஐந்தானவன் !!
இன்பச்சுவைகளுக்குள்ஆறானவன்!!
(இனிப்பு,உப்பு,எரிப்பு,கசப்பு, துவர்ப்பு,
புளிப்பு என வகைகள் ஆறு)
இன்னிசைஸ்வரங்களில்ஏழானவன்
(ச,ரி,க,ம,ப,த,னி,ச,)
சித்திக்கும்பொருட்களில்
எட்டானவன் !!(அஷ்டசித்திமந்திரம்)
தித்திக்கும் நவரச வித்தானவன் !!
(சிருங்காரம்,ஹாஸ்யம்,கருணை,
ரௌத்ரம்,வீரம்,பயம்,வெறுப்பு,அதிச
யம்,சாந்தம் ஆகிய ஒன்பதுரசங்கள்)
பத்தானவன் நெஞ்சில் பற்றானவன்!!
பன்னிருகை வேலவனை[
பெற்றானவன் !!
முத்தாதவன் !!மூல முதலானவன் !!
முன்னைக்கும் பின்னைக்கும்
நடுவானவன் !!
ஆணாகிப் பெண்ணாகி
நின்றானவன் !!
அவையுண்டு தானென்று
சொன்னானவன் !!
தான்பாதி !! உமைபாதி !!
கொண்டானவன் !!
சரிபாதி !! பெண்மைக்குத்
தந்தானவன்
காற்றானவன், ஒளியானவன்
நீரானவன் நெருப்பானவன்
நேற்றாகி இன்றாகி என்றைக்கும்
நிலையான கூற்றாகி நின்றானவன்
அன்பில் ஒளியாகி நின்றானவன் !!
அன்பர்களே !!
பாடல் இத்துடன் நிறைவு
பெறுகின்றது !! மேலே சொன்ன
பாடலில் ஆறுக்கு உண்டான
விளக்கத்தில், தமிழ் மூதாட்டி
ஒவ்வை என்ன சொல்கிறாள்
என்றால், இன்பச் சுவைகளுக்குள்
ஆறானவன் என்ற வரிகளில்
சொல்லியபடி:-
1) இனிப்பு,
2) உப்பு ,
3) எரிப்பு,
4) புளிப்பு,
5) கசப்பு,
மற்றும்
6) துவர்ப்பு
அன்பர்களே !!
நம் மனிதஉடல் என்பது மூன்று
அதிமுக்கியமான பகுதிகளாகவே
வகுக்கப்பட்டு அந்த மூன்றும்
சரிசமமாக செயல்பட்டு வரும் வரை
மட்டுமே நமது காயம் (உடம்பு)
எந்தவிதமான நோய் நொடிகளின்
தாக்குதல்களுக்கும் ஆட்படுவது
கிடையாது. அந்த மூன்று பகுதிகள்
எனப்படுவது யாதெனின் :-
1) வாதம்.
2) கபம்.
3) பித்தம் என்பதே ஆகும்.
அன்பர்களே !! இந்த மூன்று
பகுதிகளும் சரிசமமாக அதாவது
33.1/3 என இருந்திடும் வரையில்
மட்டிலுமே நாம் எந்தவிதமான
நோய்நொடிகளுக்கும் ஆளாவது
கிடையாது. இந்த மூன்றுபகுதிகளும்
பாடலில் குறிப்பிட்டுள்ள ஆறு
சுவைகளால் நிர்வகிக்கப்பட்டு
வருவதுதான் மனித உடம்பின்
வரலாற்றுத் தத்துவம்/உண்மை.
ஆனால் அன்பர்களே !! நம்மில்
எத்தனை பேர்கள் சுவைகளில் ஆறு
சுவையையும் அன்றாட உணவுத்
தேவைகளில் பயன்படுத்துகிறோம்
என்பது இப்போது நம்முன்னே உள்ள
கேள்வி நிச்சயமாகபதில் இல்லை.
முதல் நான்கு சுவைகளான,
1) இனிப்பு,
2) எரிப்பு,
3) உப்பு, மற்றும்,
4) புளிப்பு ஆகிய இந்த நான்கு
சுவைகளை மட்டுமே ருசித்து
உயிர்வாழ்ந்திடும் மனிதகுலம்,
எஞ்சிஉள்ள மீதம் இரண்டு
சுவைகளின் பக்கமே போவது
இல்லை. அவைஎன்னென்ன என்று
கேட்டால்:-
1) கசப்பு & 2) துவர்ப்பு.
இந்த இரண்டு முக்கியமான
சுவைகளை நாம் ஒதுக்குவதுதான்
மற்றும் பயன்படுத்தாதன் விளைவே
நமது மனித உடல் நோய்
வாய்ப்படுகிறதுஎன்பதேபல்லாயிரம்
ஆண்டுகளுக்கு முன்பு நமது
ரிஷிகளும், முனிவர்களும், வேதம்
நான்கும் கற்றுணர்ந்த சித்தர்களும்
நமக்குச் சொல்லிச் சென்ற
அரும்பெரும் கருத்துக்கள் ஆகும்.
எனவே, அன்பர்களே !! நாம்
இதுவரை எப்படி,எப்படியோ இருந்து
விட்டுப்போயிருக்கலாம். நாளை
முதலாவது ஒவ்வொரு
வாரத்திலும்
ஆறு சுவைகளையும் எந்த ஓரு
சூழலிலும், சந்தர்பத்திலும், பயன்
படுத்திடத் தவறிடாமல்,அந்த
மனிதனால் முற்றிலும்
ஒதுக்கப்பட்ட சுவைகளான கசப்பு
மற்றும் துவர்ப்பு ஆகியஇவைகளை
தவறாமல் பயன்படுத்தி 12௦
ஆண்டுகள் வரையிலும்
வாழ்வாங்கு வாழ்ந்து இருப்போம்
என்று இந்த ஆங்கில
புத்தாண்டுதனின் சபதமாகவே
சூளுரைப்போம் என்று சொல்லி
உங்கள் அனைவரிடமும் இருந்து
நன்றி !! வணக்கம் !! பாராட்டி
விடைபெருகிறேன்.
அன்புடன். மதுரை T.R.பாலு.
No comments:
Post a Comment