உடல்மண்ணுக்கு!!உயிர்தமிழுக்கு!!
உலகம் முழுவதும் வாழ்ந்து வரும்
என் அன்புத் தமிழ் நெஞ்சங்களே !!
இன்றைய தினம் ஒரு மிகச் சிறந்த
தலைப்பு ஒன்றினைத் தேர்ந்து
எடுத்து அதில் நாம் ஏன் நமது
சிந்தனைச் சிறகுகளை சிறகடித்து
பறக்கவிடக் கூடாது ? என்று
எண்ணினேன். அதன் விளைவு இந்த
விவாதம். அதுவும் நல்லதொரு
கட்டுரை வடிவினில் விருந்தாக
உருவானது. அதனை நீங்கள்
அனைவரும் கவனத்துடன் படித்து
இன்புற வேணுமாய் பணிவன்புடன்
கேட்டு விடைபெறுகிறேன்.
நன்றி !! வணக்கம் !!
****************************************
கடமையில் சிறந்தவன் யார் ?
அர்ச்சுனனா ? கர்ணனா ?
****************************************
அன்பர்களே !!
தனது தாயாரால் பெயர்
தெரியாத யாரோ ஒருவருக்குத்
தன்னை பெற்று அதனை மறைத்து
தன்னை ஆற்றில் அனாதையாக
விட்டு விட்டாளே என்ற
பரிதாபத்திற்கு உரியவனாக
பிறந்தவன்தான் கர்ணன் என்பது
நாம் யாவரும் அறிந்த ஒன்றுதான்.
ஆனால் கிருஷ்ண பகவான் என்ன
செய்தார் என்றால்
பாண்டவர்களுக்கும் (அவர்களது
பங்காளிகளான பரம எதிரிகள்)
கௌரவர்களுக்கும் நடைபெற்ற
இறுதி யுத்தத்தின் போது கர்ணன்
உயிரோடு இருந்தால் நிச்சயம்
பாண்டவர்கள் தோல்வியைத்
தழுவிடுவார்கள் என்பதனைஅறிந்த
கிருஷ்ண பகவான் குந்தி தேவியை
கர்ணனிடம் அனுப்பி (தனது ஒளிந்து
இருந்து மறைந்து தாக்குதல்
வேலையை நடத்தியவன்தான்
கண்ணன்) பாசத்தைப் பொழிய
வைக்கிறான். கர்ணனனிடம் குந்தி
தேவி சென்று, மகனே !! கர்ணா !!
நான்தான் உன்னுடைய தாய் என்று
சொல்லி உறங்கிக்கிடந்த அவனது
உள்ளத்தில் பாசம் என்னும் பயிரை
வளர்த்துவிட்டவள்தான் இந்தக்
குந்திதேவி. குறுமதிபடைத்த
கிருஷ்ணனால் அல்லவோ அனுப்பி
வைக்கப்பட்டவள் ஆதலால் தனது
பிள்ளைப்பாசத்திற்குவிலைபேசவே
வந்தவள் அந்த பேரத்தை தனது
ஏனைய ஐந்து புத்திரர்களான
பாண்டவர்களுக்குச் சாதகமாகஅந்த
வணிக பேரத்தை, கிருஷ்ணன்
சொல்லியபடியே கனகச்சிதமாக
முடித்த பெருமை வரலாற்றினில்
என்றும் நிலைத்திருக்கும்
அளவிற்கு ஒரு தனி இடம்தனை
தனக்குச் சாதகமாக
வைத்துக்கொண்ட சாம்ராஜிய
இராணிதான் இந்தக் குந்தி தேவி.
எப்படி முடித்தாள் அந்த பேரத்தை ?
(ஒரு சிறிய இடைவேளைக்குப்பிறகு
நாளை கட்டுரை மீண்டும் தொடரும்)
(தொடரும்.........)
நன்றி !! வணக்கம் !!
அன்புடன். மதுரை T.R.பாலு.
No comments:
Post a Comment